வியாழன், 13 ஜூலை, 2017

‘சிறு’நீரின் ‘பெரும்’ பயன்கள்!!

‘ஆத்திரத்தை அடக்கலாம். மூத்திரத்தை அடக்க முடியாது[கூடாது]’ என்பார்கள். அதை அடக்கி ஆள்வதோ அடங்கிப்போவதோ அவரவர் விருப்பம். ஒன்றுக்கும் உதவாதது என்று நாம் நினைக்கிற அந்த ‘ஒன்னு’க்கின்  பயன்கள் குறித்துச்  சில சுவையான தகவல்கள்! 
*சிலவகைத் தோல் நோய்களுக்குச் சிறுநீர் தடவுவது பண்டைய இந்திய மருத்துவத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

*ஒரு காலத்தில், ரோமானியர்கள் துணைகளைச் சுத்தம் செய்வதற்கான பிளீச்சிங் பொருளாகப் பயன்படுத்தினார்கள்.

*போர்களின்போது காயங்கள் ஏற்பட்டு, போதிய ஆண்டிசெப்டிக் களிம்புகள் கிடைக்காதபோது வீரர்கள் காயங்களில் தடவிக்கொள்வார்கள். பாக்டீரியாவைக் கொல்லும் குணம் சிறுநீருக்கு உண்டு என்பதால் உலகெங்கிலும் இது நடைமுறையில் இருந்திருக்கிறது.

*சிறுநீரில் நிறைய ‘யூரியா’ உள்ளது.  யூரியாவில் ‘நைட்ரஜன்’ அதிக அளவில் இருக்கும். மரங்களுக்கோ செடிகளுக்கோ பாய்ச்சினால் அது நல்ல எருவாகி உரம் சேர்க்கிறது. ஆனாலும், சிறுநீர்ப் பாசனம் அதிகமானால் செடிகள் வாடிவிடக்கூடும்.

*[சிறுநீரின் மஞ்சள் நிறத்திற்கும் தங்கத்திற்கும் முடிச்சுப் போட்டு, சிறுநீரிலிருந்து தங்கத்தைப் பிரித்தெடுக்க விதம் விதமான முயற்சிகளைச் செய்து விஞ்ஞானிகள் தோற்றார்கள்].

மேற்கண்ட தகவல்களை நமக்குத் தந்து உதவிய நூல்: ‘கிட்னியைக் கவனி’, ‘சூரியன் பதிப்பகம், மயிலாப்பூர், சென்னை. முதல் பதிப்பு: டிசம்பர், 2014.


கீழ்க்காணும் தகவல்களை நமக்குத் தருபவர்: ‘சர்வரோக நிவாரணி’ நூலைத் தொகுத்த சுவாமி பூமானந்தா[[ http://tamilnatural.blogspot.in/2016/07/blog-post_248.html#.WWdIBLpuLIU ]

சிறுநீரை..........
*தினமும் 3 வேளை   அருந்தினால் ஆரோக்கியமாக வாழலாம்”

*லேசாகச் சூடு செய்து காதைக் கழுவினால் காதுவலி, இரைச்சல், செவிட்டுத் தன்மை நீங்கும்.  

*கண்களைக் [சிறுநீரினால்] கழுவினால் கண்வலி, கண்சிவத்தல், கண்வீக்கம் முதலியன அகன்று விடும்.

*அருந்துவதால் ஜலதோஷம், பீனிசம்[மூக்கடைப்பு, மூக்கில் புண், மூக்கில் சதை வளர்தல் போன்ற மூக்கு தொடர்புடைய அனைத்து வியாதிகளும்] ஆகிய நோய்களும்   குணமடையும். 

*உடம்பில் தேய்த்தால் அனைத்து விதமான தோல் வியாதிகள் குணமடையும். 

*‘சிறுநீரை அருந்தலாம் என்று சிலர் கூறுகிறார்கள் ஆனால், இது தவறு. சிறுநீரில் இருக்கும் அதிகப்படியான உப்பு, உடலில் நீர் வறட்சி உண்டாவதற்கான காரணியாக அமையும்’ என்று மிரட்டுபவர்களும்[‘தமிழ் மருத்துவர்’] உள்ளனர்http://www.tamildoctor.com/pissing-mater/

விரும்புவோர் பயன்படுத்துங்கள். நல்லது நடந்தால் என்னைப் பாராட்டுங்கள். எதிர்மறை விளைவு என்றால் சூரியன் பதிப்பகத்தாரையும் சுவாமி பூமானந்தாவையும்.....என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்!

முன்னாள் இந்தியப் பிரதமர் மொரார்ஜி தேசாய் அவர்கள்,  மிகு சிறுநீர்ப் பிரியர் என்பதை நினைவுபடுத்திப் பதிவை நிறைவு செய்கிறேன்.
===============================================================================

11 கருத்துகள்:

  1. உங்கள் கூற்று உண்மை என்றே சிலர் சொல்வர்

    பதிலளிநீக்கு
  2. பதில்கள்
    1. ஓட்டுப் பட்டையை எப்போதோ நீக்கினேன். மறுபடியும் சேர்க்கலைங்க.

      நீக்கு
  3. பதிவைப் படித்ததுமே எனக்கு முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் அவர்கள்தான் நினைவுக்கு வந்தார் எனக்கு நன்றாக நினைவு இருக்கின்றது வருடம் ஞாபகமில்லை.

    ///நல்லது நடந்தால் என்னைப் பாராட்டுங்கள். எதிர்மறை விளைவு என்றால் சூரியன் பதிப்பகத்தாரையும் சுவாமி பூமானந்தாவையும்.....என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்///

    கடந்த பதிவின் வந்த டாக்டர் மதன் சொல்லிக் கொடுத்தாரோ... இந்த டெக்னிக்கை ?

    பாவம் பயலுக்கு ஸ்டூல் போட்டிருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //டாக்டர் மதன் சொல்லிக் கொடுத்தாரோ...//

      உண்மை! உண்மை!! ஹி...ஹி...ஹி!!!

      நீக்கு
    2. ஸ்டூல் எதுக்கு? பயல் சாதனை நிகழ்த்துகிறானே!

      நன்றி நண்பர் கில்லர்ஜி.

      நீக்கு
  4. கழிவாக வெளியேறிய சிறு நீரினால் நல்லது நடக்காது :)

    பயலின் சாதனையை ரசித்தேன் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருக்கலாம். அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்படுதல் அவசியம்.

      நன்றி பகவான்ஜி.

      நீக்கு
  5. உவ்வ்வ்வ்வ்வே. தவறி கை, கால்களில் பட்டாலே கொமட்டுது. இதுல கண்ணை கழுவுறதாம், காதை கழுவுறதாம்

    பதிலளிநீக்கு