*நிலா ஒன்றல்ல; அண்டவெளியில் உலாவரும் இவற்றின் மொத்த எண்ணிக்கை 176! 175 நிலாக்கள் ரொம்ப ரொம்ப ரொம்பத் தொலைவில் இருப்பதால் ஒன்றே ஒன்று மட்டும் நம் கண்களுக்குத் தெரிகிறதாம்.
இவை...புதன், சுக்கிரன் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய், பூமி முதலான கோள்களுக்கு அருகருகே சுழல்கின்றனவாம்.
*நம் கண்ணுக்குத் தெரிகிற அழகு நிலா, பூமியிலிருந்து சுமார் 238857 கல்தொலைவு[384403 கி.மீ] இடைவெளியில் பூமியை வலம் வருகிறது. இது தோன்றி சுமார் 450 கோடி ஆண்டுகள் ஆகின்றன[மற்ற விவரங்கள் வேண்டாம். உணர்வு சலிக்கும்!].
*சூரியனிலிருந்து பூமி பிறந்ததல்லவா? அது போல, பூமியிலிருந்து இந்த நிலா பிறந்தது. பூமியிலிருந்து ஒரு துண்டாக இது சிதறியபோது உண்டான மகா மகா மகா பிரமாண்டக் குழியில்தான் பசிபிக் பெருங்கடல் உருவாயிற்றாம்.
*விண்வெளியில் அலைந்து திரிகிற கோள்களில் காதலர்களுக்குப் பிடித்தமானது குளுகுளு நிலவைப் பொழிகிற இந்த நிலா மட்டும்தான்.
'இது கொஞ்சம் கொஞ்சமாகச் சுருங்கிக்கொண்டே போகிறது. சுருக்கம் லேசா...மிக மிக லேசாத்தான் இருக்கிறது. அதனால, பயப்பட ஒன்றுமில்லை'ன்னு அறிவியலாளர்கள் சொல்கிறார்கள்[அது எக்கேடு கெட்டால் நமக்கென்ன...கவலைப்பட வேண்டியவர்கள் காதலர்கள் மட்டுமே].
*24.10.2010இல் பூமிக்கும் நிலாவுக்குமான இடைவெளி அதிகமாகி, நெடுநெடுந் தொலைவில் இது காட்சி தந்ததாம். அப்போது தோன்றிய முழு நிலா 15% அளவுக்குச் சிறுத்துக் காணப்பட்டதாம். இதுக்குத் 'தானிய நிலவு'ன்னு பெயராம். நம் மக்களெல்லாம் பார்த்துப் மகிழ்ந்தார்களாம். நீங்களும் நானும்தான் ஏமாந்துவிட்டோம்.
*'இந்த நிலா குறித்து மக்கள் கவலைப்பட ஒன்றும் இல்லை. நம்மவர்களுக்குக் கவலை தருவது சூரியபகவான்தான்[ஞாயிறு]. 457 கோடி அகவையுடைய இந்தக் குடுகுடுகுடு கிழவர், இன்னும் 543 கோடி ஆண்டுகளுக்கு அப்புறம் 'பொசு'க்குன்னு உயிரை விட்டுடுவார்' என்கிறார்கள் அறிவியல் மேதைகள்.
அய்யோ....அப்படீன்னா..... நம்ம வாரிசுகள் கதி அதோகதிதானா?!
ஆதார நூல்: 'இலக்கிய - அறிவியல் நுகர்வுகள்'; ஆசிரியர்: கா.விசயரத்தினம்; மணிமேகலைப் பிரசுரம், சென்னை.
ஆதார நூல்: 'இலக்கிய - அறிவியல் நுகர்வுகள்'; ஆசிரியர்: கா.விசயரத்தினம்; மணிமேகலைப் பிரசுரம், சென்னை.
=======================================================================
கீழே இடம் காலியா இருக்கேன்னு இன்னிக்கி நான் எடுத்துகிட்ட படத்தை[செல்ஃபி] இணைச்சிருக்கேன்.
