வெள்ளி, 24 ஜூன், 2016

“போற்றி...போற்றி! இராமபிரான் திருவடி போற்றி!!”

“இராமன் ஒரு கதைமாந்தனே; சீதையின் நடத்தையைச் சந்தேகித்து அவளைக் குற்றவாளிபோல் நடத்தியவனும், இதன் மூலம் மனித உரிமை மீறலில் ஈடுபட்டவனுமான அவன் கடவுளல்ல” என்று பல்கலைக் கழகப் பயிற்சிப் பட்டறையில் உரையாற்றினார் பேராசிரியரும் பகுத்தறிவாளருமான ‘மகேஷ் சந்திர குரு’. இது நிகழ்ந்தது கர்னாட மாநிலத்தில்.
நன்றி: ‘தி இந்து’[24.06.2016]
சர்வோதய சேனா, பஜ்ரங்தளம் உள்ளிட்ட இந்துத்துவா அமைப்பினர் பேராசிரியருக்கு எதிராகக் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்தப் புகார் குறித்துத் தீர விசாரித்திருந்தாலோ, கொஞ்சமே கொஞ்சம் சிந்தித்திருந்தாலோ  இராமனை விமர்சனம் செய்தது குற்றச்செயல் அல்ல என்பது காவல்துறை அதிகாரிகளுக்குப் புரிந்திருக்கும். பேராசிரியருக்குப் போதிய பாதுகாப்பும் அளித்திருப்பார்கள்.

மாறாக, பேராசிரியரின் உரை வன்முறையத்[?????] தூண்டுவதாக உள்ளது என்று அவர்மீது வழக்குத் தொடுத்தது காவல்துறை.

நீதியைப் பரிபாலனம் செய்யக் கடமைப்பட்டுள்ள நீதிமன்றமும் அவரைச் சிறையிலடைக்க உத்தரவிட்டுள்ளது.  கர்னாட அரசு, பேராசிரியர் ஆற்றிய உரையில் தவறேதும் இல்லை என்பதை இந்துத்துவா அமைப்பினருக்கும் பொதுமக்களுக்கும் உணர்த்தும் முயற்சியை மேற்கொண்டதாகத் தெரியவில்லை.

ஆக, காவல்துறையும், நீதிமன்றமும், கர்னாடக அரசும் பெரிதும் மதிக்கத்தக்க ஒரு பல்கலைக்கழகப் பேராசிரியருக்கு, குறிப்பாக ஒரு பகுத்தறிவாளருக்குப் பாதுகாப்பு நல்கத் தவறிவிட்டன. சிறையில் அடைக்கப்பட்டதன் மூலம் அவர் அவமானப்படுத்தப்பட்டுள்ளார்.

நாடெங்கும் பகுத்தவாளர்களுக்குப் பாதுகாப்பற்ற சூழ்நிலை நீடிப்பதால்தான். இந்துத்துவா வெறியர்களால் அவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதும் கொல்லப்படுவதுமான நிகழ்வுகள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன.

இந்தவொரு சூழலில், பேராசிரியர் சிறையிலிருந்து வெளிவந்தால், அவரின் உயிருக்கு இந்துத்துவா மத வெறியர்களால் ஆபத்து ஏற்படக்கூடும்[எந்தவொரு கடவுளும் அவரைக் காப்பாற்றப் போவதில்லை].

எனவே, முன்னெச்சரிக்கையாக,  அவர் மீது புகார் அளித்த அந்த வெறியர்களைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்; வழக்குத் தொடுத்து உரிய தண்டனையைப் பெற்றுத்தருதல் வேண்டும். 

கர்னாடக அரசு தன் கடமையைச் செய்யும் என்று நம்புவோம்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
குறிப்பு: பதிவின் கடைசி மூன்று பத்திகள் சற்று முன்னர்[பிற்பகல் 05.20] மாற்றி அமைக்கப்பட்டன.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக