வெள்ளி, 22 டிசம்பர், 2017

'திருநங்கைகள்'.....சில திகைப்பூட்டும் செய்திகள்!

ஆனந்தவிகடனின் வெளியீடான 'ஜீன் ஆச்சரியம்' வாசித்தவர்கள் இப்பதிவைப் புறக்கணித்திடுக. அந்நூலிலிருந்து கொஞ்சம் தகவல்களைத் திரட்டிப் பதிவாக்கி வெளியிட்டிருக்கிறேன். விகடனுக்கு நன்றி.
லிகள் எனப்படும் திருநங்கைகள், பிறக்கும்போதே ஒருபுறம் ஆணின் விந்தகமும் மறுபுறம் பெண்ணின் அண்டகமும் உடையவர்களாகப் பிறக்கிறார்கள்.

வெளித் தோற்றத்தில், இயல்பான ஆண் அல்லது பெண் உருவத்தில் காணப்பட்டாலும், இவர்களுக்கு ஆண் பெண் ஆகிய இருவகைப் பிறப்பு உறுப்புகளுமே ஓரளவு வளர்ச்சியடைந்த நிலையில் காணப்படும்[விலங்கினங்களில் மிகவும் சகஜமாக[?] இந்த நிலை காணப்படுகிறது. ஊர்வனவற்றுள் மண் புழுக்கள் இப்படிப்பட்ட{True hermaphrodite} இனம்தான். 

இடைப்பட்ட இந்த இனத்தவர்களுக்கு, ஆணுறுப்பும் இரு விதைக்காய்களும் மிகவும் சிறுத்துக் காணப்படும். பெண்ணாக மாற விரும்புவோர், அறுவைச் சிகிச்சை மூலம் இவற்றை முற்றிலும் அகற்றிவிடுகிறார்கள். வலிந்து, பெண்ணுக்கான செக்ஸ் ஹார்மோன்களைச் செலுத்திக்கொள்பவர்களும் உண்டு. இதன் மூலம் இவர்களின் மார்பகம் வளர்ச்சியடைய வாய்ப்புள்ளது.

மேலும் சிலர், பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை நிபுணர்களிடம் சென்று பெண் உறுப்பை உருவாக்கிக்கொள்வதும் உண்டு. ஆனாலும், உள்ளுறுப்பான அண்டகத்தை உருவாக்குவது சாத்தியமில்லை என்கிறார்கள்.

மிக அபூர்வமாக, பெண்ணாகப் பிறந்து பிறகு தாடி - மீசையோடு 'பக்கா'வாக ஆண்களின் தோற்றத்தைப் பெற்றுவிடுபவர்களும் உளர். அட்ரினல் சுரப்பியில் உண்டாகும் கட்டிகளோ அண்டகத்தில் ஏற்படும் கட்டிகளோ பெண் ஹார்மோன்களின் சுரப்பி வற்றிப்போகக் காரணமாக அமைகின்றன. மாறாக, ஆண்ட்ரோஜன்கள் அதிகமாகச் சுரக்க ஆரம்பித்துவிடுவதால் இந்த நிலை ஏற்படுகிறது. முறையாகப் பரிசோதித்து அந்தக் கட்டிகளை அகற்றிவிட்டால் தாடி - மீசையெல்லாம் மாயமாக மறைந்துவிடும். இயல்பான பெண்களாக மாறிவிட வாய்ப்புள்ளது.

மத்திய அமெரிக்காவின் ஒரு மாகாணமான ஒக்லஹாமாவில் ஓர் அழகான குழந்தை பிறந்தது. இது வளர்ந்து, 42 ஆவது வயதில் ஏதோ சிறு பிரச்சினை என்று மருத்துவரிடம் போனாள்[ன்?]. மருத்துவர் பரிசோதித்தபோது பெரிய ஆச்சரியம் காத்திருந்தது.

முழுமையாக வளர்ச்சியடைந்த ஆண், பெண் இரண்டு பேருடைய பிறப்பு உறுப்புகளும் அவளி[னி]டம் காணப்பட்டன. ஒரு பதினைந்து வயதுப் பெண்ணுக்கு இருக்கவேண்டிய மார்பக வளர்ச்சியும் இருந்தது.

இந்த நபரை ஆண் என்பதா, பெண் என்பதா?

இப்படி நேர்வதன் காரணம்.....

செக்ஸ் குரோமோசோம்களில் ஏற்படும் குளறுபடிகள்தான் என்கிறார்கள் விஞ்ஞானிகள். ஆண்களுக்கானது 'xy' குரோமோசோம்கள். மேற்கண்ட அவனு[ளு]க்கு கூடுதலாக x குரோமோசோம் இருந்ததாம். அதாவது, 'xxy' ஆக.

இப்படிக் கூடுதலாக ஒர் 'x' உள்ளவர்களுக்குத் திருமணம் கூடாது என்கிறார்கள். மனநலக் காப்பகங்களில் இருக்கும் மன நோயாளிகளில் பெரும்பாலானவர்கள் இத்தகைய பாதிப்புக்கு உள்ளானவர்கள்தானாம்.

உயரமாக இருக்கும் ஆண் குற்றவாளிகளின் செக்ஸ் குரோமோசோம்களை ஆராய்ந்ததில் இவர்களில் பெரும்பான்மையோருக்கு 'xyy' இருந்ததாம். கூடுதலாக ஒரு 'y' குரோமோசோம்.

செக்ஸ் குரோமோசோம்களில் இப்படி இன்னும் நிறைக் குளறுபடிகள் உள்ளனவாம்.

சில பெண்கள் 'எடுப்பான' தோற்றத்துடன் காணப்படுவார்கள். ஆனால், இவர்களின் உடல் செல்களெங்கும் xx க்குப் பதிலாக xy தான்[ஆண்களின் குரோமோசோம்கள்] காணப்படும்.

இவர்களின் அடிவயிற்றுப் பகுதியின் உள்ளே விந்தகமும் காணப்படும். இதை இவர்கள் குடலிறக்கம் என்று தவறாகப் புரிந்துகொண்டு அறுவைச் சிகிச்சைக்குப் போனால், விந்தகம் இருப்பதை அறிவார்கள். இயல்பாகப் 'பெண்ணுறுப்பு' இருந்தாலும் இவர்களால் கருத்தரிக்க இயலாது.

இவர்கள் எல்லாம் அலிகளா என்றால், இல்லை என்பதே பதில். கரு வளர்ச்சியின்போது ஏற்பட்ட குளறுபடிகளால் பாதிக்கப்பட்டவர்கள் இவர்கள். [இக்குளறுபடிகள் குறித்து இன்னும் சொல்லலாம். பதிவு மிக விரியும் என்பதால் தவிர்க்கப்படுகிறது].

திருநங்கைகள் குறித்து மேலும் கொஞ்சம் செய்திகள்:

இவர்களை இரு வகையினராகப் பிரித்திருக்கிறார்கள்.

முதலாம் வகையினர், பிறக்கும்போதே ஆண்களாகப் பிறந்துவிட்டாலும் சிறு வயது முதலே பெண்களின் உடைகளை அணிவதிலும் பெண்களைப் போல அலங்கரித்துக்கொள்வதிலும் நாட்டம் உடையவர்கள். இவர்களில் பலர் மருத்துவமனைகளுக்குச் சென்று அறுவைச் சிகிச்சை மூலம் ஆணுறுப்பை நீக்கிக்கொள்கிறார்கள். 'டுபாக்கூர்' மருத்துவர்களை நாடிச் சென்று ஆபத்தை விலைகொடுத்து வாங்குபவர்களும் உளர்.

இரண்டாம் வகையினர், பிறக்கும்போது ஆண்களாகப் பிறந்தாலும் மிகச் சிறு வயது முதற்கொண்டு ஆண்களுக்கான செக்ஸ் சுரப்பி சரிவரச் சுரக்காததால் பெண் சாயலுடன் வளர்ந்து பின்னர் [அறுவை இல்லாமலே] முழுமையான திருநங்கைகளாக ஆகிவிடுபவர்கள்.

இந்த இருவகைத் திருநங்கைகளும் அடிப்படையில் ஆண்களே[Biological Males] என்கிறார்கள் அறிவியல் அறிஞர்கள்.

ஆக.....

எல்லாம்வல்ல கடவுளின் படைப்பில்தான் எத்தனை எத்தனை குளறுபடிகள்!!!

["எதை எழுதினாலும் சுத்தி வளைச்சி கடவுளைக் குறை சொல்வதே உனக்கு வழக்கமாப் போச்சு" என்று என்னை ஏசுகிறீர்களா?

என்ன செய்ய, சின்ன வயசிலிருந்தே இப்படியொரு சின்னப்புத்தியோட வளர்ந்துட்டேன்! ஹி...ஹி...ஹி!!]
=====================================================================================