வெள்ளி, 17 ஏப்ரல், 2015

நடுநிலை பிறழ்ந்ததோ தமிழ்மணம்!? ஆயினும் அதற்கு நன்றி!

#ஜெயகாந்தனின் ‘அக்கினிப் பிரவேசம்’ ஒரு புரட்சிப் படைப்பா? -ஓர் அதிரடி விமர்சனம்!#http://kadavulinkadavul.blogspot.com/2015/04/blog-post_9.html என்னும் தலைப்பில் இன்று முற்பகல் 11.30 மணிக்கு, ஒரு பதிவு எழுதியதோடு அதைத் தமிழ்மணத்தில் இணைக்கவும் செய்தேன்.

தமிழ்மணமும் அதை இணைத்துக்கொண்டதாக அறிவிப்புச் செய்தது. ஆயினும், அது தமிழ்மணம் பதிவுகள் பட்டியலில் இடம்பெறவில்லை.[நண்பகலில் அது மீண்டும் இணைக்கப்பட்டும் பலனில்லை]

‘அக்கினிப் பிரவேசம் ஒரு எதார்த்தமான படைப்பல்ல; அது தரத்தில் சராசரிக்கும் குறைவான இடத்தையே பெற்றிருக்கிறது’ என்பதாக விமர்சனம் செய்திருக்கிறேன். தரம் தாழ்ந்து எழுதப்பட்டதல்ல அவ்விமர்சனம்.

என் பதிவு இணைக்கப்பட்டதாக அறிவித்த பின்னர் அது இருட்டடிப்புச் செய்யப்பட்டதற்கான காரணத்தை என்னால் அறிய இயலவில்லை. ஜெயகாந்தன் விமர்சிக்கப்படுவதை தமிழ்மணம் விரும்பவில்லை போலிருக்கிறது. 

மூளைக்கு வேலை தரவேண்டும் என்பதற்காகவே நான் பதிவு  எழுதுகிறேன். அது பிறருக்குப் பயன்படுவதாக இருந்தால் நல்லது என்றும் நினைப்பவன் நான்.

ஆகவே, தமிழ்மணத்தின் புறக்கணிப்பு என்னை வருத்தவில்லை. கடந்த காலங்களில் அது அளித்த ஆதரவை நன்றியுடன் நினைவு கூர்கிறேன்.

நன்றி தமிழ்மணம்...மிக்க நன்றி.

=====================================================================================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக