செவ்வாய், 6 மார்ச், 2018

நான் ஒரு 'ஞான சூன்யன்'!!!

எத்தனை சிந்தித்தாலும்.....

அண்டவெளியிலுள்ள கோள்களும் உயிர்களும் ஏன் தோன்றியன, அல்லது தோற்றுவிக்கப்பட்டன என்னும் கேள்விக்கு விடை தெரியவில்லை 

இவை அனைத்தும் எப்போது தோன்றின, அல்லது தோற்றுவிக்கப்பட்டன என்னும் கேள்விக்கும் பதில் அறிவது சாத்தியப்படவில்லை.

இவை எப்படித் தோன்றின, அல்லது தோற்றுவிக்கப்பட்டன என்னும் வினாவுக்கும் விடை காண இயலாமல் மூளை சோர்ந்துபோகிறது.

இடையிடையே, கோடானுகோடி கோடி கோடி உயிர்களுக்கிடையே 'நான்' ஒருவன் ஏன் பிறந்தேன் என்னும் கேள்வியும் என்னை மருட்டுகிறது.

ஞானிகள் மகான்கள் என்றெல்லாம் போற்றப்படுபவர்கள், கடவுள், பாவபுண்ணியம், மறுபிறப்பு, சொர்க்கம் நரகம் என்று எதையெதையோ சொல்லியிருக்கிறார்கள். இவற்றில் 'எது உண்மை? எது பொய்?' என்றெல்லாம் உள்மனதில் எழும் கேள்விகளுக்கு இந்நாள்வரை பதில் கிடைத்திடவில்லை.

'பிறவி' என்னும் நிகழ்வுடன் 'சாவும்' நேர்கிறதே, அது ஏன் என்னும் கேள்வி  அவ்வப்போது வாட்டி வதைக்கிறது.

'செத்த பின்னர் என்ன ஆகிறோம்?' என்னும் கேள்வி என்னுள் தீராத கவலையைப் பதிவு செய்கிறது.

இவற்றோடு, இவை போன்ற விடை அறிய இயலாத பல கேள்விகளுக்கு நான் விடை காண்பது சாத்தியமே இல்லை என்பது புரிந்ததால்.....

என் சுயசரிதையில்['என்னைத் தெரியுமா?'], 'அறிவுஜீவி' என்று  என்னைப் பற்றி நான் குறிப்பிட்டிருப்பதை நினைக்கும்போதெல்லாம் வாய்விட்டுச் சிரிக்கிறேன்; இப்போதுகூட, சிரித்துக்கொண்டுதான் இருக்கிறேன்!
=================================================================================