அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

செவ்வாய், 20 மே, 2014

தமிழன் வாழ்க! தமிழ் ஒழிக!!

ஓர் உண்மைச் சம்பவத்தை இங்கே கதையாக்கியிருக்கிறேன். இதனால் எல்லாம் நம் தமிழ்ச் சமுதாயத்தில் என்ன மாறுதல் நிகழ்ந்துவிடப் போகிறது? ‘ஏதுமில்லை’ என்பது தெரிந்திருந்தும் இதைப் பதிவாக வெளியிட்டிருக்கிறேன். காரணம், எழுதியதை அழிக்க மனம் இல்லை என்பதுதான்!


கதை:                                       க்ருஷிஹா

“அப்பா, உங்க பேத்திக்கு நல்ல பேர் சொல்லுங்க.” அயலூரில் வேலை பார்க்கும் சிவக்குமார் கோவையிலுள்ள தன் தந்தைக்குத் தொ.பே. செய்தான்.

“வான்மதின்னு வெச்சுடலாம். அழகான தமிழ்ப் பேரு” என்றார் மயில்சாமி.

“இது வேண்டாம். யாரும் வைக்காத பேரா இருக்கணும்.”

“எனக்குத் தெரிய யாரும் இந்தப் பேரை வைக்கல.”

“வெச்சிருக்காங்க. வேற பேர் சொல்லுங்க.”

“யோசிக்கணும்.....”

சிறிது நேரம் யோசித்த பின்னர் மகனுடன் தொடர்பு கொண்டார் மயில்சாமி. “கவிமுகில் புதுமையான பேரு. குழந்தையைக் கவின்னோ முகில்னோ கூப்பிட்டுக்கலாம்” என்றார் குரலில் குதூகலம் பொங்க.

“அப்பா, சொல்ல மறந்துட்டேன். நியூமராலஜிபடி கூட்டினா மூனு வரணும்” வெறுமனே சொல்லி வைத்தான் சிவக்குமார்.

ஆங்கில எழுத்து மதிப்பின்படி கூட்டினால் மூன்று வருகிற தமிழ்ப் பெயர்களை அப்போதே பட்டியலிட்டு, ‘நாவுக்கரசி’ என்னும் பெயரைத் தேர்வு செய்தார் மயில்சாமி; மகனிடமும் சொன்னார்.

அப்பா பரிந்துரைத்த பெயர்களை மனைவி நிதர்ஸனாவிடம்  ஒப்பித்தான் சிவக்குமார்.

“வான்மதி...கவிமுகில்...நாவுக்கரசி...கர்மம்...கர்மம்... இதெல்லாம்தான் புதுமையான பேர்களா? அவர்கிட்ட எதுக்குக் கேட்டீங்க?” சுடச்சுட வார்த்தைகளைச் சிதறவிட்டாள் நிதர்ஸனா.

“அது வந்து... குடும்பத் தலைவராச்சேன்னு ஒரு ஃபார்மாலிட்டுக் கேட்டுத் தொலைச்சிட்டேன்.”

“சரி விடுங்க. க்,ச்,ட் இல் ஆரம்பிக்கிற பேர்தான் வைக்கணும்னு குடும்ப ஜோதிடர் ஃபோன் பண்ணிச் சொல்லிட்டார். அதனால, ‘க்ருஷிஹா’ங்கிற பேரை செலக்ட் பண்ணிட்டோம்னு அவர்கிட்ட இப்பவே சொல்லிடுங்க” என்றாள் நிதர்ஸனா.

zzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzz