வியாழன், 31 மார்ச், 2016

அனுமானக் கடவுள்!


கடவுள்  இருக்கட்டும், முதலில் 'அனுமானம்' என்றால் என்னவென்று புரிந்துகொள்வோம். இதை 'யூகம்', அல்லது, 'உய்த்துணர்தல்' என்றும் சொல்வார்கள்.

'Inference is the act or process of deriving logical conclusions from premises known or assumed to be true'  என்கிறது Wikipedia, the free encyclopedia.         தமிழில்..........

'அனுமானம்' என்பது, 'உண்மை' என அறிந்தவற்றிலிருந்து அறியாதன  பற்றி 'விவாதித்து' ஒரு முடிவுக்கு வருதல்'.
நெருப்பிலிருந்து புகை வெளியாவதைப் பார்க்கிறோம். இது ஒரு காட்சி அனுபவம். புகையை மட்டுமே காண நேர்கிற போதுகூட  அதற்கு ஆதாரமாக நெருப்பு   இருப்பதை அறிகிறோம்  அல்லவா? இதற்கு 'அனுமானம்'  என்று பெயர். பொருளின் 'தன்மை' பற்றியது இந்த அனுமானம்.

பூவின் வாசம் நம் மூக்கைத் துளைக்கிற போதெல்லாம் அதை வெளிப்படுத்தும் மலர்கள் அருகில் இருத்தல் வேண்டும் என நினைக்கிறோமே, இதுவும் அனுமானம்தான். இது, பொருளின் 'குணம்' குறித்தது.

பொருள்களின் 'தோற்றம்' குறித்தும் அனுமானங்கள் செய்யப்படுவதுண்டு.

ஒரு குயவர் மண், நீர் ஆகியவற்றைப் பயன்படுத்தித்  தண்டச்சக்கரம், தட்டுப் பலகை ஆகிய துணைக் கருவிகளைக் கொண்டு பானை வனைவதைப் பார்க்கிறோம். இது, நம் கண்களால் காணுகிற  ஓர் உண்மை நிகழ்வு ஆகும்.

இங்கே  பானை என்பது செயற்கையான ஒரு பொருள். அதாவது, செய்யப்பட்டது.

மண்ணால் செய்யப்பட சிலை; உலோகத்தால் உருவாக்கப்பட்ட பாத்திரம்; பேருந்து; கடிகாரம்; செல்போன்......இப்படி எத்தனையோ  செயற்கைப் பொருள்கள் இம்மண்ணில் உள்ளன. 

இம்மாதிரி செயற்கைப் பொருள்கள் அனைத்தும் மனிதரால் செய்யப்பட்டவை என்பது நாம் அறிந்த உண்மை. அல்லது, பிறர் மூலம் அறிந்த நம்பத்தக்க உண்மை.

இந்த உண்மை அனுபவம் , நம்மால் அறியப்படாத ஒரு பொருளின் தோற்றம் பற்றி அறிந்துகொள்ளப் பயன்படுவது உண்டு.

வானில் 'பறக்கும் தட்டு' அல்லது, அது போன்ற ஒன்று உலவுவதைப் பார்க்க நேரிட்டால், அது வழக்கமாக நாம் காணும் இயற்கைப் பொருள்களில் ஒன்றல்ல; முற்றிலும் செயற்கைப் பொருள்தான் என்று நம்புகிற போது அதைச் செய்தது யாராக இருக்கும் என்று சிந்திக்கிறோம்.

அது மனிதர்களின்  செயலல்ல என்பதை அறிகிறோம். மனித அறிவினும் மேம்பட்ட அல்லது அதற்கு இணையான அறிவு படைத்த வேற்றுக்கிரக வாசிகளின் உருவாக்கமாக இருக்கலாம் என எண்ணுகிறோம். இதுவும்' அனுமானம்' எனப்படுகிறது. பொருளின் தோற்றம் குறித்த அனுமானம் இது.

இந்த அனுமானத்தை, ஆன்மிகவாதிகள் 'கடவுள் இருக்கிறார்' என்று சாதிப்பதற்குப் பயன்படுத்தினார்கள்; பயன்படுத்துகிறார்கள்.

செயற்கை பொருளான பானையைப் 'படைப்பு' என்றார்கள். ஒரு பொருள் படைக்கப்பட்டதென்றால் அதைப் படைத்தவன் இருந்தே தீரவேண்டும் என்றார்கள்.

இக்கருத்தைத்  துணையாகக் கொண்டு, 'இந்தப் பிரபஞ்சம் ஒரு படைப்பு. அதைப் படைத்தவர் கடவுள்' என்றார்கள்; என்கிறார்கள்.

மேம்போக்காகப் பார்த்தால் அவர்கள் வாதம் சரி என்பது போல் தோன்றும். கொஞ்சம் யோசித்தால்..........

ஒரு பொருள் படைக்கப்பட்டதென்றால் அதைப் படைத்தவர் யார் என்று அனுமானிக்க முயற்சி செய்யலாம். அதற்கு முன்னதாக, அது 'படைக்கப்பட்ட' பொருள்தானா என்று கண்டறிவது முக்கியம்.

பிரபஞ்சம் படைக்கப்பட்ட ஒன்றா?

இக்கேள்விக்கு விடை கண்ட பிறகல்லவா படைத்தவர் கடவுளா வேறு எவருமா என்று யோசிக்க வேண்டும்?

இது பற்றிச்  சிந்திக்க  ஆன்மிகவாதிகள் ஒருபோதும் முன்வந்ததில்லை. முதலில் கடவுள் என்று ஒருவரைக் கற்பனை செய்துகொண்டு, 'பிரபஞ்சம் ஒரு படைப்பு. அதைப் படைத்தவர் கடவுள்' என்று சொல்லிச் சொல்லிச்  சொல்லிப்  பெரும்பான்மை மக்களை நம்ப வைத்துவிட்டார்கள்.  

நம்ப மறுப்பவர்களைத் தொடர்ந்து சாடிக்கொண்டிருக்கிறார்கள்.

'கடவுள்' படைக்கவில்லையென்றால் வேறு யார் படைத்தது? கல்லும் மண்ணும் மரமும் மனிதர்களும் பிறவும் தாமாகவே தோன்றினவா?' என்று கேள்வி கேட்டு, கேள்வி கேட்பவரின் வாயை அடைக்க முயலுகிறார்கள்.

'அணுக்களின் சேர்க்கையால் பொருள்கள் தோன்றுகின்றன. அவற்றின் இணைப்பிலேதான் உணர்ச்சிகள் பிறக்கின்றன; உயிர்கள் தமக்குரிய சக்தியை / அறிவைப் பெறுகின்றன. மனிதன் ஆறறிவு பெற்றதும் இவற்றின் சேர்க்கையால்தான். இவை விஞ்ஞானம் கண்டறிந்த உண்மைகள். இவற்றிற்கும் மேலான உண்மைகளை அது எதிர்காலத்தில் கண்டறியும் என்பது உறுதி.

அணுக்களைத தோற்றுவித்ததே   கடவுள்தான்  என்று அவர்கள் சமாளித்தால், 'கடவுளைத் தோற்றுவித்தது யார்?' என்று வழக்கமாக முன்னிறுத்தப்படும் கேள்விக்குப் பதில் சொல்ல இயலாமல் அவர்கள் விழி பிதுங்கி  நிற்கிறார்கள். காலங்காலமாய் அந்தவொரு கேள்வியைக் கண்டுகொள்ளாமலே கடவுளின் இருப்பை வலியுறுத்த, 'பானையைக் குயவன் படைத்தான். பிரபஞ்சத்தைக் கடவுள் படைத்தார்' என்று மக்களை மூளைச் சலவை செய்துகொண்டிருப்பது மிகப் பெரிய ஆச்சரியம்.

அவர்கள் பயன்படுத்திய அதே  அனுமான உத்தியைப் பயன்படுத்திக்  கீழ்க்காணுமாறு ஒரு முடிவை நம்மால் அறிவிக்க முடியும்.

பானை என்பது ஒரு படைப்பு. அது அழியக்கூடியது. படைப்பாளியான  குயவனும் அழிந்து  போவான். அது போல, பிரபஞ்சம்  அழியக்கூடியது. அதைப் படைத்த 'படைப்பாளி'யான கடவுளும் ஒருநாள் அழிவது உறுதி.

*********************************************************************************************************************** 
கீழ்க்காணும் மேற்கோள்கள் இப்பதிவுக்கு வலிமை சேர்ப்பவை:

'.....பானை இருந்தால் குயவன் என்பது போல், இந்த உலகம் இருப்பதால் அதனைப் படைத்த இறைவன் உண்டு என்று வாதிடும் ஆன்மீக தத்துவத்தை ஏற்க இயலாது. குயவனைக்  கண்டறிய இயலும். ஆனால், இறைவனை எங்கே கண்டறிவது?.....' சார்வாகர்கள் 

'......அனுமானத்தையே முடிவு என அழுத்தமாக கூறுவதனால் அது வெறும் அனுமான ஆய்வாகவோ யூக ஆய்வாகவோ முடிந்துவிடுகிறது. இதில் ஆய்வின் நேர்மைத் தன்மை இல்லாமல் போய்விடுகிறது. எனவே, உலகம் படைக்கப்பட்டது என்பது வெறும் 'யூகக் கோட்பாடுதான்....' கௌதம புத்தர்.
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx










திங்கள், 28 மார்ச், 2016

எழுத்தாளர் ‘கல்கி’ நாத்திகரா?

#ராகு என்றால் ஒரு கிரஹம் அல்லது பாம்பு அல்லது ஒரு பாம்புக் கிரகம் என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும். அதற்கு அகோரமான பசி ஏற்படும்போது, பகலாயிருந்தால் சூரியனையும் இரவாயிருந்தால் சந்திரனையும் ‘அப்பம்’ என்று எண்ணி விழுங்கிவிட முயலும். இப்படி, விழுங்கப் பார்த்து முடியாமல் போய், கக்கிவிடுவதற்குத்தான் சூரிய சந்திரகிரஹணங்கள் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். 
சூரியன் என்றால் லேசா என்ன? சூரியனுடைய குறுக்களவு, சுற்றளவு, வெப்பத்தின் டிகிரி முதலியவையும உங்களுக்குத் தெரிந்த விஷயங்களே. சூரியனது குறுக்களவு 10,00,000..... மைல். எவ்வளவு பூஜ்யம் என்பது ஞாபகமில்லை. பூஜ்யம் எவ்வளவு போட்டால்தான் என்ன? 

இதே முறையில் எல்லாக் கிரகங்களின் அளவையும் கணக்காகச் சொல்லிவிடலாம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். பூமியிலிருந்து சூரியனுடைய தூரமோ ஒன்று போட்டு பதினாறு பூஜ்யம் மைல் என்று நினைக்கிறேன். 

இவ்வளவு தூரத்திலிருக்கும் சூரிய பகவான் வருஷந்தோறும் நாம் கொடுக்கும் பொங்கல், வாழைப்பழம் முதலியவற்றைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே வெயிலில் மண்டை வெடிக்கிறது. இப்படிப்பட்ட சூரிய பகவானை விழுங்க முயல்பவனின் கதி என்னவாகுமென்று சொல்ல வேண்டியதில்லை.

வாசகர்களின் காதோடு ஒரு ரகசியம் சொல்கிறேன். இந்தக் கதையில் உண்மையாக உங்களுக்கு நம்பிக்கை கிடையாது. எனக்கும் நம்பிக்கை கிடையாது. 

முறையே, பூமி, சந்திரன் என்னும் இவற்றின் நிழலினால் எப்படி சூரிய சந்திர கிரஹணங்கள் உண்டாகின்றன என்பதை நாலாம் வகுப்பிலேயே நாம் படித்திருக்கிறோம் அல்லவா? ஆனால், கிரஹணத்தன்று மட்டும் இந்த விஞ்ஞான அறிவெல்லாம் நமக்கு மறந்துவிடுகிறது. அன்று, கடல் நீரிலோ குளங்குட்டையிலோ தலை முழுகித் தர்ப்பணம் முதலியவை செய்ய நீங்களும் நானும் தவறுவதில்லை. இது குறித்து நாம் வெட்கப்பட வேண்டிய அவசியமும் இல்லை. வான சாஸ்திரத்தில் தேர்ச்சி பெற்ற எம்.ஏ. பட்டதாரிகள்கூட இப்படித்தான் செய்கிறார்கள்.

ராகு, கிரகணங்கள் ஆகியவை பற்றிய உண்மை இப்போது நமக்கு விளங்கிவிட்டது. ஆனால், இந்த ராகு காலம்?

இதன் ரகசியம்தான் எனக்குப் பிடிபடவில்லை.

ராகுவுக்கும் காலத்துக்கும் என்ன சம்பந்தம்?

ராகு காலங்களில், ஞாயிற்றுக் கிழமை சாயங்காலம் வரும் ராகு காலம் மிகவும் பொல்லாததாம். ஒரு முறை, ஞாயிற்றுக் கிழமை மாலை ஒரு காரியத்துக்காகப் புறப்பட்டுச் சென்றேன். புறப்படும்போதே ‘ராகு காலத்தில் கிளம்புகிறோம்!’ என்று நெஞ்சு அடித்துக்கொண்டது. அதற்கேற்றாற்போல் காரியமும் நடக்கவில்லை. ராகுகாலப் பலன்தான் என்று தீர்மானித்தேன்.

ஆனாலும் நான் ஒரு சந்தேகப் பிரகிருதி என்பது உங்களுக்குத் தெரியும். மறுபடியும் யோசனை வந்துவிட்டது. நான் புறப்பட்ட நேரத்திற்கும், நான் பார்க்கச் சென்றவர் ஊரில் இல்லாததற்கும் என்ன சம்பந்தம் இருக்கக்கூடும்? ராகு காலத்திற்கு முன்னால் போயிருந்தாலும் அவர் இருந்திருக்க முடியாது என்ற முடிவுக்கு வந்தேன்.

அப்புறம், வேறொரு நாள் வேண்டுமென்றே ராகு காலத்தில் கிளம்பிச் சென்றேன். அன்று அவர் இருந்தார்; வேலையும் திருப்திகரமாக நடந்தது.

அதற்குப் பிறகு, பல முறை ராகு காலத்தில் காரியம் தொடங்கிப் பார்த்தேன். சில முறை நடந்தது; சில முறை நடக்கவில்லை. ஆகவே, காரிய சித்திக்கும் கிளம்பும் நேரத்திற்கும் சம்பந்தம் ஒன்றுமில்லை என்பது விளங்கிற்று. இந்தக் கட்டுரையைக்கூட ராகு காலத்தில்தான் எழுதத் தொடங்கினேன்.....# 

மேற்கண்டது, எழுத்தாளர் ‘கல்கி’ எழுதிய, ‘ராகு காலம்’ [நூல்: ‘ஏட்டிக்குப் போட்டி’] என்னும் கட்டுரையின் ஒரு பகுதி. இதை வாசித்தவர்களின் மனதில், ‘கல்கி ஒரு நாத்திகரோ?’ என்னும் கேள்வி எழுந்திருக்கக்கூடும். இதற்குப் பதில் தேடும் முயற்சியில் நீங்கள் ஈடுபடத் தேவையில்லை. தொடர்ந்து வாசியுங்கள்.

#‘.....இதற்குள்ளாக, நேயர்களில் பாதிப்பேர் என்னை நாஸ்திகன் எனத் தீர்மானித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். உண்மையில் நான் கடவுள் கட்சியைச் சேர்ந்தவன்தான். நான் பிறந்ததிலிருந்து கடவுளின் கட்சியில் இருந்துவிட்டு, இப்போது அவருக்கு ஆபத்து வரும் சமயத்தில் அவரைக் கைவிட்டு விடுவதென்றால் என் மனம் இடம் கொடுக்கவில்லை. அது நம்பிக்கைத் துரோகம் அல்லவா? .....இருக்கும்வரை கடவுள் கட்சியிலேயே இருந்துவிட்டு உயிரை விடலாம் என்று உறுதியாக இருக்கிறேன்..... ’- கல்கி#
======================================================================






செவ்வாய், 22 மார்ச், 2016

பெண்களின் ‘கற்பு’ பற்றிப் பிரபலமான சில பெண்களின் [காரசாரமான]கருத்துரைகள்!

ஆண்களின் மதிப்பீட்டில், ஒரு ‘நல்ல’ பெண்ணுக்குக் கற்பே முதல் தகுதியாக இருக்கிறது. அழகு, குணம், கல்வி போன்றவற்றிற்கு அடுத்தடுத்த இடங்கள்தான். இன்று கற்பு பற்றிய மதிப்பீடுகளும் வெகுவாக மாறிவிட்டன. இந்நிலையில், பெண்களின் கற்பு குறித்த, ஐந்து புகழ்பெற்ற பெண்களின் கருத்துரைகள் இங்கே தொகுத்தளிக்கப்படுகின்றன. பழைய ‘வாசுகி’ மாதமிருமுறை இதழுக்கு[1-15 டிசம்பர்,2001] நம் நன்றி.
அருள்மொழி[வழக்கறிஞர்]:
“பெரியார் சொன்ன விளக்கம்தான் என்னுடையதும். அதாவது, கற்பு என்பது பெண்களை ஏமாற்றி அடிமைப்படுத்தி வைக்க ஆண்கள் கண்டுபிடித்த அயோக்கியத்தனமான வார்த்தை.

இன்னொரு விதமாகவும் சொல்லலாம். பழந்தமிழ் இலக்கியத்தில் குறிப்பிட்டுள்ள மாதிரி, ‘கற்பெனப்படுவது சொற்றிறம்பாமை. அதாவது, பேச்சு மாறாமலிருப்பது. இது, ஆண் பெண் இருவருக்கும்தான்.

கவிஞர் நிர்மலா சுரேஷ்:
‘கற்பெனப்படுவது பிறர் நெஞ்சு புகாமை’ என்கிறது கலித்தொகை. அப்படிப் பார்த்தால், தெருவில் நடக்கிற பெண்களை எத்தனையோ பேர் பார்க்கிறார்கள்; ரசிக்கிறார்கள். பிறர் நெஞ்சில் புகுவது பெண்ணின் தவறல்லவே. ஒருவனுக்கு ஒருத்தி என்றுதான் காலங்காலமாகச் சொல்லிவருகிறார்கள். ஒருத்திக்கு ஒருவன் என்பதுதான் சரி.

தாமரை[பாடலாசிரியர்]:
கற்பு என்பது தனி மனிதப் பாலியல் ஒழுக்கம். இது, இருபாலருக்கும் பொதுவானது. பாலியல் ஒழுக்கத்திற்குச் சமூகத் தேவை உள்ளது. அதைக் கடைபிடித்துதான் ஆகவேண்டும். கற்பைக் காலம் காலமாகப் பெண்ணுக்கு மட்டுமே சுமத்தியதால்தான் ஆணாதிக்கம் ஆரம்பமானது. என்றைக்குக் கற்பு ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமானதாக ஆக்கப்படுகிறதோ, அன்றைக்குத்தான் உண்மையான ஆண் - பெண் சமத்துவம் சாத்தியப்படும்.

சுமதி[வழக்கறிஞர்]:
கற்பு நேர்மையைக் குறிக்கும். பெண்ணின் ஆற்றலையும் எதிர்ப்பையும் மீறி அவள் கற்பழிக்கப்படுவது ஒரு கொலைக்குச் சமம் ஆகும். கற்பு என்பது உடல் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல; வீடுகளில் மட்டுமல்லாமல், பொது இடங்களிலும் பணியிடங்களிலும் போற்றிப் பாதுகாக்கப்படவேண்டியது கற்பு.

டாக்டர் ஷர்மிளா[‘பாலியல் கேள்வி - பதில்’களில், டாக்டர் மாத்ருபூதத்திற்கு உதவியதன் மூலம்   பிரபலமானவர்]
கற்பு என்பது உடல்  சார்ந்ததல்ல; முழுக்க முழுக்க மனம் சார்ந்தது. மனத்தளவில் எத்தனை பேர் கற்புடையவர்களாக வாழ்கிறார்கள்?

தனக்கு வரப்போகிறவள் கற்பரசியாக இருக்க வேண்டும் என்று ஆண் நினைப்பதுபோலவே, தனக்கானவன் கற்பரசனாக இருக்க வேண்டும் என்று நினைக்கப் பெண்ணுக்கும் உரிமையுண்டு.

வாழ்க கற்பு!
*****************************************************************************************************************************************************






சனி, 19 மார்ச், 2016

காதலா, காமமா, வயிற்றுப்பசியா?...வலிமையானது எது?

‘பசி வந்திடப் பத்தும் பறந்துபோகும்’ என்பது நம் முன்னோர் வாக்கு. ‘காதல் மலர்ந்தாலோ காமம் வலை விரித்தாலோ, பசியென்ன, மானம் மரியாதை சுயகௌரவம் என்று எல்லாமே காணாமல் போகும்’ என்பது இன்றைய எதார்த்தம்.

“மனிதர்கள்தான் காதலுக்கும் காமசுகத்துக்கும் பலியாகிறார்கள்    என்றால் மற்ற உயிரினங்கள் எப்படி?” என்று எனக்கு நானே அடிக்கடி கேட்டுக்கொள்வதுண்டு. எனினும், விடை தேடும் முயற்சியில் தீவிரம் காட்டியதில்லை.

பழைய விகடனில்[27.05.2001] ‘பல்லி’க்கூடம் என்னும் தலைப்பிலான ஒரு குட்டிக்கதையைப்[போட்டியில், ரூ3000/= பரிசு பெற்றது] படித்தபோது, அதன் ஒரு பகுதி என் கவனத்தை ஈர்த்தது. கொஞ்சம் மாற்றங்களுடன் அதைப் பதிவு செய்திருக்கிறேன். படியுங்கள்
#.....நள்ளிரவில் மாதவன் வருவான். தன் மேல் உயிரையே வைத்திருக்கும் கிழவிக்குத் தெரியாமல் அவனுடன் ஓடிப்போக இருப்பது யமுனாவுக்கு வேதனையைத் தந்தது. 

மல்லாந்து படுத்துக் கிடந்த அவளின் பார்வை, சுவரின் மேற்பரப்பில்  படர்ந்தது. அங்கே.....

இரைக்கான தேடலில் ஈடுபட்டிருந்தது ஒரு பல்லி. சில கணங்களில் இன்னொரு பல்லி அங்கு வந்தது. அது, இரை தேடும் பல்லியின் பின்புறமாகச் சென்று அதனைத் தழுவ முற்பட்டது. எனவே, அது   ஆண் பல்லி என்பது புரிந்தது.

பெண் பல்லியோ ஆண் பல்லியிடமிருந்து தப்பித்துப் போக்குக் காட்டியது; அதனை அலைக்கழித்தது.

சற்று நேரம் கழித்து, ஆண் பல்லி மீது பரிதாபம் கொண்டதோ என்னவோ ஆணின் தழுவலை எதிர்பார்த்து அசையாமல் நின்றது. ஆண் பல்லியும், அதுவரையிலான அலைக்கழிப்பை மறந்து புணர்ச்சி விருப்புடன் பெண் பல்லியை நெருங்கியது. அந்தச் சமயம் பார்த்து.....

எங்கிருந்தோ பறந்துவந்த பூச்சியொன்று பெண் பல்லிக்கு முன்பாக அமர்ந்தது.

அதுவரை காதல் மயக்கத்தில் திளைத்து, கலவியின்பத்தை எதிர்பார்த்துக் கிடந்த பெண் பல்லி, கிளர்ந்தெழுந்த உணர்ச்சிப் பெருக்கிலிருந்து கணப்பொழுதில் விடுபட்டுப் பூச்சியின் மீது பாய்ந்தது; ‘லபக்’கென்று அதைப் பிடித்துச் சுவைக்கத் தொடங்கியது.

ஆண் பல்லி ஏமாற்றத்துடன் நின்றது.

பல்லிகளைப் பொருத்தவரை, காதலை விடவும் காமத்தை விடவும் ‘பசி’ வலிமையானது..........

.....யமுனா ஒரு தீர்மானத்துக்கு வந்தாள். ‘வேலை இல்லாத மாதவனால், தன்னை வைத்துப் பாதுகாக்க முடியாது. அவனுக்கு வேலை கிடைக்கட்டும். அப்புறம் கிழவியிடம் அழுது கதறிச் சம்மதம் வாங்கிவிடலாம். இப்போது அவனுடன் ஓடிப்போக வேண்டாம்’# .
*****************************************************************************************************************************************************
நன்றி: குட்டிக்கதையின் ஆசிரியர் வ.ந.கிரிதரன்





வியாழன், 17 மார்ச், 2016

காதல் கலப்புத் திருமணங்களும் ‘தலித்’ இளைஞர் படுகொலைகளும்!

காமத்தின் இன்னொரு பெயரே காதல்[திருமணத்திற்குப் பிறகு காணாமல் போகிற பருவ மயக்கம் இது] என்பதை உணராமல், இதை உன்னதமானது என நம்புகிறார்கள்  நம் இளைஞர்களில் மிகப் பெரும்பாலோர். இதற்குத் தலித் வாலிபர்களும் விதிவிலக்கல்லர்.

இதன் விளைவு, தலித் அல்லாத ஆதிக்க ஜாதிப் பெண்களைக் காதலிப்பதோடு கடிமணமும் புரிகிறார்கள்; ஜாதி வெறியர்களால் கொடூரமாகக் கொலை செய்யப்படுகிறார்கள் 

இதன் தொடர்ச்சிதான் உடுமலையில் சங்கர் கொலை செய்யப்பட்ட நிகழ்வு.
‘சாதிபேதமற்ற சமுதாய மறுமலர்ச்சி’க்கு எதிரான இக்கொடுஞ் செயலைக் கண்டித்து, அரசியல் தலைவர்களும் சமுதாய நல ஆர்வலர்களும் அறிக்கைகளை வெளியிட்டிருக்கிறார்கள்; சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் என்றெல்லாம் கோரிக்கைகள் வைத்திருக்கிறார்கள்.

சங்கர் கொல்லப்பட்டது ஒரு குற்றச் செயல். இம்மாதிரியான குற்றங்கள் புரிவோரைத் தண்டிக்க இப்போதுள்ள சட்டங்களே போதுமானவை. இவற்றின் மூலம் தூக்கிலிடுதல் என்ற அதிகப்ட்ச தண்டனையே வழங்கலாம்.

சங்கரைக் கொலை செய்தவர்களுக்குத் தாங்கள் செய்யவிருக்கும் குற்றங்களுக்கான தண்டனை என்ன என்பது முன்கூட்டியே தெரியும். தெரிந்தே குற்றம் செய்தார்கள். காரணம், பக்குவப்படாத மனம்; அடங்காத ஜாதிவெறி.

இவர்களைப் போன்றவர்கள் மனம் திருந்தாதவரை, எந்தவொரு சட்டத்தாலும் இத்தகைய கொடூரக் கொலைகள் நிகழாமல் தடுப்பது சாத்தியமல்ல.

உண்மை இதுவாயின், ஆதிக்க ஜாதிப் பெண்ணை மணக்கிற ஒரு தலித் இளைஞன், தன் உயிரைப் பாதுகாத்துக்கொள்ள  வழியே இல்லையா?

உண்டு.

அவன் [தன் காதல் மனைவியுடன்] வெளியே செல்லும்போது தன் வசம் ஒரு கைத்துப்பாக்கி வைத்துக்கொள்வது [தற்காப்புக்காக] அதற்கான  சிறந்த வழியாகும்

எதிரிகளின் திட்டமிடலைப் பொருத்துச் சில நேரங்களில் சாத்தியப்பபடாவிடினும், பெரும்பாலான நேரங்களில் அது அவன் தன் உயிரைப் பாதுகாத்துக்கொள்ள உதவும். [செல்வந்தர்களும் அரசியல் பிரமுகர்களும் தற்காப்பிற்காக அரசு அனுமதியுடன் துப்பாக்கி வைத்திருப்பதைக் கருத்தில் கொள்க].

தலித் இளைஞர்கள் என்றில்லை, கலப்பு மணம் புரிந்து, அச்சுறுத்தலை எதிர்கொள்கிற பிற ஜாதி இளைஞர்களுக்கும் இப்பரிந்துரை ஏற்புடையதே.

அரசாங்கம் இது குறித்து உடனடியாக ஓர் ஆணை பிறப்பிக்கலாம்; ‘தவறாகப் பயன்படுத்தினால் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள்’ என்ற நிபந்தனையுடன் இவர்களுக்கு இலவசமாகக் கைத்துப்பாக்கிகளை வழங்கலாம்.

ஆட்சிபீடத்தில் இருப்போர் பரிசீலிப்பார்களா?
=============================================================================================





சனி, 12 மார்ச், 2016

ஆண்கள் இப்படித்தான்!...பெண்களுக்கான ‘விழிப்புணர்வு’ப் பதிவு!!

“ஒரு பெண்ணைக் கண்டவுடன் அவளிடமுள்ள  எந்த அம்சம் உங்களைக் கவர்கிறது?” என்ற கேள்வியுடன் இளைஞர்களிடையே ஒரு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. முடிவு.....?!
பெண்ணின் கட்டுக்குலையாத கவர்ச்சியான உடலமைப்பே தங்களைக் கவர்வதாக, ஏறத்தாழ பாதிப்பேர் சொன்னார்கள். 47.1 சதவீதம்.

அழகிய முகமும் நிறமுமே தங்களைக் ஈர்ப்பதாகச் சொன்னவர்கள் 31.2 சதவீதம் பேர்.

பெண் உடுத்தும் ஆடையும் விதம் விதமான அணிகலன்களுமே தங்களை வசீகரிப்பதாகச் சொன்னவர்கள் 9.3 விழுக்காடு.

பெண்ணின் நீண்ட கரிய கூந்தலைக் கண்டவுடன் வீழ்ந்துவிடுவதாக அசடு வழிந்தவர்கள் 5.8 விழுக்காட்டினர்.

இதுதான் என்று குறிப்பிட்டுச் சொல்லாமல், பெண்ணிடமுள்ள அத்தனை அம்சங்களுமே தங்களுக்குப் பிடிப்பதாகச் சொன்னவர்கள் வெறும் 1.8 சதவீதம்தானாம்!

வாக்கெடுப்பு நடத்தியவர்களிடம், “உங்களுக்கு வேறு வேலை இல்லையா?” என்று எரிந்து விழுந்தவர்கள்[நம்ம கட்சி] 1.7 விழுக்காடு.
=============================================================================================
வாக்கெடுப்பு நடத்தியவர்கள்: ‘செவன்ட்டீன்’
வெளியிட்டது: குமுதம்[28.02.91] வார இதழ்
குமுதத்துக்கு நன்றி சொல்பவர்: ‘பசி’பரமசிவம் 




திங்கள், 7 மார்ச், 2016

விவேகானந்தரா இப்படிச் செய்தார்?! நினைத்தாலே குமட்டுகிறது.

‘நோயுற்ற ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் வாயிலிருந்து வெளிப்பட்ட கோழைகளைத் தம் இரு கைகளாலும் ஏந்தி, மடமட என்று குடித்தார் சுவாமி விவெகானந்தர். இது ஒரு புனிதமான செயல் என்றும் நம்பினார்.’ 

ஆன்மிக நெறி வளர்க்கும் ஓர் எழுத்தாளர் இப்படி எழுதி வைத்திருக்கிறார். [நூல்: ‘மோட்ச சாதனம்’, ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ், சென்னை. முதல் பதிப்பு: நவம்பர், 2009].

இளைஞரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் விவேகானந்தர்; ‘மக்கள் தொண்டே மகேசன் தொண்டு’  என்று முழங்கியதோடு வாழ்நாளெல்லாம் மக்களுக்குத் தொண்டு செய்து வாழ்ந்தவர்.

தம் சீடர்களுடனான காசி யாத்திரையின்போது, வழியில் பிச்சையெடுக்கும் தொழுநோயாளிகளைப் பார்த்து மனம் பதைத்து, அவர்களுக்கு உணவும் உடையும் மருந்தும் வாங்கித் தந்துவிட்டு வெறும் கையுடன் ஊர் திரும்பியவர் அவர்.

விவேகானந்தரின் ‘கடவுள் கொள்கை’ குழப்பம் நிறைந்ததாயினும் [வாசிப்புக்கு:http://kadavulinkadavul.blogspot.com/2015/06/blog-post_9.html], தம் குருவான ராமகிருஷ்ணர் மீது மிகுந்த பற்று வைத்திருந்தவர் அவர். அவர் வாழ்வில் நிகழ்ந்ததாக, மேற்கண்டது போன்ற அருவருக்கத்தக்க கதைகளை உருவாக்குவதும், மக்களிடையே பரப்புவதும் மன்னிக்க முடியாத குற்றங்களாகும்.

ஆன்மிக நெறி பரப்புவோர் சிந்திப்பார்களாக.
=============================================================================================

இணைப்பு: 14.03.2016 குங்குமம் இதழில் வெளியான ஒ.ப.கதை.

நன்றி: ‘குங்குமம்’ வார இதழ்.

வெள்ளி, 4 மார்ச், 2016

வலை விரிக்கும் ‘ஆபாச’ வலைத் தளங்களின் [porn sites] அசுர வளர்ச்சி!

ஒரு வினாடியில், 28258 வலைத்தளப் பயனர்கள் ’ஆபாசத் தளங்களில்’ ஐக்கியமாகிறார்கள்! 42.7% பேர் [இதெல்லாம் பழைய கணக்கு] இவற்றின் வாடிக்கையாளர்கள்!! ஆ.வ. தளங்கள் தடை செய்யப்பட்டால், இவர்களில் பாதிப்பேருக்காவது பைத்தியம் பிடிக்கும்!!



இணையத்தில் புழங்குகிற எவரும் ‘ஆபாசத் தளங்கள்’ பற்றி அறியாமலிருக்க வாய்ப்பே இல்லை. ஆனாலும், ”ஆபாசத் தளமா? சே...” என்று நம்மில் முகம் சுழிப்பவர்கள் பலர்.


“அதிலென்ன தப்பு? அது மாதிரி தளங்களில் ஒரு ரவுண்டு வந்தா, அன்னிக்கிப் பூரா புத்துணர்ச்சியோட செயல்பட முடிகிறது” என்பாரும் உளர். யாரோ denwuld னு ஒரு வெள்ளை மனசுக்காரர் சொல்கிறார்:

By denwuld on 6/18/2010 1:32:22 AM Rating: 1
I don't think that its wrong.there are so many legal porn sites on internet.who gave that kind of services to their customer.i read some articles on internet about pornography who said that its a good option to keep our mind fresh.i don't know how it right but some time pornography is ok.
http://twitter.com/denwuld


“addiction to internet pornography is increasing at an outstanding rate"[www.familysafer.com] என்று எச்சரிக்கை செய்பவர்களும் இருக்கிறார்கள்.

”there are more porn sites than there are stars in the sky" என்று கிண்டலடிக்கவும் செய்கிறார்கள்.

'porn is the life blood of the internet' என்கிறார் ஓர் ஆ.வ. தள ஆய்வாளர்.

ஒட்டு மொத்த வலைத்தளங்களில், 37% பக்கங்களை, pornography எனப்படும் ஆபாசப் பதிவுகள் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன என்பது ஒரு புள்ளிவிவரம்.[dailytech.com]
                              +                                      +                                                      +


அடுத்து வரும் தகவல்கள், நம்மை வாய் பிளக்க வைக்கின்றன.



Pornography Time Statistics
Every second - $3,075.64 is being spent on pornography
Every second - 28,258 Internet users are viewing pornography
Every second - 372 Internet users are typing adult search terms into search engines
Every 39 minutes: a new pornographic video is being created in the United States [www.extrmetech.com]



Internet Pornography Statistics

Pornographic websites 4.2 million (12% of total websites)
Pornographic pages 420 million
Daily pornographic search engine requests 68 million (25% of total search engine requests)
Daily pornographic emails 2.5 billion (8% of total emails)
Internet users who view porn 42.7%
Received unwanted exposure to sexual material 34%
Average daily pornographic emails/user 4.5 per Internet user
Monthly Pornographic downloads (Peer-to-peer) 1.5 billion (35% of all downloads)   [answers. yahoo.com]

      ======================================================================

இந்தப் பதிவு, ‘புத்தம் புதுசு’ அல்லங்க!