பிரதமர் மோடி, கடந்த மாதம் தன் சுதந்திரத் தின உரையில், "கடுமையான கவலை & சவால்" பற்றித் தேசத்தை எச்சரித்தார்[ஊடகச் செய்தி].
அந்த எச்சரிக்கை:
“சட்டவிரோதமாக வெளிநாட்டினர்[குறிப்பாக லோகிங்கியா & வங்கதேச முஸ்லிம்கள்] இந்த நாட்டில் குடியேற்றப்படுவது[இந்தியாவில் உள்ள ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல. அவர்கள் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள்> இந்திய அரசு] இந்த நாட்டின் மக்கள் தொகையைக் குறைப்பதற்கான சதி.
இந்த ஊடுருவல்காரர்களால்[சட்டவிரோதக் குடியேறிகள்] நமது இளைஞர்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படுகிறது; இந்த ஊடுருவல்காரர்கள் நமது சகோதரிகள் & மகள்களைக் குறிவைக்கிறார்கள்[?!]. இது பொறுத்துக்கொள்ள இயலாதது.”
மோடியின் இந்த எச்சரிக்கை முழுமையாக ஏற்கத்தக்கதே.
இதே மாதிரியானதொரு எச்சரிக்கையை மோடிக்கு விடுப்பது நம் கடமை.
அயல்நாட்டுக் குடியேறிகளால் இந்த நாட்டிலுள்ள இளைஞர்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படும் என்றால், குறிப்பிட்டதொரு மாநிலத்தில்[எ-டு: தமிழ்நாடு] அயல் மாநிலத்தவர் கூட்டம் கூட்டமாக வைதொகையில்லாமல் குடியேறுவதால்[சட்டவிரோதம் அல்ல எனினும்] அந்தவொரு மாநிலத்து[தமிழ்நாடு] இளைஞர்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படுகிறது என்பதை மோடி ஏற்கத்தான் வேண்டும்.
ஏற்றுக்கொண்டு, குறிப்பிட்டதொரு மாநிலத்தில் பிற மாநிலத்தவர் ஓர் அளவு[கள ஆய்வின் மூலம் கணக்கிடலாம்]க்கு மேல் குடியேறுவதை[இது இன மோதல்களுக்கு வழிவகுக்கும் என்பதோடு, ஆட்சி அமைப்பதில் குழப்பங்களும் கலவரங்களும் உருவாகும்]த் தடுக்கும் வகையில் சட்ட விதிகள் திருத்தப்படுதல் அவசியம்.

