ஞாயிறு, 28 மே, 2017

கலக்கும் ‘காமக் கிழவன்’ பாலகுமாரன்!!!

இளமையும் அழகும் உள்ள ஆணும் பெண்ணும் காமம் கொள்வது இயல்பு. அதைப் பக்குவமாய்த் தம்முள் பகிர்ந்து இன்புறுவது ஒரு கலை. எழுபது வயதுக் கிழவன்ர் பாலகுமாரனுக்கு இது ‘கைவந்த கலை’ என்பதை இந்த வாரக் குமுதம்[லைஃப் 31.05.2017] உறுதிப்படுத்தியது.
‘கண்ணே, வண்ணப் பசுங்கிளியே!’ தொடர்கதையின் நாயகன் கார்த்திகேயனும் நாயகி பானுமதியும் மாமல்லபுரம் கடற்கரைச் சாலையிலுள்ள ஒரு விடுதியில் தங்குகிறார்கள்.

சற்று நேர உரையாடலுக்குப் பிறகு.....

#அவன் மேல் பாய்ந்து அவனை முத்தமிட்டாள் அவள். அவன் இறுக்கிக்கொண்டான். இறுக அணைத்த நிலையில் இரண்டுபேரும் வராண்டாவில் உருண்டார்கள்; மெல்ல எழுந்து மணல் தட்டினார்கள்[வராண்டாவில் ஏது மணல்? ‘தூசு தட்டினார்கள்’?].

அவள் நைட்டியை அவிழ்த்து உதறினாள்; உள்ளுக்குள் போனாள்; கட்டிலில் படுத்துக்கொண்டாள். இடுப்பில் மட்டும் அவளுக்கு ஆடை இருந்தது.

“கண்கள் இரண்டும் விடிவிளக்காக...கட்டழகு மட்டும் வெட்ட வெளியாக...” அவன் பாடினான். அவள் நாணமின்றி அவனைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்தாள்.

அந்த இரவு நேரத்தில் பூவில் வண்டு கூடிற்று; நிறைவுடன் சுற்றிச் சுற்றி வந்து முகர்ந்தது; தேன் உறிஞ்சியது; பூக்குள் சரசரத்து இறங்கியது; மகரங்களைத் தேய்த்து அனுபவித்தது.

பூ சிலிர்த்தது; வண்டை நெருக்கிக்கொண்டது.

திணறி வெளியே வந்த வண்டு மறுபடியும் சுற்றியது. 

உலகத்தில் எல்லாக் கூடல்களும் இப்படி ஸ்பரிசகந்தமாகத்தான் நடைபெறுகின்றன. வாசனை முகர்வும் உரசலும்தான் கிளர்ச்சியை ஏற்படுத்துகின்றன. மகரந்தச் சேர்க்கை என்பது அப்படித்தான் நடைபெறுகிறது#

‘விடிகாலை எழுந்து கடற்கரைப் பக்கம் நடந்தார்கள்...’ என்று கதையைத் தொடர்ந்து படித்தபோது..... 

‘சங்ககாலத்துத் தலைவனும் தலைவியும் இரண்டறக் கலந்து இன்பம் துய்த்த பிறகு[ஆளை விட்டால் போதும் என்று ஓட்டம் பிடிக்காமல்], தலைவியின் நெகிழ்ந்து கலைந்த ஆடை அணிகலன்களைத் திருத்துவதோடு, “உன்னை[இனியும்]ப் பிரியேன்” என்று அவளை அவன் தேற்றும் காட்சி நினைவுக்கு வந்தது.

இனி,  கதை.....

சூரியன் உதிக்கும்போது திரும்ப வந்தார்கள். சுடுநீர் இறங்குகிற ஷவரில் ஆனந்தமாகக் குளித்தார்கள்.

அவன், அவள் தலையை உதறித் துடைத்து டிரையர் போட்டு ஆற்றினான்; புசுபுசு தலைமயிரை ரப்பர் பேண்ட் போட்டு இறுக்கினான்.....

.....அடுத்த நாள் இரவும் ஆட்டமான ஆட்டம் ஆடினார்கள்; கூடினார்கள்; வெட்கம் விட்டார்கள்; நுரைக்க நுரைக்கக்[கிழவன்ர்ஆபாசத்தின் எல்லையைத் தொட்டுவிட்டான்ர்!!! இன்னொரு இடம்: ‘வெட்கமின்றிக் கால்களைப்.....’.....வேண்டாம். பத்திரிகை வாங்கி நீங்களே படித்துக்கொள்ளுங்கள்] கூடிவிட்டுக் களைத்துப் படுத்தார்கள்.

வேர்த்த அவன் உடம்பை அவள் ஈர டவலால் துடைத்தாள்; முகத்தைச் சுத்தம் செய்தாள்; தலையைக் கோதினாள்’ என்றெழுதி, புணர்ச்சிக்குப் பின்னரான பெண்ணின் பாசப்பொழிவைக் காட்சிப்படுத்தியிருப்பது நன்று. 

அவளின் ‘பரவச நிலை’ பற்றிய  வர்ணனை, இந்தக் கதாசிரியரின் எழுத்தாற்றலை வெகுவாகச் சிலாகிக்க வைக்கிறது. படியுங்கள்....

‘அவளுக்கு, தன்னை நிலவிலே உட்காரவைத்துத் தொட்டில் ஆட்டியது போல உணர்ந்தாள். உடம்பு, சூட்டிலும் குளுமையிலும் தவித்தது. அடிவயிறு சுட்டது. கழுத்து சில்லிட்டது. உதடுகள் இதழ்களுக்குக் கேவின[’கேவின’...எத்தனை அருமையான சொல்லாட்சி!]......

இது, வழக்கமான வெறும் காதல்கதைதான் என்றாலும், கிளுகிளுக்க வைக்கும் உரையாடல் மூலம் இளசுகளை எழுத்தாளர் கட்டிப்போடுகிறார் என்பது உண்மைதான்.

இந்த எழுபதைத் தாண்டிய[வயது 79 ஆகவும் இருக்கலாம்] கிழவனுருக்கு ‘எழுத்துச் சித்தர்’ என்பதைக் காட்டிலும் ‘காமக் கிழவன்ர் என்னும் பட்டமே பொருத்தமானது என்பது என் எண்ணம்.

வாழ்க ‘காமக் கிழவன்ர் பாலகுமாரன்!
===============================================================================
குமுதத்தை  இப்போதெல்லாம் நான் விரும்பி வாங்குவதில்லை.  இந்தக் கதையை வாசிப்பதில் தாமதம் ஏற்பட்டதற்கு இதுவே காரணம்.


14 கருத்துகள்:

  1. இந்தக் கண்றாவியை வாசிக்காமலே விட்டு விடலாமே :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விட்டிருக்கலாம்தான். வாசித்தேன்; மனதில் பட்டதை எழுதிப் பதிவேற்றினேன். இதை விரும்பாத வாசக நண்பர்கள் என்னை மன்னிப்பார்களாக.

      நன்றி பகவான்ஜி.

      நீக்கு
  2. இவருக்கு உங்கள் பாணியில் "காமக்கிழத்தன்" என்ற பட்டம் கொடுக்கலாம் நண்பரே.

    இதே பாணியில் நம்மைப்போன்றோர் எழுதினால் குமுதம் வெளியிடுமா ???

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயகோ...நான் துறந்துவிட்ட பழைய புனைபெயரை நினைவுபடுத்திவிட்டீரே நண்பரே!

      அது வாசகர் என்னை மறக்காமலிருக்க வைத்துக்கொண்ட பெயரே தவிர, பாலகுமாரனைப்போல் படுபடு விரசமாக எழுதவெல்லாம் வராது[எழுதிய கொஞ்சத்தையும் பதிவேற்றியதில்லை!!!].

      //இதே பாணியில் நம்மைப்போன்றோர் எழுதினால் குமுதம் வெளியிடுமா ???//

      குமுதம் வெளியிடாது. அதற்குப் ‘பிரபலம்’ என்னும் தனித் தகுதி வேண்டும்.

      நாம் பிரபலம் ஆகிவிட்டால், ஒரு நாளைக்கு எத்தனை தடவை ‘ஒன்னுக்கு’ப் போகிறோம் என்பதைக்கூடப் பட்டியலிடும்!

      நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  3. இன்றும் ஒரு பயணம்.

    நாளை இரவு, தொடரும் கருத்துரைகளை வாசித்து மகிழ்வேன்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  4. இம்முறை பூ வண்டு னு சொல்லி தன் ஆசையைத் தீர்த்துக்கொள்ள முயன்றுள்ளார். பிரச்சினை என்னவென்றால், காமத்திற்கு எல்லை கிடையாது என்பதே. காமம் பற்றி எழுதுபவனும் என்றுமே எல்லை அடைந்ததும் கிடையாது என்பதே. மேலும் இவரு, பூ, வண்டிற்கு பதிலாக பச்சையாக, ஆணுருப்பு பெண்ணுருப்புனு (உண்மையில் அதைத்தானே சொல்கிறார்? எதுக்கு இந்த கேவலமான நாகரிகத்தனம்? இந்ட்த வேஷித்தனம் யாரை ஏமாற்ற? உலகையா இல்லை தன்னையேவா?)) என்று "பச்சைத் தமிழில்" எழுதி இருந்தாலும், இவர் திருப்தி அடையப்போவதில்லை என்பதே பரிதாபம்.

    ------------------
    மற்றபடி இன்றைய மேட்டுக்குடி இந்தியக் கலாச்சாரம் இப்படித்தானே இருக்க்கிறது? ஆணுக்கும் பெண்ணுக்கும் வெட்கமில்லை. எங்கு பார்த்தாலும் காமம் கரைபுறண்டு ஓடுகிறது, இல்லையா? யாரு ப்ரிமாரிட்டல் செக்ஸ் வைத்துக் கொள்வதில்லை?னு சுஹாஷினி, குஷ்பெல்லாம் வெளிப்படையாக பேசவில்லையா என்ன? நாங்கல்லாம் பலரோட உடலுறவு வைத்துப் பழகிய பிறகுதான் கணவனைத் தேர்ந்தெடுத்தோம் என்று பச்சையாக சொல்லவில்லையா என்ன? மேலும் எல்லாப் பெண்களும் ஆண்களுமே அப்படித்தான் என்றும் இவர்கள் சொல்லவில்லையா என்ன? அதாவது தான் பத்துப் பேரோட உருண்ட பிறகுதான் பதினோராவது ஆளை கட்டிக்கிட்டேன் என்றால், எல்லாருமே அப்படித்தான் என்று பேசும் "பெரிய மனுஷத்தனம்"! அதையெல்லாம் கேட்டு சுஹாஷினி, குஷ்பு காம வாழ்க்கையைப்ப்பற்றி நாம் புரிந்துகொள்ளவில்லையா என்ன? இவரும் புரிந்துகொண்டுள்ளார் போலும்..

    பாலகுமாரை விடுங்க சார். உங்களைச் சுற்றி வாழும் இன்றைய இளைய சமுதாயத்தில் யாருக்கும் வெட்கமில்லை என்பதே உண்மை. பாலகுமாரன் வேசி என்றால் குமுதத்தில் இதை வெளியிடுபவன், "கூட்டிக் கொடுப்பவன்" இல்லையா?

    மணிரத்னம் ஒரு பக்கம் சினிமா மூலம் தொண்டு செய்கிறார். பாலகுமாரன் தன் பங்குக்கு இப்படி சேவை செய்கிறார்..ஆனால் மணிரத்னம் தொடர்ந்து தோல்வியத்தான் தழுவுகிறார். காமமே கலக்காமல் வெளிவந்த பாகுபலியைத்தான் மக்கள் ரசிக்கிறார்கள். காமம் என்பது தன்னைத் திருப்திப் படுத்துக் கொள்ள மட்டுமே? மற்றவரை அல்ல? என்பதை புரிந்த பாலகுமாரனும். மணிரத்னமும் தன் ஆசையைத் தீர்த்துக் கொள்ள முயன்று தோற்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்வோம்.

    மற்றபடி, கதை எழுதுறானாம் கதை! இவனும் இவன் பூவும், வண்டும், இவன் ஆத்தாளும்! கிழட்டுத் தேவடியாமகன்! னு இவரைத் திட்டினாலும்..என்ன ஆகப்ப்போது? இவனுக அப்போவும் திருந்தப் போவதில்லை என்பதையும் நீங்க புரிந்து கொள்ளுங்கள்! கற்பழிக்கும்ப் போது பெண் சுகம் அனுபவித்தால் என வாதாடும் மனநிலை உள்ள "காமப் பித்தர்கள்' இவர்கள் என்பதைப் புரிந்து கொள்வோமே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனநிறைவைத் தருகிற நடுநிலையான கருத்து. இனி நான் இவரைப் பற்றி எழுதப்போவதில்லை[தண்ணி தெளித்து விட்டுவிடலாம்!]

      மிக்க நன்றி வருண்.

      நீக்கு
  5. இதன் முன்பகுதியின் விமர்சனத்தை எங்கயோ படிச்சேன்பா. அவரும் கழுவி கழுவி ஊத்தினார். ஒரு பக்கம் ஆன்மா, கர்மா, அமானுஷ்யம்ன்னு பெரிய மனுஷத்தனமா நடந்துக்கிட்டு இங்க இப்படி சில்லறைத்தனம்...


    குமுதம், ஆவி, குங்குமம்லாம் தன் தரத்தை இழந்து ரொம்ப நாளாச்சு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மக்களைக் குழப்புகிறார்கள்; கெடுக்கிறார்கள் என்றும் சொல்லலாமா?

      மிக்க நன்றிம்மா.

      நீக்கு
  6. ஆஹா! உங்கள் புனைப் பெயர் அவருக்கு பொருத்தமாக இருக்கிறதே!
    நானும் படித்தேன். ஐயா!
    இந்த வாரம் கொஞ்சம் ஓவராகத் தான் தோன்றியது.தவிர்த்திருக்கலாம்.
    ஆனாலும் மற்ற பகுதிகளில் அவரது எழுத்துகளில் ஒரு வசீகரம் இருக்கத் தான் செய்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இளசுகளைக் கவர்வதற்காகவோ என்னவோ வரம்பு கடந்து எழுதுகிறார்.

      //இந்த வாரம் கொஞ்சம் ஓவராகத் தான் தோன்றியது.தவிர்த்திருக்கலாம்//

      இனி வரும் வாரங்களில் இன்னும் ஓவர் ஆகலாம்.

      என் புனைபெயரை நினைத்தால் எனக்கே வெட்கமாக இருக்கிறது.

      மிக்க நன்றி முரளி.

      நீக்கு
  7. பயணம் பாதியில் முடிந்தது. இன்று அதிகாலையிலேயே வீடு திரும்பிவிட்டேன்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  8. வருண் அவர்களின் கருத்துரை மிகவும் சரி...

    பதிலளிநீக்கு