புதன், 16 ஆகஸ்ட், 2017

இந்து மதவா[விரோ]திகள் சிந்திப்பார்களா?!

வரவிருக்கும், ‘பிள்ளையார் பிறந்த நாள்’ஐ[சதுர்த்தி] முன்னிட்டு வெளியிடப்படும் சிறப்புப் பதிவு இது!
இஸ்லாமிய மதம் வன்முறையால் பரப்பப்பட்டது என்பார்கள். “இல்லை...இல்லை. இங்கே நிலவும் சமத்துவம்தான் பிற மதத்தவர் எம் மதத்தைத் தழுவக் காரணம்” என்கிறார்கள் இஸ்லாம் மதவாதிகள்

‘கிறித்தவம் பணபலத்தால் விரிவுபடுத்தப்பட்டது’ என்பதை மறுத்து, “ஏழை எளியவர்களுக்கு நாங்கள் பலன் கருதாமல் செய்யும் தொண்டுதான் எங்கள் மதம் வளரக் காரணம்” என்கிறார்கள் கிறித்தவ மதபோதகர்கள்.

இவர்களின் நிலை இவ்வாறாக  இருக்க, ஜாதிமத வேற்றுமைகள் குறித்தோ, பொதுத் தொண்டு குறித்தோ பெரிதும் கவலை கொள்ளாமல், பல்லாயிரக் கணக்கில் பிள்ளையார் சிலைகளைக் கரைப்பது, ஆண்டு தவறாமல் ஆண் பெண் சாமிகளுக்குக் கல்யாணம் கட்டி வைப்பது, அறிவுக்கொவ்வாத, கடவுளர் பற்றிய ஆபாசக் கதைகளை மேடைகளிலும் ஊடகங்களிலும் சலிக்காமல் சொல்லிக்கொண்டிருப்பது என்றிவ்வாறு மக்கள் மனங்களில் மூடநம்பிக்கைகளை வளர்த்துக்கொண்டே இருக்கிறார்கள் இந்துமதவாதிகள். இவர்கள்..... 

மூடநம்பிக்கைகளை வளர்ப்பதன் மூலம் தம் மதத்தை வளர்க்க முடியும் என்று நம்புகிறார்களா?
*****************************************************************************************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக