திங்கள், 22 டிசம்பர், 2014

இன்றைய என் பதிவில் நேர்ந்தது பெரும் பிழை...மன்னியுங்கள்.

இன்று நண்பகல்[22.12.2014] நான் வெளியிட்ட, ‘ஆஞ்சநேயருக்கு அபிஷேகமும் என் அடிவயிற்று எரிச்சலும்’ என்னும் பதிவில் மிகப் பெரிய ஒரு பிழை நேர்ந்துவிட்டது. [என் துணைவியார் சுட்டிக் காட்டியதால்  திருத்தப்பட்டுவிட்டது].

நாமக்கல்லில், 21.12 1914 இல் ஆஞ்சநேயருக்குப் ‘பாலாபிஷேகம்’ நடைபெற்றதாகக் குறிப்பிட்டிருந்தேன். இது தவறான தகவல் ஆகும். 21.12.2014 என்று குறிப்பிட்டிருக்க வேண்டும்.

ஏற்கனவே இந்த இடுகையை http://kadavulinkadavul.blogspot.com/2014/12/blog- post_22.html[‘கிளிக்’ செய்க] வாசித்தவர்கள் என்னை அன்புகொண்டு மன்னித்திடுமாறு மிக்க பணிவுடன் வேண்டுகிறேன்.

நேர்ந்த பிழைக்கு மிகவும் வருந்துகிறேன்.

கீழ்த்தரமான கண்டனக் கருத்துகளுக்கு அஞ்சி, கருத்துப் பெட்டியை மூடி வைக்காமல் இருந்திருந்தால் நண்பர்கள் இந்தப் பிழையைச் சுட்டிக் காட்டியிருப்பார்கள். 

இனி என்றும்[பதிவு எழுதுவதை நிறுத்தும்வரை] ‘கருத்துப் பெட்டி’ திறந்தே இருக்கும் [தேவைப்பட்டால் மட்டுமே மட்டுறுத்தல்...] என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

கவனக்குறைவால் நேர்ந்த பிழை இதுவாகும். 'ஹிட்ஸ்’ஸுக்காக நான் கையாண்ட உத்தியோ இது என்று தயவுசெய்து சந்தேகப்பட வேண்டாம்.

அனைவருக்கும் என் நன்றி.

=============================================================================================

14 கருத்துகள்:

  1. கமென்ட் பாக்ஸ் திறந்த திற்கு வாழ்த்துக்கள்.

    //ஹிட்ஸ்’ஸுக்காக நான் கையாண்ட உத்தியோ இது என்று தயவுசெய்து சந்தேகப்பட வேண்டாம்.//

    உண்மையை நாங்கள் எப்போதும் சந்தேகப்பட மாட்டோம். ஆஞ்சனேயர் கண்ணைக் குத்தி விடுவார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துச் சொல்வதில் மிகுந்த எச்சரிக்கை காட்டியதால் தேதி குறிப்பிட்டதில் பிழை நேர்ந்துவிட்டது.

      மிக்க நன்றிங்க.

      நீக்கு
  2. பதில்கள்
    1. பிழைக்காக வருத்தம் தெரிவித்து வெளியிட்ட பதிவிலும் பிழைகள் இருந்தன[பதற்றம்!].
      திருத்தினேன். ‘பெரு பிழை’ என்று எழுதுவது தவறல்லதான். ஆனால், நான் எழுத நினைத்தது, ‘பெரும் பிழை’ என்றுதான்.

      மிக்க நன்றி அருணா.

      நீக்கு
  3. பாலை மட்டுமல்ல.... இப்படி உணவுப் பொருட்களைக் கடவுள் பெயரால் வீணாக்குவது எனக்கும் உடன்பாடு இல்லை.

    பக்தி மிகுந்தவர்கள் ஒரு அன்புக்காக ஒரு லிட்டர் பாலை அபிஷேகம் செய்தால் கூடப் போதும். பாக்கியை இல்லாதவர்களுக்குக் கொடுக்கலாம். கடவுள் மனம் மகிழமாட்டாரா என்ன?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஒரு லிட்டர் பாலை அபிஷேகம் செய்தால்கூடப் போதும்...//

      அபிஷேகம் செய்பவர்கள் அத்தனை பேரும் இதைப் புரிந்துகொண்டால் நல்லது.

      மிக்க நன்றி துளசி கோபால்.

      நீக்கு
  4. //நாமக்கல்லில், 21.12 1914 இல் ஆஞ்சநேயருக்குப் ‘பாலாபிஷேகம்’ நடைபெற்றதாகக் குறிப்பிட்டிருந்தேன்//

    இதை ஏன் பிழையென்று சொல்கிறீர்கள் என்று புரியவில்லை. அன்று பாலாபிஷேகம் நடந்ததை நான் என் கண்ணால் பார்த்தேன். அன்று பாலாபிஷேகம் நடக்கவில்லை என்று யாராவது நிரூபிக்க முடியுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்வதும் சரிதான். யாராலும் நிரூபிக்க முடியாது.

      நன்றிங்க...மிக்க நன்றி.

      நீக்கு
  5. மட்டுறுத்தலோடு கருத்துப் பெட்டி வையுங்கள் ஐயா! பண்பாடற்ற கருத்துகளை மட்டும் வெளியிட வேண்டாம்

    பதிலளிநீக்கு
  6. இப்போதே செய்துவிடுகிறேன்.

    நன்றி முரளி.

    பதிலளிநீக்கு