வெள்ளி, 30 ஜூன், 2017

‘பாசப் பைத்தியங்கள்!’...கதை உலகில் ஒரு புரட்சி!!

படித்தவுடன் உங்களுக்கும்  என்னைக் கடிந்துகொள்ளத் தோன்றும். சிறிதே சிந்தித்தால் பாராட்டவும் தோன்றக்கூடும்! அன்று[13.08.2012] இதை வாசித்தவர் எண்ணிக்கை வெறும் 90 மட்டுமே!!

இனி அது ‘தொள்ளாயிரம்’ ஆக அதிகரிக்குமா? இல்லை, 9 ஆயிரமா? இல்லையில்லை, 9 லட்சமா?! இல்லையில்லையில்லை, 9.....!!!
கடவுளும் ஒரு கருணைக் கொலையும்

வீடு திரும்பிய தந்தையும் தாயும் தன்னருகே வந்து அமர்ந்ததும் சந்திரன் கேட்டான்: “வக்கீலைப் பார்த்தீங்களா?”

அவன் அப்பா மட்டும் “இல்லை” என்பதாகத் தலையாட்டினார்.

“அப்படீன்னா இவ்வளவு நேரமும் எங்கே போயிருந்தீங்க?”

அப்பா தலை குனிந்தார். அம்மா சொன்னார்:  "கோயிலுக்கு.”

“எதுக்கு?”

“ஏம்ப்பா இப்படிக் கேள்வி கேட்டு எங்களை நோகடிக்கிறே? உனக்கு நோய் குணமாகணும்னு வேண்டிக்கத்தான் போனோம்.”

“நான் நோய்வாய்ப்பட்ட நாளிலிருந்து கோயில் கோயிலாப் போய் வர்றீங்க. பலன் கிடைச்சுதா?”

“.......... ஏதோ கொஞ்சம் நிம்மதி கிடைக்குது.”

“நிம்மதி கடவுளை வேண்டிக்கிற உங்களுக்குத்தான். தீராத நோயால் பாதிக்கப்பட்ட எனக்கல்ல. என் உடம்புல எதிர்ப்புச் சக்தி ரொம்பவே குறைஞ்சுட்டுது. நோவு அதிகரிச்சிட்டே போகுது. டாக்டர்கள் கை விட்ட என்னை எந்தக் கடவுளும் காப்பாத்தாதுன்னு திரும்பத் திரும்பச் சொல்லிட்டிருக்கேன். காதுல போட்டுக்காம, கடவுள் கைவிட மாட்டார் மாட்டார்னு கண்ட கண்ட கோயிலுக்கெல்லாம் போறீங்க; தலைமுடி வளர்த்துத் தாடி மீசை வெச்சவன் காலில் எல்லாம் விழறீங்க. இந்த நிலைமை நீடிச்சா நான் சாகறதுக்குள்ளே உங்க ரெண்டு பேருக்கும் பைத்தியம் பிடிச்சுடும்.”

“அப்படியெல்லாம் சொல்லாதேப்பா.” -குரல் தழுதழுக்கச் சொன்னார் அப்பா.

“சொன்னா என்ன? நடக்கக் கூடாததையா நான் சொன்னேன்? புருஷனை இழந்த எதுத்த வீட்டு அமுதா மாமியோட பத்து வயசுப் பொண்ணு ஆறு மாசம் முந்தி காணாம போச்சு. போலீசில் சொன்னாங்க; எல்லாப் பேப்பரிலும் விளம்பரம் குடுத்தாங்க. பொண்ணு திரும்பக் கிடைக்கல. கண்ட சாமியார் காலில் எல்லாம் விழுந்தாங்க. கோயில் கோயிலா அலைஞ்சாங்க. பலன் இல்ல. மனசைத் தேத்திக்கணும். செய்யல. அது அவங்களால் முடியலேன்னும் சொல்லலாம்.  “கடவுளே என் மகளை மீட்டுக் கொடு..... மீட்டுக் கொடுன்னு சோறு தண்ணி இல்லாம தியானத்தில் மூழ்கிக் கிடந்தாங்க. என்னாச்சு?..............

..............என் மகளைப் பார்த்தீங்களா, பார்த்தீங்களா சாமி’ன்னு எதிர்ப்பட்டவங்களை எல்லாம் விசாரிச்சுட்டுப் பைத்தியமா அலைஞ்சிட்டிருக்காங்க...........”

கொஞ்சம் இடைவெளியில் தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்ட சந்திரன் தொடர்ந்தான். “நீங்களும் அந்த நிலைக்கு ஆளாயிடக் கூடாதுன்னுதான் ரெண்டு பேரையும் வக்கீல்கிட்டே அனுப்பினேன்” என்றான்.

அம்மா சொன்னார்:  “வக்கீல் மூலமா, உன்னைக் கருணைக் கொலை செய்யக் கோர்ட்டில் அனுமதி வாங்கணும்னு சுலபமா சொல்லிட்டே. இதுக்கு உன்னப் பெத்த எங்க மனசு இடங்கொடுக்குமா ராசா?”

“இடம் கொடுக்காதுதான். வேற வழி இல்லியேம்மா. இப்போ ஓரளவுக்கு நோவைத் தாங்கக் கூடிய சக்தி எனக்கு இருக்கு. நாளாக ஆக, தாங்குற சக்தி குறையக் குறைய வேதனை அதிகமாகும். அப்புறம் அணு அணுவா துடிச்சிச் சாக வேண்டிய பரிதாப நிலைக்கு நான் ஆளாயிடுவேன். அப்படியொரு நிலைக்கு ஆளாகாம இப்பவே நிம்மதியாச் செத்துடணும்னு ஆசைப்படுறேன். என் விருப்பத்தை இனியாவது நிறைவேத்தப் பாருங்க...........

...........அப்பா, அம்மா வேண்டாம். ஒரு தாய் மனசு எந்த வகையிலும் இதுக்கெல்லாம் சம்மதிக்காது. நீங்க மட்டுமே போங்க. நான் சொன்ன லாயரைப் பாருங்க. செய்ய வேண்டியதைச் சீக்கிரம் செஞ்சி முடிங்க. நான் சீக்கிரமா சாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கேன்” என்றான் சந்திரன்.

பொங்கி வரும் அழுகையைக் கட்டுப்படுத்திக் கொண்டு, இயந்திர கதியில் நகர முற்பட்ட தந்தையிடம்,  “அப்பா, மனசு மாறி மறுபடியும் கோயிலுக்குப் போயிடாதீங்க. என்னை நிம்மதியா சாகடிக்க டாக்டர்களால்தான் முடியும்; கடவுளால் முடியாது” என்றான் மெல்லிய வேதனை கலந்த புன்முறுவலுடன்.

அதிகம் பேசிவிட்ட களைப்பில் கண்மூடி மயக்கத்தில் ஆழ்ந்தான் சந்திரன்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

12 கருத்துகள்:

  1. ஏற்கனவே படித்த நினைவு மனம் கனத்தது.

    பதிலளிநீக்கு
  2. எதார்த்தமான பிள்ளை. நோய் அவஸ்தை படும்போது பெத்தவங்களுக்கே தோணும். அவஸ்தைப்படாம போய்டனும்ன்னு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பெத்தவங்களுக்கே தோணும்//

      நீதிமன்றங்களுக்கெல்லாம் செல்கிறார்கள். நடமுறையில் கருணைக்கொலைகள் நடக்கின்றனவா என்று தெரியவில்லை.

      நன்றி ராஜி.

      நீக்கு
  3. அய்யாவுக்கு ரொம்ப பக்தி என்றால் ,டாக்டரை சந்தித்து மகன் ஆசையை நிறைவேற்றி 'படைத்தவனே எடுத்துக் கொண்டார் 'என்று ஆறுதல் அடையலாமே :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //'படைத்தவனே எடுத்துக் கொண்டார்//

      இந்த எண்ணம் அவருக்கு வந்திருக்கணும்!

      நன்றி பகவான்ஜி.

      நீக்கு
  4. அருமையான கதை பசி ஐயா. மனம் கனக்கிறது - சந்திரனை நினைக்க..! ஒரு வகையில் சந்திரன் கேட்பதும் நியாயம் தான். அதேவேளை பெற்றவர்களின் மனம் படும்பாட்டையும் கவனிக்க வேண்டும். என்றாலும் என்னைப் பொறுத்து சந்திரனுக்கு 18 வயதுக்கு மேல் என்றால், அவன் ஆசையை நிறைவேற்றுவதே பொருத்தமானது.

    பதிலளிநீக்கு
  5. ஒருமுறை ஒரு போரிலே ஒரு தளபதி காயமடைந்தார். அந்த தளபதியை தூக்கிச் சென்று காப்பாற்ற முடியாத நிலை. எதிரிப்படைகள் நெருங்கிவிட்டார்கள். தன் மெய் பாதுகாவலனுக்கு தளபதி ஆணையிடுகிறார்.

    'என்னைச் சுட்டுக் கொன்றுவிட்டு, என் துப்பாக்கியையும் எடுத்துக்கொண்டு நீ தப்பிச் செல்'

    மெய்பாதுகாவலன் ஒரு கணம் தயங்கினான். தளபதியோ இயலாத நிலையிலும் 'ம்ம் சுடு' என்றார்

    அடுத்த கணம் மெய் பாதுகாவலனின் துப்பாக்கி முழங்கியது.

    இந்தச் சம்பவம் எங்கு நடந்திருக்கும் என்று நினைக்கிறீர்கள் ஐயா..??

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேறெங்கும் இல்லை. தமிழ் ஈழத்தில்தான்! தமிழ் உணர்வும் தமிழின உணர்வும் மிக்கவர்கள் அங்குதானே இருக்கிறார்கள்.

      நீக்கு