வியாழன், 26 ஜனவரி, 2017

கத்தியின்றி இரத்தமின்றித் ‘தனித் தமிழ்நாடு’ பெறுவது எப்படி?!

ரப்புரை அவசியமில்லை. எவரும் மேடையேறி முழங்கத் தேவையில்லை. அலைகடலெனத் திரண்டு ஊர்வலம் போவது, உண்ணாநோன்பு இருப்பது, போகுவரத்தை மறிப்பது,  அடிபட்டு உதைபட்டுச் சித்திரவதைக்குள்ளாவது, உயிர்த்தியாகம் செய்வது என்று எந்தவொரு இடும்பை தரும் செயலிலும் ஈடுபட வேண்டாம்.

சுருங்கச் சொன்னால்.....

உடம்பில் தூசு படாமல், சின்னஞ்சிறு சிராய்ப்புகூட இல்லாமல், கத்தி ஏந்தாமல், இரத்தம் சிந்தாமல், யுத்தம் ஏதும் நிகழ்த்தாமல் நம்மால் ‘தனித் தமிழ்நாடு’தனைப் பெற்றிட முடியும். 

எப்படி? எப்படி? எப்படி?

“ஏழுமலை வாசா! வெங்கடேஸ்வரா! 14.9 கிலோ எடையில் தங்க சாலிக்கிராம ஹாரம் மற்றும் 4.65 கிலோ எடையில் 5 வரிசை கொண்ட தங்கக் காசு மாலை ஆகியவற்றை உனக்குக் காணிக்கையாகச் சமர்ப்பிக்கிறோம்” என்றிப்படி, இன உணர்வு கொண்ட அத்தனை தமிழர்களும் [ஏழுமலையானிடம்] கோரிக்கை வைத்தால் போதும்[ஆகும் செலவை இன உணர்வுள்ள அத்தனை தமிழர்களும் பகிர்ந்துகொள்ளலாம்]. அவர் நம் கோரிக்கையை நிறைவேற்றுவார்.

நாம் தனித் தமிழ்நாடு பெறுவது 100% உறுதி.

இதை எப்படி நம்புவது என்கிறீர்களா?

இன்றைய நாளிதழில்[‘தின வணிகம்’, 26.01.2017] வெளியான கீழ்வரும் செய்தியைப் படியுங்கள்.
செய்தியின் தலைப்பு: தெலுங்கானா மாநிலம் உதயம் எதிரொலி. ஏழுமலையானுக்கு ரூ.5.5 கோடி தங்க நகைகள் காணிக்கை

செய்தியின் சாரம்: #ஆன்மீகத்தில் அதிக நாட்டம் உள்ள முதல்வர் கே.சந்திரசேகர ராவ், தெலுங்கானா மாநிலம் உருவானால்[ஏழுமலையான் உருவாக்கிக் கொடுத்தால்] திருப்பதி ஏழுமலையானுக்கு 14.9 கிலோ எடையில் தங்க சாலிக்கிராம ஹாரம் மற்றும் 4.65 கிலோ எடையில் 5 வரிசை கொண்ட தங்கக் காசு மாலை ஆகியவற்றை ஏழுமலையானுக்குக் காணிக்கையாக வழங்குவதாக நேர்ந்துகொண்டார்[போராட்டக்காரர்கள் பலரின் உயிர்த் தியாகமும் இவரின் உண்ணாநோன்பும் பலன் தரவில்லை என்று நினைத்தார் போலும்!]. கோரிக்கை நிறைவேறியதால், நேர்ந்துகொண்டபடி காணிக்கையை வழங்க உள்ளார். இதன் மொத்த மதிப்பு 5.5 கோடியாகும்#

5.5 கோடி ரூபாய்க்காக ஏழுமலையான் ஒரு மாநிலத்தை உருவாக்கித் தந்தார் என்றால், அதே தொகைக்கு[கூடுதல் காணிக்கை குறித்துக் கலந்தாலோசிப்போம்] நமக்குத் ‘தனி நாடு’ பெற்றுத் தருவார் என்பதில் கிஞ்சித்தும் ஐயத்திற்கு இடமில்லை!
===============================================================================


8 கருத்துகள்:

  1. பலரின் குடும்பம் இழக்கப்பட்டதின் விடிவே தெலுங்கானா இது அந்த மரமண்டைக்கு விளங்கவில்லையே.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 300 பேருக்கு மேல் உயிர்த் தியாகம் செய்தார்கள் என்பது வரலாறு.

      நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  2. மாடு பிடிப்பதற்கே ஒருவார போராட்டம் ,தனி நாடு பிடிக்க ?

    பதிலளிநீக்கு
  3. பதில்கள்
    1. கோவிந்தன் தமிழர்களின் வேண்டுதலை நிறைவேற்றுவாரா?

      நன்றி தனபாலன்.

      நீக்கு
  4. எதுவுமே செய்யாமல் இருக்கும் கடவுளுக்கு போட்டி போட்டு கொண்டு விளம்பரம் செய்கிறார்கள்!

    பதிலளிநீக்கு