வெள்ளி, 2 ஜூன், 2017

உலகில் ஒரு பிராமணன்கூட யோக்கியன் இல்லையா?

கேள்வி கேட்டவர் காந்தியடிகள். பதில் சொன்னவர்: பெரியார். வெகு சுவையான பழைய சம்பவம். படிக்கலாமே!

1957ஆம் ஆண்டில் பெங்களூரில் பெரியாரும் காந்தியாரும் சந்தித்தபோது[‘கிளர்ச்சிகளும் செய்திகளும்’ 1. ப. 2995].....
காந்தியார்: உங்களுக்கு ஒரு பார்ப்பனரிடம்கூட நம்பிக்கையில்லையா?

பெரியார்: நம்பிக்கை ஏற்படமாட்டேன் என்கிறது.

காந்தியார்: இராசகோபாலாச்சாரியாரிடம்கூட உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?

பெரியார்: அவர் நல்லவர்; உண்மையானவர்; தியாகி; சுயநலம் இல்லாதவர். அதே நேரத்தில் அவர் அவர்களது வகுப்பு[பிராமணர் ஜாதி] நலனுக்கும் உண்மையான தொண்டராக இருக்கிறார். அவர்களுக்காகவும் அவர் சுயநலமில்லாமல் தொண்டு செய்கிறார். எங்கள் நலத்தை[பிராமணர் அல்லாதார்] அவரிடம் நம்பி ஒப்படைக்க முடியாது.

காந்தியார்: இது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அப்படியானால், உலகத்தில் ஒரு பிராமணன்கூட யோக்கியன் இல்லை என்பது உங்கள் கருத்தா?

பெரியார்: இருக்கலாமோ என்னவோ எனக்குத் தென்படவில்லை.

காந்தியார்: அப்படிச் சொல்லாதீர்கள். நான் ஒரு பிராமணனைப் பார்த்திருக்கிறேன். சந்தேகத்துக்கு இடமில்லாமல் அவர் நல்ல பிராமணன் என்றே நான் கருதுகிறேன். அவர் யார் தெரியுமா? அவர்தான் கோபால கிருஷ்ண கோகலே.

பெரியார்: அப்பாடா! தங்களைப் போன்ற மகாத்மாவினுடைய கண்ணுக்கே இப்பரந்த உலகத்தில் ஒரே ஒரு நல்ல பிராமணன் தென்பட்டாரென்றால் எங்களைப் போன்ற சாதாரணப் பிறவிகளின் கண்களுக்கு எப்படி உண்மைப் பிராமணன் தென்பட முடியும்?
===============================================================================

நன்றி: திருமழபாடி நண்பர் முனைவர் அ. ஆறுமுகம் அவர்கள்.

2 கருத்துகள்: