வியாழன், 23 பிப்ரவரி, 2017

“விஞ்ஞானம் வேண்டாம்”.....அமெரிக்க மக்களின் அலறல்!!!


ல்பர்ட் ஸ்டீபன் என்னும் விஞ்ஞானி ஒரு கருவி கண்டிபிடித்தார்.
‘ஏ’என்பவனின் காதுகளுக்குச் சற்று மேற்புறமாக, இரு பக்கங்களிலும் இரு ‘ரிஸீவிங் ஆண்டெனாக்களை’ப் பொருத்திவிட வேண்டியது. பாக்கெட் சைஸ் கருவியை, ஆறு வோல்ட் பாட்டரி போட்டு, பாண்ட் பைக்குள் அவனைப் போட்டுக் கொள்ள வைப்பது.

அதே மாதிரி, ‘பி' என்பவன் காதுகளுக்கு மேல்  ‘பிராட்காஸ்டிங் ஆண்டெனா’க்களைப் பொருத்திவிட வேண்டியது.


இப்போது விசையைத் தட்டிவிட்டால் போதும். ‘பி’ என்ன உணர்ச்சிகளை அடைகிறானோ, அதை அப்படியே இம்மி பிசகாமல் ‘ஏ’ என்பவனும் அனுபவிப்பான்.


இக்கருவி கண்டுபிடித்துக் கொஞ்ச காலம் கழித்து, ’ நாஸா’ விஞ்ஞானிகள், நான்கு பேரைச் ‘செவ்வாய்’க்கு அனுப்புகிறார்கள்.


அவர்களின் காதுகளில் ‘பிராட்காஸ்டிங் ஆண்டெனா’க்கள் பொருத்தப்படுகின்றன.


அமெரிக்காவில் உள்ள பெரிய நிறுவனம் ஒன்று, துரிதகதியில் உற்பத்தி செய்த ‘ரிஸீவிங் ஆண்டெனா’க்களை அமெரிக்க மக்கள் அனைவரும் பொருத்திக் கொள்கிறார்கள்.


செவ்வாயில், வீரர்கள் பெற்ற உணர்ச்சிகளை அமெரிக்க மக்களும் உணர்வார்கள் என்பதால். அவர்கள் பேரார்வத்துடன் காத்திருக்கிறார்கள். ஆனால், நடந்ததோ..........


செவ்வாயில் நம்மைப் போலவே மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அமெரிக்க வீரர்களைக் கடுமையாகத் தாக்குகிறார்கள்.


அவர்கள் அலற, அமெரிக்க மக்கள் அத்தனை பேரும் அலறுகிறார்கள்.


“ஐயோ...ஐயய்யோ...விஞ்ஞானம் வேண்டாம்; வேண்டவே வேண்டாம். அதை அழியுங்கள். பூண்டோடு அழித்துவிடுங்கள்” என்று அவர்கள் முழக்கமிடுகிறார்கள்!
***********************************************************************************************************************
இது, மறைந்த எழுத்தாளர் ‘புஷ்பா தங்கதுரை’ எழுதிய ஓர் அறிவியல் சிறுகதையின் சுருக்கம். எப்போதோ படித்தது. கதை வெளியான இதழோ ஆண்டோ நினைவில் இல்லை. உங்களில் யாருக்கேனும் நினைவிருக்கிறதா?




புதன், 22 பிப்ரவரி, 2017

சீந்துவாரற்றுச் சிதைந்துகொண்டிருக்கிறதா தமிழ்மணம்?!

நீங்கள் எப்படியோ,  என்னைப் பொருத்தவரை தமிழ்மணத்தின் மீதான என் நம்பிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது. காரணங்கள்.....
* முகப்புப் பக்கத்தில் தோன்றும் பதிவுகளுக்கான பட்டியல் மிகப் பல மணி நேரங்கள் நகர்வதே இல்லை.

இணைக்கும் பதிவுகளை[இடுகைகள்]த் தமிழ்மணம் இணைத்துக்கொண்டதாக அறிவித்த பின்னரும் அவற்றில் கணிசமானவை முகப்புப் பக்கப் பட்டியலில் இடம்பெறுவதில்லை.

* தலைப்பைத் திருத்தி மீண்டும் இணைத்தாலும் பெரும்பாலும் பயன் கிட்டுவதில்லை.

* எதிர்பாராத வகையில் திடுதிப்பென்று பட்டியல் வெகு வேகமாக நகர்ந்துவிடுகிறது. அதன் விளைவாக, என் இடுகைக்கு முகப்புப் பக்கத்தில் தோன்றும் வாய்ப்பு பறிபோகிறது. அது எந்தப் பக்கத்தில் போய் நிற்கிறது என்பதைப் பக்கம் பக்கமாகத் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது.

* ஒன்றன்பின் ஒன்றாகப் பதிவுகளை இணைத்துக்கொண்டே இருக்கும் பதிவர்களுக்குப் பிரச்சினை இல்லை. அவர்களின் சில இடுகைகளேனும் முகப்பில் இடம்பெற்றுவிடுகின்றன. நானோ தொடர்ந்து எழுதுவதில்லை. பெரும்பாலும் ஐந்தாறு நாட்களுக்கு ஒரு முறைதான் எழுதுகிறேன்.

* என் பதிவுகள்  கணிசமானவை[பல]  முதல் பத்து சூடான இடுகைப் பட்டியலை எட்டினாலும் அவை முகப்புப் பக்கத்தில் தோன்றுவதில்லை.

* இணைக்கப்பட்ட இடுகை முகப்பில் இடம்பெறாவிட்டால் பார்வையாளர் எண்ணிக்கை மிகவும் குறைகிறது. இது யாவரும் அறிந்ததே.

* தமிழ்மணம் ஓட்டுப் பட்டையிலும் பழுது உள்ளது. கிளிக் செய்துவிட்டு, ‘உங்கள் ஓட்டு சேர்க்கப்பட்டது. நன்றி’ என்ற அறிவிப்பைப் பெறுவதற்கு நீண்ட நேரம் ஆகிறது. சில நேரங்களில் நிமிடக் கணக்கில்.

* ஒரு பக்கத்திலிருந்து அடுத்த பக்கத்தை அடைவதும் எளிதில் சாத்தியப்படுவதில்லை.

* இக்குறைகள் களையப்படாதவரை தமிழ்மணம் இணைப்பைப் பெறுவதால் பயன் ஏதுமில்லை என்பது என் எண்ணம். 

* இந்த இடுகையும்கூடப் பின்னுக்குத் தள்ளப்படும் வாய்ப்பு உள்ளது. வழக்கமாக வருகை புரியும் நண்பர்கள் என் வலைப்பக்கத்தில் இதை வாசித்தறியலாம்.

* நன்றி.
==============================================================================
இது, தலைப்பு மாற்றி இணைக்கப்பட்ட இடுகை. இதன் கதி.....!!!

‘கிட்டாதாயின் வெட்டென மற’!!!

செவ்வாய், 21 பிப்ரவரி, 2017

தமிழ்மணம் தானியங்கி எந்திரம் பழுது பார்க்கப்படுமா?

மற்ற பதிவர்கள் எப்படியோ, என்னைப் பொருத்தவரை தமிழ்மணத்தின் மீதான என் நம்பிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது. காரணங்கள்.....
* முகப்புப் பக்கத்தில் தோன்றும் பதிவுகளுக்கான பட்டியல் மிகப் பல மணி நேரங்கள் நகர்வதே இல்லை.

இணைக்கும் பதிவுகளை[இடுகைகள்]த் தமிழ்மணம் இணைத்துக்கொண்டதாக அறிவித்த பின்னரும் அவற்றில் கணிசமானவை முகப்புப் பக்கப் பட்டியலில் இடம்பெறுவதில்லை.

* தலைப்பைத் திருத்தி மீண்டும் இணைத்தாலும் பெரும்பாலும் பயன் கிட்டுவதில்லை.

* எதிர்பாராத வகையில் திடுதிப்பென்று பட்டியல் வெகு வேகமாக நகர்ந்துவிடுகிறது. அதன் விளைவாக, என் இடுகைக்கு முகப்புப் பக்கத்தில் தோன்றும் வாய்ப்பு பறிபோகிறது. அது எந்தப் பக்கத்தில் போய் நிற்கிறது என்பதைப் பக்கம் பக்கமாகத் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது.

* ஒன்றன்பின் ஒன்றாகப் பதிவுகளை இணைத்துக்கொண்டே இருக்கும் பதிவர்களுக்குப் பிரச்சினை இல்லை. அவர்களின் சில இடுகைகளேனும் முகப்பில் இடம்பெற்றுவிடுகின்றன. நானோ தொடர்ந்து எழுதுவதில்லை. பெரும்பாலும் ஐந்தாறு நாட்களுக்கு ஒரு முறைதான் எழுதுகிறேன்.

* என் பதிவுகள்  கணிசமானவை  முதல் பத்து சூடான இடுகைப் பட்டியலை எட்டினாலும் அவை முகப்புப் பக்கத்தில் தோன்றுவதில்லை.

* இணைக்கப்பட்ட இடுகை முகப்பில் இடம்பெறாவிட்டால் பார்வையாளர் எண்ணிக்கை மிகவும் குறைகிறது. இது யாவரும் அறிந்ததே.

* தமிழ்மணம் ஓட்டுப் பட்டையிலும் பழுது உள்ளது. கிளிக் செய்துவிட்டு, ‘உங்கள் ஓட்டு சேர்க்கப்பட்டது. நன்றி’ என்ற அறிவிப்பைப் பெறுவதற்கு நீண்ட நேரம் ஆகிறது. சில நேரங்களில் நிமிடக் கணக்கில்.

* ஒரு பக்கத்திலிருந்து அடுத்த பக்கத்தை அடைவதற்கும் பெரும்பாலும் நீண்ட நேரம் ஆகிறது. சில நேரம் அது சாத்தியப்படுவதே இல்லை.

* இக்குறைகள் களையப்படாதவரை தமிழ்மணம் இணைப்பைப் பெறுவதால் பயன் ஏதுமில்லை என்பது என் எண்ணம். 

* இந்த இடுகையும்கூடப் பின்னுக்குத் தள்ளப்படும் வாய்ப்பு உள்ளது. வழக்கமாக வருகை புரியும் நண்பர்கள் என் வலைப்பக்கத்தில் இதை வாசித்தறியலாம்.

* நன்றி.
==============================================================================

ரூபாய் 16 லட்சத்தில் வேட்டி, அங்கவஸ்திரம்!!!

கடவுள் உருவமற்றவர்; விருப்புவெறுப்பு இல்லாதவர் என்று பறை சாற்றும் மதவாதிகளும் ஆன்மிக மேதாவிகளும் பெருகிவரும் மூடத்தனங்களைக் கண்டிப்பதே இல்லை! 

‘16 லட்சம் மதிப்பிலான ஒரு கிலோ தங்கம், வெள்ளி இழைகளால் செய்யப்பட்ட தர்மாவரம் பட்டு வேட்டி மற்றும் பட்டு அங்க வஸ்திரத்தைக் கடப்பா[ஆந்திர மாநிலம்] பக்தர் ஒருவர் திருப்பதி ஏழுமலையானுக்குக் காணிக்கையாக அளித்தார். இது உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்தது’ என்பது இன்றைய செய்தி[தி இந்து, 20.02.2016].

இவை வேனில் ஏற்றப்பட்டு ஆந்திர மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட்டதாம். வேனில் இருந்த தறி மூலம், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு[மூடநம்பிக்கை வளர்ப்பில் நம்பர் 1] உட்பட 60 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்று ‘ஓம் நமோ நாராயணா’ என்பதை அங்கவஸ்திரத்தில் நெய்தார்களாம்!

ஒரு சந்தேகம், இவர்கள் ஏன் இத்தனை பத்தாம்பசலிகளாக இருக்கிறார்கள்? இது அதி நவீன நவநாகரிக யுகம் ஆயிற்றே. தங்கம் மற்றும் வெள்ளி இழைகளால் செய்யப்பட்ட பேண்ட் - சட்டையை ஏழுமலையானுக்குக் காணிக்கை ஆக்கியிருக்கலாமே.

பதினாறு லட்சம் ரூபாய் இங்கே பக்தியின் பெயரால் வீணடிக்கப்பட்டிருக்கிறது. விசேட நாட்களில், ஆண்டுக்கு ஒரு முறையோ இரு முறையோ இந்த வேட்டி, அங்கவஸ்திரத்தை ஏழுமலையான் சிலைக்குச் சுற்றி, கோயிலை வலம் வந்து, வெறுமனே வாய் பிளந்து வேடிக்கை பார்ப்பதற்கா இத்தனை செலவு?

இம்மாதிரி ஆடம்பரக்களைத் தவிர்த்துக் கடவுளை வழிபட்டால் அவரின் அருள் கிட்டாதா? மனம் அமைதி பெறாதா?

நாள் முழுக்க உழைத்தும் முழு வயிற்று உணவுக்கு வழியின்றி அல்லல்படும் ஏழைகளுக்கு இத்தொகையைக் கொடுத்து உதவியிருந்தால் ஏழுமலையான் கோபித்துக்கொள்வாரா?

கடப்பா பக்தரைப் போன்றவர்கள் இம்மாதிரி மூடநம்பிக்கைகளிலிருந்து விடுபடுவது எப்போது? இவர்களை விடுபடாதவாறு தடுத்துக்கொண்டிருக்கும் ஆன்மிக ஞானிகளைக் கண்டிப்பார் யாருமில்லையா? அவர்களைத் தண்டிக்கவும் வழி இல்லையா? 

இவை இப்போதைக்கு விடை கண்டறிய இயலாத கேள்விகள்!
===============================================================================




திங்கள், 20 பிப்ரவரி, 2017

உலகின் ஆகச் சிறந்த முட்டாள் திராவிடனே என்பது ‘கின்னஸ்’ சாதனைப் புத்தகத்தில் பதிவு!!!

கடவுள் உருவமற்றவர்; விருப்புவெறுப்பு இல்லாதவர் என்று பறை சாற்றும் மதவாதிகளும் ஆன்மிக மேதாவிகளும் பெருகிவரும் மூடத்தனங்களைக் கண்டிப்பதே இல்லை! 

‘16 லட்சம் மதிப்பிலான ஒரு கிலோ தங்கம், வெள்ளி இழைகளால் செய்யப்பட்ட தர்மாவரம் பட்டு வேட்டி மற்றும் பட்டு அங்க வஸ்திரத்தைக் கடப்பா[ஆந்திர மாநிலம்] பக்தர் ஒருவர் திருப்பதி ஏழுமலையானுக்குக் காணிக்கையாக அளித்தார். இது உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்தது’ என்பது இன்றைய செய்தி[தி இந்து, 20.02.2016].

இவை வேனில் ஏற்றப்பட்டு ஆந்திர மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட்டதாம். வேனில் இருந்த தறி மூலம், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு[மூடநம்பிக்கை வளர்ப்பில் நம்பர் 1] உட்பட 60 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்று ‘ஓம் நமோ நாராயணா’ என்பதை அங்கவஸ்திரத்தில் நெய்தார்களாம்!

ஒரு சந்தேகம், இவர்கள் ஏன் இத்தனை பத்தாம்பசலிகளாக இருக்கிறார்கள்? இது அதி நவீன நவநாகரிக யுகம் ஆயிற்றே. தங்கம் மற்றும் வெள்ளி இழைகளால் செய்யப்பட்ட பேண்ட் - சட்டையை ஏழுமலையானுக்குக் காணிக்கை ஆக்கியிருக்கலாமே.

பதினாறு லட்சம் ரூபாய் இங்கே பக்தியின் பெயரால் வீணடிக்கப்பட்டிருக்கிறது. விசேட நாட்களில், ஆண்டுக்கு ஒரு முறையோ இரு முறையோ இந்த வேட்டி, அங்கவஸ்திரத்தை ஏழுமலையான் சிலைக்குச் சுற்றி, கோயிலை வலம் வந்து, வெறுமனே வாய் பிளந்து வேடிக்கை பார்ப்பதற்கா இத்தனை செலவு?

இம்மாதிரி ஆடம்பரக்களைத் தவிர்த்துக் கடவுளை வழிபட்டால் அவரின் அருள் கிட்டாதா? மனம் அமைதி பெறாதா?

நாள் முழுக்க உழைத்தும் முழு வயிற்று உணவுக்கு வழியின்றி அல்லல்படும் ஏழைகளுக்கு இத்தொகையைக் கொடுத்து உதவியிருந்தால் ஏழுமலையான் கோபித்துக்கொள்வாரா?

கடப்பா பக்தரைப் போன்றவர்கள் இம்மாதிரி மூடநம்பிக்கைகளிலிருந்து விடுபடுவது எப்போது? இவர்களை விடுபடாதவாறு தடுத்துக்கொண்டிருக்கும் ஆன்மிக ஞானிகளைக் கண்டிப்பார் யாருமில்லையா? அவர்களைத் தண்டிக்கவும் வழி இல்லையா? 

இவை இப்போதைக்கு விடை கண்டறிய இயலாத கேள்விகள்!
===============================================================================






செவ்வாய், 14 பிப்ரவரி, 2017

மானசீகமாய் நான் செருப்படி வாங்கிய கதை!!! [24.04.2013இல் வெளியானது]

உண்மை நிகழ்வைக் கதையாக்கியிருக்கிறேன். வாசிக்கும் சகோதரிகள் என்னைச் சபிக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன். நன்றி!
[நன்றி: கூகிள்]
நிறை மாதக் கர்ப்பிணியாய் ஊர்ந்துகொண்டிருந்த அந்த நகரப் பேருந்தில் நான் நின்றவாறு பயணித்துக்கொண்டிருந்தேன்.

அந்த அழகிய இளம் பெண்ணின் முதுகுப் பக்கம் அவன் பல்லி போல ஒட்டிக்கொண்டிருந்தான். அசிங்கமான சேட்டைகள் வேறு.

ஓரிரு முறை அவனைத் திரும்பிப் பார்த்தாள் அவள். கொஞ்சமாய் முகம் சுழித்ததோடு சரி. அவளுக்குப் ’பயந்த சுபாவமோ?’ என்று நினைத்தேன்.

‘இருவரும் காதலர்களாகவோ மிக நெருங்கிய பந்தம் உள்ளவர்களாகவோ இருக்கலாமே’ என்றது என் உள் மனசு.

“டிக்கெட்...டிக்கெட்...” - நடத்துனர்.

இருவரும், தனித்தனியே சில்லரை நீட்டினார்கள்.

என் சந்தேகம் அகன்றது. அவள் நிச்சயம் பயந்த சுபாவம் கொண்டவள்தான் என்ற முடிவுக்கு வந்தேன்.

“ஏம்ப்பா, கொஞ்சம் தள்ளி நில்லேன். பொண்ணு நிற்கிறது தெரியல?” என்றேன், சற்றே உரத்த குரலில்.

அவன் என்னை முறைத்தான்; “தெரியுது. நான் ஒன்னும் தப்பா நடந்துக்கல. உன் வேலையைப் பாரு” என்று சிடுசிடுத்துவிட்டு, நல்ல பிள்ளையாய் ஓரடி பின்வாங்கி நின்றான்.

பத்துப் பதினைந்து நிமிடம்போல, பயணம் தொடர்ந்தது.

எனக்குரிய நிறுத்தம் வந்ததும் நான் இறங்கினேன். அந்தப் பெண்ணும் இறங்கினாள்.

நன்றி சொல்வாள் என்ற எதிர்பார்ப்புடன், நடையின் வேகத்தை மட்டுப்படுத்தி, என் பின்னால் வந்துகொண்டிருந்த அவளைத் திரும்பிப் பார்த்தேன்.

அவள் முகம் ‘கடுகடு’ என்றிருந்தது. நன்றி சொல்வதற்குப் பதிலாக, உதட்டளவில் ஏதோ முணுமுணுத்துக்கொண்டு என்னை முறைத்துப் பார்த்தாள்; வேகமாகக்  கடந்து போனாள்.

நனைத்த பழைய செருப்பால், என் இரண்டு கன்னங்களிலும் மாறி மாறி யாரோ அடிப்பது போலிருந்தது!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


வெள்ளி, 10 பிப்ரவரி, 2017

கடவுளுக்கும் ‘அது’வோ அதுபோல் வேறு ‘எது’வோ தேவைதானே?!

அவ்வப்போது, எனக்கு நானே கேட்டுக்கொள்ளும் கேள்வி இது. 

பொருள்களையும் அவற்றின் இயக்கங்களையும் பார்ப்பதற்குக் கண்களும், ஒலியை உள்வாங்குவதற்குச் செவிகளும், சுவைப்பதற்கு நாவும், நுகர்வதற்கு நாசியும், தொட்டு அறிவதற்கு உடம்பும் [மெய்] உதவுகின்றன.

ஐம்புலன்களால் ஈர்த்து அனுப்பப்படும் காட்சி முதலானவற்றை உணர்ந்து அறிவதற்குப் பயன்படுவது மூளை.

மனிதன், விலங்கு, பறவை என்று எந்தவொரு உயிரினமாக இருப்பினும் அந்த உயிரினத்தைப் பொருத்தவரை மூளைதான் எல்லாமே. அது செயல் இழந்தால் [மூளைச் சாவு] அந்த உயிர் செயல்படும் திறனை இழக்கிறது.

ஆக, உணர்தல், அறிதல், அனுபவித்தல் என உயிர்களின் அனைத்துச் செயல்பாடுகளுக்கும் மூளையே ஆதாரம்.

மனிதன், தன் மூளையைப் பயன்படுத்தித்தான் புதியனவற்றைப் படைக்கிறான்; பயன்படுத்துகிறான்.

மனிதனையும் ஏனைய அனைத்தையும் படைத்தவன் கடவுள் என்கிறார்கள்.

எல்லாம் அறிந்த, விரும்பும்போதெல்லாம் படைத்தல், காத்தல், அழித்தல் தொழில் செய்கிற, தீராத விளையாட்டுப் பிள்ளையான அவருக்கும் மூளை தேவைதானே?

மனித மூளையைக் காட்டிலும் மிக மிக மிக...........மிக மிக மிக.............[இந்த ’மிக’வுக்கு நம்மால் வரம்பு கட்ட இயலாது] சக்தி வாய்ந்த கடவுளின் மூளை எத்தன்மையது?
அது உருவம் உள்ளதா, அருவமானதா?

மூளையைத் தவிர்த்து வேறு ‘ஏதோ’ ஒன்றை அவர் சிந்திக்கப் பயன்படுத்துகிறாரா?
அந்த ‘ஏதோ’ எப்படியிருக்கும்?!

கடவுளின் ‘இருப்பு’ உறுதிப்படுத்தப்படவில்லை; இந்தக் கேள்விக்கு விடையில்லை; பயனேதும் இல்லை[?] என்பவை தெரிந்திருந்தும், கடவுள் குறித்துச் சிந்திக்கும்போதெல்லாம், எனக்கு நானே இந்தக் கேள்வியைக் கேட்டுக் கொள்கிறேன்!!!

நீங்கள் எப்படி?

திங்கள், 6 பிப்ரவரி, 2017

தீக்குண்ட[பூக்குழி] நெருப்பு சுடாமலிருப்பது பக்தியினாலா?!

கோயில் திருவிழாக்களில், தீ மிதித்தல், அலகு குத்துதல் போன்றவை இன்றளவும் பரவலாக நடைபெற்றுவரும் நிகழ்ச்சிகள். இவற்றைச் சாதிக்கக் கடவுள் பக்தியும் விரதமும் இன்றியமையாத் தேவைகள் என்று நம்புவது மூடத்தனத்தின் உச்சமாகும்.

தண்ணீரில் குளித்து, நீர் சொட்டும் ஈரமான ஆடையுடன் நெருப்பின் மீது நடக்கும்போது காலில் உள்ள ஈரமானது நெருப்பில் பட்டு ஆவியாவதால், காலுக்கும் நெருப்புக்கும் இடையே ‘ஆவித்திரை’ உருவாகிறது. இந்த ஆவித்திரையைக் கடந்துதான் வெப்பம் தீ மிதிப்பவரின் காலைச் சுட முடியும். இதற்குச் சிறிது அவகாசம் தேவை. அவசர அவசரமாக உரிய தூரத்தை நடந்து முடித்துவிடுவதால் பாதங்களில் தீக் காயங்கள் ஏற்படுவதில்லை. சூடு தாக்காமல் இருப்பதற்கு, நெருப்பின்மீது படிந்திருக்கும் சாம்பலும் ஒரு காரணம்.

மற்றபடி, விரதம் இருந்து பெறும் கடவுள் சக்தியால் இது சாத்தியமாகிறது என்பது வெறும் குருட்டு நம்பிக்கைதான்.

பூக்குழி மிதிப்போர், ஐந்தே ஐந்து நிமிடம் நெருப்பின் மீது அசையாமல் நிற்பார்களா? குழியில் உருண்டு எழுந்து வருவார்களா?

தீச்சட்டி தூக்குவதும் இதைப் போன்றதுதான்.

சட்டியின் அடியில் வெப்பம் கடத்தாப் பொருள்களைப் போட்டு, நெருப்பை எரியச் செய்து தூக்கினால், பொறுக்க முடியாத அளவுக்குச் சட்டி சுடாது. மண் பானைக்குள் நெருப்பிட்டுத் ‘தீச்சட்டு’ தூக்கும் பக்தர்கள் உலோகத்தால் ஆன செம்பு அல்லது, எவர்சில்வர் குடத்தில் நெருப்பிட்டுக் கோயிலை வலம் வருவார்களா?

மேற்கண்டவை போலவே, கூரிய அரிவாள் மீது ஏறி நிற்பதற்கும் பக்திக்கும் சம்பந்தமே இல்லை. இந்த வித்தையை எவர் வேண்டுமானாலும் செய்து காட்டலாம்.

அரிவாள் எவ்வளவு கூர்மையாக இருந்தாலும் பரவாயில்லை. அதன் வெட்டும் முனை நீளமாக இருப்பதும், உடலின் எடை வெட்டும் முனையில் சமமாகப் பரவியிருப்பதும் முக்கியம். அரிவாள் மீது ஏறும்போது, கவனமாக இருபுறமும் கைகளை ஊன்றிக்கொண்டு, முழு எடையையும் ஏற்றி நிற்றல் வேண்டும்.

அரிவாளைச் சாய்த்துப் பிடித்து ஏறுவதோ, குதித்து ஏறுவதோ கூடாது. ஒரு வெட்டும் கருவி எந்தவொரு பொருளையும் வெட்டுவதற்கு , வெட்டும் கோணம், வெட்டும் வேகம், அழுத்தம் ஆகியவை காரணமாக அமைகின்றன.

அரிவாள் மீது ஏறி நிற்கும் பக்தர்கள், நீண்ட பெரிய ஊசிகளை நட்டு வைத்து அவற்றின் மீது ஏறி நின்று, தம் பக்தியின் மேன்மையைப் பறைசாற்றுவார்களா?

அலகு குத்துவதிலும் சில நெறிமுறைகளைப் பின்பற்றினால் போதும். பக்தி விரதம் என்று எதுவும் தேவையில்லை.
‘கூர்மை’யான கொக்கியைத் தோலில் குத்துவதால் தாங்கிக்கொள்ளும் அளவுக்குத்தான் வலி இருக்கும். சில குறிப்பிட்ட காரணங்களால் ரத்தம் கசிவதில்லை. கொக்கி தாங்கக்கூடிய அளவுக்கு எடை இருத்தல் அவசியம். எடைக்கு ஏற்பவே கொக்கிகளின் எண்ணிக்கையும் இருத்தல் வேண்டும். உதாரணமாக, ஒரு கொக்கி ஐந்து கிலோகிராம் எடையைத் தாங்கும் என்றால், 100 கிலோகிராம் எடையைச் சுமப்பதற்கு அல்லது, இழுப்பதற்கு 20 கொக்கிகளை மாட்டிக்கொள்ள வேண்டும். இதைச் சாதிக்க விரதமோ பக்தியோ தேவையில்லை.

===============================================================================

ரமண மகரிஷியும் நம்ம ஊர் நம்பர் 1 ஆன்மிகவாதியும்!

"நான் யார்?”...சிந்திக்கத் தெரிந்த மனிதர்கள் யாவரும் தமக்குத்தாமே கேட்டுக்கொண்ட கேள்வி இது; இன்றளவும் கேட்கப்படுவதும்கூட. விடை மட்டும் கிடைத்தபாடில்லை. 
சென்னையில் நடந்த[’தி இந்து’, 05.02.2017], ‘தெய்வீகக் காதல்’ என்னும் நூல் வெளியீட்டு விழாவில்.....

மனிதப் பிறவி கிடைத்தற்கரியது. மனிதராகப் பிறந்த நாம் அனைவரும் பணம், புகழ், குடும்பம், ஆசை என்று ஒரு குறுகிய வட்டத்தில் முடங்கிவிடுகிறோம்.

ஆனால், இங்கே வந்திருப்பவர்கள் அனைவரும் புண்ணியவான்கள். நான் யார்? நான் எங்கிருந்து வந்தேன்? இறந்த பிறகு எங்கு செல்வேன்? ஆத்மா என்பது என்ன? என்பன போன்ற ஆன்மிகத் தேடலில் இறங்கியவர்கள். அக்கேள்விகளுக்கான விடை சொல்லும் குருவையும் பெற்றவர்கள். மிகப் பெரிய நடிகர், சூப்பர் ஸ்டார் என்பவற்றைவிட நான் ஒரு ஆன்மிகவாதி என்று சொல்லிக்கொள்வதில் பெருமை அடைகிறேன். ஏனெனில், ஆன்மிகத்துக்கு அவ்வளவு பவர் உள்ளது. பவர் எனக்குப் பிடித்தமானது..... என்று பேசியிருக்கிறார்.

தொடர்ந்து பேசுகையில், “ஆன்மிகத்தில் என் முதல் குரு என் அண்னன் சத்தியநாரயணா. அவர்தான் என்னை ராமகிருஷ்ண ஆசிரமத்தில் சேர்த்துவிட்டார். ராமகிருஷ்ண பரமஹம்சர் என் இரண்டாவது குரு. அவரிடம் ஒழுக்கத்தையும் சம்பிரதாயங்களையும் கற்றேன். ராகவேந்திரர் என் மூன்றாவது குரு. அவரிடம் பக்தியையும் சடங்குகளையும் கற்றேன்” என்கிறார்.

இரண்டு ஆன்மிகக் கதைகளையும் சொல்லியிருக்கிறார்.

இவை அனைத்திற்கும் மேலாக, “என் மூன்றாவது குருவான ரமண மகரிஷியிடம் ‘நான் யார்?’ என்பதையும் அறிந்துகொண்டேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார் சூப்பர் ஸ்டார் [இந்த ‘நான்’ ஐ அறிந்திருப்பதாக ஏற்கனவே மகான்கள் எனப்படுபவர்கள் சொல்லியிருக்கிறார்கள்].

நான்...ஆத்மா...உயிர் எனப்படும் இவையெல்லாம் வெவ்வேறானவையா, ஒன்றா? வெவ்வேறு எனின் அவற்றுக்குள் உள்ள வேறுபாடுகள் எவை எவை? எல்லாம் ஒன்றெனின், அந்த ஒன்று உடம்புக்குள் எங்கு ஒளிந்திருக்கிறது? உடம்பு அழிந்த பின்னர் அதிலிருந்து வெளியேறுகிறதா? அப்புறம் அது என்ன ஆகிறது?...இப்படி இன்னும் எத்தனையோ கேள்விகள் உள்ளன. அத்தனைக்கும் விடை சொன்னவர் எவருமில்லை. தருகிற விடைகளிலும்  தெளிவில்லை.

இந்நிலையில், ரமண  மகரிஷி மூலம் ‘தான்[நான்] யார்?’ என்பதைப் புரிந்துகொண்டுவிட்டதாகச் சொல்லியிருக்கிறார் ரஜினி. அவர் தன் உரையில், ‘நான் யார்?’....., ‘ஆத்மா என்பது என்ன?’ என்று குறிப்பிடுவதன்  மூலம், இரண்டும் ஒன்றல்ல என்று  நினைப்பது புரிகிறது.

இரண்டும் ஒன்றா வேறா என்னும் கேள்வி ஒருபுறம் இருக்கட்டும். ‘நான்’ என்பதற்கு மட்டுமேனும் ரஜினி விளக்கம் தர இயலுமா? நிச்சயமாக இல்லை.

இனியேனும் ஆன்மிகத்தின் பெயரால் கண்ட கண்ட பொய்களை அள்ளித் தெளித்து மக்களின் சிந்திக்கும் திறனை மழுங்கடிக்க வேண்டாம் என அன்புடன் வேண்டுகிறோம்.
*********************************************************************************************
ஏற்கனவே வெளியான ‘ரஜினி யார்?’ என்னும் பதிவு தமிழ்மணத்தில் உரிய முறையில் இணைக்கப்படாததால், தலைப்பு மாற்றப்பட்டு மீண்டும் தமிழ்ணத்தில் இணைக்கப்பட்டது.

ஏற்கனவே வாசித்தவர்கள் என்னை மன்னித்திடுக.



ஞாயிறு, 5 பிப்ரவரி, 2017

ரஜினி யார்?!?!

"நான் யார்?”...சிந்திக்கத் தெரிந்த மனிதர்கள் யாவரும் தமக்குத்தாமே கேட்டுக்கொண்ட கேள்வி இது; இன்றளவும் கேட்கப்படுவதும்கூட. விடை மட்டும் கிடைத்தபாடில்லை. 
சென்னையில் நடந்த[’தி இந்து’, 05.02.2017], ‘தெய்வீகக் காதல்’ என்னும் நூல் வெளியீட்டு விழாவில்.....

மனிதப் பிறவி கிடைத்தற்கரியது. மனிதராகப் பிறந்த நாம் அனைவரும் பணம், புகழ், குடும்பம், ஆசை என்று ஒரு குறுகிய வட்டத்தில் முடங்கிவிடுகிறோம்.

ஆனால், இங்கே வந்திருப்பவர்கள் அனைவரும் புண்ணியவான்கள். நான் யார்? நான் எங்கிருந்து வந்தேன்? இறந்த பிறகு எங்கு செல்வேன்? ஆத்மா என்பது என்ன? என்பன போன்ற ஆன்மிகத் தேடலில் இறங்கியவர்கள். அக்கேள்விகளுக்கான விடை சொல்லும் குருவையும் பெற்றவர்கள். மிகப் பெரிய நடிகர், சூப்பர் ஸ்டார் என்பவற்றைவிட நான் ஒரு ஆன்மிகவாதி என்று சொல்லிக்கொள்வதில் பெருமை அடைகிறேன். ஏனெனில், ஆன்மிகத்துக்கு அவ்வளவு பவர் உள்ளது. பவர் எனக்குப் பிடித்தமானது..... என்று பேசியிருக்கிறார்.

தொடர்ந்து பேசுகையில், “ஆன்மிகத்தில் என் முதல் குரு என் அண்னன் சத்தியநாரயணா. அவர்தான் என்னை ராமகிருஷ்ண ஆசிரமத்தில் சேர்த்துவிட்டார். ராமகிருஷ்ண பரமஹம்சர் என் இரண்டாவது குரு. அவரிடம் ஒழுக்கத்தையும் சம்பிரதாயங்களையும் கற்றேன். ராகவேந்திரர் என் மூன்றாவது குரு. அவரிடம் பக்தியையும் சடங்குகளையும் கற்றேன்” என்கிறார்.

இரண்டு ஆன்மிகக் கதைகளையும் சொல்லியிருக்கிறார்.

இவை அனைத்திற்கும் மேலாக, “என் மூன்றாவது குருவான ரமண மகரிஷியிடம் ‘நான் யார்?’ என்பதையும் அறிந்துகொண்டேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார் சூப்பர் ஸ்டார் [இந்த ‘நான்’ ஐ அறிந்திருப்பதாக ஏற்கனவே மகான்கள் எனப்படுபவர்கள் சொல்லியிருக்கிறார்கள்].

நான்...ஆத்மா...உயிர் எனப்படும் இவையெல்லாம் வெவ்வேறானவையா, ஒன்றா? வெவ்வேறு எனின் அவற்றுக்குள் உள்ள வேறுபாடுகள் எவை எவை? எல்லாம் ஒன்றெனின், அந்த ஒன்று உடம்புக்குள் எங்கு ஒளிந்திருக்கிறது? உடம்பு அழிந்த பின்னர் அதிலிருந்து வெளியேறுகிறதா? அப்புறம் அது என்ன ஆகிறது?...இப்படி இன்னும் எத்தனையோ கேள்விகள் உள்ளன. அத்தனைக்கும் விடை சொன்னவர் எவருமில்லை. தருகிற விடைகளிலும்  தெளிவில்லை.

இந்நிலையில், ரமண  மகரிஷி மூலம் ‘தான்[நான்] யார்?’ என்பதைப் புரிந்துகொண்டுவிட்டதாகச் சொல்லியிருக்கிறார் ரஜினி. அவர் தன் உரையில், ‘நான் யார்?’....., ‘ஆத்மா என்பது என்ன?’ என்று குறிப்பிடுவதன்  மூலம், இரண்டும் ஒன்றல்ல என்று  நினைப்பது புரிகிறது.

இரண்டும் ஒன்றா வேறா என்னும் கேள்வி ஒருபுறம் இருக்கட்டும். ‘நான்’ என்பதற்கு மட்டுமேனும் ரஜினி விளக்கம் தருவாரா?

தன் மாறுபட்ட நடிப்பால் பல்லாயிரக் கணக்கானவர்களின் உள்ளம் கவர்ந்த சூப்பர் ஸ்டார், ஊடகங்கள் வாயிலான ஓர் அறிக்கையின் மூலம் தர வேண்டும் என்பது நம் நெஞ்சார்ந்த விருப்பம்.
***********************************************************************************************************************

நேற்று வெளியிடப்பட்ட 'ரஜினி யார்?’ என்னும் பதிவு, தமிழ்மணத்தில் உரிய முறையில் வெளியாகாததால், தலைப்பு மாற்றப்பட்டு மீண்டும் தமிழ்மணத்தில் இணைக்கப்பட்டது.

பதிவை ஏற்கனவே வாசித்தவர்கள் என்னை மன்னித்திடுக.

***********************************************************************************************************************




வியாழன், 2 பிப்ரவரி, 2017

குலைகுலையாய் முந்திரிக்காய்! வகைவகையாய்த் திருமணம்!!

14.03.1950 ‘விடுதலை’ இதழில், ‘சித்திரபுத்திரன்’ என்னும் புனைபெயரில், ‘திருமண விழா; வினா - விடை’ என்னும் தலைப்பில் சுயமரியாதைத் திருமணம் குறித்துப் பெரியார் எழுதியிருக்கிறார். அவ் வினா - விடை யைப் படித்து மகிழுங்கள்!
சுயமரியாதைத் திருமணம் என்பது எது?
நமக்கு மேலான மேல் ஜாதிக்காரன் என்பவனைப் புரோகிதனாக வைத்து நடத்தாத திருமணம் சுயமரியாதைத் திருமணம் ஆகும்.

பகுத்தறிவுத் திருமணம் என்றால் என்ன?
நமக்குப் புரியாமலும், இன்ன அவசியத்திற்கு இன்ன காரியம் செய்கிறோம் என்று அறியாமலும், அறிய முடியாமலும் இருக்கும்படியான காரியங்களைச்[சடங்குகள்] செய்யாமல் நடத்தும் திருமணம்.

தமிழர் திருமணம் என்பது என்ன?
கணவனுக்கு மனைவி அடிமை[தாழ்ந்தவள்] அல்ல;  அவனுக்கு உள்ள உரிமைகள் இவளுக்கும் உண்டு என்னும் கருத்தை ஏற்று, நடைமுறைப்படுத்துவதாக ஒப்பந்தம் செய்துகொண்டு மணம் புரிதல்.

சுதந்திரத் திருமணம் என்றால் என்ன?
ஜாதகம் பார்த்தல், சகுனம் பார்த்தல், சாமி கேட்டல் போன்ற மூடநம்பிக்கைகளுக்கு இடம் தராமலும், மணமக்கள் நேரில் சந்தித்துத் தத்தம் உடன்பாட்டைத் தெரிவித்துக்கொண்டும், பேசிப் புரிந்துகொண்டும் செய்துகொள்ளும் திருமணம்.

புரட்சித் திருமணம் என்பது என்ன?
தாலி கட்டாமல் நடத்தும் திருமணம்.

சிக்கனத் திருமணம் என்றால் என்ன?
மண்டபம், விருந்து, இன்னிசை, பாட்டுக் கச்சேரி முதலானவற்றைத் தவிர்த்து, ஆடம்பரமாகச் செலவு செய்யாமல் குறைந்த செலவில் ஒரே நாளில் நடத்தி முடிக்கும் திருமணம்.
===============================================================================

நன்றி: யுவகிருஷ்ணா, தினகரன் நாளிதழ் வசந்தம்[இணைப்பு],22.01.2017.