அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

புதன், 29 நவம்பர், 2017

'காலை மலர்' தளத்துக்கு நன்றி!

ஜூன் 20,2016இல் என் பதிவை எடுத்தாண்டதுடன் மே 12, 2017இல் புதுப்பித்துள்ளது[சற்று முன்னர்தான் இதை அறிய நேர்ந்தது].  'காலை மலர்' தளத்துக்கு என் மனம் நிறைந்த நன்றி.














‘தி இந்து’[19.06.2016] வின் மூடநம்பிக்கை திணிப்பு['காலை மலர்' கொடுத்த தலைப்பு]

‘தி இந்து’[19.06.2016]வில் நான் படித்து நொந்த ஒரு செய்தி!!! http://kadavulinkadavul.blogspot.com/2016/06/19062016.html

.கீழே ஒரு படம் இணைத்திருக்கிறேன். அதைக் கூர்ந்து நோக்குங்கள். 
13427731_259793664387374_1859389908559154847_n
.உங்களுக்குத் தெரிவது என்னவாகவோ இருக்கட்டும். என்னைப் பொருத்தவரை அது வெறும் பாறை மட்டுமே.
.
இப்போது படத்தின்[தி இந்து,19.06.2016] கீழே இடம்பெற்றுள்ள குறிப்புரையைப் படியுங்கள்.
.
‘பாறையில், பார்ப்பவர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் இயற்கையாக அமைந்துள்ள[து] பெருமாள் திருவுருவம்’ என்கிறார் மகேஷ்குமார் என்னும் அன்பர்.
.
கண்கள் இல்லை; புருவங்களைக் காணோம். உருக்குலைந்த மண்டை; சீரற்ற மூக்கு. இதுதான் பெருமாளின் திருவுருவமா? பாவம் பெருமாள்.
.
காணுகிற பொருளிலெல்லாம் தனக்கு உவப்பானவரின் உருவத்தை ஏற்றிப் பார்ப்பது ஒருவித மன நோய். இந்நோய்க்கு அதீத கடவுள் பக்தியும் ஒரு காரணம்.
.
வானத்தில் மிதக்கும் கருமேகக் சிதறல்களிலும், காரை பெயர்ந்த சுவரில் தென்படும் கோணல்மாணல்களிலும் யானை குதிரை போன்றவற்றின் உருவங்களைப் பொருத்திப் பார்ப்போமே, அது போலத்தான் இதுவும்.
.
வடிவம் சிதைந்த பாறையைப் பெருமாளின் உருவம் என்று நம்பிய மகேஷ், அந்த நம்பிக்கையை ‘தி இந்து’ மூலமாக பிறர் மனங்களிலும் திணிக்க முயன்றிருக்கிறார். மூடநம்பிக்கைத் திணிப்பு.
.
அன்பர் மகேஷ்குமாருக்கு ஒரு வேண்டுகோள்.
.
மீண்டும் ஒருமுறை, ‘நான் ஆறறிவு படைத்த ஒரு மனிதன்’ என்னும் நினைப்புடன் பாறையை உற்றுப் பாருங்கள். பெருமாளுக்குப் பதிலாக உயரமான கற்பாறையைக் காண்பீர்கள்.
.
மகேஷ்குமாருக்கு மட்டுமல்ல, ஏனைய பக்தகோடிகளுக்கும் நாம் சொல்லிக்கொள்ள விரும்புவது…..
.
கல்லை நோக்கும்போது அது கல் என்பதை உணருங்கள். மண்ணை மண்ணாக உணருங்கள்.
.
கண்ணில் காணும் பொருளையெல்லாம் இம்மாதிரி கடவுளாக உருவகம் செய்யும் பழக்கத்தை விட்டொழியுங்கள்.
.
இது உங்களின் அறிவு வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் என்பதை நம்புங்கள்; உங்களின் அதீத கடவுள் பக்தி மிகவும் ஆபத்தானது என்பதையும் ஆழ்மனதில் பதித்திடுங்கள்.
.
நன்றி.
.
‘பசி’பரமசிவம்
Posted by ‘பசி’பரமசிவம் at 6/19/2016 05:48:00 PM
.
கடவுளின் கடவுள் பிலாக்ஸ்பாட்.
ஆதாரம்: http://kadavulinkadavul blogspo