எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

புதன், 6 ஆகஸ்ட், 2025

மோடிஜியின் முதுகில் குத்தியது ரஷ்யா! இனி ‘ஜி’யின் வெளிநாட்டுச் சுற்றுலாக்கள் ரத்து?!

//இரு நாட்டுத் தலைவர்களும்[டிரம்ப் & புடின்] பேசியது குறித்துப் புதினின் உதவியாளர் ‘யுரி உஷாகோவ்’ விளக்கமளித்தார்; “இந்தியா - பாகிஸ்தான் போரை ‘டிரம்ப்’தான் நிறுத்தினார்" என்று தெரிவித்தார்//[செய்தி முழுவதும் வாசிக்க> https://www.dinamani.com/world/2025/Jun/06/trump-halted-india-pakistan-conflict-says-putin-aide]

ண்மையில் இடம்பெற்ற இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சில நாள் மோதலை[குட்டிப் போர் என்றால் மோடிஜி கோபிப்பார்] தான்தான் நிறுத்தியதாக நாட்டாமை ‘டிரம்ப்ஜி’ மிகப் பல முறை[29+?] தற்பெருமை பீத்தியும், நம் தன்மானச் சிங்கமான மோடி அவர்கள், “மோதல் நிறுத்தப்பட்டதற்குப் பாகிஸ்தான்[நம் காலடியில் மண்டியிட்டுக்] கெஞ்சியதே காரணம். இதில் எந்தவொரு தலைவரின் தலையீடும் இல்லை”  என்று கூறிக்கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், மோதல் நிறுத்தப்பட்டதற்குக் காரணம் ‘டிரம்ப்’தான் என்று ‘ரஷ்யா’ வாக்குமூலம் அளித்திருப்பது நம் பிரதமருக்கு[குடிமகனான நமக்கும்தான்] மிகவும் கடுமையான அதிர்ச்சியை, இனி வெளியே[உலக நாடுகள்] தலைகாட்ட இயலாத அளவிற்கு ஏற்படுத்தியிருக்க வாய்ப்புள்ளது.

இதன் காரணமாக நம் நரேந்திர மோடியவர்கள் இனி எந்தவொரு நாட்டிற்கும் சுற்றுப்பயணம் செல்லமாட்டார் என்பது நம்பத்தக்க வட்டாரங்களிலிருந்து வெளியாகியுள்ள செய்தி!

“கொள்கை வேறு கூட்டணி வேறு” -சொல்லும் அரசியல்வாதி நம்பர் 1 அயோக்கியன்!!!

“கொள்கை வேறு கூட்டணி வேறு என்று பரப்புரைக் கூட்டம் ஒன்றில் பேசியிருக்கிறார் எடப்பாடியார்['சன்' தொ.கா. செய்தி> காலை 06.50].

‘பாஜக’வின் இந்த ஆயுட்காலக் கொத்தடிமை மட்டுமல்ல, சுயநல அரசியல் செய்யும் அரசியல்வாதிகள் இப்படிப் பேசுவது வழக்கமாகிவிட்ட ஒன்று.

அவன்கள் தேர்தலில் வென்று ஆட்சிபீடம் ஏறி, ஊழல்களில் ஊறித் திளைத்துக் கோடி கோடியாய்க் கொள்ளையடிப்பதற்கென்றே[அதை வைத்து மாற்றுக் கட்சிக்காரர்களை விலைக்கு வாங்குவதும், கொத்தடிமைகளின் எண்ணிகையை அதிகரிப்பதும், அதிகாரிகளுக்குப் பங்கு கொடுத்துத் தங்களின் விருப்பம்போல் ஆட்டிப்படைப்பதும் வழக்கம்] அரசியல் செய்பவன்கள். இவன்களோ, மக்களுக்குத் தொண்டு செய்வதே தங்கள் லட்சியம் என்பவன்கள், பதவி பறிபோன நிலையில்.

இவன்கள் தங்களைத் தன்மானத் தமிழர்கள் என்று பீற்றிக்கொள்பவன்கள். அவன்கள் தமிழர்கள் என்றில்லாமல், இந்த நாட்டிலுள்ள அனைத்து இனத்தவரையும் ‘இந்தி’யனுக்கு அடிமைகளாக்கத் துடிப்பவன்கள்.

இவன்கள் தங்களின் மொழி வளர்ந்தால் போதும் என்று நினைப்பவன்கள். அவன்களோ இந்த நாட்டில் மட்டுமல்லாமல் உலகெங்கும் தங்களின் மொழி[இந்தி] கோலோச்ச வேண்டும் என்று கனவு காண்பவன்கள்.

அவன்கள் ஆண்டான்களாகவே இருந்து பதவி சுகம் அனுபவிப்பவன்கள். இவன்கள் கொண்ட கொள்கைக்காக எந்தவொரு தியாகமும் செய்யத் தயார் என்று நாளும் முழங்கிக்கொண்டிருப்பவன்கள்.

இவன்கள் தென் துருவம் என்றால் அவன்கள் வடதுருவத்தவன்கள்.

இவை மேற்கண்ட இருவன்களுக்கும் இடையே உள்ள சில[பல உள்ளன] வேறுபாடுகள் மட்டுமே[நல்ல கொள்கைகள் இல்லாத இந்தச் சுயநலக் கும்பல்கள் கூட்டணி அமைத்து வெற்றிபெற்றால் சமுதாயத்திற்குப் பெரும் கேடுகளே விளையும்].

இந்த இரு இவன்களும் “கொள்கை வேறு கூட்டணி வேறு” என்று வாய் கிழியப் பேசித் திரிவது யாரை முட்டாளாக்க?

வேறு யாரை, சிந்திக்கும் அறிவை இவன்கள் தரும் அற்பத் தொகைக்காக அடகு வைக்கும் பொதுமக்களைத்தான்!