பக்கங்கள்
புதன், 8 மே, 2024
செவ்வாய், 7 மே, 2024
அற்ப ஆயுள்! அதிகரிக்கும் சுகபோகங்கள்!!
இன்று விதம் விதமாய்க் கைபேசியும்
பிறவும்.
இன்னும்,
கண்டு களிக்கக் காணொலிகளும்
தொ.கா.சாதனங்களும்.
மேலும்,
உண்டு மகிழச் சுவை சுவையாய்ப்
புதிய உணவு வகைகள்;
உடலுறவுச் சுகத்தை நீட்டிக்கப்
புதிய புதிய மாத்திரைகள்.
இப்படி, இன்னும் எப்படியெல்லாமோ
சுகபோக வசதிகள் இருந்தும்
அத்தனைச் சுகங்களையும் நோயின்றி
அனுபவிக்க
இப்போதுள்ள ஆயுள் போதாதே!
அறிவியலாளர்கள் சிந்திப்பார்களா?
அறிவாளர்களும்தான்.
‘யூடியூப்’ காணொலி[குறைப் பிரசவம்]:
திங்கள், 6 மே, 2024
மோடியின் 100% வெற்றிக்கு உதவுபவை பாலராமன் பாதங்களா, வாக்காளர்களின் திருவடிகளா?
நடைபெற்றுக்கொண்டிருக்கும் தேர்தலில், மோடியின் ‘பாஜக’ வேட்பாளர்கள் அதிக அளவில் தேர்வு செய்யப்பட்டு அவர் மீண்டும் பிரதமராகப் பதவி ஏற்பாரோ அல்லவோ, அவர் மட்டுமேனும் வெற்றி பெறுவது மிக அவசியம். இல்லையேல், வெகுவாக மனம் உடைந்துபோவார் என்பது உறுதி.
பரப்புரையில் பல்வேறு உத்திகளையும் உபாயங்களையும் கையாண்டும்கூட மீண்டும் ஆட்சிக்கட்டிலைக் கைப்பற்றுவதில் அவர் முழு நம்பிக்கை பெறவில்லை என்பதை, தான் முன்னின்று கட்டிமுடித்த அயோத்திப் பாலராமர் கோயிலுக்குச் சென்று, வேதமந்திரங்கள் முழங்க, நெடுஞ்சாண்கிடையாகச் சிலையின் முன்னால் விழுந்து வழிபட்டதன் மூலம் அறிய இயலுகிறது.
தேர்தலில் வெற்றியைத் தழுவினால், அதற்குப் பாலராமனின் கருணை என்று சொல்லிப் பெருமிதப்படுவார்.
தோற்றுவிட்டாலோ மௌனம் சாதிப்பார்; அல்லது, பழம்பிறப்புகளில் தான் செய்த பாவங்கள் காரணம் என்று சொல்லித் தன்னைத்தானே தேற்றிக்கொள்வார்.
நேர்ந்துகொண்டு, நினைத்த காரியம் நிறைவேறினால் அது கடவுளின் கருணை என்பதும், விளைவு நேர்மாறானது என்றால் பக்தர்கள் தாமே தம் மீது பழி சுமத்திக்கொள்வதும் வழக்கமான ஒன்றுதான். மோடியும் இதற்கு விதிவிலக்கானவர் அல்ல.
எனவே, பாலராமனைச் சரணடைந்ததால், அவர் வெற்றிக் கனியைப் பறிப்பார் என்று உறுதிபடச் சொல்ல இயலாது.
அது 100% சாத்தியப்படுவதற்கான ஒரே வழி.....
இனியும் பாலராமன் சிலை முன்பாகவோ, வேறு சாமிகளின் சிலைகளின் முன்பாகவோ நீட்டிப் படுத்துப் பிரார்த்தனை செய்வதைத் தவிர்த்து, தான் போட்டியிடும் தொகுதி வாக்காளர்கள் அத்தனைப் பேரின் திருவடிகளிலும்[சற்றே குறைந்தாலும் பாதகமில்லை] விழுந்து கும்பிடுவது மிகவும் பலன் தருவதாக அமையும்.
செய்வாரா மோடி?
செய்தல் வேண்டும் என்பது நம் விருப்பம்!
* * * * *
வாய்விட்டுச் சிரிக்கலாம்... மோடி அனுமதித்தால்!
உயிர் வாழ்வதற்குப் போதுமான அளவு உணவு தேவை. சிறப்பாகச் செயல்படுவதற்கு நல்ல உடலமைப்பும், ஆழ்ந்து சிந்திப்பதற்கு முழு வளர்ச்சி பெற்ற மூளையும் தேவை.
மூளை இல்லையேல் சிந்திப்பது மட்டுமல்ல, உடம்பின் இயக்கம் முழுமையாகத் தடைப்படும்.
மனிதர்கள் என்றில்லை, கோடானுகோடி உயிர்களின் இயக்கத்திற்கும் மூளையே முழு ஆதாரம் என்று சொல்லலாம்[விதிவிலக்குகள் இருக்கக்கூடும்].
பிரபஞ்சத்திலுள்ள பொருள்களையும் உயிர்களையும் கடவுள்தான் படைத்தார் என்று கொண்டாலும், மனிதர் உட்பட ஒவ்வோர் உயிரும் தன்னிச்சையாகச் செயல்படும் வகையில்தான் அவர் படைத்திருத்தல் வேண்டும்.
குறைந்தபட்ச உணவுகூட இல்லாமல் நாம் பட்டினி கிடந்தால், சிந்திப்பது உட்பட நாம் இயங்குவது முற்றிலுமாய்த் தடைப்படுமே தவிர, “ஐயோ பாவம்” என்று இரக்கப்பட்டு, ஆவி வடிவில் அல்லது கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஓர் உருவில் நம் உடம்பில் ஒட்டிக்கொண்டு, நாம் உண்ணும்போதும் உறங்கும்போதும் உடலுறவு கொள்ளும்போதும்[ஹி... ஹி... ஹி!!!] கடவுள் நம்மைக் கண்காணித்து இயக்குவதெல்லாம் இல்லை; இல்லவே இல்லை.
உண்மை இதுவாக இருக்க, நம் பிரதமர் மோடி அவர்கள், பிரபல நாளேடான ‘ஈநாடு’ பத்திரிகைக்கு அளித்த சிறப்புப் பேட்டியில், உலகின் சூப்பர் பவராக இந்தியாவை மாற்ற ஏதோ ஒரு தெய்வீகச் சக்தி தன்னை இயக்குவதை அடிக்கடி உணர்வதாகச் சொல்லியிருக்கிறார்.
சிரிக்கலாம்... சிரிக்கலாம்... வாய்விட்டுச் சிரித்துக்கொண்டே இருக்கலாம்!
* * * * *ஞாயிறு, 5 மே, 2024
தந்தை ஹெச்.டி.ரேவண்ணா மகன் பிரஜ்வல் ரேவண்ணாவுக்குச் செய்த துரோகம்!!!
மிகவும் பாதுகாப்பான இடம் என்று நம்பித் தன் தந்தை தேவகௌடா வீட்டில் அடைக்கலமாகியிருந்த ஹெச்,டி,ரேவண்ணா[வன்புணர்வு வழக்குப் புகழ் பிரஜ்வல் ரேவண்ணாவின் தந்தை & ஹோலேநரசிபூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்] கைது செய்யப்பட்டார்[தினமலர்] என்பது ஊடகச் செய்தி.
ஜோதிடத்தில் நம்பிக்கையுள்ள ஹெச்.டி.ரேவண்ணா தன்னைக் கைது செய்ய வந்த போலீசாரைக் காத்திருக்கச் செய்துவிட்டு ஜோதிடரின் ஆலோசனைப்படி 6.50 மணிக்குப் பின்னர் போலீசாருடன் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கக் கூடுதல் செய்தி.
மேற்கொள்ளும் செயல் நலம் பயப்பதாக இருத்தல் வேண்டும் என்பதற்காகவே, ஜோதிடர்களை அணுகி நல்ல நேரம் பார்த்து நடவடிக்கையைத் தொடங்குகிறார்கள் நம்மில் பெரும்பாலோர்.
குற்றச் செயலில்[மகனுக்கு உடந்தையாக] ஈடுபட்டதாகக் கருதப்படும் ஹெச்.டி.ரேவண்ணா விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படும்போது நல்ல நேரம் பார்த்தது, அதன் மூலம் செய்த குற்றத்திற்கான தண்டனையிலிருந்து தப்புவதற்காகத்தான்.
ஆக, நல்லவை என்றில்லாமல், கெட்ட செயல்களில் ஈடுபடும்போதும் நல்ல நேரம் பார்த்து அவற்றைச் செய்தால், அவற்றின் விளைவு நன்மை பயப்பதாக அமையும் என்பது அவர் நம்பிக்கை..
ஆகவே, தன் மகன் பிரஜ்வல் ரேவண்ணாவை[ஹாசன் தொகுதி எம்பி. > 500க்கும் மேற்பட்ட பெண்களை வன்புணர்வு செய்து சாதனை நிகழ்த்தியவர் & 2,976 ஆபாச வீடியோக்களைக் கைவசம் வைத்திருந்தவர்] ஜெர்மன் நாட்டுக்குத் தப்பிச் செல்ல அனுமிதித்திருத்தல் கூடாது.
மாறாக, காவல்துறையினர் பிரஜ்வல் ரேவண்ணாவைக் கைது செய்ய வரும்போது, அவர்களைத் தாஜா செய்து சற்று நேரம் காத்திருக்கச் செய்துவிட்டு, ஜோதிடரின் ஆலோசனையைப் பெற்று, நல்ல நேரத்தில் விசாரணைக்காகப் போலீசாருடன் அவரை அனுப்பவது நல்லது. ஹெச்.டி.ரேவண்ணா இதைச் செய்திருக்கலாம்.
செய்யத் தவறியதன் மூலம், பெற்ற மகன் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு மாபெரும் துரோகத்தை இழைத்துவிட்டார், முன்னாள் பிரதமர் தேவகௌடாவின் மகனான ஹெச்.டி.ரேவண்ணா!
* * * * *
சனி, 4 மே, 2024
பெரும் பேரழிவு காத்திருக்கிறது! அடங்கி அரவணைத்து வாழ்வீர்!!!
பிரிஸ்டல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கணினி உருவகப்படுத்துதல் தொழில்நுட்பத்தின் மூலம் ஆராய்ச்சி ஒன்றை மேற்கொண்டனர். ஆய்வில், 250 மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு பூமியில் பேரழிவு ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கண்டுபிடித்துள்ளனர்.
ஆய்வுக் குழுவின் தலைவர் அலெக்சாண்டர் ஃபார்ன்ஸ்வொர்த் கூறுகையில்.....
//அப்போது பூமியின் வெப்பநிலை 70 டிகிரி செல்ஸியஸை எட்டும். உலகில் கார்பன் டை ஆக்சைடின் அளவு இப்போது இருப்பதைவிட இரண்டு மடங்கு அதிகமாகும்.
பூமி முதலில் சூடாகவும், பின்னர் வறண்டதாகவும், இறுதியாக வாழத் தகுதியற்றதாகவும் மாறும். வெப்பம் தாங்காமல் எரிமலைகள் வெடித்துச் சிதறும். பூமியின் பெரும் பகுதி எரிமலைக் குழம்புகளால் மூடப்படும்.
மிக மிகக் கடும் வெப்பம் காரணமாக. பூமியில் மனிதன் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களும் அழிந்துவிடும்.
66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்புகூட இதேபோல ஒரு பெரும் பேரழிவு நிகழ்ந்திருக்கலாம்[டைனோசர்கள் அந்தக் காலக்கட்டத்தில்தான் அழிந்திருக்கக்கூடும்]// என்கிறார்.
கடும் எச்சரிக்கை!
250 மில்லியன் ஆண்டுகளுக்கு அப்புறம்தானே இந்தப் பேரழிவு நிகழப்போகிறது. இப்போது இருப்பவர்களில் எவரும் அப்போதுவரை வாழப்போவதில்லை. இது குறித்து நாம் கவலைப்பட ஏதுமில்லை” என்றெண்ணி இச்செய்தியை எவரும் அலட்சியப்படுத்த வேண்டாம்.
காரணம்:
நம் புற உடம்புதான் அழிகிறதே தவிர, அக உடம்பிலுள்ள ஆன்மா அழிவதில்லை. எத்தனை எத்தனை எத்தனையோ மில்லியன் ஆண்டுகளுக்குப் பின்னரும் அது அப்போது வாழ்கிற மனித உடம்புக்குள் இருந்துகொண்டுதான் இருக்கும்.
மிகை வெப்பத்தால் ஒட்டுமொத்த உலகமும் பற்றி எரியும்போது, அதில் சிக்கி நம் உடம்பு அழிவதோடு ஆன்மாவும் அளப்பரிய வேதனையை அனுபவிக்கும் என்பது உறுதி.
ஆகவே மனிதர்களே[வாழ்ந்துகொண்டிருப்பவர்கள்] மனமறியத் தப்புத்தண்டாவில் ஈடுபடாமல் பரம யோக்கியராய் வாழ்ந்திடுவீர்.
அப்படி வாழ்ந்தால்.....
அடுத்தடுத்தப் பிறவிகளை ஒட்டுமொத்தமாய் அறுத்தெறிந்து, முழு முதல் கடவுளின் திருவடிகளில் அடைக்கலம் ஆவோம்[ஹி... ஹி... ஹி!!!]. 250 மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் பூமியில் பிறக்கும் அவல நிலை அறவே இல்லாமல்போவதால், பூமியோடு சேர்த்து ஊழித் தீயில் சிக்கித் துடிதுடித்துச் சாகும் பரிதாபத்திற்கு நாம் ஆளாகமாட்டோம் என்பதை மனதின் அடிஆழத்தில் பதிய வைப்பீர்!
நல்லவராக வாழ்வீர்! அனைவரையும் அரவணைத்து வாழ்வீர்!!
https://ibctamilnadu.com/article/earth-will-be-destroyed-due-to-carbon-dioxide-1714724476
அட, சே... வலைப்பக்கம்! ஐயகோ ‘யூடியூப்’!!
'நான்' வெகு சாமானியன்;
என்பதை அறிந்திருந்தும்
உன்னால் சாதிக்க முடிந்தது
அது மட்டுமே'' என்று
அதிகாரத்தை
வெள்ளி, 3 மே, 2024
ரேவண்ணா சல்லாபம்! மோடி மௌனம் சாதிப்பது ஏன்?!
“தேவேகவுடா பேரன் ரேவண்ணா 500க்கும் மேற்பட்ட[காணொலி காண்க] பெண்களின் கற்பைச் சூறையாடி உள்ளார்; வீடியோக்களும் எடுத்து வைத்துள்ளார்[அவ்வப்போது அவற்றைப் பார்த்து ரசித்து, அது விசயத்தில் உத்வேகம் பெறுவதற்காக]. இது விசயத்தில் இந்நாள்வரை பிரதமர் மோடி மௌனம் சாதிப்பது ஏன்?” என்று கர்னாடகாவில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டபோது ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார் என்பது செய்தி[மாலைமலர்>3 மே 2024 11:39 AM].
கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி ஆழ்ந்து சிந்திக்கத் தெரியாத சின்னப் பையனாகவே இருக்கிறார் என்பது நம் எண்ணம்.
சிந்தித்திருந்தால்.....
சிலர், ரெண்டு மூனு பெண்டாட்டி கட்டி அதுகளைச் சமாளிக்க முடியாமல், சன்னியாசி ஆகி, ஆசிரமம் அமைத்துப் பக்தர்களுக்கு ஆசீர்வாதம் வழங்குவதையே தொழிலாகக்கொள்ளும் நிலையில்.....
ரேவண்ணா[பிரஜ்வல் ரேவண்ணா (பிறப்பு: ஆகஸ்ட் 5, 1990) இத்தனை இளம் வயதில்[33] 500க்கும் மேற்பட்ட இளசுகளை அனுபவித்தார் என்பது உலக அளவிலான ஒரு சாதனை ஆகும்[இணையத்தில் தேடியதில் இப்படியொரு சாதனை வேறெங்கும் நிகழ்த்தப்பட்டதாகத் தெரியவில்லை].
புணர்ச்சி சுகத்தில் ஈடுபடும்போதே மறவாமல் ‘கேமரா செட் செய்து’ அதை அவர் காணொலிகள் ஆக்கியிருப்பதை இமாலய சாதனை என்றும் சொல்லலாம்.
இப்படியொரு அரிதான சாதனை நிகழ்த்திய இந்தியக் குடிமகனான ரேவண்ணாவைப் பாராட்டி, விருது வழங்கிச் சிறப்பிக்க வேண்டும் என்பது நம் பிரதமர் மோடியின் திட்டமாக இருக்கலாம்.
விருது வழங்கும் நிகழ்வை ஒட்டுமொத்த உலகமும் கண்டு வியக்கும் வகையில் நடத்துவது பற்றி இடையறாது சிந்தித்துக்கொண்டிருப்பதே மோடி மௌனம் சுமந்திருப்பதற்கான காரணம் என்பது ராகுலுக்குத் தெரிந்திருக்கவில்லை.
தெரிந்திருந்தால் விழாவை வெகு சிறப்பாக நடத்துவது குறித்துத் தன் மேலான ஆலோசனைகளை அவர் வழங்கியிருப்பார்.
இனியேனும், மோடி மீது குற்றம் சுமத்துவதைத் தவிர்த்து, ரேவண்ணாவிற்கான விருது வழங்கும் விழாவில் ராகுல் தவறாமல் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும் என்பது நம் விருப்பம்.
* * * * *
வியாழன், 2 மே, 2024
‘பாஜக’ செத்துக்கொண்டிருக்க மோடி அழுதுகொண்டிருக்கிறார்!!!
ஆமதாபாத்தில்[குஜராத்] நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில், ''பலவீனமடைந்துவரும் காங்கிரஸ் செத்துக் கொண்டிருக்கிறது[Dying], அங்கே பாகிஸ்தான் அழுதுகொண்டிருக்கிறது[Crying]. பாகிஸ்தான் தலைவர்கள் காங்கிரசுக்காகப் பிரார்த்தனை செய்கிறார்கள். அவர்கள் ராகுலைப் பிரதமராக்கத் துடிக்கின்றனர்'' என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்[சில மணி நேரங்களுக்கு முன்பு> தினமலர்].
பரப்புரையில், ‘..... பாகிஸ்தான் தலைவர்கள் ராகுலைப் பிரதமராக்கத் துடிக்கிறார்கள்’, அவர்கள் அழுதுகொண்டிருக்கிறார்கள்[Crying] என்றெல்லாம் குறிப்பிட்டிருப்பது, அவர்கள் நம் பரம்பரை எதிரிகள் என்பதால். அது நமக்கு ஒரு பொருட்டல்ல.
‘காங்கிரஸ் செத்துக்கொண்டிருக்கிறது[காணொலி காண்க] என்று தோல்வி பயத்தில் தன் உள்ளக் குமுறலைக் கக்கியிருப்பதுதான் மோடி மீதான நமக்குள்ள வெறுப்பை அதிகரித்திருக்கிறது.
காங்கிரஸ் 100% தோல்வியைச் சந்திக்கக் காத்திருக்கிறது என்று பேசியிருக்கலாம். ‘செத்துக்கொண்டிருக்கிறது’ என்பது பிரதமராகவும் ஒரு பெரிய கட்சியின் அதிபதியாகவும் இருப்பவரின் மதிப்பைத் தாழ்த்தும் செயலாகும்.
குறைந்தபட்ச நாகரிகம்கூடத் தெரியாதவர் இந்த நாட்டின் பிரதமராக இருந்ததும் இருந்துகொண்டிருப்பதும் மிகப் பெரிய அவமானம்.
தொடர்ந்து இவ்வாறெல்லாம் அநாகரிகமாக இவர் பேசுவாரேயானால், தேர்தலில் தோல்வியைச் சந்திப்பது மட்டுமல்ல, காலப்போக்கில் இவர் கட்சி காணாமல் போகும் என்பது உறுதி.
‘காணாமல் போகும்’ என்று நாம் குறிப்பிட்டது நம் இனப் பண்பாடு கருதி.
நாகரிகம், பண்பாடு என்றிவற்றைப் புறம் தள்ளி, மோடியின் அநாகரிக உரைக்கு நாம் தரும் பதிலடி.....
“பாஜக செத்துக்கொண்டிருக்கிறது! மோடி அழுதுகொண்டிருக்கிறார்” என்பதே!
மோடி மீண்டும் இந்த நாட்டின் பிரதமராக[நீடிக்க] ஆசைப்பட்டால், அதற்குரிய தகுதியை அவர் வளர்த்துக்கொள்ள மிக மிக மிகப் பல ஆண்டுகள் ஆகலாம்!
காணொலி:
* * * * *
637 ஒளியாண்டுத் தொலைவில் ‘ஒளி வளையங்கள்[glory]'... அசத்தும் அறிவியலாளர்கள்!!!
வானவில்?
மேகங்களில் உள்ள நீர்த்துளிகளுக்கு இடையே, அவற்றின் குறுகலான இடுக்குகளில் ஒளி கடந்து செல்லும் போது, வளையம் போன்ற வடிவத்தில் காட்சியளிக்கிற அதனை ‘வானவில்’ என்கிறார்கள்[இன்னும் தெளிவான விளக்கம் தேவை]].
அண்டவெளியில் உள்ள நம் சூரியக் குடும்பத்திற்குள்[சூரியனும், கோள்கள்களும்[8?], மில்லியன் கணக்கான நட்சத்திரங்கள் எனப்படும் விண்மீன்களும், விஞ்ஞானிகளால் கண்டறியப்படாத ‘ஏதோ’க்களும் உள்ளடங்கியது. அண்டவெளியில் ஐந்து முதல் ஏழு கோள்களை உள்ளடக்கிய சூரியக் குடும்பம் ஒன்றை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர் என்பது பழைய செய்தி] அவ்வப்போது காணப்படுவது இந்த வானவில்.
நம் சூரியக் குடும்பத்தில் உள்ள பூமியிலிருந்து 637 ஒளியாண்டுத்[//ஒளி ஓர் ஆண்டில் சென்றடையும் தூரம் ஒரு ஒளி ஆண்டு. ஆகவே, இது காலத்தின் அளவு கிடையாது, தூரத்தின் அளவாகும். ஒரு நொடியில் ஒளியானது சுமார் மூன்று லட்சம் கிலோமீட்டர் செல்லும். ஆம் மூன்று லட்சம்!!!//] தொலைவில்[சூரியக் குடும்பதிற்கு அப்பால்] ஏதோ ஒரு கோளிலிருந்து[WASP-76b] வானவில் போன்ற செறிவான ஒளி வளையங்களை[மகிமை>rainbow-like ‘glory’ என்கிறார்கள்] முதன்முறையாக அறிவியலாளர்கள் கண்டறிந்தார்களாம்.
இவை ஒரே மாதிரியானவை; இதுவரை அறியப்படாத பொருளால் ஆன மேகங்களில் ஒளி பிரதிபலிக்கும்போது தோன்றுபவை என்கிறார்கள்[இதற்கு மேலும் அவர்கள் சொல்வதைப் புரிந்துகொள்ள இந்தப் பிறவி போதாது அடியேனுக்கு. ஹி... ஹி... ஹி!!!] அவர்கள்.
எது எப்படியோ, நம்மைப் பிரமிப்புக்கு உள்ளாக்கும் விரிந்து பரந்து கிடக்கும் அண்டவெளியிலுள்ள சூரியக் குடும்பத்திற்கு வெளியே இதைப் போல பல கலப்பினத் தொகுப்புகள்[குடும்பங்கள்?] உள்ளன என்றும், அவை எவரும் அறிந்திடாத புதிர்களையும் மர்மங்களையும் உள்ளடக்கியவை என்றும் அந்த அறிஞர்கள் கூறுகிறார்கள்.
அவர்கள் அதி புத்திசாலிகள்!
அவர்களை வாழ்த்துவதற்கு நமக்குப் போதிய அடிப்படை அறிவியல் அறிவு இல்லை எனினும் வாழ்த்துவோம்.
இப்போதைக்கு இல்லை என்றாலும், இம்மாதிரியான ஆராய்ச்சிகள் எதிர்காலத்திலேனும் மனித இனத்துக்குப் பயன் தரும் வகையில் அமைந்திடல் வேண்டும் என்பது நம் விருப்பம்.
* * * * *
புதன், 1 மே, 2024
முழுமுதல் முட்டாள் மனிதனா கடவுளா?
கருணை வடிவானவன் என்பதால், தான் படைத்த அனைத்தையும் பாதுகாப்பவனும் அவனே ஆவான்.
எனினும், உயிர்கள் ஒன்றையொன்று தாக்கியும், சித்திரவதை செய்தும் அழித்து உண்ணும் வகையில் படைத்தானே அவன், அது ஏன் என்னும் கேள்விக்கு உண்மையானதும் மிகச் சரியானதுமான பதிலைச் சொன்னவர் எவரும் இல்லை.
மனிதர்களுக்கு மட்டும் ஆறறிவைத் தந்து பாரபட்சம் காட்டியதோடு, அந்த ஆறறிவை முழுக்க முழுக்க நல்ல வழிகளில் பயன்படுத்தாமல் தீமைகள் புரியவும் அனுமதித்தது ஏன் என்று கேட்டால், “அதை அந்தப் பேரறிவாளனே அறிவான்” என்று மழுப்புகிறார்கள் மக்கள் மனங்களில் கடவுள் நம்பிக்கையை விதைத்த அவதாரங்களும் மகான்களும்.
பாவங்கள் செய்வதோடு புண்ணியங்கள் செய்ய வைத்தவனும் அந்தப் பகவானே என்பதோடு, பாவங்கள் தவிர்த்து, அதிக அளவில் புண்ணியங்கள் செய்யத் தூண்டுபவனும் அவனே என்கிறார்கள்.
புண்ணியங்கள் செய்ய நல்ல மனம் வேண்டுமாம்.
அருள்வடிவான அவனின் அடிதொழுது வேண்டினால் நல்ல மனம் வாய்க்கும்; நல்ல மனதுடன் நாளும் அவனை வழிபட்டால், துன்பங்கள் நீங்கிச் சுகமாக வாழலாம். வாழ்ந்து முடித்து வீடுபேறு எய்தலாம்.
-என்றிப்படியாக, கடவுளை வழிபடுவதன் அவசியத்தை காலம் காலமாக வலியுறுத்தியுள்ளார்கள் ஆன்மிக மேதைகளும் அவதாரங்களும்.
படைத்தல், பாதுகாத்தல், பாவபுண்ணியங்கள் செய்யத் தூண்டுதல், அவற்றிற்கான பலன்களை அனுபவிக்கச் செய்தல், அதிக அளவில் நன்மைகள் செய்ய வைத்து வீடுபேற்றை வழங்குதல் என்று மண்ணில் இடம்பெறும் அனைத்து நிகழ்வுகளுக்கும் அவனே பொறுப்பாளானாக இருக்கையில்.....
“கடவுளை நம்பு. நாளும் அவனை வழிபடு” என்று ஆன்மிகவாதிகள் அனுதினமும் அறிவுரை பகர்கிறார்கள்.
மீண்டும் சொல்கிறோம்..... படைத்தல், பாதுகாத்தல், தவறுகள்[குற்றங்கள், பாவபுண்ணியங்கள்] செய்திடத் தூண்டிப் பின் திருத்துதல், முடிவில் தன் திருவடி சேர்த்தல் என்று அனைத்துச் செயல்பாடுகளுக்கும் ஆதாரமாக இருப்பதாகச் சொல்லி, அவனை அனுதினமும் வழிபடத் தூண்டுகிறார்கள் அருளாளர்கள் எனப்படுவோர்.
தூண்டுகிற இவர்களா, இவர்களின் அடாத செயலை[கடவுளை நம்பி வழிபடுவதால் பல தீமைகள் விளைவது கருத்தில் கொள்ளத்தக்கது]க் கண்டுகொள்ளாத கடவுளா[இருந்தால்] முழுமுதல் முட்டாள் யார்?
https://kadavulinkadavul.blogspot.com/2024/05/blog-post.html
செவ்வாய், 30 ஏப்ரல், 2024
விஜயகாந்துக்கு விருது! பாவம் ‘பாஜக’!!
ஒரு நடிகராகவோ, கட்சித் தலைவராகவோ விருது[ஏதோ ஒரு பூஷன்] பெறும் அளவுக்கு வி.காந்த் தகுதி உள்ளவரா என்பதல்ல, அவர் உயிரோடு இல்லாத நிலையில் இதை வழங்குவது தேவையா என்பதே நம் கேள்வி.
விஜயகாந்த் என்றில்லை, வேறு எந்தவொரு பிரபலமானவராயினும் செத்தொழிந்த பிறகு(விருதுக்குத் தகுதி பெற்ற சிலரோ பலரோ உயிருடன் இருக்க) இதை வழங்குவது அர்த்தமற்ற செயல் ஆகும்.
சாதனை நிகழ்த்தியவருக்கு அவர் உயிர் வாழும்போதே விருது வழங்குவது மட்டுமே, அத்துறையில் அவர் மேலும் மேலும் சாதனைகள் நிகழ்த்துவதற்கு ஊக்கம் அளிப்பதாக அமையும்.
ஒருவேளை.....
தேர்தலுக்கு[தமிழ்நாடு] முன்பே ‘பாஜக’ அரசு இந்த அறிவிப்பைச் செய்திருந்தால்.....
தமிழ்நாட்டில் போட்டியிட்ட ‘பாஜக’ வேட்பாளர்களுக்குக் கொஞ்சமே கொஞ்சம் வி.காந்த் ரசிகர்கள் வாக்களித்திருப்பார்கள். அதை அந்த அரசு(பாஜக) செய்யத் தவறிவிட்டது.
பாவம் பாஜக!
ஆனாலும், இந்த அறிவிப்பு, ஜூன் மாதம் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு காணாமல் போகவிருக்கும்[அரசியலில்] ‘தேமுதிக’ தலைவி பிரேமலதா, “நான் பத்ம பூஷன் விருது பெற்ற விஜயகாந்தின் பெண்டாட்டியாக்கும்” என்று சொல்லிக்கொண்டு கொஞ்சம் நாட்களுக்கு அந்தக் கட்சியின்[அதன் ஆயுட்காலம்வரை] தலைவியாகக் காலம் தள்ளலாம்.
எது எப்படியோ, இப்படி இறந்துபோனவர்களுக்கு விருதுகள் வழங்கி, புறக்கணிக்கப்படும் சாதனையாளர்களை மனம் புழுங்க வைக்கும் வேண்டாத வழக்கத்துக்கு நடுவணரசு எப்போது முற்றுப்புள்ளி வைக்கும்?!
ராகுல் காந்தி இந்த நாட்டின் பிரதமர் ஆன பிறகா?
* * * * *
* * * * *
‘பசி’யின் குறுங்காணொலி:
https://youtube.com/shorts/qv1-rWUd-FE?si=835MJhsPl2owvJ7U
திங்கள், 29 ஏப்ரல், 2024
கூட்டுக் குடும்பங்களில் கிழடுகள்[ஆண்] படும்பாடு[நக்கல்&நகைச்சுவை]!!!
இதை என் சொந்தச் ‘சரக்கு’ என்று சொல்லிக்கொள்ளவே ஆசை. மனசாட்சி கடுப்படித்ததால் ‘சுட்டது’ என்பதை வருத்தத்துடன் தெரிவிக்கிறேன்![உள்ளது உள்ளபடியே நகலெடுத்துப் பதிவு செய்திருக்கிறேன்.
ஞாயிறு, 28 ஏப்ரல், 2024
பக்திக்கு விளம்பரம் தேவையா துர்க்கா ஸ்டாலின் அவர்களே?
மதிப்பிற்குரிய தமிழ்நாடு முதல்வர் அவர்களின் துணைவியார் துர்க்கா ஸ்டாலின் அவர்களே,
தங்களுடைய கணவர் ஸ்டாலின் அவர்கள் கடவுள் நம்பிக்கை[தி.மு.க.>‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’] உள்ளவர் என்றாலும், கற்பனையில் உருவாக்கப்பட்ட கண்ட கண்ட சாமிகளைத் தேடிப்போய்க் கும்பிடும் மூடநம்பிக்கைகளுக்கு ஆட்படாதவர்.
நீங்களோ, அவருக்கு நேர்மாறாவனராக இருக்கிறீர்கள்.
நீங்கள் அவ்வப்போது பிரபலமான சாமிகளை மட்டுமல்லாமல், தங்களைக் கடவுளின் அவதாரம் என்று புளுகித் திரியும் ஆசாமிகளையும் தேடிப்போய்த் தரிசனம் செய்கிறீர்கள்[அரிதாக].
இது குறித்து அவ்வப்போது ஊடகங்களில் செய்தி வருவது வழக்கமாக உள்ளது.
கோயில்களுக்குச் செல்வது உங்களின் விருப்பமாக இருப்பினும், உங்களின் இந்தச் செயல்பாடு பகுத்தறிவாளரான உங்களின் கணவர் முதல்வர் ஸ்டாலினுக்கு அவப்பெயர் சேர்ப்பதாக உள்ளது[”ஊருக்குத்தான் உபதேசம் செய்கிறார். குடும்பத்திற்கு அல்ல. இவர் போடுவது பகுத்தறிவு வேடம்” என்று மக்களில் பலரும் பழித்துப் பேசுகிறார்கள்].
அதைத் தவிர்த்திட.....
“இனியேனும் கோயில்களுக்குச் செல்லும்போது, அதை ஊடகக்காரர்கள் புகைப்படம் இணைத்துச் செய்தியாக வெளியிடுவதற்குத் தடை விதியுங்கள். உங்களின் பக்தி உங்களுக்கானதாக மட்டுமே இருக்கட்டும்; ஊர் உலகத்திற்குத் தெரிய வேண்டாம்” என்பது என் வேண்டுகோள்!
* * * * *
துர்க்கா ஸ்டாலின் சாமி தரிசனம் குறித்த அண்மைச் செய்தி:
‘தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் உறவினர்கள் இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்தனர். இதன் பின்னர் அவர்களுக்குக் கோவில் வளாகத்தில் உள்ள ரங்க நாயக்க மண்டபத்தில் வேத ஆசீர்வாதங்கள் முழங்க தீர்த்தம் மற்றும் லட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன’
சனி, 27 ஏப்ரல், 2024
‘இந்தி’த் திணிப்பிலும் சாதனை நிகழ்த்துவாரா மோடிஜி?!?!
திணியும்! இந்தி வெறி தணியும்வரை[என்று தணியும்?] அதைத் திணியும்!!
பதவி இழப்பதற்குள் ‘அந்த’ச் சாதனையை நிகழ்த்துவாரா மோடி?!
தினம் தினம் ஊடகங்களில் வெளியாகும் கருத்துக் கணிப்புகளில் கணிசமானவை, தேர்தலில் வெற்றி பெற்று, மோடி அரியணையைத் தக்கவைப்பார் என்றே அறிவிக்கின்றன.
எனினும், கணிப்புகளில் பெரும்பாலானவை அவர் படுதோல்வி அடைவார் என்றும் பறைசாற்றுகின்றன.
மோடி தொடர்ந்து இந்த நாட்டின் பிரதமராக நீட்டிப்பாரோ அல்லவோ, அது பற்றிக் கிஞ்சித்தும் நமக்குக் கவலையில்லை.
நாம் வெகுவாகக் கவலைப்படுவது.....
உலகின் மிக மிக மிகப் பெரும்பாலான நாடுகளுக்கு, அரசின் சார்பாக அவர் பயணம் மேற்கொண்டுவிட்ட நிலையில், எஞ்சியிருக்கும் சில நாடுகளுக்கும் பயணம்[சுற்றுலா எனினும் ஏற்கத்தக்கதே] செய்து, உலகிலுள்ள அத்தனை நாடுகளுக்கும் சென்று திரும்பிய ஒரே பிரதமராக வரலாற்றுச் சாதனை நிகழ்த்துவார் என்பது நம் பெரு விருப்பமாக இருந்தது; இருக்கிறது.
அவர் இந்தச் சாதனையை நிகழ்த்தி முடிப்பதற்குள், தேர்தல் குறுக்கிட்டுவிட்டது என்பது வருந்தத்தக்க நிகழ்வாகும்; முடிவுகள் அறிவிப்பதிலும் காலதாமதம்[ஒன்றரை மாதம். முடிவு தெரியும்வரை நாம் உயிரோடு இருப்போமா என்று நாடெங்கிலும் பல கிழடுகள் புலம்பிக்கொண்டிருக்கிறார்கள் என்பது புலனாய்வுத்துறை அளித்துள்ள தகவல்] ஏற்படலாம்.
இந்நிலையிலும்.....
அந்தவொரு உலக சாதனையை மோடி நிகழ்த்திக்காட்டுதல் வேண்டும் என்பது நம் ஆசை... பேராசை.
அதற்கான வழி?
தேர்தல் முழுமையாக நடந்து முடிந்து, முடிவுகள் அறிவிக்கப்படுவதைக் காலவரையின்றி ஒத்திவைக்கலாம்[தேர்தல் நடத்த ஒன்றரை மாதம் எடுத்துக்கொண்டது போல. தேர்தல் ஆணையம் நினைத்தால், தோல்வி பயத்தில் ஜனநாயகத்தைச் சீர்குலைக்க எதிர்க் கட்சிகள் சூழ்ச்சி, முஸ்லிம்கள் சதி என்று தள்ளிவைப்புக்கான காரணங்களையும் அடுக்கலாம்]. அந்தக் கால இடைவெளியில், குட்டிக் குட்டி நாடுகள் உட்பட மோடி செல்லாத எஞ்சியுள்ள நாடுகளுக்கும் சென்றுவரலாம்; சாதனையை முழுமை பெறச் செய்யலாம்.
மிக மிகச் சாமானியனான நமது இந்த ஆலோசனையை ஊடகங்கள் பலவும் மோடியின் கவனத்திற்குக் கொண்டுசெல்லுதல் வேண்டும் என்பது நம் பணிவான வேண்டுகோள்.
வாழ்க மோடி! நிகழ்த்துக உலக சாதனை!!