எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

ஞாயிறு, 16 பிப்ரவரி, 2025

தொடரும் ‘டிரம்ப்’ திமிராட்டம்! குருதி கொதிக்குமா நம் பிரதமர் மோடிக்கு?!

மெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்களை இந்தியாவுக்கு அனுப்பும்போது, மனிதாபிமானத்துடன் அது நடந்துகொள்ளுதல் வேண்டும் என்று இந்தியா டிரம்புக்குக் கோரிக்கை விடுத்திருந்தது.

இதை அலட்சியப்படுத்திய ‘டிரம்ப்’ இப்போது 119 இந்தியர்களை, முன்பு போலவே[104 பேர் கை கால்களில் விலங்கு பூட்டி ராணுவ விமானத்தில் அனுப்பப்பட்டார்கள்] கை கால்களில் விலங்கிட்டு அனுப்பியிருக்கிறார்.

அப்போது அமைதி காத்த நம் பிரதமர் மோடி இப்போதும் அமைதி காத்து இந்திய-அமெரிக்க நல்லுறவுக்குப் பங்கம் நேராமல் பாதுகாப்பதன் மூலம் இந்தியாவின் தன்மானத்தை அந்தரத்தில் பறக்கவிடுவாரா?

அல்லது,

கொதித்தெழுந்து டிரம்புக்குக் கண்டனம் தெரிவிப்பதோடு.....

அமெரிக்கனின் ஈனத்தனமான நடவடிக்கைக்குப் பதிலடியாக, இங்கு வருகைபுரிந்துள்ள அமெரிக்கக் குடிமகன்களில் சிலரையேனும்[‘வேவு பார்த்தல்’ போல பொய்க் குற்றம் சுமத்தியேனும்], கை கால்களில் விலங்கு மாட்டி, நம் ராணுவ விமானத்தில் அமெரிக்காவுக்கு அனுப்பி வைப்பாரா? அல்லது வேறு சிறப்பான நடவடிக்கை மூலம் பாடம் கற்பிப்பாரா?

என்ன செய்யப்போகிறார் நம் பிரதமர்?

                      *   *   *   *   *

119 பேர் அனுப்பிவைக்கப்பட்டது தொடர்பாக வெளியான காணொலி:

 

மோடிக்கு விலங்கு மாட்டிய விகடன் கார்ட்டூன்... ஒன்று போதாது! ஓராயிரம் தேவை!!

ரைக் கிறுக்கனும் அமெரிக்க அதிபனுமான டொனால்டு டிரம்பின்[‘ஜோ பைடன்’ போட்டியிட்டிருந்தால் இவன் தோற்றிருப்பான்] முன்னிலையில், ‘கை கால்’ விலங்கு பூட்டப்பட்ட பரிதாபக் கோலத்தில் நம் பிரதமர் மோடி அவர்கள் காட்சியளிக்கும் கார்ட்டூனைத் தமிழின் முன்னணி இணையத்தளமான ‘விகடன்’ வெளியிட்டுள்ள நிலையில், அந்தத் தளம் நடுவணரசால் முடக்கப்பட்டது என்பது நேற்றையச் செய்தி.

கார்ட்டூன் உருவானதன் பின்னணி பலரும் அறிந்ததே.

அது.....

‘அனுமதியின்றி அமெரிக்காவில் குடியேறியவர்களில்[தண்டனைக்குரிய வேறு குற்றங்களில் ஈடுபடாதவர்கள்] 104 பேருக்குக் கை கால்களில் விலங்கு பூட்டி, இந்தியாவுக்கு[அமெரிக்காவின் ராணுவ விமானத்தில்] அனுப்பப்பட்டார்கள்’[இதுவும் அவமானப்படுத்தும் செயல்தான்] என்பது.

104 பேருக்கு என்றில்லை, ஒரே ஒரு இந்தியனுக்கு இந்த அவமானம் இழைக்கப்பட்டிருந்தாலும், ஒட்டுமொத்த இந்தியாவின் அடையாளமான நம் பிரதமர் மோடிக்கே இது இழைக்கப்பட்டதாகக் கருதுதல் வேண்டும்.

ஆம். கிறுக்கன் டிரம்ப், மோடியின் கை கால்களுக்கு[+கழுத்துக்கு?] விலங்கு பூட்டித் தன் ராணுவ விமானத்தில் இந்தியாவுக்கு அனுப்பினான் என்றே நாம் கருதுதல் வேண்டும். 

இந்த மிக இழிந்த குற்றச் செயலுக்காக விமானத்தைத் திருப்பி அனுப்புவதோடு[குட்டி நாடு கொலம்பியா இதைத்தான் செய்தது; பின்னர் இரு நாடுகளுக்குள்ளும் உடன்பாடு ஏற்பட்டது]  டிரம்பை மன்னிப்புக் கேட்கச் செய்த பிறகே நம் மக்களைத் திரும்பப் பெற்றிருத்தல் வேண்டும்.

மன்னிப்புக் கேட்க மறுத்திருந்தால் அமெரிக்கா மீது போர் தொடுப்பதாக அறிவித்திருத்தல் வேண்டும். நம்மை விடப் பலம் வாய்ந்தவன் என்பதால் வாய் பொத்தி மௌனம் சுமந்தாரா நம் பிரதமர் மோடி? இந்தியர்களுக்கு மானம் ரோஷம் என்பதெல்லாம் இல்லையா?[அமெரிக்கா சென்று அவனைச் சந்தித்து விருந்துண்டது இந்த இந்திய மண் அடைந்திராத மிகப் பெரிய அவமானம்].

தமக்கு[நமக்கானதும் ஆகும்] நேர்ந்த அவமானத்தைக் கொஞ்சமும் பொருட்படுத்தாமல், ஒரு ஊடகத்தில்[விகடன்] வெளியான கார்ட்டூனுக்காக அதை முடக்குவது[பொது அறிவோ சிந்திக்கும் ஆற்றலோ இல்லாத நபரின் பரிந்துரை] என்பது கற்பனைக்கெட்டாத கோழைத்தனம் ஆகும்.

இதை அறியச் செய்யும் வகையில் ‘விகடன்’ மட்டுமே கார்ட்டூன் வெளியிட்டது. இது போதாது; ஆட்சியாளர்களின் தன்மானத்தைத் தட்டி எழுப்ப இன்னும் ஓராயிரம் கார்ட்டூன்கள் தேவை!

                                  *   *   *   *   *

சற்று முன்னர் வெளியான காணொலிச் செய்தி: