எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

புதன், 1 பிப்ரவரி, 2023

அமுத மழை பொழிவிக்கும் ‘அமிர்தகால’ப் பட்ஜெட்!!!


 இந்த ஆண்டின் பட்ஜெட்டை, ‘அமிர்தகால வ.செ.கணக்கு’ என்று அறிவித்திருக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா அம்மையார். அமிர்தகாலம் என்பது வேதகால ஜோதிடத்திலிருந்து வந்த வார்த்தை என்கிறார். 

பட்ஜெட் வரவேற்புக்கு உரியதோ அல்லவோ, இந்தியர்கள் இத்தனை பெரிய புளுகுப் புராணப் பித்தர்களா என்று உலகோரை எண்ண வைப்பதாக உள்ளது இந்த ‘வ.செ.’ கணக்கின் தலைப்பு.

அமிர்தகாலம் என்பது போற்றுதலுக்குரிய  தவயோகிகளான ‘சப்த ரிஷிகள்’ வாழ்ந்த காலமாம். சப்த ரிஷிகள் வாழ்ந்ததால் அது அமிர்த காலம்[அமுதம் பொங்கி வழிந்த காலம்] ஆயிற்று.


இந்த ‘ச.ரிஷிகள்’ கதை தெரிந்தால், இது அமிர்தகாலமா, ஆபாசக் கதைகள் உலாவிய காலமா என்று கேட்கத் தோன்றும்.


இவர்களை[‘சப்த ரிஷிகள்’]ப் பற்றிய கதைகளை வாசித்து இறும்பூது எய்துவீராக!


*அத்திரி:

உலகம் தோன்றியபோதே அவதரித்த ரிஷி![அடேங்கப்பா!!!] இவரின் தர்மபத்தினிதான் கற்புக்கரசி அனுசூயை. ஒரு பெண்ணுக்கு, “விடிந்தால் நீ விதவை ஆவாய்” என்று ஒரு முனிவர் சாபம் கொடுக்க, அவள் அனுசூயையை அணுகி முறையிட, சூரியன் உதிப்பதைத் தடுத்து நிறுத்தி ஒட்டுமொத்த உலகையும் நீண்ட நெடுங்காலம் இருளில் மூழ்கடித்தவர் இந்தப் பத்தினித் தெய்வம்![https://temple.dinamalar.com/news_detail.php?id=1340].


*பாரத்துவாசர்:

பாரத்துவாசர் தனது தவ வலிமையால் உலகமெங்கும் பயணித்து வரும்போது ‘க்ருடசி’ என்ற கந்தர்வக் கன்னியைக் கண்டார். கண்டவுடன் அவள் மீது காதல் கொண்டார். அந்தக் கந்தர்வக் கன்னியைக் கண்டு காதல் கொண்ட மாத்திரத்திலேயே அவரிடமிருந்து வெளிப்பட்ட விந்துவை ஒரு பானையில் செலுத்தினார். பானையில் இருந்து பிறந்தார் துரோணர்[https://www.facebook.com/643906272371620/photos/a.674784755950438/835506363211609/?type=3].


*ஜமதக்கினி:

ரேணுகா என்பவர் இவரின் மனைவி; நாள்தோறும் பச்சைக் களிமண் பானையில் ஆற்று நீரை எடுத்து வருவாள். ஒரு நாள் ஆற்றுக்குச் சென்று களிமண்  பானையில் நீர் எடுக்கையில், வானத்தில் தேரில் ஏறி வந்த அழகிய கந்தவர்வனைக் கண்டு சில நொடிப் பொழுதுவரை மயங்கினாள். இதனால் அவளது கற்புக்குக்  களங்கம் ஏற்பட்டதால், பச்சைக் களிமண் பானை உடைந்தது. எனவே, வீட்டிற்குத் திரும்பாமல் ஆற்றங்கரையிலே ஜமதக்கினி முனிவரின் வருகைக்காகக் காத்திருந்தாள்.


ஆற்றங்கரையில் நடந்த நிகழ்வுகளை ஞானக்கண்ணால் உணர்ந்து, கோபமுற்ற ஜமதக்கினி முனிவர், ரேணுகாவை வெட்டிக் கொல்ல தன் மூத்த மகன்களுக்கு ஆணையிட்டார். அவர்கள் மறுக்கவே, அவர்களைக் கல்லாகப் போகும்படிச் சபித்தார். அவரின் கடைசி மகன் பரசுராமர்  முன்வந்து, தந்தையின் ஆணைக்கிணங்க, தனது தாயைக் கோடாரியால் வெட்டித் தலையைத் துண்டித்தார்[https://tamil.webdunia.com/article/special-astro-predictions/one-of-the-sapta-rishis-let-us-know-about-jamadagni-120082800059_1.html].


*கௌதமன்: கலிகை கதை எல்லோருக்கும் தெரியும். பஞ்ச கன்னியருள்

ஒருத்தியான இவள், மகரிஷி கௌதமரின் தர்மபத்தினி. இந்திரனால் கபடமாக வஞ்சிக்கப்பட்ட இவளைத்தான் கௌதமன் சாபமிட்டுக் கல்லாக்கினார். பின்பு ராமனால்[அபூர்வச் சக்தி படைத்த இவன் பெயரால்தான் இங்கே ‘ராம ராஜ்ஜியம்’ அமையப்போகிறது!] https://www.vikatan.com/news/miscellaneous/20298-


*காசியபர்:

இவர் அதிதி, திதி, கத்ரு, வினிதா, தனு, முனி, அரிட்டை, சுரசை,சுரபி, தாம்ரா, குரோதவசை, பதங்கி, யாமினி ஆகியோரை மணந்தவர்[இதோடு திருப்தி கண்டிருப்பாரா இவர்?!]

https://www.wikiwand.com/ta/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%

AE%AA%E0%AE%B0%E0%AF%8D].


*வசிஸ்டர்:

இவரைப் பிரம்மாவின் மகன் என்கிறது ராமாயணம்

[https://temple.dinamalar.com/news_detail.php?id=2509].


*விசுவாமித்திரர்:

ரம்பை தன் தவத்தைக் கலைக்க வந்தவுடன், இவர்[விச்வாமித்திரர்]

கோபத்தால் அவளைச் சபிக்கிறார்[அருமையான வாய்ப்பை நழுவவிட்ட கிறுக்குச் சாமியார்!]. பின்னர் மனம் வருந்தித் தன் மூச்சையும் பேச்சையும் அடக்கி

ஆயிரம் வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே உணவு உண்டு தவம் செய்கிறார்[!!!].[https://valmikiramayanam.in/?p=38]

==========================================================================

***அலைபேசியில், தொடர்கள்[பிற்பகுதி] சரிவர அமையவில்லை;

காரணம் புரியவில்லை.


ஆகமத்தின் பெயரால் நடக்கும் அக்கிரமம்! ஆறறிவாளரே விழிமின்!! எழுமின்!!!

‘பழநி கோயில் கும்பாபிசேகம் சன

வரி 27ஆம்

தேதி நடந்து முடிந்திருக்கிறது.

கும்பாபிஷேகத்துக்கு முந்தைய தினம் ஆகம விதிகளை மீறி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, அமைச்சர் சக்கரபாணி, அரசு அதிகாரிகள்[குடும்பத்தினருடன்] உட்பட 400க்கும் மேற்பட்டோர் கருவறைக்குள் செல்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைராலாகிவருகிறது. இந்த நிலையில் ஆகம விதிகளை மீறிப் பலர் கருவறைக்குள் சென்றதற்குப் ‘பழநி ஞான தண்டாயுதபாணி சுவாமி பக்தப் பேரவை’யினர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர் என்பது ‘ஆனந்த விகடன்’ வழங்கியுள்ள செய்தி.

400 என்ன, அதற்கு மேற்பட்டவர்களும் தினசரி கருவறைக்குள் சென்று வழிபடலாம். இதில் தவறொன்றும் இல்லை.

“கூடாது, ‘அர்ச்சகன்கள்’ மட்டும்தான் என் அருகில் வரவேண்டும். மற்றவர்கள் வந்தால் தீட்டாகும்” என்று எப்போதாவது முருகன் தன் பக்தர்களிடம் கூறியிருக்கிறாரா?

இல்லையென்றால், சாமியின் பெயரால் தட்டேந்திப் பிழைப்பு நடத்தும் அவர்களிடமேனும் சொல்லியுள்ளாரா? எப்போது சொன்னார்? அதற்கு என்னவெல்லாம் ஆதாரம்?[எல்லாம் நம்பிக்கைதான் என்று சொல்லியே மூடத்தனங்களைத் தக்கவைப்பது வழக்கமாக உள்ளது].

கருவறைக்குள் நுழையக்கூடாதவர்கள்[இந்த அர்ச்சகன்களுக்கு உள்ள யோக்கியதை மற்றவர்களுக்கு இல்லையா?] நுழைந்துவிட்டதால் மீண்டும் கும்பாபிஷேகம்[நடத்த வேண்டும் என்று ஓர் உத்தமக் குருக்கன்[கிறுக்கன்] 'கேட்பொலி’[audio] வெளியிட்டிருக்கிறான் என்பது புதிய செய்தி[https://www.puthiyathalaimurai.com/newsview/154830/Palani-Temple-priest-controversial-audio-says--some-people-violated-their-rules.] இதன் மூலம் இங்குள்ள மூடர்களைப் போராடத் தூண்டுவது இவனைப் போன்றவர்களின் நோக்கம்.

இன்னும் எத்தனை நூற்றாண்டுகளுக்கு.....

மந்திரம் சொல்லித் தந்திரமாய்த் தம் மேலாண்மையைத் தக்கவைக்க முயலும் இவன்கள் கட்டிவிட்ட கதைகளை நம்பி, பக்தர்கள் கேனயர்களாகவே இருக்கப்போகிறார்கள்?

எது எதற்கோ போராட்டம் நடத்துகிற நம் மக்கள் பக்தி விசயத்தில் மட்டும் பயந்து நடுநடுங்கிப் பதுங்கிக் கிடப்பது ஏன்?

ஆறறிவாளர்களே விழிமின்! எழுமின்! பக்தியின் பெயரால் தமிழுக்கும் தமிழினத்துக்கும் எதிரான அக்கிரமச் செயல்களைத் தடுத்து நிறுத்திடுவீர்!

* * * * *

தங்கக் கோபுரத்தில்[படம் கீழே] அமைச்சர்கள் சேகர் பாபு, சக்கரபாணி, எம்.எல்.ஏ. செந்தில்குமார் ஆகியோர் இருப்பது தெரிகிறது. இவர்களே தமிழில் பக்திப் பாடல்கள் பாடிக் குடமுழுக்குச் செய்யும் காட்சியைக் காணும் வாய்ப்பு விரைவில் அமைதல் வேண்டும் என்பது நம் விருப்பம்.

தங்க கோபுரத்தில் அமைச்சர்கள் சேகர் பாபு, சக்கரபாணி, எம்எல்ஏ செந்தில்குமார்

=========================================================================