செவ்வாய், 28 மார்ச், 2017

‘தலைமாற்று’ அறுவைச் சிகிச்சையும் நிலை தடுமாறும் மனித அறிவும்!!!

இந்நாள்வரை, இவ்வுலகில் மூளைமாற்று அறுவைச் சிகிச்சை நடந்ததில்லை; ‘தலைமாற்று’ அறுவைச் சிகிச்சை...?!

தலைமாற்று அறுவைச் சிகிச்சை பற்றி விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ந்து வருகிறார்களாம்.
1908 ஆம் ஆண்டில், ஒரு நாயின் தலையை வெட்டி எடுத்துவிட்டு மற்றொரு தலையைப் பொருத்தும் அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாகச் செய்யப்பட்டது. இந்த ஆராய்ச்சியின் படிப்படியான வளர்ச்சிக்குப் பிறகு, நாயின் தலையை அகற்றிவிட்டு வேறொரு தலையைப் பொருத்தும் மாற்று அறுவைச் சிகிச்சை நடத்தப்பட்டது. சிகிச்சைக்குள்ளான நாய்கள் இறந்துவிட்டன.

‘நாய்கள் பாவம்’ என்றெல்லாம் அலட்டிக்கொள்ளாமல் விஞ்ஞானிகள் தம் ஆராய்ச்சியைத் தொடர்ந்தார்கள்.

1970 ஆம் ஆண்டில், மூளை நரம்பு அறுவைச் சிகிச்சை நிபுணரான ராபர்ட் ஜெ.வெயிட் என்பவர் குரங்கின் தலையை மாற்றி வைத்து அறுவை செய்தார். வெற்றிகரமான அறுவை!

அறுவைக்குள்ளான குரங்கின் உடல் செயலிழந்தது. இருப்பினும், அந்தக் குரங்கால் கேட்கவும் உணரவும், சுவைத்துச் சாப்பிடவும் முடிந்ததாம்! கண்ணெதிரில் உள்ள பொருளின் நகர்வுக்கு ஏற்ப அது தன் கருமணியை அசைத்ததாம்!

ஆயினும் என்ன, ‘உடல் உறுப்பை ஏற்க மறுத்தல்’ என்னும் நோய் எதிர்ப்புச் சக்தி அந்தக் குரங்கை வாழவிடவில்லை.  ஒன்பதாவது நாளில், குரங்கு தன் மேல் உலக யாத்திரையை மேற்கொண்டுவிட்டது. ‘இது காட்டுமிராண்டித்தனமான செயல்’ என்று விஞ்ஞானிகள் பலரும் கண்டித்தார்கள்.

என்ன கண்டித்து என்ன பயன்?

இத்தாலிய மூளை நரம்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணர் ‘சார்ஜியோ கேனாவீரோ’ என்பவர், 2017ஆம் ஆண்டின் இறுதிக்குள் மனிதத் தலையை மாற்றி வைத்து அறுவைச் சிகிச்சை செய்யப்போவதாக அறிவித்திருக்கிறார். இந்த அறுவைப் புரட்சி சீனா அல்லது அமெரிக்காவில் நடைபெறுமாம்!

இந்த அறுவைச் சிகிச்சை முறை வெற்றி பெற்றால்....

‘புத்திசாலிகளின் தலைகளை வெட்டி எடுத்து விற்பனை செய்யும் தாதாக்களின் எண்ணிக்கை பெருகும். அதி புத்திசாலிகளான எனக்கும் உங்களுக்கும் நம் போன்றவர்களுக்கும் மிகுந்த எச்சரிக்கை தேவைப்படும்’ என்பதே ‘பசி’பரமசிவமாகிய நான் செய்யும் அபாய அறிவிப்பு!
===============================================================================

நன்றி: ‘மூளை’முதல் பதிப்பு: டிசம்பர் 2016; விகடன் பிரசுரம்.

‘தலைமாற்று’ அறுவைச் சிகிச்சையும் நிலை தடுமாறும் மனித அறிவும்!

இந்நாள்வரை, இவ்வுலகில் மூளைமாற்று அறுவைச் சிகிச்சை நடந்ததில்லை; ‘தலைமாற்று’ அறுவைச் சிகிச்சை...?!

தலைமாற்று அறுவைச் சிகிச்சை பற்றி விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ந்து வருகிறார்களாம்.
1908 ஆம் ஆண்டில், ஒரு நாயின் தலையை வெட்டி எடுத்துவிட்டு மற்றொரு தலையைப் பொருத்தும் அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாகச் செய்யப்பட்டது. இந்த ஆராய்ச்சியின் படிப்படியான வளர்ச்சிக்குப் பிறகு, நாயின் தலையை அகற்றிவிட்டு வேறொரு தலையைப் பொருத்தும் மாற்று அறுவைச் சிகிச்சை நடத்தப்பட்டது. சிகிச்சைக்குள்ளான நாய்கள் இறந்துவிட்டன.

‘நாய்கள் பாவம்’ என்றெல்லாம் அலட்டிக்கொள்ளாமல் விஞ்ஞானிகள் தம் ஆராய்ச்சியைத் தொடர்ந்தார்கள்.

1970 ஆம் ஆண்டில், மூளை நரம்பு அறுவைச் சிகிச்சை நிபுணரான ராபர்ட் ஜெ.வெயிட் என்பவர் குரங்கின் தலையை மாற்றி வைத்து அறுவை செய்தார். வெற்றிகரமான அறுவை!

அறுவைக்குள்ளான குரங்கின் உடல் செயலிழந்தது. இருப்பினும், அந்தக் குரங்கால் கேட்கவும் உணரவும், சுவைத்துச் சாப்பிடவும் முடிந்ததாம்! கண்ணெதிரில் உள்ள பொருளின் நகர்வுக்கு ஏற்ப அது தன் கருமணியை அசைத்ததாம்!

ஆயினும் என்ன, ‘உடல் உறுப்பை ஏற்க மறுத்தல்’ என்னும் நோய் எதிர்ப்புச் சக்தி அந்தக் குரங்கை வாழவிடவில்லை.  ஒன்பதாவது நாளில், குரங்கு தன் மேல் உலக யாத்திரையை மேற்கொண்டுவிட்டது. ‘இது காட்டுமிராண்டித்தனமான செயல்’ என்று விஞ்ஞானிகள் பலரும் கண்டித்தார்கள்.

என்ன கண்டித்து என்ன பயன்?

இத்தாலிய மூளை நரம்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணர் ‘சார்ஜியோ கேனாவீரோ’ என்பவர், 2017ஆம் ஆண்டின் இறுதிக்குள் மனிதத் தலையை மாற்றி வைத்து அறுவைச் சிகிச்சை செய்யப்போவதாக அறிவித்திருக்கிறார். இந்த அறுவைப் புரட்சி சீனா அல்லது அமெரிக்காவில் நடைபெறுமாம்!

இந்த அறுவைச் சிகிச்சை முறை வெற்றி பெற்றால்....

‘புத்திசாலிகளின் தலைகளை வெட்டி எடுத்து விற்பனை செய்யும் தாதாக்களின் எண்ணிக்கை பெருகும். அதி புத்திசாலிகளான எனக்கும் உங்களுக்கும் நம் போன்றவர்களுக்கும் மிகுந்த எச்சரிக்கை தேவைப்படும்’ என்பதே ‘பசி’பரமசிவமாகிய நான் செய்யும் அபாய அறிவிப்பு!
===============================================================================

நன்றி: ‘மூளை’முதல் பதிப்பு: டிசம்பர் 2016; விகடன் பிரசுரம்.

திங்கள், 27 மார்ச், 2017

‘கிறு...கிறு’க்க வைக்கும் ‘தலைமாற்று’ அறுவைச் சிகிச்சை!!!

இந்நாள்வரை, இவ்வுலகில் மூளைமாற்று அறுவைச் சிகிச்சை நடந்ததில்லை; ‘தலைமாற்று’ அறுவைச் சிகிச்சை...?!

தலைமாற்று அறுவைச் சிகிச்சை பற்றி விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ந்து வருகிறார்களாம்.
1908 ஆம் ஆண்டில், ஒரு நாயின் தலையை வெட்டி எடுத்துவிட்டு மற்றொரு தலையைப் பொருத்தும் அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாகச் செய்யப்பட்டது. இந்த ஆராய்ச்சியின் படிப்படியான வளர்ச்சிக்குப் பிறகு, நாயின் தலையை அகற்றிவிட்டு வேறொரு தலையைப் பொருத்தும் மாற்று அறுவைச் சிகிச்சை நடத்தப்பட்டது. சிகிச்சைக்குள்ளான நாய்கள் இறந்துவிட்டன.

‘நாய்கள் பாவம்’ என்றெல்லாம் அலட்டிக்கொள்ளாமல் விஞ்ஞானிகள் தம் ஆராய்ச்சியைத் தொடர்ந்தார்கள்.

1970 ஆம் ஆண்டில், மூளை நரம்பு அறுவைச் சிகிச்சை நிபுணரான ராபர்ட் ஜெ.வெயிட் என்பவர் குரங்கின் தலையை மாற்றி வைத்து அறுவை செய்தார். வெற்றிகரமான அறுவை!

அறுவைக்குள்ளான குரங்கின் உடல் செயலிழந்தது. இருப்பினும், அந்தக் குரங்கால் கேட்கவும் உணரவும், சுவைத்துச் சாப்பிடவும் முடிந்ததாம்! கண்ணெதிரில் உள்ள பொருளின் நகர்வுக்கு ஏற்ப அது தன் கருமணியை அசைத்ததாம்!

ஆயினும் என்ன, ‘உடல் உறுப்பை ஏற்க மறுத்தல்’ என்னும் நோய் எதிர்ப்புச் சக்தி அந்தக் குரங்கை வாழவிடவில்லை.  ஒன்பதாவது நாளில், குரங்கு தன் மேல் உலக யாத்திரையை மேற்கொண்டுவிட்டது. ‘இது காட்டுமிராண்டித்தனமான செயல்’ என்று விஞ்ஞானிகள் பலரும் கண்டித்தார்கள்.

என்ன கண்டித்து என்ன பயன்?

இத்தாலிய மூளை நரம்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணர் ‘சார்ஜியோ கேனாவீரோ’ என்பவர், மனிதத் தலையை மாற்றி வைத்து அறுவைச் சிகிச்சை செய்யப்போவதாக அறிவித்திருக்கிறாராம்! இது, சீனா அல்லது அமெரிக்காவில் நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறதாம்.

கேனாவீரோ சுத்தக் கேணயவீரோவாக இருப்பாரோ!?
===============================================================================

நன்றி: ‘மூளை’; முதல் பதிப்பு: டிசம்பர் 2016; விகடன் பிரசுரம்.

சனி, 25 மார்ச், 2017

ஒரு ‘பத்து’ ரூபாயும் புத்தி கெட்ட நானும்!

இந்தத் தலைப்பின் கீழ் வெளியாகியிருந்த பொழுதுபோக்குப் பதிவு, மீண்டும் மீண்டும் வாசித்ததில் எனக்கு மன நிறைவு தராததால் அதைப் பின்னுக்குத் தள்ளி, பழைய ‘பாக்யா’ இதழில் வெளியான என் சிறுகதையை இணைத்திருக்கிறேன். இது நெஞ்சை உருக்கும் தரமானதொரு படைப்பு. நம்பிக்கையுடன் நீங்கள் வாசிக்கலாம். நன்றி.

கதைத் தலைப்பு:      சுகுணா தூங்குகிறாள்!

“இன்ஸ்பெக்டர் இளங்கோ ஃபோன் பண்ணினார். கரூர் பக்கம் நடந்த சாலை விபத்தில் சிக்கிய ஒரு பெண்ணை ஆஸ்பத்திரியில் வெச்சிருக்காங்களாம். போய்ப் பார்க்கச் சொன்னார். கிளம்பலாமா சுகுணா?”

சதை வற்றி, சருமம் கறுத்து, கண்கள் குழிந்து, வாடி வதங்கிய கீரைத் தண்டுபோல் தரையில் சுருண்டுகிடந்த முன்னாள் அழகியான என் மனைவியிடம் மிகுந்த தயக்கத்துடன் கேட்டேன்.

அவளிடமிருந்து பதில் இல்லை.

அவள் உண்ணும் உணவும் உறங்கும் நேரமும் சுருங்கிவிட்டது போல உரையாடுவதும் சுருங்கிவிட்டது.

ஊட்டிவிட்டால் மட்டுமே நான்கு கவளம் உள்ளே போகிறது. தாகம் எடுக்கிறதோ இல்லையோ தண்ணீர் பருகுவதுகூடக் குறைந்துவிட்டது.

ஒட்டுமொத்த உடம்பும் உலர்ந்த நிலையில், வறண்டுபோன தொண்டையைக் கடந்து வார்த்தைகள் வெளிவருவது அரிதாகிவிட்டது.

“இன்ஸ்பெக்டர் இளங்கோ ஃபோன் பண்ணினார். கரூர் பக்கம் நடந்த சாலை விபத்தில் சிக்கிய ஒரு பெண்ணை ஆஸ்பத்திரியில் வெச்சிருக்காங்களாம். உடம்பு சிதைஞ்சிருந்தாலும் பார்வைக்கு நம்ம பொண்ணு மாதிரி தெரியுதாம். போய்ப் பார்க்கச் சொன்னார். கிளம்பலாமா சுகுணா?” -குனிந்து, அவளின் காது மடலில் உதடு பொருத்தி, வார்த்தைகளில் உரமேற்றி மீண்டும் ஒரு முறை சொன்னேன்.

என் வார்த்தைகளை அவள் உள்வாங்கியிருக்க வேண்டும்.

“என்ன சொன்னீங்க? இளங்கோ ஃபோன் பண்ணினாரா? நம்ம சுதாவைக் கண்டுபிடிச்சிட்டாங்களா?” என்று எழுந்து உட்கார்ந்தாள்.

ஆறு மாதம் போல செத்துச் செத்துப் பிழைத்து உருக்குலைந்து போயிருந்த அவளின் மெலிந்த தேகத்தில் அத்தனை பலம் எங்கிருந்து வந்ததோ, என் தோள் பற்றி உலுக்கி, “புறப்படுங்க போகலாம்” என்றாள்.

“முகம் கழுவி சேலை மாத்திட்டு வாம்மா.”

இரண்டே நிமிடங்களில் தயாரானாள்.

காரில் புறப்பட்டோம். வழக்கத்திற்குச் சற்றே கூடுதலான வேகம்.

“ஏங்க, நம் பொண்ணுக்கு விபரீதமா ஏதும் நடந்திருக்காதுதானே?”

தினம் தினம் எனக்கு நானே கேட்டுக்கொண்டு, விடை தெரியாமல் தவித்துக்கொண்டிருக்கும் கேள்வி இது. என்னவளுக்கு நான் என்ன பதில் சொல்வேன்?

சொன்னேன்: “கடவுள் நம்மைக் கைவிட மாட்டார்.”

“கை விட்டுட்டா அப்புறம் அந்தக் கடவுளை நான் கும்பிடவே மாட்டேங்க.”

படுத்த படுக்கையாகக் கிடந்தாலும் தினமும் பத்து நிமிடமாவது தியானம் பண்ணத் தவறாத என் சுகுணாதான் இப்படிச் சொன்னாள். மகளைத் தொலைத்த துக்கத்தில், ‘உண்டு, இல்லை’ என்று தலை மட்டும் அசைத்தவள் இன்றுதான் முழு வாக்கியம் பேசுகிறாள்.

ஆறு மாதம் முன்பு, கல்லூரியிலிருந்து வீடு திரும்பும்போது ரவுடிகளால் காரில் கடத்தப்பட்டாள் எங்கள் ஒரே மகளான சுதா. அன்றிலிருந்து சுகுணா வேண்டாத தெய்வம் இல்லை. செலுத்தாத காணிக்கை இல்லை.

“கடவுளே, இந்தப் பிறவியில் மனசறிஞ்சி நாங்க யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யல; பாவ காரியங்கள் பண்ணல. பூர்வ ஜென்மங்களில் பண்ணியிருந்தா, அதுக்கான தண்டனையை இப்பவே எங்களுக்குக் கொடுத்துடு. மிச்சம் மீதியிருந்தா அடுத்து வர்ற பிறவிகளில் அனுபவிச்சித் தீர்த்துடுறோம். நாங்க உயிருக்கு உயிரா நேசிக்கிற எங்க சுதாவை மட்டும் தண்டிச்சிடாதே. எந்தவித பங்கமுமில்லாம எங்களோடு சேர்த்துடு.” தினமும் இப்படி வேண்டினாள்.

மாதம் ஆயிரம் ஏழைகளுக்கு அன்னதானம் பண்ணுவதாகவும் அனாதை இல்லங்களுக்கு உதவுவதாகவும் கடவுளின் சந்நிதிகளில் சத்தியம் பண்ணினாள்.

ஆரம்பத்தில், கண்ட கண்ட தெய்வங்களிடம் கோரிக்கை வைப்பதே வேலையாகிப் போனவள், நாட்கள் செல்லச் செல்ல, ஒட்டுமொத்த நம்பிக்கையும் உடைந்து சிதற, முழு நேரமும் படுக்கையில் ஒடுங்கிவிட்டாள். நான் நடைப்பிணம் ஆனேன்.

எங்கள் சுதா கடத்தப்பட்டபோது, அவள் தோழி தரங்கிணி மட்டுமே உடனிருந்தவள். கடத்திய ஆட்களை அடையாளம் சொல்லியிருக்கிறாள். காரின் எண் பார்க்கத் தவறிவிட்டாள்.

அவர்கள் ரவுடிகள் என்பது போலீசாரின் அனுமானம். ஆனால், வேறு துப்பு எதுவும் கிடைக்கவில்லை. இங்கே விபத்து; அங்கே அனாதைப் பிணம் என்று சொல்லி எங்களை அலைக்கழித்த காவல்துறை இப்போது மௌனம் சுமந்திருந்தது.

நானும் சுகுணாவும் உறவினர்களின் துணையுடன் ஊர் ஊராகத் தேடினோம். பலன் மட்டும் பூஜ்யம்.

மனம் பேதலித்து, என் சுகுணா மரணப் படுகுழியில் விழுந்துகொண்டிருந்தாள். “தற்கொலை பண்ணிக்கலாம்னு இருக்குதுங்க.” வார்த்தை வார்த்தையாய் முனகி, கொஞ்ச நாளாய் என்னைக் குலை நடுங்கச் செய்கிறாள்.

மகளைத் திருடு கொடுத்துத் தவிக்கும் நிலையில் என் மனைவியையும் இழந்துவிடுவேனோ?

எந்த வகையிலும் ஆறுதல் பெற முடியாத அவல நிலையில், கனத்த சோகம் சுமந்து, என் மிக நெருங்கிய நண்பரான காவல்துறை அதிகாரி இளங்கோவைச் சந்தித்தேன்.

ருத்துவமனை.

கைத்தாங்கலாக சுகுணாவை மருத்துவமனைக்குள் அழைத்துச் சென்றேன்.

ஒவ்வொரு வார்டாக ஒதுக்கி, ஆப்ரேசன் தியேட்டரை நோக்கி நடந்தோம்.

“சொல்லுங்க, சுதா எப்படீங்க இருக்கா?” குரலில் பரிதாபம் பொங்கக் கேட்டாள் சுகுணா.

“அவளைப் பார்க்கத்தானே போறோம்...வா சுகுணா.”

அவளின் தோள்களை அழுந்தப் பற்றி அணைத்து, தியேட்டருக்குள் அழைத்துப் போனேன். அங்கே, என் காவல்துறை நண்பருக்கு நண்பரான டாக்டர் காத்திருந்தார்.

“சுகுணா, மனதைத் தேத்திக்கோ. நம்ம சுதா செத்துட்டாம்மா...”

சொல்லிக்கொண்டே, ஸ்ட்ரெச்சரை நெருங்கி, போர்த்தப்பட்டிருந்த வெள்ளைத் துணியை விலக்கி, பிணத்தின் இடது முழங்கையை ஒட்டியிருந்த சற்றே பெரிதான மச்சத்தைத் தொட்டுக் காட்டினேன்.

அதைப் பார்க்கும் நிலையில் சுகுணா இல்லை. அவள் மயக்க நிலையில் துவண்டு என் தோளில் சரிந்திருந்தாள்.

ப்போதெல்லாம், “என் மகளைக் கடத்திப் போய் எங்கே வெச்சிருக்காங்களோ..... காலிப் பசங்க அவளை எப்படியெல்லாம் சித்ரவதை செய்யுறாங்களோ.....ஐயோ....” என்று சொல்லி, உருகி மருகி என் சுகுணா நொறுங்கிப் போவதில்லை.

முழுப்பட்டினி என்ற நிலையைத் தாண்டி, ‘பரவாயில்லை’ என்று சொல்லுமளவுக்குச் சாப்பிடுகிறாள். ஒரு நாளைக்கு நான்கைந்து மணி நேரமாவது தூங்குகிறாள். இனி, அவள் பிழைத்துவிடுவாள். ஆனால், நான்.....

தினம் தினம் தனிமையில் கிடந்து அழுகிறேன். மலராய், மருக்கொழுந்தாய், இளம் மானாய், மயிலாய் வலம் வந்து எங்களை மகிழ்வித்த எங்கள் செல்ல மகள், கயவர்களின் பிடியில் என்ன பாடு படுகிறாளோ என்று எண்ணி எண்ணி மனம் பேதலித்துக்கொண்டிருக்கிறேன். சிதைந்து, சிறுகச் சிறுக அழிந்துகொண்டிருக்கிறேன்.....

........ஒரு அனாதைப் பிணத்தின் இடது முழங்கை அருகே செயற்கையாய் ஒரு மச்சத்தை உருவாக்கி, டாக்டரின் உதவியோடு அருமையாக ஒரு நாடகம் நடத்தி, என் சுகுணாவை நம்ப வைத்துத் தேற்றினேனே, அது போல என்னைத் தேற்ற யாரிருக்கிறார்கள்?

===============================================================================

     பொழுதுபோக்குக் கதை[பொழுது போகாதவர்களுக்கு]

“அடுத்தவன் காசு நமக்கு வேண்டாம்” - எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்.

ஐந்தாறு முறை சொல்லி முடித்த பிறகு, அரை மனதுடன் கையிலிருந்த பத்து ரூபாய் நோட்டைத் தரையில் நழுவவிட்டேன். சற்று முன்னர் நடைபாதையில் கண்டெடுத்தது அது.
நகர முற்பட்டபோது உள்மனதின் அழைப்பு. ‘ஐநூறா ஆயிரமா, ஒரே ஒரு ஒத்தைப் பத்து ரூபா... எடுத்துக்கிறது பெரிய தப்பில்ல’ என்றது அது.

அக்கம்பக்கம் பார்த்துவிட்டு எறிந்த  ரூபாயை மீட்டெடுத்துச் சட்டைப் பையில் திணித்தவாறு நகர முற்பட்டபோது....

என்  மனசாட்சி குரல் கொடுத்தது: ‘அஞ்சோ பத்தோ நூறோ ஆயிரமோ, இது அடுத்தவனுக்குச் சொந்தம். அபகரிக்க நினைக்கிறது அநாகரிகம்.” 

பத்து ரூபாய் நோட்டை மீண்டும் தரையில் கடாசிவிட்டு நடந்தேன்.

பின்பக்கமிருந்து அழைப்பு: “கொஞ்சம் நில்லுங்க. இது நீங்க தவற விட்டது.” - அழைத்தவரின் கையில் அந்தப் பத்து  ரூபாய்!

“அது என்னோடது இல்லீங்க. யாரோ தவற விட்டது” என்று சொல்லி ரூபாயைப் பெற்றுக்கொள்ள மறுத்தேன்.

“தவறவிட்டவனைக் கண்டுபிடிச்சி ஒப்படைக்கிறது நடக்காத காரியம். வீதியில் வீசிட்டுப் போனா பின்னால வர்றவன் எடுத்துக்கப் போறான். கனமான காத்து வீசினா யார் கைக்கும் கிடக்காம சாக்கடையில் விழுந்து வீணாத்தான் போகும். நீங்க வேண்டாம்னு சொல்றதால இதை  நானே வைச்சுக்கிறேன். ஸ்ட்ராங்கா ஒரு டீ அடிக்கலாம்” என்று சொல்லி அந்த ஆள் நகர முற்பட்ட போது அவரைத் தடுத்தது எங்களுக்குத் தொட்டுவிடும் தூரத்திலிருந்த அந்த ஒற்றை நாடி மனிதரின், “ஹலோ...” 

“என்ன?” என்பது போன்ற கேள்விக்குறியுடன் அவரை நாங்கள் இருவரும் ஏறிட்டோம்.

“கொஞ்சம் முன்னாடி பாக்கெட்டில் பத்து ரூபாயோட இந்த வழியாப் போனேன். பாக்கெட்டிலிருந்து பீடியும் வத்திப்பெட்டியும்  எடுத்தப்ப அது தவறி விழுந்திடிச்சி. அந்தப் பத்து ரூபாதான் இது” என்று சொல்லி, பத்து ரூபாயை ஏற்கனவே தன் சொத்தாக்கிக்கொண்டவரிடம் கை நீட்டினார். அவரும் ‘பிகு’ பண்ணாமல் ரூபாயைக் கொடுத்துவிட்டு நடந்தார். இவர் வந்தவழியே திரும்பிப் போனார்.

நான் என் வழியே நடக்க முற்பட்டபோது, எதிரே நட்ட தலையுடன், தரையில் எதையோ துழாவியவாறு எதிர்ப்பட்டார் என்னைப் போன்ற ஒரு நரைத்தலைக் கிழவர்.

“என்னங்க, எதையோ தேடுறீங்க போலிருக்கே?” என்று அவரை வழி மறிப்பது போல் நின்றேன்.

“ஒன்னுமில்லீங்க, கால் மணி நேரம் முன்னாடி இந்த வழியே போனப்ப ஒரு பத்து ரூபாயைத் தவற விட்டுட்டேன். கிடைக்கும்கிற நம்பிக்கை இல்லை. இருந்தாலும் தேடிப் பார்க்கலாமேன்னு....” - என்னைப் பொருட்படுத்தாமல் அந்தப் பத்து ரூபாயைத் தேடித் தன் நடைப் பயணத்தைத் தொடர்ந்தார் அவர்.

அந்தப் பத்து ரூபாயை ஒரு எமகாதகப் பேர்வழி அபகரித்துச் சென்ற கதையை அவரிடம் சொல்ல நானும் விரும்பவில்லை. கொஞ்சமும் எதிர்பாராத அந்த அனுபவத்தை அசை போட்டவாறு நான் நடக்க முற்பட்ட சில வினாடிகளில்.....

‘கண்டெடுத்த ரூபா ரொம்ப அதிர்ஷ்டம்னு சொல்லுவாங்க. அதைப் பத்திரப்படுத்தி வைக்காம  ஏன் கீழே போட்டெ? புத்தி கெட்ட ஆளா இருக்கியே’ என்று என் உள்மனசு முணுமுணுத்தது. 

அன்று நாள் முழுக்க அதன் முணுமுணுப்பு அடங்கவே இல்லை!
===============================================================================







வியாழன், 23 மார்ச், 2017

‘கடவுள் இல்லை’ என்பவன் கொல்லப்படுவது ஏன்...ஏனோ?!

தபோல்கர், பன்சாரே, கல்புர்கி, ஃபாரூக் என்று “கடவுள் இல்லை” என்போர் கொல்லப்படுவது தொடர்கதை ஆகிவிட்டது. மத வெறியர்களின் இத்தகு கொடுஞ்செயலுக்கு, ‘மதவெறி’ காரணம் என்று பொதுவாகச் சொல்லப்பட்டாலும், அவர்கள் ‘வெறியர்கள்’ ஆனதற்கான காரணம் கொஞ்சம் ஆராய்ந்தால் புரியவரும்.
* ‘கடவுள் இல்லை’ என்போர் செய்யும் தொடர் பரப்புரையால்  கடவுளை நம்பும் நல்லவர் எண்ணிக்கை வெகுவாகக் குறையும்; அயோக்கியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உலகில் அதர்மம் தலைவிரித்தாடும். 

* கருணை வடிவான கடவுள் வருந்துவாரோ இல்லையோ அவரை வழிபடும் பக்தர்களின் மனம் புண்படும். 

* ’கடவுள் இல்லை’ என்னும் முழக்கங்கள் தொடர்ந்தால், மனித இனத்தையே கடவுள் வெறுப்பார்; தண்டிக்கவும் நினைப்பார். 

* கடவுள் இல்லை என்போரைக் கண்டிக்கவும் தண்டிக்கவும் பூண்டோடு அழிக்கவும் மக்கள் விரும்புகிறார்கள். அதற்கான துணிவு அவர்களுக்கு இல்லை. அந்தத் துணிவு சிலருக்கேனும் தேவைப்படுகிறது.

மேற்குறிப்பிட்ட இவையும்[அனைத்தும் விவாதத்திற்கு உரியவை], இவை போன்றவையும்தான்  கடவுள் மறுப்பாளர்கள் கொல்லப்படுவதற்கான காரணங்களா என்றால், இல்லை என்றே சொல்லத் தோன்றுகிறது. ஏனெனில், கொஞ்சமேனும் ஆழ்ந்து சிந்திக்கிற அறிவு மத வெறியர்களுக்கு இல்லை என்பதே.

கடவுள் மறுப்பாளர்களின் பரப்புரை[மதத்தின் பெயரைக் குறிப்பிட்டு] தொடர்ந்தால்.....

தங்கள் மதத்தைப் பின்பற்றுவோர் எண்ணிக்கை குறையும். மற்ற மதத்தவர் எண்ணிக்கை பெருகும். இவர்கள் சிறுபான்மையர் ஆக, பெரும்பான்மையோர் இவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவார்கள். மத வெறியை வளர்ப்பதன் மூலம் பெற்றுவரும் பலன்கள் பலவற்றை இழப்பதோடு, உலகில் தாங்கள் அல்லது, தாங்களும் பெரும்பான்மை மதத்தவர் என்னும் பெருமையை...இறுமாப்பை இழக்க நேரிடும்.

மதவெறியர்கள், கடவுள் இல்லை என்போரை அஞ்சாமல் தாக்கி அழிப்பதற்கு இதுவே தலையாய காரணம் ஆகும்.

கடவுளின் இருப்பை நிலைநாட்டுவதோ மக்களின் நலம் பேணுவதோ இவர்களின் நோக்கம் அல்ல; அல்லவே அல்ல.
=========================================================

மிக முக்கிய குறிப்பு: தனிப்பட்ட முறையில் எந்தவொரு மதத்தையும் குறிப்பிடாமல் பொத்தாம்பொதுவாகத்தான் எழுதியிருக்கிறேன். கொல்லப்பட்ட ஃபாரூக்கின் படம் ஊடகங்கள் பலவற்றிலும் வெளியாகியுள்ளது. நானும் வெளியிட்டிருக்கிறேன். மற்றபடி, உள்நோக்கம் எதுவும் எனக்கில்லை.

எனக்கு ஆசை ரொம்ப ரொம்ப அதிகம்..... உயிர் வாழும் ஆசையைச் சொல்கிறேன்! அன்புகொண்டு என் தலைக்கு எவரும் விலை/உலை வைத்துவிட வேண்டாம் என வேண்டுகிறேன்.

நன்றி!

5 comments :


  1. மதம் மறந்தால் அறிவு விரிவடையும்

    மதத்திற்குள் இருப்பவனின் அறிவு குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டியவன் நிலையே...

    நான் சொல்வது அனைத்து மதத்தினருக்கும்.
    ReplyDelete
    Replies
    1. இன்னும் எவ்வளவு காலத்திற்குத்தான் ஓட்டுவார்கள்?

      நன்றி நண்பரே.
      Delete
  2. தற்போது தமிழ் மணம் முறையாக வருகிறதல்லாவா!!
    ReplyDelete
    Replies
    1. இல்லீங்க.

      காலை 09.00 மணியிலிருந்து[நான் கவனித்த நேரம்] சற்று முன்னர்வரை முகப்புப் பக்க இடுகைப் பட்டியல் நகரவேயில்லை. அதனால், தலைப்பை மாற்றி இணைத்த பதிவையே மீண்டும் இணைத்தேன்.

      பட்டியல் நகர்ந்து இடம்தர இப்போதுதான் என் இடுகை முகப்புப் பக்கத்தில் தெரிகிறது. மேலும் ஒரு மணி நேரம் பட்டியல் நகராமல் இருந்திருந்தால் பக்கம் 1 இல் வெளியான என் இடுகை 2 ஆம் பக்கத்திற்குச் சென்று, முகப்புப் பக்கத்தில் இடம்பெறும் வாய்ப்பை இழந்திருக்கும்.

      தமிழ்மணம் பழுது இன்னும் சரிசெய்யப்படவில்லை.

      தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.
      Delete
    2. இணைத்த பதிவையே மீண்டும்[மீண்டும்] இணக்கும்போது உள் மனம் வெகுவாக உறுத்துகிறது.

      தமிழ்மணம் கண் திறக்கும் காலம் எப்போது வருமோ?
      Delete





‘கடவுள் இல்லை’ என்பவன் கொல்லப்படுவது ஏன்...ஏன்?

தபோல்கர், பன்சாரே, கல்புர்கி, ஃபாரூக் என்று “கடவுள் இல்லை” என்போர் கொல்லப்படுவது தொடர்கதை ஆகிவிட்டது. மத வெறியர்களின் இத்தகு கொடுஞ்செயலுக்கு, ‘மதவெறி’ காரணம் என்று பொதுவாகச் சொல்லப்பட்டாலும், அவர்கள் ‘வெறியர்கள்’ ஆனதற்கான காரணம் கொஞ்சம் ஆராய்ந்தால் புரியவரும்.
* ‘கடவுள் இல்லை’ என்போர் செய்யும் தொடர் பரப்புரையால்  கடவுளை நம்பும் நல்லவர் எண்ணிக்கை வெகுவாகக் குறையும்; அயோக்கியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உலகில் அதர்மம் தலைவிரித்தாடும். 

* கருணை வடிவான கடவுள் வருந்துவாரோ இல்லையோ அவரை வழிபடும் பக்தர்களின் மனம் புண்படும். 

* ’கடவுள் இல்லை’ என்னும் முழக்கங்கள் தொடர்ந்தால், மனித இனத்தையே கடவுள் வெறுப்பார்; தண்டிக்கவும் நினைப்பார். 

* கடவுள் இல்லை என்போரைக் கண்டிக்கவும் தண்டிக்கவும் பூண்டோடு அழிக்கவும் மக்கள் விரும்புகிறார்கள். அதற்கான துணிவு அவர்களுக்கு இல்லை. அந்தத் துணிவு சிலருக்கேனும் தேவைப்படுகிறது.

மேற்குறிப்பிட்ட இவையும்[அனைத்தும் விவாதத்திற்கு உரியவை], இவை போன்றவையும்தான்  கடவுள் மறுப்பாளர்கள் கொல்லப்படுவதற்கான காரணங்களா என்றால், இல்லை என்றே சொல்லத் தோன்றுகிறது. ஏனெனில், கொஞ்சமேனும் ஆழ்ந்து சிந்திக்கிற அறிவு மத வெறியர்களுக்கு இல்லை என்பதே.

கடவுள் மறுப்பாளர்களின் பரப்புரை[மதத்தின் பெயரைக் குறிப்பிட்டு] தொடர்ந்தால்.....

தங்கள் மதத்தைப் பின்பற்றுவோர் எண்ணிக்கை குறையும். மற்ற மதத்தவர் எண்ணிக்கை பெருகும். இவர்கள் சிறுபான்மையர் ஆக, பெரும்பான்மையோர் இவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவார்கள். மத வெறியை வளர்ப்பதன் மூலம் பெற்றுவரும் பலன்கள் பலவற்றை இழப்பதோடு, உலகில் தாங்கள் அல்லது, தாங்களும் பெரும்பான்மை மதத்தவர் என்னும் பெருமையை...இறுமாப்பை இழக்க நேரிடும்.

மதவெறியர்கள், கடவுள் இல்லை என்போரை அஞ்சாமல் தாக்கி அழிப்பதற்கு இதுவே தலையாய காரணம் ஆகும்.

கடவுளின் இருப்பை நிலைநாட்டுவதோ மக்களின் நலம் பேணுவதோ இவர்களின் நோக்கம் அல்ல; அல்லவே அல்ல.
=========================================================

மிக முக்கிய குறிப்பு: தனிப்பட்ட முறையில் எந்தவொரு மதத்தையும் குறிப்பிடாமல் பொத்தாம்பொதுவாகத்தான் எழுதியிருக்கிறேன். கொல்லப்பட்ட ஃபாரூக்கின் படம் ஊடகங்கள் பலவற்றிலும் வெளியாகியுள்ளது. நானும் வெளியிட்டிருக்கிறேன். மற்றபடி, உள்நோக்கம் எதுவும் எனக்கில்லை.

எனக்கு ஆசை ரொம்ப ரொம்ப அதிகம்..... உயிர் வாழும் ஆசையைச் சொல்கிறேன்! அன்புகொண்டு என் தலைக்கு எவரும் விலை/உலை வைத்துவிட வேண்டாம் என வேண்டுகிறேன்.

நன்றி!




செவ்வாய், 21 மார்ச், 2017

இந்த உயரம் போதுமா ஜக்கி வாசுதேவ்?!?!?!

‘நான் துறவியல்ல; தியானம் செய்பவன்’[ஆனந்த விகடன் பேட்டி. 22.03.2017 இதழ்] என்கிறார் ஜக்கி வாசுதேவ். தியானம் செய்கிற, செய்விக்கிற ஒரு சாதாரண மனிதருக்கு, ‘சத்குரு’ என்னும் பட்டம் எதற்கு?
கண்களை மூடிக்கொண்டு, ஏதேனும் ஒரு கடவுள் பெயரையோ, மந்திரங்கள் என்னும் பெயரால் மனிதர்கள் சொல்லிவிட்டுப்போன சுலோகங்களையோ திரும்பத் திரும்ப, நிமிடக் கணக்கிலோ மணிக் கணக்கிலோ முணுமுணுப்பது தியானமா?[மூச்சுப் பயிற்சி உள்ளிட்ட ‘யோகா’ என்பது வேறு]

எனக்கு இதைக் கொடு, அதைக் கொடு என்று புலன்களை வருத்திப் புலம்பிக்கொண்டிருப்பது தியானமா?

தியானம் குறித்தும் அதனால் விளையும் பயன்கள் குறித்தும் ஆதாரங்களுடன் விளக்கிச்  சொன்னவர் எவர்?

முக்தி, சொர்க்கம் என்றெல்லாம ஆன்மிக வாதிகள் காலம் காலமாகச் சொல்லிவருகிறார்களே தவிர, அவற்றிற்கு முறையான விளக்கங்கள் தந்தவர் எவருமிலர். அது போலத்தான் இதுவும். வார்த்தைகளின் பொருள் புரியாமலே மக்கள் முணுமுணுக்கவும் புலம்பவும் பழகிக் கொண்டார்கள்.

மேலே குறிப்பிட்டது போல, முணுமுணுப்பதும் புலம்புவதும்தான்   தியானம் என்றால், இந்தத் தியானத்தைத் தன்னிச்சையாய்த் தாம் இருக்கும் இடத்திலேயே ஒருவர் செய்துகொள்ளலாம். இதற்கு ஜக்கியைப் போல சத்குருவெல்லாம் எதற்கு?

நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் கவர்ச்சிகரமானதும் மனதை மயக்குவதுமான ஆசிரமம் எதற்கு? பல நூறு கோடி ரூபாய்ச் சொத்து எதற்கு? 112 அடி உயரத்தில் ஆதியோகி சிலை எதற்கு?

கடவுள், கண்ணுக்கெட்டாத அல்லது தொட்டுவிட இயலாத உயரத்தில் இருப்பதாக நம்புகிறவன் மனிதன். இந்த நம்பிக்கையின் விளைவாகத்தான், வெட்டவெளிகளில் நின்று கடவுளைத் தொழும்போது உயர உயரத் தன் பார்வையைச் செலுத்தி இரு கை கூப்புகிறான்.

தரையில் குடிகொண்டிருக்கும் கடவுள்களை விட, திருமலை, சபரி மலை, இமயத்தின் கங்கோத்ரி போன்ற  உயர உயரமான மலைக் கடவுள்களுக்கு மகிமை இருப்பதாக மக்கள் நம்புகிறார்கள்; தேடிச் செல்கிறார்கள்.

மக்களின் ‘உயரத்திற்கு மயங்கும்’ இந்தப் பலவீனத்தைப் புரிந்துகொண்டவர் ஜக்கி. 112 அடிஉயரத்தில் அவர் சிலை அமைத்ததன் ரகசியம் இதுதான்.

ஞாயிற்றுக் கிழமை என்றால், 20 ஆயிரம் பேரும், நவராத்திரி என்றால் 10 லட்சம் பேரும் தம் கோயிலில் கூடுவதாகப் பீத்திக்கொள்கிறார்.

பத்து லட்சம் பேரும் பத்து லட்சம் அறிவாளிகள் அல்லர்; அவர்கள் ஜக்கியால் அறிவு முடமாக்கப்பட்டவர்கள். இது அவருக்கும் தெரியும்.

மகா சிவராத்திரிக் கொண்டாட்டம் என்னும் பெயரில் விடிய விடிய ஆடிப்பாடிக் கூச்சலிட்டும் கும்மாளமடித்தும் ஆர்ப்பாட்டம் செய்வதால், ஓரிரவுப் பொழுதை மக்கள் தம்மை மறந்து கழிக்கிறார்கள் என்பதைத் தவிர வேறு பயனேதும் இல்லை. 

எனக்கு வருமானம் 400 கோடி என்றாலும் சரி, 4000 கோடி என்றாலும் சரி அதை மக்களுக்குத்தான் செலவு செய்யப்போகிறேன் என்கிறார் வெள்ளியங்கிரிப் பிரபலம். கடவுளின் பெயரால், கோடிக்கணக்கில் செலவழித்துக் கட்டடங்கள் கட்டுவதும், சிலை வைப்பதும் மக்களுக்குச் செய்யும் சேவை என்கிறாரா அவர்? பகுத்தறிவைப் பயன்படுத்தவிடாமல் தடுப்பது சேவையாகுமா?

சிவராத்திரிக்கு 10 லட்சம் பேர் வருகை புரிவதாகச் சொல்கிறார்.

112 அடி சிலை  நிறுவப்பட்ட அந்தச் சிவராத்திரியிலும் 10 லட்சம் பேர் வருகை தந்திருக்கிறார்கள். அதாவது, ஜக்கியால் அறிவு முடமாக்கப்பட்ட 10 லட்சம் பேர் அன்று வருகை புரிந்திருக்கிறார்கள்.

அடுத்து வரும் நாட்களில், அவர் 1120 அடி சிலை அமைப்பாரேயானால் அவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியாகப் பெருகும். உயரம் அதிகரிக்க அதிகரிக்க வருகையாளரின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே போகும். இதன் மூலம்.....

சிந்திக்கும் அறிவு முடக்கப்பட்ட,  மிகப் பல லட்சம் அப்பாவிகளை ஓரிடத்தில், ஒரு நேரத்தில் திரட்டியது என்ற வகையில் இது உலகின் மாபெரும் சாதனையாகவும் அமையும்.

நவீனக் கட்டடக்கலை நுட்பங்களின் மூலம் அயல் நாடுகளில் 200 அடுக்கு, 300 அடுக்கு என உயர உயரமான கட்டடங்கள் கட்டப்பட்டுவரும் நிலையில், ஜக்குவும்[பல நூறு கோடி ரூபாய் சொத்துக்குச் சொந்தக்காரர். அவர் நினைத்தால் பல பல பல நூறு கோடி  செல்வத்தைக் குவிக்க முடியும்] இம்மாதிரி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம்.

இந்தியப் பிரதமரின் ஆதரவுடன் மேற்குறிப்பிட்ட சாதனையை ஜக்கி நிகழ்த்துவார். இது போன்ற வேறு பல சாதனைகளையும் அவர் நிகழ்த்தக்கூடும்.

வாழ்க சத்குரு ஜக்கி வாசுதேவ்! வளர்க அவர்தம் புகழ்!!
***********************************************************************************************************************






112 அடி உயரம் போதாது ஜக்கி[வாசுதேவ்] ஐயா]!!!

‘நான் துறவியல்ல; தியானம் செய்பவன்’[ஆனந்த விகடன் பேட்டி. 22.03.2017 இதழ்] என்கிறார் ஜக்கி வாசுதேவ். தியானம் செய்கிற, செய்விக்கிற ஒரு சாதாரண மனிதருக்கு, ‘சத்குரு’ என்னும் பட்டம் எதற்கு?
கண்களை மூடிக்கொண்டு, ஏதேனும் ஒரு கடவுள் பெயரையோ, மந்திரங்கள் என்னும் பெயரால் மனிதர்கள் சொல்லிவிட்டுப்போன சுலோகங்களையோ திரும்பத் திரும்ப, நிமிடக் கணக்கிலோ மணிக் கணக்கிலோ முணுமுணுப்பது தியானமா?[மூச்சுப் பயிற்சி உள்ளிட்ட ‘யோகா’ என்பது வேறு]

எனக்கு இதைக் கொடு, அதைக் கொடு என்று புலன்களை வருத்திப் புலம்பிக்கொண்டிருப்பது தியானமா?

தியானம் குறித்தும் அதனால் விளையும் பயன்கள் குறித்தும் ஆதாரங்களுடன் விளக்கிச்  சொன்னவர் எவர்?

முக்தி, சொர்க்கம் என்றெல்லாம ஆன்மிக வாதிகள் காலம் காலமாகச் சொல்லிவருகிறார்களே தவிர, அவற்றிற்கு முறையான விளக்கங்கள் தந்தவர் எவருமிலர். அது போலத்தான் இதுவும். வார்த்தைகளின் பொருள் புரியாமலே மக்கள் முணுமுணுக்கவும் புலம்பவும் பழகிக் கொண்டார்கள்.

மேலே குறிப்பிட்டது போல, முணுமுணுப்பதும் புலம்புவதும்தான்   தியானம் என்றால், இந்தத் தியானத்தைத் தன்னிச்சையாய்த் தாம் இருக்கும் இடத்திலேயே ஒருவர் செய்துகொள்ளலாம். இதற்கு ஜக்கியைப் போல சத்குருவெல்லாம் எதற்கு?

நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் கவர்ச்சிகரமானதும் மனதை மயக்குவதுமான ஆசிரமம் எதற்கு? பல நூறு கோடி ரூபாய்ச் சொத்து எதற்கு? 112 அடி உயரத்தில் ஆதியோகி சிலை எதற்கு?

கடவுள், கண்ணுக்கெட்டாத அல்லது தொட்டுவிட இயலாத உயரத்தில் இருப்பதாக நம்புகிறவன் மனிதன். இந்த நம்பிக்கையின் விளைவாகத்தான், வெட்டவெளிகளில் நின்று கடவுளைத் தொழும்போது உயர உயரத் தன் பார்வையைச் செலுத்தி இரு கை கூப்புகிறான்.

தரையில் குடிகொண்டிருக்கும் கடவுள்களை விட, திருமலை, சபரி மலை, இமயத்தின் கங்கோத்ரி போன்ற  உயர உயரமான மலைக் கடவுள்களுக்கு மகிமை இருப்பதாக மக்கள் நம்புகிறார்கள்; தேடிச் செல்கிறார்கள்.

மக்களின் ‘உயரத்திற்கு மயங்கும்’ இந்தப் பலவீனத்தைப் புரிந்துகொண்டவர் ஜக்கி. 112 அடிஉயரத்தில் அவர் சிலை அமைத்ததன் ரகசியம் இதுதான்.

ஞாயிற்றுக் கிழமை என்றால், 20 ஆயிரம் பேரும், நவராத்திரி என்றால் 10 லட்சம் பேரும் தம் கோயிலில் கூடுவதாகப் பீத்திக்கொள்கிறார்.

பத்து லட்சம் பேரும் பத்து லட்சம் அறிவாளிகள் அல்லர்; அவர்கள் ஜக்கியால் அறிவு முடமாக்கப்பட்டவர்கள். இது அவருக்கும் தெரியும்.

நவராத்திரிக் கொண்டாட்டம் என்னும் பெயரில் விடிய விடிய ஆடிப்பாடிக் கூச்சலிட்டும் கும்மாளமடித்தும் ஆர்ப்பாட்டம் செய்வதால், ஓரிரவுப் பொழுதை மக்கள் தம்மை மறந்து கழிக்கிறார்கள் என்பதைத் தவிர வேறு பயனேதும் இல்லை. 

எனக்கு வருமானம் 400 கோடி என்றாலும் சரி, 4000 கோடி என்றாலும் சரி அதை மக்களுக்குத்தான் செலவு செய்யப்போகிறேன் என்கிறார் வெள்ளியங்கிரிப் பிரபலம். கடவுளின் பெயரால், கோடிக்கணக்கில் செலவழித்துக் கட்டடங்கள் கட்டுவதும், சிலை வைப்பதும் மக்களுக்குச் செய்யும் சேவை என்கிறாரா அவர்? பகுத்தறிவைப் பயன்படுத்தவிடாமல் தடுப்பது சேவையாகுமா?

சிவராத்திரிக்கு 10 லட்சம் பேர் வருகை புரிவதாகச் சொல்கிறார்.

112 அடி சிலை  நிறுவப்பட்ட அந்தச் சிவராத்திரியிலும் 10 லட்சம் பேர் வருகை தந்திருக்கிறார்கள். அதாவது, ஜக்கியால் அறிவு முடமாக்கப்பட்ட 10 லட்சம் பேர் அன்று வருகை புரிந்திருக்கிறார்கள்.

அடுத்து வரும் நாட்களில், அவர் 1120 அடி சிலை அமைப்பாரேயானால் அவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியாகப் பெருகும். உயரம் அதிகரிக்க அதிகரிக்க வருகையாளரின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே போகும். இதன் மூலம்.....

சிந்திக்கும் அறிவு முடக்கப்பட்ட,  மிகப் பல லட்சம் அப்பாவிகளை ஓரிடத்தில், ஒரு நேரத்தில் திரட்டியது என்ற வகையில் இது உலகின் மாபெரும் சாதனையாகவும் அமையும்.

நவீனக் கட்டடக்கலை நுட்பங்களின் மூலம் அயல் நாடுகளில் 200 அடுக்கு, 300 அடுக்கு என உயர உயரமான கட்டடங்கள் கட்டப்பட்டுவரும் நிலையில், ஜக்குவும்[பல நூறு கோடி ரூபாய் சொத்துக்குச் சொந்தக்காரர். அவர் நினைத்தால் பல பல பல நூறு கோடி  செல்வத்தைக் குவிக்க முடியும்] இம்மாதிரி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம்.

இந்தியப் பிரதமரின் ஆதரவுடன் மேற்குறிப்பிட்ட சாதனையை ஜக்கி நிகழ்த்துவார். இது போன்ற வேறு பல சாதனைகளையும் அவர் நிகழ்த்தக்கூடும்.

வாழ்க சத்குரு ஜக்கி வாசுதேவ்! வளர்க அவர்தம் புகழ்!!
***********************************************************************************************************************




ஞாயிறு, 19 மார்ச், 2017

புத்தன் ஞானம் பெற்றது...ஒரு வரலாற்றுப் பிழை!

ஆறறிவு படைத்தவர் அனைவரும் மனிதர்களே. மரபு மற்றும் வாழும் சூழ்நிலை காரணமாகச் சிந்திக்கும் திறன் கூடவோ குறையவோ செய்யலாம். ஞானிகள், அவதாரங்கள் என்று எவரும் இல்லை.
கவுதம புத்தன் அரச குலத்தில் பிறந்து, அளப்பரிய சுகபோகங்களை அனுபவித்து வாழ்ந்தவன். அதிலிருந்து விடுபட்டு, எளிய மக்களின் வாழ்க்கை அவலங்களை எதிர்கொள்ள நேரிட்டபோது கடும் அதிர்ச்சிக்கு உள்ளானான். அந்த அதிர்ச்சி அவனை ஆழ்ந்து சிந்திக்கத் தூண்டியது.

துன்பங்களுக்கான காரணங்களைக் கண்டறிவதற்காகக் கானகங்களில் அலைந்தான்;வைசாலியில் தங்கியிருந்த அலாரர் என்பவரிடம் பாடங்களைக் கேட்டறிந்தான். பின்னர் இராஜகிரகத்தில தங்கியிருந்த ஆசிரியரான உருத்திரிகா என்பவரிடம் சீடராக அமர்ந்தான். அவருடைய போதனை புத்தனை வெகுவாகக் கவரவில்லை. எனவே அவரை விட்டு விலகிச் சென்றான்.

சுயமாகச் சிந்தித்தான்;  எங்கெல்லாமோ அலைந்து திரிந்துகொண்டே சிந்தித்தான்; இடம் பெயராமல் இருந்த இடத்தில் இருந்துகொண்டே சிந்தித்தான்; ஊண் உறக்கமின்றிச் சிந்தித்தான். துன்பங்களுக்கான மூலகாரணங்கள் ஒவ்வொன்றாகப் புரிய ஆரம்பிக்கின்றன.

துன்பங்களிலிருந்து விடுபட.....

‘ஆசையைத் துறக்க வேண்டும்’ என்ற உண்மையை ஒரு நாள் உணர்ந்திருப்பான். இது போதி மரத்தடியில் நிகழ்ந்திருக்கலாம் 

‘உயிர்வதை கூடாது’ என்னும் அறநெறியைப் பிறிதொரு நாள் உய்த்துணர்ந்திருப்பான். இது, வேம்பு போன்ற வேறொரு மரத்தின்கீழ் நிகழ்ந்திருக்கக்கூடும்.

‘அழுக்காறு வேண்டாம்’ என்னும் உயர் நெறியை ஓராண்டு கழித்து அவன் ஆராய்ந்து அறிந்திருக்கக்கூடும். இந்த நீதி, ஓடும் ஆற்று நீரில் குளித்துக்கொண்டிருக்கும்போது அவன் சிந்தனையில் மலர்ந்திருக்கலாம்.

‘தீமை புரிய வேண்டாம்; நல்லதே நினை; செய்' என்பன போன்ற பல அறநெறிகளைச் சிந்தித்து அறிவதற்குச் சில ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கலாம். இந்த எண்ணம், தீச்செயல் புரிவோரை நினைவுகூர்ந்தபோது மனதில் அரும்பியிருக்க வாய்ப்புள்ளது.

ஆக, புத்தன் சொன்ன அறவுரைகளும் வகுத்தளித்த வாழ்க்கை நெறிகளும் குறிப்பிட்ட ஓரிடத்தில், குறிப்பிட்ட சில/பல நாட்களில்  அவனால் அறியப்படுவதும் உணரப்படுவதும் சாத்தியம் அல்ல என்பது அறியத்தக்கது. 

//கயாவில் உள்ள போதி என்ற இடத்தில் ஒரு மரத்தின் கீழ் 49 நாட்கள் தவம் இருந்து ஞானம் பெற்றார் புத்தர்// [wikivisually.com/lang-ta/wiki/கௌதம_புத்தர்].  

//தனது 35ஆம் வயதில், இந்தியாவின் தற்போதைய பீகார் மாநிலத்தில் உள்ள கயை எனும் இடத்தில் சுமேதை என்பவளிடம் மோர் வாங்கிக் குடித்துவிட்டு போதி மரத்தினடியில் அமர்ந்த சித்தார்த்தர், ஞான நிலை அடையும் வரை அந்த இடத்தை விட்டு எழுந்திராமல் நிகழ்வுகளைக் கவனிப்பது என தீர்மானித்தார். ஒரு வாரம்[?] தனது மிக நுண்ணிய கவனிப்பின் பலனாக முதன் முறையாகக் கவலைக்கும், துன்பத்திற்குமான காரணம் பற்றியும், தான் முதன் முறையாக மிக மகிழ்ச்சியாக அப்போது இருப்பதையும் உணர்ந்தார்// -விக்கிப்பீடியா

//49 நாட்கள் தொடர்ந்து தியானத்தில் இருந்த கௌதமருக்கு ஞானோதயம் கிடைத்தது. ஞானோதயம் கிடைத்தப் பின்னர், இணக்கமான மற்றும் சீரான வாழ்விற்கு வழிகாட்டகூடிய சமயபோதனைகளையும், உபதேசங்களையும் போதித்தார்// -etamilwin.blogspot.com/2015/04/blog-post_21.html

என்றிவ்வாறான பல நம்பிக்கைகள் இன்றளவும் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளன. போதி
மரத்தடியில் புத்தனுக்கு ஞானம் பிறந்தது என்ற இந்த நம்பிக்கை உலகெங்கிலும் உள்ள மக்கள் 
மனங்களில் ஆழமாக விதைக்கப்பட்டுவிட்டது.

ஞானம்’,  அரிதாக வெகு சிலருக்கு மட்டுமே வாய்ப்பது’ என்பதான ஒரு நம்பிக்கையும், 
காலங்காலமாக மக்கள் மனங்களில் திணிக்கப்பட்டு வருகிறது. இவை  முற்றிலுமாய் 
அகற்றப்படவேண்டியவை. 

ஆறறிவு படைத்த அனைவரும் மனிதர்களே. மரபு மற்றும் வாழும் சூழ்நிலை காரணமாகச் சிந்திக்கும் திறன் கூடவோ குறையவோ செய்யலாம். ஞானிகள், அவதாரங்கள் என்று எவரும் இல்லை.
===============================================================================

புத்தனுக்குப் போதி மரத்தடியில்[அரச மரம்] ஞானம் பிறந்ததா?

ஆறறிவு படைத்தவர் அனைவரும் மனிதர்களே. மரபு மற்றும் வாழும் சூழ்நிலை காரணமாகச் சிந்திக்கும் திறன் கூடவோ குறையவோ செய்யலாம். ஞானிகள், அவதாரங்கள் என்று எவரும் இல்லை.
கவுதம புத்தன் அரச குலத்தில் பிறந்து, அளப்பரிய சுகபோகங்களை அனுபவித்து வாழ்ந்தவன். அதிலிருந்து விடுபட்டு, எளிய மக்களின் வாழ்க்கை அவலங்களை எதிர்கொள்ள நேரிட்டபோது கடும் அதிர்ச்சிக்கு உள்ளானான். அந்த அதிர்ச்சி அவனை ஆழ்ந்து சிந்திக்கத் தூண்டியது.

துன்பங்களுக்கான காரணங்களைக் கண்டறிவதற்காகக் கானகங்களில் அலைந்தான்;வைசாலியில் தங்கியிருந்த அலாரர் என்பவரிடம் பாடங்களைக் கேட்டறிந்தான். பின்னர் இராஜகிரகத்தில தங்கியிருந்த ஆசிரியரான உருத்திரிகா என்பவரிடம் சீடராக அமர்ந்தான். அவருடைய போதனை புத்தனை வெகுவாகக் கவரவில்லை. எனவே அவரை விட்டு விலகிச் சென்றான்.

சுயமாகச் சிந்தித்தான்;  எங்கெல்லாமோ அலைந்து திரிந்துகொண்டே சிந்தித்தான்; இடம் பெயராமல் இருந்த இடத்தில் இருந்துகொண்டே சிந்தித்தான்; ஊண் உறக்கமின்றிச் சிந்தித்தான். துன்பங்களுக்கான மூலகாரணங்கள் ஒவ்வொன்றாகப் புரிய ஆரம்பிக்கின்றன.

துன்பங்களிலிருந்து விடுபட.....

‘ஆசையைத் துறக்க வேண்டும்’ என்ற உண்மையை ஒரு நாள் உணர்ந்திருப்பான். இது போதி மரத்தடியில் நிகழ்ந்திருக்கலாம் 

‘உயிர்வதை கூடாது’ என்னும் அறநெறியைப் பிறிதொரு நாள் உய்த்துணர்ந்திருப்பான். இது, வேம்பு போன்ற வேறொரு மரத்தின்கீழ் நிகழ்ந்திருக்கக்கூடும்.

‘அழுக்காறு வேண்டாம்’ என்னும் உயர் நெறியை ஓராண்டு கழித்து அவன் ஆராய்ந்து அறிந்திருக்கக்கூடும். இந்த நீதி, ஓடும் ஆற்று நீரில் குளித்துக்கொண்டிருக்கும்போது அவன் சிந்தனையில் மலர்ந்திருக்கலாம்.

‘தீமை புரிய வேண்டாம்; நல்லதே நினை; செய்' என்பன போன்ற பல அறநெறிகளைச் சிந்தித்து அறிவதற்குச் சில ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கலாம். இந்த எண்ணம், தீச்செயல் புரிவோரை நினைவுகூர்ந்தபோது மனதில் அரும்பியிருக்க வாய்ப்புள்ளது.

ஆக, புத்தன் சொன்ன அறவுரைகளும் வகுத்தளித்த வாழ்க்கை நெறிகளும்  ஒரு நாளில், குறிப்பிட்ட ஓரிடத்தில், குறிப்பிட்ட சில மணி நேரங்களில் அவனால் அறியப்பட்டவை அல்ல; உணரப்பட்டவை அல்ல என்பது அறியத்தக்கது. இதுவே எதார்த்தமும்கூட.

//கயாவில் உள்ள போதி என்ற இடத்தில் ஒரு மரத்தின் கீழ் 49 நாட்கள் தவம் இருந்து ஞானம் பெற்றார் புத்தர்// [wikivisually.com/lang-ta/wiki/கௌதம_புத்தர்].  

//தனது 35ஆம் வயதில், இந்தியாவின் தற்போதைய பீகார் மாநிலத்தில் உள்ள கயை எனும் இடத்தில் சுமேதை என்பவளிடம் மோர் வாங்கிக் குடித்துவிட்டு போதி மரத்தினடியில் அமர்ந்த சித்தார்த்தர், ஞான நிலை அடையும் வரை அந்த இடத்தை விட்டு எழுந்திராமல் நிகழ்வுகளைக் கவனிப்பது என தீர்மானித்தார். ஒரு வாரம்[?] தனது மிக நுண்ணிய கவனிப்பின் பலனாக முதன் முறையாகக் கவலைக்கும், துன்பத்திற்குமான காரணம் பற்றியும், தான் முதன் முறையாக மிக மகிழ்ச்சியாக அப்போது இருப்பதையும் உணர்ந்தார்// -விக்கிப்பீடியா

//49 நாட்கள் தொடர்ந்து தியானத்தில் இருந்த கௌதமருக்கு ஞானோதயம் கிடைத்தது. ஞானோதயம் கிடைத்தப் பின்னர், இணக்கமான மற்றும் சீரான வாழ்விற்கு வழிகாட்டகூடிய சமயபோதனைகளையும், உபதேசங்களையும் போதித்தார்// -etamilwin.blogspot.com/2015/04/blog-post_21.html

என்றிவ்வாறான பல நம்பிக்கைகள் இன்றளவும் பதிவு செய்யப்பட்டுள்ளன. 
யாரோ ஒருவர் அல்லது சிலர் சொல்லிச் சென்றதைப் பின்னர் வந்தவர்கள் 
வழிமொழிந்து வந்திருக்கிறார்கள்.

வாழ்க்கையைச் சீர்திருத்துவதற்கான பல உயர்ந்த தத்துவங்கள் அல்லது கொள்கைகள் ஒரு 
குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட சிறு கால அவகாசத்தில் உதித்தவை என்பது சாத்தியமே 
இல்லாத நிகழ்வாகும்.

ஞானம்’ என்பது மனித குலத்தில், அரிதாக வெகு சிலருக்கு மட்டுமே வாய்ப்பது’ என்பதாக ஒரு 
நம்பிக்கை, காலங்காலமாக மக்கள் மனங்களில் திணிக்கப்பட்டு வருகிறது. இது முற்றிலுமாய் 
அகற்றப்படவேண்டிய ஒன்று. 

ஆறறிவு படைத்த அனைவரும் மனிதர்களே. மரபு மற்றும் வாழும் சூழ்நிலை காரணமாகச் சிந்திக்கும் திறன் கூடவோ குறையவோ செய்யலாம். ஞானிகள், அவதாரங்கள் என்று எவரும் இல்லை.
===============================================================================
புத்தரை,  ‘புத்தன்’ என்றே குறிப்பிட்டுள்ளேன். இதை விரும்பாதவர் பொறுத்தருள்வீர்!