ஞாயிறு, 14 மே, 2017

இன்னும் இன்னும் இன்னும் ‘பச்சை’யாக எழுதுங்கள் பாலகுமாரன்!!!

எழுத்துச் சித்தர் பாலகுமாரன் ‘லைஃப்’இல்[குமுதம் இணைப்பு] ‘காதல் கதை’ எழுதிக்கொண்டிருக்கிறார். நாயகி கவர்ச்சிக் கன்னி; மகா துணிச்சல்காரியும்கூட. அதற்குச் சான்று பகரும் நிகழ்வு[கள்] கீழே.....
நாயகன் கார்த்திகேயனும் நாயகி பானுமதியும் இணைந்து ‘பைக்’கில் பயணிக்க நேர்ந்தபோது, மழையில் நனைகிறார்கள்; பயணம் முடிந்து ஒரு காஃபி ஷாப்புக்குள் நுழைகிறார்கள். நுழையும்போது தெப்பமாய் நனைந்துவிட்ட தன் மேனியை ஆராய்கிறாள் பானுமதி.

‘அவள் அணிந்திருந்த அரைக்கைச் சட்டையின் முதல் பட்டன் மூடமுடியாமல்[காரணம் புரிகிறதுதானே?] இருக்கிறது. இரண்டாவது பட்டன் நன்கு மூடியிருக்க, அந்த இடைப்பட்ட வெளியில் மார்பின் மேல் பகுதி அவளுக்கே தெளிவாகத் தெரிந்தது.

காஃபி ஷாப்பில் இருந்த கண்ணாடியில் தன் உருவத்தை நின்று பார்த்துக்கொண்டாள். “செம கட்டையடி நீ. அவன் [காதலன்] சாகப் போறான் பார்”என்று நினைத்துக்கொண்டாள்.....’

பானு ரொம்பத்  துணிச்சல்காரிதானுங்களே?

நாயகனோ ரொம்ப நல்ல பையன்.

‘...எதிரே உட்கார்ந்து எந்தப் பயமுமின்றி, வெட்கமும் இன்றி அவள் மார்பின் மேல்பகுதியையே அவன் ஆச்சரியத்தோடு பார்த்தான்...’ என்று எழுதுகிறார் எழுத்துலகப் பிரபலம்.

ஒட்டுமொத்த உடம்பிலும் சூடு பரவ காமாக்கினி தகிக்க கட்டுக்கடங்காத இச்சையுடன் பார்க்காமல், ஆச்சரியமாகப் பார்ப்பதால் அவன் நல்ல பையன்தானே? 

34 வாரங்களாகத் தொடரும் கதையில், காதலர் இருவரும் கட்டுப்பாடின்றிப் பழகிக் காதலை வளர்த்துக்கொள்கிறார்கள். இருவரும் வேறு வேறு சாதி என்பதால்[அவன் வன்னியர். அவள் ரெட்டியார்] அவர்கள் கணவன் மனைவியாக இணைவதற்கான காலம் கனியவே இல்லை[குமுதம் 17.05.2017 இதழ் வரை]. 

காதலி[பானுமதி] பொறுமை இழக்கிறாள்; கார்த்திகேயன் காலம் கடத்துவதைக் கண்டிக்கிறாள்; அவன் பயப்படுவதாகக் குற்றம் சாட்டுகிறாள்.

“என் அண்ணன் டெல்லியில் இருக்கார். அவர் வந்தா எனக்காகப் பேசுவார்; எங்க அப்பாவைக் கன்வின்ஸ் பண்ணுவார். அதனால நான் அமைதியா இருக்கேன். எனக்குப் பதட்டமோ பயமோ இல்லை. ஏன்னா, நான் நூத்துக்கு நூறு என்னை நம்புறேன்; உன்னை நம்புறேன். உனக்குப் பதட்டமா இருந்தா சொல்லு. ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம்” என்கிறான் நாயகன் கார்த்திகேயன்[கவனத்தில் கொள்ளவேண்டிய இடம் இது]

‘இவனின் இந்த உறுதிமொழி பானுமதியை மகிழ்ச்சிப்படுத்தும்; பதிவுத் திருமணத்திற்கு அவள் சம்மதிப்பாள்’ என்பதுதானே வாசகனின் எதிர்பார்ப்பாக இருக்கும்?

அந்த எதிர்பார்ப்பைப் பொய்யாக்குகிறார் பாலகுமாரன்.

கீழே தொடர்வது கதையில் இடம்பெறும் உரையாடல்களில் குறிப்பிடத்தக்க இடமாகும். படியுங்கள்.

பானுமதி: “அதைவிட[ரெஜிஸ்டர் மேரேஜைக் காட்டிலும்] இது பெட்டர்”

“எது?” -கார்த்திகேயன்.

“என்னைக் கெடுத்துடு.”

“லூஸா நீ. பைத்தியம் மாதிரி பேசுறே.”

“என்னைப் பிடிக்கலை இல்லை. என்னைவிட நாட்டுக்கட்டையா உனக்குத் தேவைப்படுது இல்லை.”

“அநியாயமா பேசாதே. வெறுப்பேத்தாதே.”

“உண்மையாகவே நீ நல்லவனா இருந்தா, உண்மையாகவே என் மேல பிரியமானவான இருந்தா என்னைக் கூட்டிட்டுப் போ. எங்காவது த்ரீ ஸ்டார் ஹோட்டலில் கம்ஃபர்ட்புளா கொஞ்ச நேரம் படுத்துட்டு வருவோம். என்னை இங்க அங்க தொட்டு ஏதாவது பண்ணிடு” என்றாள் பானுமதி.

.........................................................................................................[சுருக்கம் கருதிச் சில உரையாடல்களை நீக்கியிருக்கிறேன்]

“திரும்பத் திரும்ப இப்படிப் பேசாதே. என்னைப் போட்டுக் கடிக்காதே” என்றான் கார்த்திகேயன்.

“பயமா இருக்கு கார்த்தி.....”

“அடிச்சிக் கொன்னுடுவேன். விளையாடுறயா நீ...?”

“அடிக்கிறதுக்குப் பதிலா கெடுத்துடு.”

“நீ பேசுறது நல்லாயில்லை.”

“என்னால படிக்க முடியல. வயிறு குழையுது.....எங்கோ பரவிடிச்சி. எங்கேயோ பத்திகிச்சுன்னா அதை முடிச்சாகணும்.....

“எனக்குப் புரியுது. உனக்கு என்ன வேணும்?”

“என்னைக் கெடுத்துடு.”

“அதைத் தவிர வேறு சொல்லு.”

“அதைத்தான் சொல்லுவேன்.”

...........................................................

“பைத்தியம் பிடிச்சிருக்கடி உனக்கு.”

“என்ன வேண்ணா சொல்லு.....நான் உன்கூட எங்க வேணா வரத் தயாரா இருக்கேன். உங்க வீட்டுக்குக் கூட்டிட்டுப் போறயா சரி. ரூமுக்குக் கூட்டுட்டிப் போறயா சரி. எங்கேயாவது ஹோட்டலுக்குக் கூட்டிட்டுப் போறயா சரி. என்னை விட்டுடாதே.....”

கதைக்கு ஒரு ‘முடிவு’ தரும் வகை அறியாமல் திணறும் எழுத்துச் சித்தர். மனம் போன போக்கில் எழுதி,  இன்னும் பல வாரங்களுக்கு இழுத்தடிக்க நினைக்கிறார்[காரணம் எதுவாகவோ இருந்துவிட்டுப் போகட்டும்]; வாசிப்பிலிருந்து விலக நினைக்கும் வாசகனைக் கவர்ச்சி காட்டிக் கட்டிப்போட முயல்கிறார். அதன் விளைவு.....

மேற்கண்ட,  கீழ்க்காண்பவை போன்ற கொச்சையான பானுமதியின் பேச்சுகள்.

“உண்மையாகவே நீ நல்லவனா இருந்தா, உண்மையாகவே என் மேல பிரியமானவான இருந்தா என்னைக் கூட்டிட்டுப் போ. எங்காவது த்ரீ ஸ்டார் ஹோட்டலில் கம்ஃபர்ட்புளா கொஞ்ச நேரம் படுத்துட்டு வருவோம். என்னை இங்க அங்க தொட்டு ஏதாவது பண்ணிடு.” 

“என்னால படிக்க முடியல. வயிறு குழையுது.....எங்கோ பரவிடிச்சி, எங்கேயோ பத்திகிச்சுன்னா அதை முடிச்சாகணும்.....”

எழுத்துச் சித்தர் அவர்களே,

வாசகனைச் சொக்க வைத்திட இம்மாதிரியான கொச்சை வசனங்கள் போதா; அந்தக்கால ‘சரோஜாதேவி’யில் வருவது போல் பச்சை  பச்சை பச்சையாக எழுதவேண்டும்.

எழுதுங்கள்.

இம்மாதிரி நீங்கள் எழுதுவது, ‘எழுத்துச் சித்தர்’ பட்டத்தைத் தக்க வைத்துக்கொள்ள உதவக்கூடும்!
===============================================================================













15 கருத்துகள்:

  1. சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும். வெரும் பானையை சுரண்டினால் வெரும் சத்தம்தான் வரும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொருத்தமான எடுத்துக்காட்டு.

      வருகைக்கும் பாராட்டுரைக்கும் நன்றி மாசிலா.

      நீக்கு
  2. இன்றைய இளசுகளை
    எப்பன்
    தம் பக்கம் இழுத்துக்கொள்ள
    கிழுகிழுப்பு ஏத்திறார் போலும்

    அன்னையர் நாள் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துரைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி நண்பர் ஜீவலிங்கம்.

      நீக்கு
  3. "எழுத்துச்சித்தர்" இதை அவரிடமிருந்து புடுங்கி வலைப்பதிவர் யாருக்காவது கொடுக்கலாம் காரணம் இவரைவிட தகுதியானவர்கள் பலர் உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவர்களுக்கெல்லாம் குறிப்பிட்ட சில பத்திரிகைகளின் ஆதரவு இருக்கிறது. இன்னும் இப்படி எத்தனை பட்டங்களையும் பெறலாம்.

      நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  4. சென்ற முறை சொன்னது நினைவுக்கு வருகிறது .....காமச் சித்தர் என்று வேண்டுமானால் சொல்லலாம் :)

    பதிலளிநீக்கு
  5. காலத்துக்கேத்த மாதிரி எழுதுறேன்னு சொல்வார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படி எழுதுகிறவர்களைத்தான் பத்திரிகைகளும் ஆதரிக்கின்றன.

      நன்றி ராஜி.

      நீக்கு
  6. பாலகுமாரன் எப்போவுமே இப்படித்தானே எழுதினார்? பொண்டாட்டியை "தேவடியாள்"னு சொன்னால்த்தான் காமம் நல்லாயிருக்கும்னு நம்புபவர் அவர். இப்போ "நாட்டுக்கட்டை" பட்டம் காதலிக்கு. :)

    இதே மாதிரி பொம்பளைங்க ஆம்பளைங்க விமர்சிக்கிறாப்பிலே எழுதினால் ஆம்பளைக்கு அன்னைக்கு நைட் வயாகராவும் உதவ முடியாது என்பதையும் கவனிங்க. ஆம்பளைங்க பொம்பளைங்களை இப்படிப் பேசித்தான் தங்களை "தேர்த்த" முடியுது. அவளை ஓரளவுக்கு கவனிக்க முடியுது என்பது பரிதாபம். வயசான காலத்தில் பொம்பளைகளை அவர் இப்படித்தான் திருப்திப் படுத்த முடியும். படுக்கையில் முடியாது பாருங்க?! பாவம் விடுங்க!

    மேலும் வயதாக ஆக அசிங்கம் எல்லாம் தெரியாதுனு நீங்க சாண்டில்யன் பிற்கால நாவல்களை முந்தைய நாவல் களுடன் இணைசெய்து பார்த்தால் உங்களுக்குப் புரியும்.

    நான் என் சொந்த அனுபவத்தில் கண்டதென்னவென்றால் படைப்பாளிக்கு காமம் பற்றி எழுதும்போது தான் எல்லை கடப்பது உணர முடியாது என்பதே.

    காதலன்-காதலி, கணவன் -மனைவி இடையில் உள்ள உறவைத்தானே நான் எழுதுறேன். அதில் காமம் தூக்கினால் "சுப(க)ம்"தானே என்பார். எனக்கும் அதில் ஓரளவுக்கு ஒப்புதல் உண்டு.

    சரோஜாதேவிக் கதையில் எவனுமே காதலன் காதலி உறவு கொள்வதையோ, கணவன் மனைவி உறவு கொள்வதையோ எழுதுவதில்லையே. இன்றைய காமக் கதைகளிலும் அப்படித்தான். இல்லையா? தகாத உறவை மையமாக வைத்துத்தானே எழுதுகிறார்கள்? அதனால் நீங்க இவ்விரண்டையும் "கம்பேர்" பண்ணக் கூடாதுனு நினைக்கிறேன்.

    நான் பார்த்தவரைக்கும், காமம் பற்றி எழுதும்போது நமக்கு நாம் செய்வது தவறாகத் தெரிவதில்லை. மற்றவர்கள் எழுதினால் அருவருப்பாகவும் தவறாகவும் தெரியும் என்று நம்புகிறேன். மற்றபடி நான் எழுதும்போது என் கதைக்கு வந்த விமர்சங்களை வைத்துத்தான் இந்த முடிவுக்கு வந்தேன். நான் பாலகுமாரன் விசிறி என்று என்னைத் தவறாக புரிந்து கொள்ளாதீர்கள்.

    பதிலளிநீக்கு
  7. தங்களின் வருகை மிக்க மகிழ்ச்சி தருகிறது வருண்.

    //நான் என் சொந்த அனுபவத்தில் கண்டதென்னவென்றால் படைப்பாளிக்கு காமம் பற்றி எழுதும்போது தான் எல்லை கடப்பது உணர முடியாது என்பதே// என்கிறீர்கள்.
    உண்மைதான். என்னுடைய பழைய சில கதைகளிலும்[வலைத்தளத்தில் பதிவிட்டதில்லை] இது நேர்ந்திருக்கிறது.

    //காதலன்-காதலி, கணவன் -மனைவி இடையில் உள்ள உறவைத்தானே நான் எழுதுறேன். அதில் காமம் தூக்கினால் "சுப(க)ம்"தானே என்பார். எனக்கும் அதில் ஓரளவுக்கு ஒப்புதல் உண்டு// என்றும் சொல்கிறீர்கள்.

    கணவன் - மனைவியரிடையே சரி; காதலன் - காதலரிடையே ‘காமக் கிளர்ச்சி’யை உண்டுபண்ணும் உரையாடல் தவறல்லவா? அதனால் பாதிக்கப்படுவது அப்பாவிப் பெண்கள்தானே. எத்தனை வெறித்தாக்குதல்! கடத்தல்! கற்பழிப்பு!

    “ரெஜிஸ்டர் மேரேஜ் செய்துகொள்ளலாம்” என்று கார்த்தி சொன்ன பிறகு, “இங்க தொடு. அங்க தொடு.ஏதாவது பண்ணு...எங்கேயோ பத்திகிச்சி. அதை முடிச்சாகணும்” என்ற பானுமதியின் உச்சக்கட்ட ‘வெறிப்பேச்சு’ தேவைதானா?[மணமான பிறகு எப்படி வேண்டுமானாலும் வெறியாட்டம் ஆடட்டும். ‘அந்தரங்க’ உறவின்போது, ஆண்களைக் காட்டிலும் படு படு ஆபாசமாகப் பேசும் பெண்கள் எதார்த்த உலகில் உண்டு] ஆட்சேபனைக்கு இடமே இல்லை.

    திருமணம் ஆகாத நிலையில், ‘உன்னைக் கைவிட மாட்டேன்’ என்று காதலன் வலியுறுத்திச் சொல்லிக்கொண்டிருக்கும் நிலையில்[போராட்டத்திற்கு ஒரு தீர்வு கிட்டும் நிலையில்] காதலியின், “இங்க தொடு, அங்க தொடு... எங்கேயோ பத்திகிச்சுன்னா அதை முடிச்சாகணும்.....” பேச்சு விரசத்தின் உச்சம் என்பதுதான் என் குற்றச்சாட்டு.

    பாலகுமாரனின் இம்மாதிரியான உரையாடல்களை விமர்சன உலகம் வரவேற்குமேயானால்.....

    இன்னும் கொஞ்சம் வரம்பு கடந்து, “எனக்குத் தாங்கல. இக்கணமே, இந்த இடத்திலேயே நான் படுத்துடுறேன். என் மேல் பரவுடா; என்னைப் பரவசப்படுத்துடா” என்று பானுமதி சொல்வதாக எழுத்துச் சித்தர் பாலகுமாரனை எழுதக்கூடும்[இது போல இதைவிடவும் ஆபாசமான எழுத்துக்குத்தான் ‘சரோஜாதேவி’யை உதாரணம் காட்டினேன்].

    மற்றபடி, பாலகுமாரன்மீது அழுக்காறோ அவரைப் போல் நாம் பிரபலம் ஆகவில்லையே என்னும் ஆதங்கமோ எனக்கு இல்லை.

    இன்னும் விரிவாக இந்த என் பதிவு அமைந்திருக்க வேண்டும் என்பதைத் தங்களின் பின்னூட்டம் உணர்த்தியது. தங்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன் வருண்.

    மிக்க நன்றி வருண்.



    பதிலளிநீக்கு
  8. என்னுடைய கருத்தை சரியாகப் புர்ரிந்து கொண்டதற்கு நன்றி சார்.

    பதிலளிநீக்கு