புதன், 22 பிப்ரவரி, 2017

சீந்துவாரற்றுச் சிதைந்துகொண்டிருக்கிறதா தமிழ்மணம்?!

நீங்கள் எப்படியோ,  என்னைப் பொருத்தவரை தமிழ்மணத்தின் மீதான என் நம்பிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது. காரணங்கள்.....
* முகப்புப் பக்கத்தில் தோன்றும் பதிவுகளுக்கான பட்டியல் மிகப் பல மணி நேரங்கள் நகர்வதே இல்லை.

இணைக்கும் பதிவுகளை[இடுகைகள்]த் தமிழ்மணம் இணைத்துக்கொண்டதாக அறிவித்த பின்னரும் அவற்றில் கணிசமானவை முகப்புப் பக்கப் பட்டியலில் இடம்பெறுவதில்லை.

* தலைப்பைத் திருத்தி மீண்டும் இணைத்தாலும் பெரும்பாலும் பயன் கிட்டுவதில்லை.

* எதிர்பாராத வகையில் திடுதிப்பென்று பட்டியல் வெகு வேகமாக நகர்ந்துவிடுகிறது. அதன் விளைவாக, என் இடுகைக்கு முகப்புப் பக்கத்தில் தோன்றும் வாய்ப்பு பறிபோகிறது. அது எந்தப் பக்கத்தில் போய் நிற்கிறது என்பதைப் பக்கம் பக்கமாகத் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது.

* ஒன்றன்பின் ஒன்றாகப் பதிவுகளை இணைத்துக்கொண்டே இருக்கும் பதிவர்களுக்குப் பிரச்சினை இல்லை. அவர்களின் சில இடுகைகளேனும் முகப்பில் இடம்பெற்றுவிடுகின்றன. நானோ தொடர்ந்து எழுதுவதில்லை. பெரும்பாலும் ஐந்தாறு நாட்களுக்கு ஒரு முறைதான் எழுதுகிறேன்.

* என் பதிவுகள்  கணிசமானவை[பல]  முதல் பத்து சூடான இடுகைப் பட்டியலை எட்டினாலும் அவை முகப்புப் பக்கத்தில் தோன்றுவதில்லை.

* இணைக்கப்பட்ட இடுகை முகப்பில் இடம்பெறாவிட்டால் பார்வையாளர் எண்ணிக்கை மிகவும் குறைகிறது. இது யாவரும் அறிந்ததே.

* தமிழ்மணம் ஓட்டுப் பட்டையிலும் பழுது உள்ளது. கிளிக் செய்துவிட்டு, ‘உங்கள் ஓட்டு சேர்க்கப்பட்டது. நன்றி’ என்ற அறிவிப்பைப் பெறுவதற்கு நீண்ட நேரம் ஆகிறது. சில நேரங்களில் நிமிடக் கணக்கில்.

* ஒரு பக்கத்திலிருந்து அடுத்த பக்கத்தை அடைவதும் எளிதில் சாத்தியப்படுவதில்லை.

* இக்குறைகள் களையப்படாதவரை தமிழ்மணம் இணைப்பைப் பெறுவதால் பயன் ஏதுமில்லை என்பது என் எண்ணம். 

* இந்த இடுகையும்கூடப் பின்னுக்குத் தள்ளப்படும் வாய்ப்பு உள்ளது. வழக்கமாக வருகை புரியும் நண்பர்கள் என் வலைப்பக்கத்தில் இதை வாசித்தறியலாம்.

* நன்றி.
==============================================================================
இது, தலைப்பு மாற்றி இணைக்கப்பட்ட இடுகை. இதன் கதி.....!!!

‘கிட்டாதாயின் வெட்டென மற’!!!

2 கருத்துகள்: