எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

திங்கள், 10 நவம்பர், 2025

உலக அளவில் அறிவுஜீவிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு! இந்தியாவில்?

மூடநம்பிக்கை வளர்த்துப் பிழைப்பு நடத்தும் அரசியல்வாதிகளின்[குறிப்பாகச் சங்கிகள் எனப்படும் ‘பாஜக’வினர்]  அடாவடித்தனங்களால், இருப்பில் உள்ள கொஞ்சம் பகுத்தறிவையும் இந்த நாட்டு மக்கள் இழந்துவரும் நிலையில், ஐஸ்லாந்து, பிரான்ஸ், ஆஸ்டிரியா, ஃபின்லாண்டு, அமெரிக்கா, கனடா, டென்மார்க், நார்வே, ஜப்பான், சீனா, ஃபிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் மதநம்பிக்கை இல்லாத அறிவுஜீவிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது என்கிறது கீழ்க்காணும் காணொலிச் செய்தி.

ஆதிக்கம் செலுத்தும் சங்கிக் கூட்டத்தை ஆட்சிப் பீடத்திலிருந்து அகற்றினால் மட்டுமே, அறிவுடையார் எண்ணிக்கை அதிகரிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பெறுவது சாத்தியம் ஆகும்.

காணொலி[விரிவான விளக்கங்கள் எளிய ஆங்கிலத்தில்] :