எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

வியாழன், 31 மார்ச், 2022

மருட்டும் ஆன்மா! மதி மயங்கிச் சீரழியும் மனித இனம்!!

'ஆன்மா' என்று ஒன்று இருப்பது உண்மையானால், மனித இனம் தோன்றுவதற்கு முன்பு அவை எங்கே இருந்தன? 

எப்போது தோன்றின, அல்லது தோற்றுவிக்கப்பட்டன? 

அவை இருந்தது அல்லது, இருந்துகொண்டிருப்பது பூமியிலிருந்து எவ்வளவு தொலைவில்?

எவ்வாறு இயங்கின?... இயங்கிக்கொண்டிருக்கின்றன?

ஒட்டுமொத்த ஆன்மாக்களின் எண்ணிக்கை என்ன?

சென்றடைய வேண்டிய மனித உடம்புகளை ஆன்மாக்கள் தாமே தேர்வு செய்யுமா? 

 "ஆம்" எனில், தேர்வுக்குரிய வழிமுறைகள் யாவை?

ஆன்மாக்கள் தன்னிச்சையாய்ச் செயல்படுவது சாத்தியமா? 

'அல்ல' எனின், இவற்றைக் கண்காணித்து வழிநடத்துவது எது? எவை? யார்? யாரெல்லாம்?

ஆன்மாக்களுக்கு உருவம் இல்லை என்கிறார்கள். 'உருவமே இல்லாதது, நெருப்பில் அழியாதது; நீரில் கரையாதது' என்றெல்லாம் விவரிக்கப்படுவதுமான இவற்றின் இருப்பை எப்படிக் கண்டறிந்தார்கள்?

இவற்றிற்கு உருவம் இல்லையெனினும் ஆற்றலேனும் உண்டா?

அதை இவை எவ்வாறு பெறுகின்றன?

அணுக்களிலிருந்தா, நேரடியாகக் கடவுள் என்று சொல்லப்படுபவரிடமிருந்தா?

.....இவ்வாறாக, ஆன்மாக்கள் குறித்து முழுமையாக அறிந்திடத் தொடுக்கப்பட வேண்டிய கேள்விக் கணைகள் ஏராளமாக உள்ளன.

உண்மை நிலை இதுவாக இருக்க, மதவாதிகளும்,  மகான்கள் எனப்படுபவர்களும், 'அனைத்து மனித உடம்புகளுக்குள்ளும் ஆன்மாக்கள் உள்ளன. உடம்புகள் அழியும்போது அவை வெளியேறுகின்றன. மீண்டும் வேறு வேறு உடம்புக்குள் நுழைகின்றன' என்று  சொன்னார்கள்; சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். 

உரிய ஆதாரங்களை இவர்கள் ஒருபோதும் தந்ததில்லை.

இவர்களைத்தான் மனிதர்களில் பலரும் கடவுளுக்கு இணையாக வைத்துப் போற்றி வழிபடுகிறார்கள்.

இந்நாள்வரை, நம் மக்களில் சிலரேனும் மேற்கண்டவை போன்ற கேள்விகளை இவர்களிடம் கேட்டு உரிய விளக்கங்களைப் பெற்றதாகத் தெரியவில்லை. 

ஆனால்.....

மக்களில் பலரும் ஆன்மாக்களின் இருப்பை நம்புகிறார்கள் என்பதும், அதன் விளைவாகப் பல மூடநம்பிக்கைகளின் பிடியில் சிக்குண்டுச் சீரழிகிறார்கள் என்பதும் மனதை வருத்தும் மிகப் பெரிய அவலம் ஆகும்!

==========================================================================

***மிக முக்கியக் குறிப்பு:

இப்போதெல்லாம் என் பதிவுகள் தமிழ்ச்சரத்தில் இணைக்கப்படுவதில்லை. தவறுதலாக, அதன் இடுகைப் பட்டியலில் என் இடுகை இடம்பெற்றிருப்பின், அதைக் 'கிளிக்' செய்யாமல், நேரடியாக இந்த[https://kadavulinkadavul.blogspot.com] என் தளத்திற்கு வருகை தருமாறு அன்புடன் வேண்டுகிறேன்.


வருகைபுரிவோருக்கு என் நெஞ்சார்ந்த வேண்டுகோள்!

'தமிழ்ச்சரம்'[திரட்டி] என் இடுகைகளை இணைத்துக்கொள்வதில்லை என்று முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது[காரணம் எதுவாகவும் இருக்கலாம்]. என்னுடைய விருப்பமும் இதுவே. 

ஏற்கனவே, பல மாதங்களுக்கு முன்பு, 'என் இடுகைகளை இணைக்க வேண்டாம்' என்று நான் வேண்டுகோள் விடுத்திருந்தும் அது கண்டுகொள்ளவில்லை[இணைப்பைத் துண்டிப்பதற்கான வழிமுறையும் எனக்குப் பிடிபடவில்லை]. எனவே.....

என் இடுகை, தவறுதலாகத் தமிழ்ச்சரத்தில் இணைக்கப்பட்டாலும், அதைச் சொடுக்கி, என் பதிவுகளை வாசிக்கும் முயற்சியை மேற்கொள்ள வேண்டாம் என்றும், என் தளத்திற்கே நேரடியாக வருகைபுரியுமாறும் அன்புடன் வேண்டுகிறேன்.

தமிழ்ச்சரத்தின் புறக்கணிப்பால் என் தளத்திற்கு வருகைபுரிவோரின் எண்ணிக்கை குறையக்கூடும். அது குறித்தெல்லாம் எனக்குக் கவலை ஏதும் இல்லை.

நான் பதிவுகள் எழுதுவதுவதற்கான முக்கியக் காரணங்கள்.....

நினைவாற்றலை இயன்றவரை தக்கவைப்பதும், எண்ணங்களுக்குக் கட்டுரை வடிவம் கொடுப்பதும், கட்டுரைகளில் தகுதி வாய்ந்தனவற்றை நூலாக்கி அமேசான் கிண்டெலில் வெளியிடுவதும்தான்.

நன்றி.