புதன், 3 ஜனவரி, 2018

துக்ளக் குருமூர்த்தியின் குரூர புத்தி!

கீழே, 10.01.2018 'துக்ளக்' இதழில் வெளியான அட்டைப்படக் 'கருத்துப் படத்தைக்[கார்ட்டூன்]' கவனியுங்கள்.
'.....ஆன்மீகம், நேர்மை, ஒழுக்கத்திற்கு இங்கு இடமில்லை. இது பெரியார் மண்' என்று திராவிடர் கழக வீரமணி அவர்கள் சொல்வதாகச் சொல்கிறது கருத்துப்படம்.

உண்மையில் சொல்பவர்.....?

குறுக்குப் புத்தியும் குரூர புத்தியும் கொண்ட துக்ளக் குருமூர்த்தி.

இறுதி மூச்சு உள்ளவரை, தமிழ் இனத்துக்காகவும், மூடநம்பிக்கை ஒழிப்புக்காகவும் தன்னை அர்ப்பணித்து, நேர்மையுள்ளவராகவும் ஒழுக்கசீலராகவும் வாழ்ந்து காட்டிய பகுத்தறிவுப் பகலவன் பெரியாரை இகழ்ந்து பேசிக் குதூகலிக்கும் துணிவை இந்த ஆள் பெற்றது எப்படி?

"பெரியாரைச் செருப்பால் அடிப்பேன்" என்று ஒரு 'பொறுக்கி' சொன்னானே, அப்போதே அவனுக்கும் அவன் போன்றவர்களுக்கும் உரிய பதிலடி தராமல் தமிழர்கள் வேடிக்கை பார்த்ததே காரணம் ஆகும்.

தமிழர்கள் நன்றியுணர்ச்சி உள்ளவர்கள். பெரியார் தம் இனத்துக்கு ஆற்றிய தொண்டினை என்றென்றும் மறவாதவர்கள்.

பெரியாரை அவமதிக்கும் துக்ளக் குருமூர்த்தியின் இந்த இழி செயல் கடும் கண்டனத்திற்குரியது.

பெரியாரைப் போற்றும் தன்மானத் தமிழர்களும், அவர் பெயரில் கட்சிகள் நடத்தும் தோழர்களும் ஆற்றவிருக்கும் எதிர்வினை என்ன?
_____________________________________________________________________________________