நான் கவிதைகளை விரும்பிப் படிப்பதில்லை. படித்தது பிடித்துவிட்டால் எளிதில் மறப்பதும் இல்லை. படியுங்கள்; நண்பர்களையும் படிக்கத் தூண்டுங்கள்.
புரியாத மந்திரத்திற்கு
வேண்டிக்கொண்டே நூறு ரூபாயைத்
தட்டில் காணிக்கை செலுத்திய
வெள்ளை வேட்டி
வெளியே வருகையில்.....
'அய்யா......சாமீ
தர்மம் பண்ணுங்கய்யா'வின்
விரித்த துணியில்
சட்டைப்பையில் நோண்டியெடுத்து
ஒரு ரூபாயைப் போட்டுவிட்டு நகர்ந்தபோது
வெளிக்கோபுர மாடமெங்கும்
எதிரொலித்தது
கால் வீங்கிக்கிடந்த
அய்யா.....சாமீயின் குரல்.....
''நீங்க நல்லாருக்கணும் சாமி''
=============================================
கவிதையைப் படைத்த செ.செந்தில்மோகன் அவர்களுக்கும், பிரசுரித்த 'குங்குமம்'[18.05.2018] வார இதழுக்கு என் நன்றியும் பாராட்டுகளும்!

