எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

சனி, 15 மார்ச், 2025

பிண்டத்தில்[உடம்பு]ஆன்மா! அண்டத்தில் ஆண்டவன்?[தத்துவப் பித்தர்களுக்கு மட்டும்]

தங்கள் பலவும் ‘ஆன்மா’ இருப்பதாகச் சொல்கின்றன.

அது இருப்பதாக நம்பப்படுவது மனித உடம்புக்குள்.

இந்த உடம்பு இருந்துகொண்டிருக்கவும் இயங்குவதற்கும் காரணமான இதயம், மூளை என்று பல உறுப்புகள் பற்றி விரிவாக ஆராய்ந்து சொல்லியிருக்கிறார்கள் அறிவியல் அறிஞர்கள்; ஆராய்ந்துகொண்டிருக்கிறார்கள்.

ஆன்மிகர்களால் இதே உடம்புக்குள் இருப்பதாக நம்பப்படும் ‘ஆன்மா’ பற்றியும் அவர்கள் தீவிர ஆராய்ச்சியில் இறங்கக்கூடும்.

இன்றளவும் ஐம்புலன்களாலோ[பார்த்தோ கேட்டோ தீண்டியோ சுவைத்தோ நுகர்ந்தோ.....], ஆறாவது அறிவால் சிந்தித்தோ அறிய இயலாத ஆன்மா இருப்பது உண்மை என்பதை நிரூபிப்பது இன்றளவும் சாத்தியப்படவில்லை.

என்றேனும் ஒரு காலக்கட்டதில் அது சாத்தியப்படுமா என்னும் கேள்விக்கும் விடை அறிந்தார் இல்லை.

மனித உடம்புக்குள் இருப்பதாக நம்பப்படும் ஆன்மாவைக் கண்டறிவதே இப்போதைக்குச்[எப்போதைக்குமே?] சாத்தியம் இல்லை என்னும்போது, எல்லை அறியப்படாத அண்டவெளியிலும், அதிலுள்ள அனைத்திலும்[பொருள்கள், உயிர்கள்& பிற] இரண்டறக் கலந்திருப்பவர் என்று சொல்லப்படும் கடவுளை ஐம்புலன்களால் அறிவது, அல்லது ஆறாம் அறிவால் உணர்ந்தறிந்து உறுதிப்படுத்துவது சாத்தியம் ஆகுமா?

[அறிவியலாளரால் அண்மையில் அண்டவெளியில் கண்டுபிடிக்கப்பட்ட ‘ஒரிஜினல்’ கடவுள் இவர். நம் பிரதமர் மோடி இவருக்குக் கோயில் கட்டுவாரா?!]

ஆகுமோ ஆகாதோ, இருக்கும்வரை அமைதியாகவும், இயன்றவரை மன நிறைவுடனும் வாழ முயலுங்கள்; பிறர் அவ்வாறு வாழ்வதற்கும் உதவுங்கள்.

‘ஹிந்தி’யன் பாதம் நக்கும் ‘பவன் கல்யாண்’[ஆந்திரா து.முதல்வன்] என்னும் மக்கு!

தமிழ்நாட்டில் ஹிந்தி எங்களுக்கு வேண்டாம் என்று சொல்கிறார்கள். ஹிந்தியைத் திணிப்பதாகச் சொல்கிறார்கள். முதலில் உங்கள் படங்களை ஹிந்தியில் ‘டப்’[மொழி மாற்றம்] செய்வதை நிறுத்துங்கள், வடக்கில் இருந்து டெக்னீஷியன்களை[தொழில்நுட்பக் கலைஞர்கள்] இங்கே கொண்டுவராதீர்கள். ஹிந்தி மக்கள் பணம் மட்டும் வேணுமா?" என்று ஆந்திர மாநிலத் துணை முதல்வர் பவன் கல்யாண் கேட்டிருக்கிறார்[https://cineulagam.com/].

படங்களை இந்தியில் ‘டப்’ செய்வது, தமிழ்ப் படத்தைத் தெலுங்கில்[பிற மொழிகளிலும்] மொழி மாற்றம் செய்வது போல் பொழுதுபோக்குத் தொடர்பானது; அது வணிகம். இந்தி படிப்பது இந்திக்காரனிடம் நம் தன்மானத்தை அடகு வைப்பது சம்பந்தப்பட்டது.

இரண்டுக்கும் வேறுபாடு தெரியாத இந்தக் களிமண் மூளையனா ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வன்?

பாவம் ஆந்திர மாநில மக்கள்!

                                    *   *   *   *   *

https://cineulagam.com/article/dont-dub-tamil-films-in-hindi-pawan-kalyan-1741988250[ 5 hours ago]