அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

புதன், 9 டிசம்பர், 2015

சென்னை வெள்ளமும் ‘செக்ஸ்’ தொழிலாளர்களின் நல்ல உள்ளமும்!

‘இவர்கள்’ வயிற்றுப்பாட்டிற்காகத் தன்மானத்தை இழந்தவர்களாக இருக்கலாம். ஆனால், மனிதாபிமானத்தை இழக்காதவர்கள்; நம்மால் பெரிதும் மதிக்கத்தக்கவர்கள்.


08.12.2015 நாளிதழில்[நன்றி: தினத்தந்தி] வெளியான ஒரு செய்தி நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது.

#மராட்டிய மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ‘செக்ஸ்’ தொழிலாளர்கள், சென்னை வெள்ள நிவாரணப் பணிகளுக்கு ரூ.1 லட்சம் வழங்கினார்கள். ‘சினேகாலயா’ என்ற ‘தொண்டு நிறுவனம் அகமது நகரில் நேற்று ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில், ரூ.1 லட்சத்துக்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் அனில் கவடேயிடம் அவர்கள் வழங்கினார்கள்.
இது பற்றி, ‘சினேகாலயா’ நிறுவனர் கிரிஷ் குல்கர்னி கூறுகையில், ‘சென்னை வெள்ளப் பாதிப்பைக் கேள்விப்பட்டு, கடந்த நான்கு நாட்களாக இந்தப் பெண்கள் மன உளைச்சலில் இருந்தார்கள். மாவட்டத்தில் மொத்தம் உள்ள 3 ஆயிரம் ‘செக்ஸ்” தொழிலாளர்களில் 2 ஆயிரம் பேர் இந்த நிதியில் தங்கள் பங்கைச் செலுத்தியுள்ளனர். மேலும், கடந்த நான்கு நாட்களாகத் தினமும் ஒரு வேளை மட்டுமே சாப்பிட்டுள்ளனர்’ என்றார்#

இவர்கள் நல்லவர்கள். உடம்பை விலைபேசி வாழும் அவலநிலைக்கு இவர்களை ஆளாக்கிய இந்தச் சமுதாயம் பொல்லாதது.
*****************************************************************************************************************************************************

இணைப்பு:

‘குங்குமம்’[14.12.2015] இதழில் வெளியான ஒரு பக்கக் கதை.
நன்றி: ‘குங்குமம்’



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக