வியாழன், 30 ஜூலை, 2015

பெண்கள் தெய்வங்கள் ஆனது எப்படி?!

#இறந்துபோன கணவனின் உடலோடு சேர்த்து அப்பாவிப் பெண்ணை நெருப்பில் பலியிடும் சடங்கு ‘சதி’ எனப்பட்டது. அப்படி,  பெண் பலி கொடுக்கப்படுவதால் ஆணுக்கு சொர்க்கம் கிடைக்கும்ன்ற மூட நம்பிக்கை இருந்தது. கணவனை இழந்த பெண், வேறு ஆணோடு பழகிக் குழந்தை பெற்றுவிட்டால் இனத் தூய்மை அழிந்து போய்விடும் என்றும் நினைத்தார்கள். எனவே, அவளைக் கணவனோடு சேர்த்துக் கொன்றுவிட வேண்டும் என்ற எண்ணமும்[சூது] அந்தக் காலத்தில் நடைமுறையில் இருந்திருக்கிறது. 

கி.மு. 3ஆம் நூற்றாண்டிலிருந்தே இந்தியாவில் சதி நடைமுறையில் இருந்திருக்கிறது. அந்தக் காலங்களில், கால்நடைகளைப் போலவே பெண்ணும் ஆணுக்கான உடைமைப் பொருள். ஆகவே, கால்நடைகளை யாகத்தில் பலி கொடுப்பதுபோல பெண்களையும் அவர்களின் உரிமையாளர்கள் இறந்துபோன பிறகு பலி கொடுத்திருக்கின்றனர். இப்படி உயிரோடு கொல்லப்பட்ட பெண்களுக்கு நினைவுக்கல் வைத்து வழிபட்டதால் அவர்கள் தெய்வம் ஆக்கப்பட்டார்கள்.

தாங்கள் தெய்வம் ஆக்கப்பட்டதில் ஆனந்தப் பரவசத்துக்கு உள்ளான அவர்கள், காலப்போக்கில் தாங்களாக முன்வந்து உடன்கட்டை ஏறச் சம்மதித்தார்கள்.

அவர்களை மேலும் சந்தோசப்படுத்தும் வகையில், இந்தப்  பூமியையும் ஆறுகளையும்கூடப் பெண் தெய்வங்களாக உருவகப்படுத்தி வழிபட்டார்கள் ஆண்கள்.

அலெக்சாண்டருடன் இந்தியாவுக்கு வந்த கிரேக்க வரலாற்று அறிஞர் அரிஸ்டோபுலஸ், சதியை நேரில் கண்டதைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். தட்ஷ சீல நகரில் இறந்துபோன கணவனுடன் நெருப்பில் இறங்கி உயிர்விட்ட பெண்ணைப்பற்றி அவரது நாட்குறிப்பில் பதிவு செய்து இருக்கிறார். அதிலும், கிழவனுக்கு மணம் முடித்துவைக்கப்பட்ட ஏழு, எட்டு வயது சிறுமிகள்கூட சதிக்கு உள்ளாகி உயிரோடு எரிக்கப்பட்ட சம்பவங்கள் இந்தியாவில் நடந்திருக்கின்றன.

சதிக்கு எதிரான போராட்டம் என்பது 12ஆம் நூற்றாண்டில்தான் மேலோங்கத் தொடங்கின. அதற்கு முன், வட இந்தியாவில் அங்கொன்றும் இங்கொன்றுமாக பெண்கள் சதியில் இருந்து தப்பி ஓடிய சம்பவங்களும், பிடிபட்டுக் கடுமையாகத் தண்டனை வழங்கப்பட்டுப் பின்னர், எரித்துக் கொல்லப்பட்டதும் குறிப்புகளில் பதிவாகி இருக்கின்றன. குறிப்பாக, 1206இல் சதிச் சடங்குக்கு முன், அது பெண்ணுக்குச் சம்மதமா என்று கேட்கப்பட வேண்டும் என்ற சட்டம் டெல்லி சுல்தான்களால் அமல்படுத்தப்பட்டது. ஆனால், குடும்பத்தினர் பெண்ணை நிர்ப்பந்தம் செய்து சதியை எளிதாக நிறைவேற்றிக்கொண்டதால் அந்தச் சட்டத்தால் பெரிய பயன் எதுவும் இல்லையாயிற்று. 

ஐரோப்பியர்களின் வருகைக்குப் பிறகே, சதிச் சடங்கு குறித்துக் கடுமையான எதிர்வினைகள் உருவாகத் தொடங்கின.

ஜுகி என்ற நெசவாளர்கள் இனத்தில் உயிரோடு எரிப்பதற்குப் பதிலாக பெண்ணைக் கணவனோடு சேர்த்து மண்ணுக்குள் புதைத்துவிடும் வழக்கம் இருந்திருக்கிறது. இதுபற்றி, ரிஸ்லே தனது வங்காளப் பழங்குடியினர் பற்றிய தனது நூலில் எழுதியிருக்கிறார். சதியை ஒழிப்பதில் பிரிட்டிஷ் அதிகாரிகள் தீவிரக் கவனம் செலுத்தியிருக்கின்றனர். 

சதிக்கு எதிராகப் போராடியவர்களில், ராஜாராம் மோகன்ராய் மிக முக்கியமானவர். இவரது சகோதரர் இறந்துவிடவே அவரது மனைவி சதிச் சடங்கில் உயிரோடு எரிக்கப்பட்ட சம்பவம் மோகன்ராயின் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியது. அதிலிருந்து, சதிக்கு எதிராகத் தீவிரமாக போராடத் தொடங்கினார். இதற்காக, ஒவ்வொரு நாளும் கல்கத்தாவின் மயானத்துக்குத் தனது ஆட்களுடன் சென்று சதி நடைபெறுகிறதா என்று கண்காணித்ததோடு, அதை ஒழிப்பதற்கான தடைச் சட்டத்தை உருவாக்கவும் முனைப்புடன் செயல்பட்டார்#  

நன்றி: ‘கல்வி அஞ்சல்’ kalvianjal.blogspot.com/2013/01/blog-post_6043

லாற்று நூல்களில் பதிவான மனம் பதற வைக்கும் சில சம்பவங்கள்:

கி.பி.1628இல் மதுரையை ஆண்ட நாயக்க மன்னன் ஒருவன் இறந்தபோது, அவனுடைய 
சவத்துடன் அவனின் 700 மனைவியர் உடன்கட்டை ஏறியதாக ஒரு முஸ்லீம் யாத்திரிகர் 
குறிப்பிடுகிறார்.

‘மதுரையை ஆண்ட திருமலை நாயக்கன், கி.பி. 1658இல் இறந்தபோது அவனுடைய 200 
மனைவிமார்களும் உடன்கட்டை ஏறினர்’ என Proenza என்னும் பாதிரியார் தம் கடிதத்தில் 
குறிப்பிட்டுள்ளார்.

இராமநாதபுரத்தை ஆண்ட கிழவன் சேதுபதி என்னும் மன்னன் கி.பி.1710இல் இறந்தான். 
அவனுடைய 47 மனைவிமாரும் உடன்கட்டை ஏறினர்.

நன்றி: திருச்சி வே. ஆனைமுத்து எழுதிய, ‘தமிழ்நாட்டில் பண்பாட்டுப் புரட்சி, பெரியார் 
நூல் வெளியீட்டகம், சென்னை. முதல் பதிப்பு:1980.
===================================================================================






புதன், 29 ஜூலை, 2015

உலகளவில் நாத்திகர்கள் மிகச் சிறுபான்மையினரா?

தனக்கும் மேலான ‘சக்தி’ ஏதும் இல்லை என்று நம்பினால் கடவுளும் ஒரு நாத்திகனே!
ன்மீகம் போற்றுபவர்கள், மதவாதிகள் என எல்லோரும் நாத்திகர்கள் மிக மிகச் சிறுபான்மையினர் என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது முற்றிலும் தவறான தகவல் ஆகும். அண்மையில் மேற்கொண்ட ஆய்வுகளின்படி உலகில் உள்ளமதங்களைப்பின்பற்றுவோர் பட்டியலை மனோரமா இயர் புக் 2012(ஆங்கிலப் பதிப்பு)வெளியிட்டு இருப்பதாக மருதூர் சு.செம்மொழிஅவர்கள் உண்மை இதழில் குறிப்பிட்டிருக்கிறார்கள். அந்தப் பட்டியலைக் கீழே காணுங்கள்.

1.    கிறித்துவர்கள் : 2.1. பில்லியன் (210 கோடி)      
2.    இசுலாமியர்கள்: 1.3 பில்லியன் (130 கோடி)
3.    நாத்திகர்கள்: 1.1. பில்லியன் (110 கோடி)
4.    இந்துக்கள்: 900 மில்லியன் (90 கோடி)
[Hinduism has over 1 billion adherents worldwide (15% of world's population).[1][2] Along with Christianity(31.5%), Islam (23.2%) and Buddhism (7.1%), Hinduism is one of the four major religions of the world by percentage of population.[3]] -Wikipedia
5.    சீனாவின் பழைமைவாய்ந்த மதங்கள்: 394 மில்லியன் (39.4 கோடி)
6.    புத்தமதம்: 376 மில்லியன் (37.6 கோடி)
7.    பிரைமல் இன்டிஜினியஸ்: 300 மில்லியன் (30கோடி)
8.    ஆப்பிரிக்காவின் பழைமையான மதங்கள்:  100 மில்லியன் (10 கோடி)
9.    சீக்கியர்கள்: 23 மில்லியன் (2.3 கோடி)
10.  ஜுக்: 19 மில்லியன் (1.9 கோடி)
11.  ஸ்பிரிடிசம்: 15 மில்லியன் (1.5 கோடி)
12.  ஜுடாய்சம்: 14 மில்லியன் (1.4 கோடி)
13. பஹாய்: 7 மில்லியன் (70 லட்சம்)
14. ஜைனமதம்: 4.2 மில்லியன் (42 லட்சம்)
15. ஷின்டோ: 4 மில்லியன் (40 லட்சம்)
16. கா டோய்: 4 மில்லியன் (40 லட்சம்)
17. ஜோரோஸ்டிரினிசம்: 2.6 மில்லியன் (26 லட்சம்)
18. டென்ரிக்யோ: 2 மில்லியன் (20 லட்சம்)
19. நியோ-பக்னிசம்: 1 மில்லியன் (10 லட்சம்)
20. யுனிட்ரியன்-யுனிவர்சலிசம்: 8 லட்சம் பேர்
21. ராஸ்டாஃபாரினிசம்: 6 லட்சம் பேர்

                    *                         *                         *                             

Global Survey Finds 63% of World’s Population is Religious, While 11% Are “Convinced Atheists” [www.patheos.com/.../friendlyatheist/.../global-survey-finds-63-of-worlds- population-...]

A new survey just released by WIN Gallup International (no relation to Gallup, Inc.) says that 63% of people around the world are religious, while those who are “a convinced atheist” make up 11% of the global population. (Global, in this case, refers to the 65 countries from which they were able to acquire data.) Unlike most surveys that put atheists under a broader “non-religious” umbrella, this one actually separates us from the rest of the “Nones.”
The most faith-filled countries in the world, with more than 90% of the population describing themselves as religious, are Thailand, Armenia, and Bangladesh:

(Why is the percentage of atheists so low in Bangladesh? Maybe because people there kill anyone who admits it.)

On the other end, the least religious countries are China, Japan, and Sweden:

China, of course, is known for its human rights abuses and has (actually) persecuted Christians. I’m not about to celebrate the high percentage of atheists in that country.
In general, African and Middle Eastern nations are the most religious while Western Europe and Oceania are home to the most “Nones.”
In case you’re wondering, Atheists make up 6% of the United States, while the religious represent 56% (a percentage that’s much lower that I would’ve expected). 33% of people fall into the “not religious” category.
        *                       *                       * 
இந்தியாவில்.....

LONDON: The latest Global Index of Religiosity and Atheism has found that the number of non religious people in India has risen.

As against 87% saying they were religious in the same survey in 2005, the percentage has fallen to 81% in 2013. In other words, a drop by 6% in seven years. 

The survey also found a 1% dip in the number of people calling themselves as an atheist. In 2005, 4% people said they didn't believe in God. In 2012, that had dipped to 3%.        -timesofindia.indiatimes.com › World
=============================================================================================

*ஒரு தன்னிலை விளக்கம்:

நான்[‘பசி’பரமசிவம்] நாத்திகனா?

!: நல்ல மனிதனாக வாழ முயன்றவன்; முயலுபவன்!

=============================================================================================

செவ்வாய், 28 ஜூலை, 2015

கொலைகார ஜோதிடர்கள்!

கடவுளை நம்புகிறவர்களைவிடவும் ஜோதிடர்களை நம்புகிற மூடர்களின் எண்ணிக்கை மிக அதிகம்[பதிவின் இறுதியில் உள்ள குட்டிக் கதையைத் தவறாமல் படித்திடுக!]. ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடு இல்லாமல், இவர்களை நம்பிக் கெட்டவர்கள் ஏராளம். இவர்களில் எவரும் திருந்துவதாகத் தெரியவில்லை; திருத்தவும் ஆளில்லை.


‘சேலம் இரும்பாலை மோகன்நகர் பகுதியில் வசித்து வருபவர் பாண்டியன் (வயது 55). இவர் தனது மகள்களுக்குத் திருமண ஏற்பாடு செய்தார். ஆனால், ஜாதகத்தில் தோஷம் உள்ளதாகவும், குலதெய்வம் கோவிலுக்குச் சென்று வழிபட்டு வந்தால் நல்லது நடக்கும் என்றும் ஜோதிடர் கூறியுள்ளார். அதன்படி, பாண்டியன் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் உள்ள தங்களது குலதெய்வம் கோவிலுக்குச் சாமி கும்பிடக் குடும்பத்துடன் சென்றார்.

அங்கு அவர்கள் சாமி கும்பிட்டுவிட்டு ஒரு காரில் நேற்று முன்தினம் தஞ்சாவூரில் இருந்து சேலத்துக்குத் திரும்பினார்கள்.

இவர்களது கார் நள்ளிரவு 12 மணி அளவில் நாமக்கல்லுக்கு அடுத்து உள்ள என்.புதுப்பட்டி அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது பாண்டியனின் கட்டுப்பாட்டை இழந்து ஓடிய கார் சாலையோரத்தில் இருந்த ஒரு கிணற்றுக்குள் பாய்ந்தது. 80 அடி ஆழம் கொண்ட அந்தக்  கிணற்றில் தண்ணீர் இல்லை. இதனால் கிணற்றுக்குள் விழுந்த கார் நொறுங்கியது.

இந்த விபத்தில் பூங்குழலி, அவரது மகள் மங்கையர்கரசி ஆகியோர் உடல் நசுங்கிச் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 2 பேர் பலத்த காயம் அடைந்தனர்.’

இது, 27.07.2015 இல் நாளிதழ்களில் வெளியான செய்தி.
இம்மாதிரியான சோகச் சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. காரணம், மக்களின் அசைக்க முடியாத மூடநம்பிக்கை.

இதை வளர்த்துவிட்டவர்கள்/வளர்த்துக்கொண்டிருப்பவர்கள் ஜோதிடர்கள்.

நேரிடையாக ஒருவரைக் கிணற்றில் தள்ளிக் கொலை செய்வது மட்டும்தான் குற்றச் செயலா? இம்மாதிரி விபத்துகளுக்குக் காரணமாக இருப்பதும் குற்றம்தானே?

ஜாதகத்தில் தோஷம் இருப்பதாகச் சொல்லி, பாண்டியனைக் குடும்பத்துடன் கோவிலுக்குச்செல்லத் தூண்டியவர் ஒரு ஜோதிடர். அவர் பேச்சைக் கேட்டுக் கோயிலுக்குச் சென்றதன் பலன் இருவர் சாவு; இருவர் காயம்.

எந்தவொரு தொழிலைச் செய்வதாயினும் அதற்கு அரசின் அனுமதி பெறவேண்டும். ஜோதிடர்களைப் பொருத்தவரை எந்தவொரு கட்டுப்பாடும் இங்கு இல்லை. 

ஜோதிடச் சக்ரவர்த்தி, ஜோதிடர் திலகம், ஜோதிட சிரோமணி, ஜோதிட பூஷன், ஜோதிட விபூஷன், ஜோதிட ரத்னா, நவக்கிரக ஜோதிடர், ஜோதிடக்கலை ஏந்தல் என்பன போல் தமக்குத்தாமே பட்டம் சூட்டிக்கொண்டு, அறியாமையுள்ள மக்களிடம் கதையளந்து காசு பண்ணிக்கொண்டிருக்கிறார்கள் இவர்கள்.

இவர்களால், மூடத்தனமான செயல்பாடுகளும் உயிர்ப்பலிகளும் நேர்ந்தவண்ணம் உள்ளன.

உயிர்ப்பலிகளுக்குக் காரணமான ஜோதிடர்களைக் குற்றம் புரிந்தவர்களாகக் கருதி, அவர்கள் மீது உரிய நடவடிக்கைகளை எடுக்க மத்திய மாநில அரசுகள் முன்வர வேண்டும் .

அதற்கு முன்னதாக, ஜோதிடத்தைப் பல்கலைக் கழகங்களில் ஒரு பாடமாக வைக்க வேண்டும் என்பன போன்ற பித்துக்குளித்தனமான அறிக்கைகள் வெளியிடுவதை அவர்கள் நிறுத்த வேண்டும். 

செய்வார்களா?
*****************************************************************************************************************************************************
                                     கடவுளின் கவலை [குட்டிக் கதை]
சொர்க்கத்தை மேற்பார்வையிட்டுத் திரும்பிய இறைவி, இறைவன் வெற்று வானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பது கண்டு திடுக்கிட்டு, “பித்துப் பிடிச்ச மாதிரி, பிது பிதுன்னு முழிச்சிட்டிருக் கீங்க. என்னாச்சு உங்களுக்கு?” என்று கேட்டுப் பரிவுடன் அவரின் முன் நெற்றி நீவினார்.

“மோனத்தவம் புரிய அமர்ந்தேன். மனசை ஒருமுகப் படுத்த முடியல” என்றார் இறைவன், வருத்தம் தொனிக்கும் குரலில்.

“ஏனாம்?”

“பகுத்தறிவாளன்கிற பேர்ல, கண்ட கண்ட கசமாலம் எல்லாம், கடவுள் எப்போ தோன்றினார்? அல்லது, யாரால் தோற்றுவிக்கப்பட்டார்?  'அவர் தோன்றியவரல்ல; தோற்றுவிக்கப்பட்டவரும் அல்ல. அவர் ஆதி அந்தம் இல்லாதவர்.....அதாவது, எப்போதும் இருப்பவர்'னா அது எப்படிச் சாத்தியம் ஆச்சுன்னு கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கிடுக்கிப்பிடி போட்டுட்டே இருக்கானுக. நம்ம அவதாரங்கள்னு சொல்லிட்டுத் திரியற ஆட்களால அவங்களைச் சமாளிக்க முடியல. உடனடியா பதில் வேணும்னு கோரிக்கை வெச்சுட்டே இருக்காங்க. எனக்கும் பதில் தெரியல. ரொம்பவே பதற்றமா இருக்கு.”

“கவலையை விடுங்க. எமதர்மன்கிட்ட சொல்லி, பூலோகத்திலிருந்து ஒரு ஜோதிடரை வரவழைச்சி, கோடி கோடி கோடியோ கோடிப் பிரபஞ்ச ஆண்டுகளுக்கு முன்னால், இன்ன நட்சத்திரத்தில் கடவுள் தோன்றினார்; யுக யுக யுக யுகாதி யுக ஆண்டுகளுக்கு அப்புறம், இன்ன நட்சத்திரத்தில் மறைவார். மறைந்த அதே கணத்தில் மீண்டும் தோன்றுவார். இப்படி, கிஞ்சித்தும் இடைவெளியின்றித் தோன்றுவதும் மறைவதுமாக இருப்பவரே கடவுள்னு ஊடகங்களுக்கு அறிக்கை தரச் சொல்லிடறேன்” என்றார் இறைவி.

“மனித குலம் நம்புமா?” என்றார் இறைவன்.

“என்ன நீங்க, உலகம் புரியாத கடவுளா இருக்கீங்க. உங்களை நம்புறதை விட ஜோதிடர்களைத்தான் மனுசங்க அதிகம் நம்புறாங்க” என்று அழுத்தம் திருத்தமான குரலில் சொன்னார் இறைவி.

இறைவனின் முகத்தில் மகிழ்ச்சி பரவியது.
*********************************************************************************************

*கனவுகள் கண்டதோடு, தாம்கண்ட கனவுகளை நனவுகளாக்கிப் பற்பல சாதனைகள் நிகழ்த்திய அறிவியல் அறிஞர் அப்துல்கலாம் பற்றிய நினைவுகளை என்றென்றும் போற்றிப் பாதுகாப்போம்*

*********************************************************************************************












வியாழன், 23 ஜூலை, 2015

அடச்சீ...ச்சீ...ச்சீ...இவன்தானா தமிழன்!?

மொழியால் தமிழனைத் தேடினேன். அவன் ஆங்கிலத்தைக் கொஞ்சிக்கொண்டிருந்தான். 

பண்பாட்டால் அவனைத் தேடினேன். ‘பர்த் டே’ பார்ட்டியில் ‘கேக்’ வெட்டிக்கொண்டிருந்தான்.

நாட்டால் தமிழனைத் தேடினேன். அவன் ஐரோப்பாவிலும் ஆஸ்திரேலியாவிலும் ‘ஏதிலி’யாய் நின்றுகொண்டிருந்தான்.

இனத்தால் அவனைத் தேடினேன். காணவில்லை.

அன்று.....

இவன், பண்டைக் கிரேக்க-ஐரோப்பிய-இலத்தீன் நாகரிகம் அனைத்துக்கும் மூலமான பாபிலோனியாவில் வாழ்ந்தவனாம். அந்த மண்ணிலுள்ள, ‘ஊர்’ என்ற சொல் பச்சைத் தமிழ்ச் சொல்லாம். இப்படிப் பாவாணர் கூறுகிறார்.

இசுப்[ஸ்]பெயின் நாட்டில் இன்று விடுதலை கோரிப் போராடிவரும் பாசுக்கு[Basque] மக்கள் குமரியிலிருந்து போன பழைய தமிழனின் வழித் தோன்றல்கள்தானாம். பாசுக்கு மொழி தமிழுக்கு மிக நெருக்கமானதாம். ஆய்வாளர் இலாகோவாரி[Dr.N.Lahovary] சொல்கிறார்.

ஆப்பிரிக்கா, பண்டைத் தமிழனின் நாடுதானாம். ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ்ச் சொற்கள் அங்குண்டாம். இவ்வாறு செனகல் நாட்டுத் தமிழறிஞர் செங்கோர் முழங்குகிறார்.

எடின்பரோ[Edinborough], கன்ரர்பரி[Canterbury] ஆகிய ஊர்ப் பெயர்களில் உள்ள ‘புரி’ தமிழ்ச் சொல்தானாம். சின்ன மனிதர்கள் வாழ்ந்ததால்தான் சீனா என்றாயிற்றாம். அரிசி என்ற தமிழ்ச் சொல்லிலிருந்து பிறந்ததுதானாம் ‘ஒரிசா’. இப்படி இன்னொரு பேராசிரியர் அடுக்கிக்கொண்டே போகிறார்.

சரி.

அங்கெல்லாம் வாழ்ந்த தமிழன் எங்கேதான் போய்த் தொலைந்தான்?
சிந்துவெளியில் தமிழன் வாழ்ந்தான் என்கிறீர்கள். அவன் பயன்படுத்திய சட்டி இருக்கிறது; பானை இருக்கிறது; செம்பினால் செய்த ஊசிகூட இருக்கிறது. தமிழனை மட்டும் காணவில்லை.

தமிழன் அடையாளம் இழந்தது எப்படி? மொழியாலும் பண்பாலும் நடையாலும் பிறழ்ந்தது எப்படி?

தமிழன் தன்னைத் தானே மறந்தான்! தன்னைத் தானே தாழ்த்தினான்! தன்னைத் தானே பிரித்தான்! தன்னைத் தானே காட்டிக் கொடுத்தான்! தன்னைத் தானே அழித்தான்!

இதுதான் அவன் வரலாறு.

பைந்தமிழ் ஈழத்தில் மீன் பாடும் தேன் நகராம் ‘மட்டு’ நகரில் 500 ஆண்டுகளுக்கு முன்பு வந்து குடியமர்ந்த பரங்கியர்கள்[போர்த்துக்கீசர்] வாழ்கிறார்கள். இன்றும் வீடுகளில் தங்கள் தாய்மொழியாம் போர்த்துக்கீய மொழியிலேயே உரையாடுகிறார்கள்.

ஆனால்.....

150 ஆண்டுகளுக்கு முன்பு ‘மொரிசியஸ்’ தீவுக்குப் போன தமிழன் தன் தாய்மொழியாம் தமிழை முற்றிலுமாய் மறந்துபோனான். மொரிசியஸ் தீவில் தமிழன் கிரியோல் மொழிக்காரனாய், ஆங்கில மொழிக்காரனாய் முகம் இழந்து நிற்கிறான்.

வெள்ளைக்காரனுக்கு அடிமையாய் இருந்து, அவனுக்குத் தொழும்பு செய்த காலத்தில், அவனைப் பார்த்து, “சார்” போட்ட தமிழன், இன்னும் ‘சார்’ போடும் வெட்கங்கெட்ட பழக்கத்தை விட்டொழித்ததாகத் தெரியவில்லை.

ஆங்கிலம் பேசுவது நாகரிகம் என்றும், தமிழ் பேசுவது பட்டிக்காட்டுத்தனம் என்றும் தன்னையும் தன் மொழியையும் தாழ்வாக இவன் கருதும் பாங்கினை-தீங்கினை எவரிடம் சொல்லி அழுவது?

தன்னைத் தாழ்வானவன் என்றும் அடுத்தவனை உயர்வானவன் என்றும் கருதியதால் தன் மொழியையும் பண்பாட்டையும் இழந்து இவன் அழிந்தான்.

தொல்காப்பியம் கி.மு. 500இல் எழுதப்பட்டது. தமிழ் முளைத்து, வளர்ந்து, பூத்துக் கனிந்த நிலையில்.....

கி.பி.500இல்தான் ஆங்கிலமும் சிங்களமும் தோன்றின.

ஆங்கிலேயனுக்கும் சிங்களவனுக்கும் இன்று அரசுகள் உண்டு.

தமிழனுக்கு?
=============================================================================================

உணர்ச்சிக் கவிஞர் காசி.ஆனந்தன் அவர்கள், ‘தமிழனைத் தேடுகிறேன்’ என்னும் தலைப்பில் ‘ராணி’ இதழில்[28.11.1993] எழுதியது.

கவிஞருக்கும் ராணி இதழுக்கும் என் நன்றி.


செவ்வாய், 21 ஜூலை, 2015

அசோகனின் அந்தப்புரக் கொலைகள்! மூக்கறுத்த சோழன்!! கர்ப்பிணியின் வயிறறுத்த வந்தி!!![பழையது]

முக்கிய குறிப்பு: புதிய பதிவுகளுக்கிடையே, பழைய வலைப்பதிவுகளி லிருந்து மறுவாசிப்புக்குத் தகுதியான பதிவுகளையும் தொடர்ந்து வெளியிட உள்ளேன். பழையதை விரும்பாதவர்களுக்காகத் தலைப்புடன் ‘பழையது’ என்னும் சொல் இணைக்கப்பட்டிருக்கும் என்பதை அறிக!


“மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டும்” என்றார் கவிமணி. இந்திய வரலாற்றின் ‘ரத்தக்கறை படிந்த  பக்கங்களை’ அவர் படித்ததில்லை போலும்!


‘மன்னர்கள் புரிந்த மாபெரும் குற்றங்களும், அவர்களின் மூடத்தனமான வெறிச் செயல்களும், அவற்றால் மக்களுக்கு ஏற்பட்ட சொல்லொணாத் துயரங்களும் வரிசைப்படுத்தப்பட்ட அட்டவணைதான் வரலாறு' என்கிறார் மேலைநாட்டு அறிஞர் ஒருவர்.

இந்திய அரசியல் வரலாற்று நூல்கள் மூலம் அறியப்பட்ட சில நிகழ்வுகளை இங்கே தொகுத்திருக்கிறேன். படியுங்கள். பிறகு சொல்லுங்கள்..........

“கவிமணி அவர்களின் கூற்று ஏற்கத்தக்கதா?”

                       *                       *                     *


நாடெங்கும், நீண்ட நெடுஞ்சாலைகள் அமைத்து  நிழல் தரும் மரங்கள் நட்ட அசோகச் சக்ரவர்த்தியை நம் எல்லோருக்கும் தெரியும்.

இவர் கலிங்கப் போருக்குப் பிறகு மனம் திருந்திய மாமனிதர்.

போருக்கு முந்தைய அசோகர்?

இவர், பிந்துசாரரின் 101 புதல்வர்களில் ஒருவர்; சகோதரர்களைக் கொன்று குவித்து ஆட்சியைக் கைப்பற்றியவர்; அதனால், ‘சண்ட அசோகன்’ எனப் பெயர் பெற்றதோடு குற்றம் புரிந்தவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கியவர்; எதிரிகள் பலரையும் வென்ற மாபெரும் வீரர். ஆனால்............

இந்த அசோகனின் தோற்றம் மட்டும் விகாரமானது!

இவரின் அந்தப்புரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அழகிகள் இருந்தார்கள். அவர்களில் யாரோ சிலர் இவரது தோற்றத்தைப் பழித்தார்களாம். அந்தச் சிலரை அடையாளம் காண முடியாததாலோ என்னவோ அங்கிருந்த அத்தனை பெண்களையும் யமனுலகுக்கு அனுப்பினாராம் அசோகச் சக்ரவர்த்தி!

இவரிடம், பிறந்தநாள் கொண்டாடும் வழக்கம் இருந்தது. அந்த விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும். விமரிசையாக என்றால் எப்படி?

பிறந்த நாளில் ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலி கொடுப்பது!

இவனா[ரா] கலிங்கப் போருக்குப் பிறகு அஹிம்சாவாதியாக மாறினான்[ர்]? நம்ப முடியவில்லைதானே?

எதற்கும்  ‘பாகைநாடன்’ எழுதிய ‘கறை படிந்த காலச் சுவடுகள்’ [மூவேந்தர் பதிப்பகம், சென்னை. முதல் பதிப்பு: 2004]  ஆய்வு நூலை உடனே வாங்கிப் படித்துவிடுங்கள்.

                                *                      *                          *                                     
அடுத்து வரும் செய்தி உங்களைக் குலை நடுங்க வைக்கும் என்பது 100% உறுதி!

கி.பி.937 இல் காஷ்மீரை ஆண்டவன் ‘வந்தி’ என்னும் பெயர் கொண்டவன். கொடியருள் கொடியனான இவனிடம் இருந்த கொடூரமான ஒரு பழக்கம்.....

கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றை அறுத்து உள்ளுறுப்புகளை ரசிப்பது; வேதனையில் தாய் துடிப்பதையும் குழந்தை உயிருக்குப் போராடுவதையும் கண்டு ஆனந்தத்தில் மிதப்பது!


                                *                      *                        *

அடுத்து, தமிழ் மன்னன் ராசராசன் காலத்தில் [கி.பி.1008] நடந்த ஒரு நிகழ்வு.

ராசராசனுக்கும் சாளுக்கிய மன்னனுக்கும் போர் நடந்தது. சோழன் வென்றான். சாளுக்கியன் தலைநகர் எரியூட்டி அழிக்கப்பட்டது.

அந்தப்புரத்துப் பெண்கள் அடிமைகள் ஆக்கப்பட்டார்கள். [போர் முடிவுக்கு வந்த பின்னர் வெற்றி ஈட்டிய மன்னர்கள் அ.பு. பெண்களைக் கடத்துவதும், அழகிகளைத் தம் அந்தப்புரத்தில் சேர்ப்பதும் வழக்கமாக இருந்தது]

சினம் தணியாத ராசராசன்

சாளுக்கியத் தளபதியின் மகளைப் பிடித்து வந்து அவளின் மூக்கைத் துண்டித்தானாம்!! [ராமாயணம் படித்திருப்பானோ?]

எதிரியைப் பழிவாங்க வேண்டும் என்னும் உச்சக்கட்ட வெறி, எதிரி இனத்துப் பெண்களை இப்படி வதை செய்தால்தான் அடங்கும்போல் தெரிகிறது.

இவனின் பழி வாங்கும் வெறி இத்துடன் முற்றுப் பெறவில்லை. எதிரி நாட்டுப் பெண்களின் மார்க்கச்சுகளை அவிழ்த்து ஓடவிட்டிருக்கிறான்.

                                   *                       *                         *

இந்த ராசராசனை ரொம்ப நல்ல பிள்ளை ஆக்குகிறார்கள், 15 ஆம் நூற்றாண்டு வாக்கில், பாண்டிய மன்னர்களுடன் போர் புரிந்த ஆந்திர நாயக்க மன்னர்கள்.

தோற்றுப் போன மன்னனின் கண் முன்னால், பொது இடங்களில் வைத்து, பலபேர் முன்னிலையில், அவனின் குடும்பப் பெண்களை நிர்வாணமாக்கிக் குண்டர்களை ஏவி கற்பழிக்கச் செய்திருக்கிறார்கள்! [‘நாயக்கர் வரலாறு’]

குடும்பப் பெண்களின் கண் முன்னால், தோற்ற மன்னனின் தோலை உரித்ததெல்லாம் [உயிரோடு] சர்வ சாதாரண நிகழ்வுகள்!.

                                 *                       *                        *

கி.பி.1341 இல் மதுரையை ஆண்டவன் கியாஸ் உதீன் என்பவன்.

இவனின் சகலையும், இஸ்லாமிய வரலாற்றாசிரியருமான ‘இபின் பதூதா’ இவனைப் பற்றிக் குறிப்பிடும்போது, ‘மனித உருவில் வந்த பேய்’ என்கிறார்.

‘இவன் , பெண் கைதிகளை அவர்களின்  தலை முடியினால் கழுமரத்துடன் கட்டுவான். அவர்களின் குழந்தைகளை அந்தத் தாய்மார்களின் மார்பின்மீது வைத்துச் சித்திரவதை செய்வான்; வெட்டிக் கொல்லுவான்’ என்கிறார் இபின் பதூதா.

இப்படிப் பெண்ணினம் வதைக்கப்பட்டதற்கான ஏராள ஆதாரங்கள் வரலாற்று நூல்களில் உள்ளன.

இன்றளவும், இனக்கலவரம் மதக்கலவரம் என்னும் தீ, இம்மண்ணில் கொழுந்துவிட்டு எரிந்த...எரிகிற போதெல்லாம் கொலை கொள்ளைச் சம்பவங்களுக்கு இணையாகப் பெண்கள் கற்பழிக்கப்படுவதும் சாசுவதமான ஒன்றாகிவிட்டது.

இப்போது சொல்லுங்கள்...........

“மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டும்” என்ற கவிமணியின் கூற்று ஏற்கத்தக்கதா?

‘கதைகள் எட்டு வகை’.....இளம் எழுத்தாளர்களுக்கான பதிவு!

‘இச் என முத்தமிட்டான் என்பதை இச்சினான் என்கிறார்கள். ‘ஃபோன் ஒலித்தது’ என்பதை, ‘ஃபோன் ரிங்கியது’ என்றும், ‘சர்’ என்று இறங்கினான்’ என்பதை, ‘சர்ரினான்’ என்றும் எழுதுகிறார்கள் இன்றைய எழுத்தாளர்கள். வாசகனைக் கவர்வதற்கு இவர்கள் கையாளும் புதிய உத்தி இது எனலாம். இவ்வகை உத்திகளை இன்று எழுதப்படும் கதைகளில் பரவலாகக் காண முடிகிறது.

‘மாலா நம் கதையின் நாயகி. இவளைக் கொஞ்சம் வர்ணித்துவிட்டுக் கதைக்குச் செல்லலாமே” என்று சொல்லித் தன் கதையைத் தொடங்குகிறார் ஓர் எழுத்தாளர்.

‘இந்தக் கதையைப் படிக்குமுன் நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ள வேண்டும். வாருங்கள் கை குலுக்குவோம். ஹலோ...ஐ யாம் அர்ஜுன். வாட்டசாட்டமாக இருக்கிறேனே என்று பார்க்கிறீர்களா? நான் ராணுவத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்ற ஆள் சார்.’ இப்படி எழுதி அசத்துகிறார் இன்னொருவர்.

‘சாருபாலா. என்ன அழகான பெயர்! அவளுடைய அண்ணாந்த கழுத்தில் இருக்கும் மிளகு மச்சம்! வியர்வையும் பவுடரும் கலந்த வியர்வை வாசனை! அவளது நாசியில் புகுந்து தொந்தரவு செய்யும் கேச இழைகள். உதடுகளில் ‘மெத்’தென்று சிக்கும் காது மடல்கள். விரல் நுனியில் பரபரப்பூட்டும் வயிற்றுக் குழைவு. அவனுடைய மார்பு முடிகளின் வேர்கள்வரை இறங்கும் அவளுடைய வெப்ப மூச்சு. சாருபாலாவை நினைக்கும்போதெல்லாம் இவை எல்லாமே ஊர்வலமாய் வந்து நினைவில் தங்கிவிடும்.’ இப்படி வாசகனின் உள் நெஞ்சுவரை ஊடுருவுகிறார் தேவிபாலா என்னும் பிரபல எழுத்தாளர்.

சிறுகதை மட்டுமன்றி நாவல்களிலும் இம்மாதிரி, மன உணர்வுகளை வருடிக் கொடுக்கும் நடையையும் உத்திகளையும் கையாளும் கதாசிரியர்கள் தமிழில் கணிசமாக இருக்கிறார்கள்.

இவர்களால், சிறுகதையின் வடிவம் சீர்மை பெற்றுவருவது நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது.

உள்ளடக்கத்தின் நிலை என்ன?

நவீன சிறுகதைகளின் உள்ளடக்கத்தைச் சீர்தூக்கிப் பார்த்து, அவற்றை, ‘நல்ல கதைகள்’ என்றும் ‘நச்சுக் கதைகள்’ என்றும்  ‘பொழுதுபோக்குக் கதைகள்’ என்றும் ஆய்வாளர்கள் தரம் பிரிப்பார்கள். 

கொஞ்சம் அழுத்தமாக ஆராயும்போது, இவற்றை மேலும் பல வகைகளாகப் பகுக்கத் தோன்றுகிறது.

ஒன்று:
கதையில் எதிர்பாராத முடிவைக் கொடுத்து வாசகனைக் கவர்தல் ஒருவகை. இம்மாதிரிக் கதைகள் நிறையவே வெளியாகின்றன. இவற்றில் குறிப்பிடத்தக்கவை ஒரு பக்கக் கதைகள்.

இரண்டு:
அரைத்த மாவை அரைத்தல். ஏற்கனவே வெளியான கதைகளின் நிகழ்வுகளை மாற்றியமைத்து, கதைமாந்தர்களுக்குப் புதுப்பெயர்கள் சூட்டிப் புதுக்கதை படைப்பது. சுற்றிவளைக்காமல் சொன்னால், ஒருவர் படைத்த கதையின் கருவை இன்னொருவர் திருடுவது. அதாவது, கதைத் திருட்டு! இம்மாதிரிக் கதைகளும் பெருமளவில் வெளியாகின்றன.

மூன்று:
அரைப் பக்கத்தில் அல்லது ஒரு பக்கத்தில் எழுதி முடிக்க வேண்டியதை எட்டு அல்லது பத்துப் பக்கங்களில் பூசி மெழுகுவது. இம்மாதிரி ‘இழுத்தடிப்பு’ வேலையைச் செய்பவர்கள் பெரும்பாலும் பிரபல எழுத்தாளர்களே!

நான்கு:
எத்தனை முறை படித்தாலும் புரியாத படைப்புகள். இப்படி எழுதியே தமிழில் ‘பிரபலங்கள்’ பட்டியலில் இடம் பெற்ற எழுத்தாளர்கள் இருக்கிறார்கள்!

ஐந்து:
பாசாங்குக் கதைகள். எதார்த்த வாழ்வில் இடம்பெறாத சோகங்களையும் துயரங்களையும் பூதாகரமாக்கிக் கதைகளை உருவாக்குவது. இவையும் கணிசமான எண்ணிக்கையில் உள்ளன.

ஆறு:
பொழுதுபோக்குக் கதைகள். இவ்வகைக் கதைகளை இரண்டாகப் பிரிக்கலாம். கதை படிக்கும் வாசகனின் பொழுதை வீணடிப்பது ஒன்று. சூதாடுவது, பந்தயம் கட்டுவது என்பன போல. பின்விளைவு ஏதுமின்றி, வாசகனைச் சிறிது நேரம் மகிழ்ச்சியில் ஆழ்த்துவது மற்றொன்று. இன்னிசை கேட்பது போலவும் இயற்கையை ரசிப்பது போலவும் என்று சொல்லலாம்.

ஏழு:
வாழ்க்கைப் பிரச்சினைகளையோ சிக்கல்களையோ போராட்டங்களையோ இயல்பாகப் படம் பிடிப்பது.
வேலை தேடிச் சோர்ந்துபோன ஒரு பட்டதாரி வாலிபன், பழைய பேப்பர்களும் பிளாஸ்டிக் பொருள்களும் சேகரித்து விற்றுக் கொஞ்சம் சம்பாதிக்க நினைக்கிறான்; காரியத்தில் இறங்குகிறான். முதல் நாளே அடி உதை விழுகிறது. உதைத்தவர்கள், ஏற்கனவே அந்தத் தொழிலைச் செய்துகொண்டிருப்பவர்கள். 

இவ்வகைக் கதைகளே மக்களுக்குப் படிப்பினையும் மிக்க பயன்களும் நல்குபவை. அரிதாகவே வெளியாகின்றன.

எட்டு:
பிரச்சினைகளை எதார்த்தமாகச் சொல்வதோடு, அவற்றிற்குத் தீர்வும் தர முயலும் படைப்புகள். இவை எண்ணிக்கையில் மிக மிகக் குறைவானவை. 

ஓர் எடுத்துக்காட்டு மட்டும்.
ஓர் இந்து இளைஞன், பிரசவ வேளையில் உயிருக்குப் போராடும் மனைவியை மருத்துவமனையில் சேர்க்கத் துடிக்கிறான். ஊரெங்கும் மதக் கலவரம். சாதிசனம் என்று எவருமே உதவ முன்வரவில்லை. இந்த நிலையில், முன்பின் அறிமுகம் இல்லாத ஒரு முஸ்லீம் பெரியவர் தன் உயிரைப் பணயம் வைத்து உதவுகிறார். மாதங்கள் கழிகின்றன. பிள்ளைக்குப் பெயர்சூட்டு விழா. சொந்தபந்தங்கள் பல பெயர்களைச் சிபாரிசு செய்கின்றன. அவற்றையெல்லாம் அலட்சியப்படுத்தி, கடவுளாக வந்து தன் மனைவியைக் காப்பாற்றிய முஸ்லீம் பெரியவரின் பெயரை - அவரிடமே முன்பு கேட்டறிந்தது - தன் பிள்ளைக்குச் சூட்டுகிறான் அந்த இந்து இளைஞன்.

அருமையான படைப்பு! குங்குமம் இதழில் வெளியானது இது. எழுதியவர் பெயர் மறந்துபோனது வருத்தத்தைத் தருகிறது.

ஜாதிமத வெறிகொண்டு அலையும் மிருகங்களுக்கெல்லாம் சரியான சாட்டையடி இந்தக் கதை.

முகவரி தெரியாத, பிரபலம் ஆகாத இளம் எழுத்தாளர்களின், இதுபோன்ற தரமான படைப்புகள் கணிசமாக வெளிவந்துகொண்டிருப்பதைக் காணுகிறபோது மனம் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கிறது; அழுத்தமானதொரு நம்பிக்கை பிறக்கிறது.

வீரமாமுனிவர், மாதவய்யா, பாரதி போன்ற முன்னோடிகளால் அடித்தளம் அமைக்கப்பட்டு, வ.வே.சு.ஐயரால் முறையாக வடிவமைக்கப்பட்டு, எழுத்துலக மேதைகளால் வளர்க்கப்பட்டு, இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கும் சிறுகதை இலக்கியம் இனியும் வாழும்; வளரும்!
***************************************************************************************************************************************************
ஓய்வு பெறவிருந்தபோது, சென்னை வானொலியில், ‘இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்ச்சிறுகதைகள்’ என்னும் தலைப்பில் நான் ஆற்றிய உரையின்[30 நிமிட இலக்கியப் பேருரை] இறுதிப் பகுதி இது.






சனி, 18 ஜூலை, 2015

அன்னை மேரியும் அருள்மிகு அம்மனும் கண்ணீர்விட்டு அழுவது ஏன்?!



‘மாதா சிலையில் கண்ணீர் வழிந்ததாகப் பரபரப்பு’ என்னும் தலைப்பில் இன்றைய நாளிதழ்களில் வெளியான செய்தியே இந்தவொரு பதிவு எழுதக் காரணமாக அமைந்தது.

‘அன்னை மேரியின் சிலை கண்ணீர் வடித்தது’; ‘அம்மன் சிலையிலிருந்து கண்ணீர் பெருகியது’. ‘பிள்ளையார் சிலையில் கண்ணீர்’ என்றிவ்வாறான பரபரப்பூட்டும் செய்திகள் அவ்வப்போது நாளிதழ்களில் வெளியாவது யாவரும் அறிந்ததே.


அம்மன் சிலையில் இருந்து கண்ணீர் வடிந்ததால் பரபரப்பு.!!
இம்மாதிரிச் செய்திகளின் நம்பகத்தன்மை பற்றி ஆராய்வது, அல்லது அவை  பற்றிய விமர்சனங்களை முன்வைப்பது நம் நோக்கமல்ல. காரணம்.....

விமர்சித்த சிலர், ‘மத உணர்வுகளைப் புண்படுத்துதல்’ என்ற அடிப்படையில் வழக்குத் தொடுக்கப்பட்டு, கம்பி எண்ணி, ஜெயிலில் ‘களி’ தின்ற சம்பவங்கள்!

கீழ்வரும் செய்தியைப் படியுங்கள்:

#‘பிள்ளையார் சிலை குடித்த பாலும் ஏசு சிலை வடித்த கண்ணீரும்’

சனால் எடமருகு’ - ஒரு பகுத்தறிவாளர். இவர் மீது மும்பை நகரின் மூன்று காவல் நிலையங்களில் முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டிருக்கிறது. குற்றச்சாட்டுகள் மெய்ப்பிக்கப்படுமானால் இவருக்குக் குறைந்தது மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்கும்.


இவர் செய்த குற்றம்? “மக்களின் மத நம்பிக்கையைப் புண்படுத்தினார், மதப் பகையுணர்வைக் கிளறிவிட்டார், அமைதியைச் சீர்குலைக்க முயன்றார்...” என்பன.

என்ன நடந்தது? மும்பையின் இர்லா சாலையில் ஒரு வேளாங்கன்னி ஆலயம் இருக்கிறது, அதன் வளாகத்தில், ஏசு சிலுவையில் தொங்குகிற சிலை ஒன்று வைக்கப்பட்டிருக்கிறது. கடந்த மார்ச் மாதம், திடீரென ஏசு சிலையின் பாதத்திலிருந்து தானாகவே சொட்டுச் சொட்டாக நீர் சொட்டத் தொடங்கியிருக்கிறது. அது ஏசுவின் கண்ணீர் என்றும், அதற்கு நோய்களைப் போக்கி இல்லங்களைப் புனிதப்படுத்தும் சக்தி இருப்பதாகவும் சொல்லப்பட்டது. அதை நம்பிய ஒரு பகுதி மக்கள் வரிசையில் நின்று சொட்டுவடி நீரை பாத்திரங்களிலும் பாட்டில்களிலும் பிடித்துச் சென்றிருக்கிறார்கள்.


தகவலறிந்து இரண்டு வாரங்களில் அங்கே வந்து ஆராய்ந்த எடமருகு, அரை மணி நேரத்தில் உண்மையைக் கண்டுபிடித்தார். சிலுவை ஊன்றப்பட்டுள்ள இடத்தில் தரைக்கடியில் சேர்ந்துள்ள தண்ணீர், அழுத்தம் காரணமாக சிலுவையின் மெல்லிய, முடி அளவிலான கோடுகள் போன்ற இடைவெளிகள் வழியாக மேலே ஏறி வழிகிறது என்பதே அந்த உண்மை. அறிவியல் பாடத்தில் இதை “தந்துகி விளைவு” என்பார்கள். தாவரங்களுக்கு இந்த இயற்கையான விளைவின் காரணமாகத்தான் வேர்களிலிருந்து நீர் கிடைக்கிறது.

இந்த உண்மையைக் கண்டுபிடித்ததோடு நிற்காமல் இதை ஊரறிய அறிவிக்கவும் செய்தார் எடமருகு. செய்யலாமோ? புகார் பதிவு செய்திருக்கிறார்கள்.

முன்பு இப்படித்தான் பிள்ளையார் பால் குடிப்பதாகக் கிளப்பிவிட்டார்கள். அது “பரப்பு இழுவிசை” எனும் இயற்பியல் செயல்பாடே என்று அறிவியல் இயக்கத்தினரும் பகுத்தறிவாளர்களும் வெளிப்படுத்தினார்கள். அந்த இயற்பியல் செயல்பாட்டின்படி மார்க்ஸ், பெரியார் சிலைகள் கூட “பால் குடிக்கும்” என நிரூபித்துக் காட்டினார்கள்.

அறிவியல் உண்மைகளை ஏற்றுக்கொள்ள மறுப்பதைப் பொறுத்தவரையில் மத வேறுபாடே இல்லை! இந்த உண்மையைச் சொல்வது எப்படி மத நம்பிக்கையைப் புண்படுத்துவதாகும்? மறைநூல்களில் எங்காவது இப்படி ஏசு சிலை கண்ணீர் வடிக்கும் என்று கூறப்பட்டிருக்கிறதா? இது எப்படி மதப் பகைமையைத் தூண்டும்? “ஏசு சாமி போலி, என் மதத்தின் சாமிதான் ஒரிஜினல்” என்று எடமருகு ஏதாவது பிரச்சாரம் செய்தாரா? இது எப்படி பொது அமைதியைக் குலைக்கும்? பொதுமக்கள் ஏசுவின் கண்ணீர்ச் செய்தியையும் கேள்விப்பட்டார்கள், எடமருகுவின் செய்தியையும் கேள்விப்பட்டார்கள், தங்களுடைய வேலையைப் பார்த்துக்கொண்டு போய்க்கொண்டே இருக்கிறார்கள். இதை ஒரு மதப்பிரச்சனையாக மாற்றச் சிலர் முயல்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. 

உண்மையிலேயே ஏசு சிலை கண்ணீர் வடிக்கிறது என்றால், எட மருகு சொல்வது பொய் என்று நிரூபித்து மகிமையை நிலைநாட்ட வேண்டியதுதானே? எதற்காகக் காவல் நிலையம் செல்ல வேண்டும்? கர்த்தர் உள்ளிட்ட மகிமை மிகு கடவுளர்களால் எடமருகு போன்றோரை ஒன்றும் செய்ய முடியாது என்பதால்தானே சட்டத்தின் துணையுடன் அவர்களது வாயை அடைக்க முயல்கிறார்கள்? அறியாமல் செய்கிறார்கள், கர்த்தரே இவர்களை மன்னியும் என்று சொல்ல முடியவில்லை.

இந்தியாவின் அரசமைப்பு சாசனம், மக்களிடையே அறிவியல் கண்ணோட்டத்தை வளர்ப்பது அரசின் முக்கியக் கடமைகளில் ஒன்றாகக் கூறுகிறது. அரசு அதைச் செய்யத்தவறுகிறது. சில தனி மனிதர்களும் முற்போக்கான இயக்கங்களைச் சேர்ந்தோரும் செய்கிறார்கள். அவர்களைக் கைது செய்வது நாட்டின் அரசமைப்பு சாசனத்தை அவமானப்படுத்துகிற செயல்.

மக்கள் அறிவுப்பூர்வமாக சிந்திக்கிறவர்களாக, எதையும் ஏன் எப்படி என்று கேள்வி கேட்பவர்களாக இருக்கக்கூடாது என்பது நாட்டின் வளங்களை எல்லாம் வளைத்துக் கொழுக்கிற நவீன உள்நாட்டு, வெளிநாட்டுக் கொள்ளையர்களின் விருப்பம். எல்லா மதங்களையும் சேர்ந்த திடீர் மகிமைக் கதைகள் அந்த விருப்பத்தைத்தான் நிறைவேற்ற முயல்கின்றன. அந்தக் கதைகளின் மூளைச்சலவை இரைச்சல்களை மீறி உண்மைகளும் வெளிவந்துகொண்டுதான் இருக்கின்றன - அடக்குமுறைகளைப் பொருட்படுத்தாமல்.[(தகவல் ஆதாரம்: தி ஹிண்டு நாளேட்டின் 7.5.2012 இதழில் பிரவீன் ஸ்வாமி எழுதியுள்ள கட்டுரை)
நீங்கள் கதையின் பக்கமா, உண்மையின் பக்கமா?#

நாம் எந்தப் பக்கமும் இல்லை. ‘சிலுவை ஊன்றப்பட்டுள்ள இடத்தில் தரைக்கடியில் சேர்ந்துள்ள தண்ணீர், அழுத்தம் காரணமாக சிலுவையின் மெல்லிய, முடி அளவிலான கோடுகள் போன்ற இடைவெளிகள் வழியாக மேலே ஏறி வழிகிறது என்பதே அந்த உண்மை. அறிவியல் பாடத்தில் இதை “தந்துகி விளைவு” என்பார்கள். தாவரங்களுக்கு இந்த இயற்கையான விளைவின் காரணமாகத்தான் வேர்களிலிருந்து நீர் கிடைக்கிறது’ என்ற ‘எடமருகு’வின் அறிவியல் பூர்வமான விளக்கத்தை வழிமொழியவும் இல்லை.

நமக்கு ஏன் இம்மாதிரி வம்பு வழக்கெல்லாம்?!

லகெங்கும்,  கடவுளர்களின் சிலைகளில் கண்ணீர் வடிந்த நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிடுவதோடு, அவற்றிற்கான ஒரு சிறு பட்டியலையும் ‘விக்கிப்பீடியா’ வெளியிட்டுள்ளது.
List of weeping statues[edit]
A very small number of weeping statues have been recognized by the Catholic Church, e.g. in Syracuse Sicily the 1949 shedding of tears from a statue was recognized by the Catholic bishops of Sicily on August 29, 1953.[13] Our Lady of Akita was declared as worthy of belief by the Holy Office in 1988, and remains the only weeping statue recognized by the Holy Office.
The following is a list of the more publicized claims. The veracity of these claims is difficult to establish and many have been declared hoaxes[புரளி] by Church officials.

Date
Location
Claims
Reference
1949
Syracuse, New York
human tears — unverified
June 1985
tears of human blood, rejected by local bishop
Catholic News [2]
March 1989
tears of pig's blood, rejected by the Archdiocese of Manila
February 1995
statue of Our Lady, bought in Medjugorje, tears of blood
April 1997 till present
statue of Our Lady of the Sacred Heart sheds a red liquid - unverified
March 2002
statue of Pio of Pietrelcina shed a red liquid, but was rejected by the Vatican
September 2002
wept scented tears, apparitions, accepted.
February 2003
unverified
September 2004
appearance of scented oil, blinked and claimed a cure — not verified
November 2005
tears of blood, called a hoax on the Paula Zahn TV show
March 2006 onwards
tears of blood, appearance of oil, honey, milk — not verified
January 2006 till present
tears of blood, appearance of oil, salt - unverified, self-published claims