வியாழன், 20 பிப்ரவரி, 2025

போப் பிரான்சிஸ்[ஆண்டவர்] கவலைக்கிடம்! இறுதி ஊர்வல ஒத்திகை தேவையா?

#போப் பிரான்சிஸ்[போப் ஆண்டவர்] பல நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதால், சிக்கல்களின் அபாயத்தில் உள்ளார். அவர் சக்கர நாற்காலியைப் பயன்படுத்திவருவதால், உடல் ரீதியாகச் சுறுசுறுப்பாக இல்லை.

அவர் தனது இறுதிக் கட்டத்தை நெருங்கி வருவதாக மருத்துவ அறிக்கைகள் தெரிவித்துள்ளன. எனவே, போப் ஆண்டவரின் இறுதி ஊர்வலத்திற்கான ஒத்திகைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன#https://ibctamilnadu.com/

கிறித்தவ மதத்தவரின் மரணத்திற்குப் பின்னரான சடங்குகள் குறித்து நமக்கு ஏதும் தெரியாது எனினும், போப் ஆண்டவர் உயிரோடு இருக்கும் நிலையில் அவரின் இறுதி ஊர்வலத்திற்கான ஒத்திகை நடைபெறுவதாக நாம் அறிந்த செய்தி நம்மைக் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது.

போப் பிரான்சிஸ் ஆகட்டும் நம்மைப் போன்ற சாமானியராகட்டும், ஒருவர் உயிருடன் இருக்கும்போதே, இறந்த பிறகு நடத்தப்படும் இறுதி ஊர்வலத்துக்கு ஒத்திகை பார்ப்பது ஒரு கொடூரமான வழக்கம் என்றே தோன்றுகிறது.

ஒத்திகை பார்க்காமல் நடத்தப்படும் இறுதி ஊர்வலத்தில் தவறு நேருமாயின் அது வருத்தம் தரும் நிகழ்வு அல்ல; ஒரு குற்றச் செயலும் அல்ல.

கர்த்தரின் அருளால்[மருத்துவர்களின் கணிப்பு பொய்த்துப்போகலாம்] இன்னும் சில காலம் போப் அவர்கள் உயிர் வாழ்வாரேயானால் ஊர்வல ஒத்திகை அர்த்தமற்றதாக ஆகிறதே; நல்ல மனங்களை உறுத்துவதாகவும் ஆகுமே.

அறிவுஜீவிகள் நிறைந்த கிறிஸ்தவ மதத்தவரிடம் இப்படியொரு வழக்கமா?

போப் ஆண்டவர் அவர்களுக்காகப் பெரிதும் வருந்துகிறது நம் மனம்.

* * * * *

https://ibctamilnadu.com/article/pope-francis-funeral-preparation-bigins-1740044550#google_vignette

எச்சரிக்கை! கும்பமேளா ஆற்றில் யோகியும் மோடியும் நீராடலாம்! மற்றவர்கள்.....

ன்று சட்டமன்றத்தில் பேசிய ‘உ.பி.’ மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், "கும்பமேளாவில் பக்தர்கள் புனித நீராடும் நீர் தூய்மையாகவே உள்ளது; பிரயாக்ராஜ் ஆற்று நீர் குளிப்பதற்கு மட்டுமல்ல ஏன் குடிக்கவும் உகந்ததுதான்” எனத் தெரிவித்துள்ளார்[https://tamil.news18.com] என்பது செய்தி.

இந்தச் செய்தியில் ஒரு சிறு திருத்தம்.....

யோகி ஆதித்யநாத் ஒரு யோகி; ஆன்மிகப் பேரொளி; புலன்களை அடக்கி ஆளும் துறவி; இறை நேசர்; இறைவனால் நேசிக்கப்படுபவர். எனவே, பிரயாக்ராஜ் ஆற்று நீரில் இவர் குளிக்கலாம்; அதைக் குடிக்கவும் செய்யலாம். ஆற்று நீரில் உள்ள எந்தவொரு நோய்க் கிருமியும் இவரை நெருங்காது.

மோடி இந்த மண்ணுலக மக்களை உய்விக்கக் கடவுளால் அனுப்பப்பட்டவர்; உலகம் கண்டிராத உன்னதமான பக்திமான்; கடவுளின் ஓர் அம்சம். ஆகவே, இவரும் மனித மலம் கலந்ததும் அழுகிய பிணங்கள் மிதப்பதுமான பிரயாக்ராஜ் ஆற்று நீரில் குளிக்கலாம்; அதை எத்தனை முறையும் அருந்தலாம். இவரைக் கண்டு கிருமிகள் அஞ்சி அலறி விலகி ஓடும்.

இவர்கள் இருவரையும் தவிர்த்து வேறு எவரும்[அமித்ஷா உட்பட> புனிதர் அல்ல என்பதால்] மேற்கண்ட ஆற்று நீரில் குளிப்பது தவறு என்பதைப் பல்வேறு பாவங்களைச் சுமந்து திரியும் அப்பாவி மக்களுக்கும் பக்தர்களுக்கும் பணிவுடனும் கனிவுடனும் தெரிவிக்கிறோம்!

* * * * *

https://tamil.news18.com/national/prayagraj-ganga-water-pollution-yogi-adityanath-denies-nw-azt-ws-b-1732865.html#goog_rewarded

‘கும்பமேளா’... குமரிகளைப் படம் எடுத்து விற்கும் ‘காலி’களுக்கான விழா!!!

புனிதமானவை என்று சொல்லப்படும் கங்கை&யமுனை ஆறுகளில் னிதக் கழிவுகளிலிருந்தும், அழுகிய/அரைகுறையாய் எரித்து வீசப்பட்டப் பிணங்களிலிருந்தும் வெளியேறும் நோய்க் கிருமிகள் கலந்திருப்பதால், கொடிய நோய்கள் பரவும் பேராபத்து இருப்பதாக ஒன்றிய அரசுச் சார்புள்ள ‘மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்’ செய்தி வெளியிட்டிருப்பதை உறுதிப்படுத்துகின்றன கீழ்க்காணும் 3 காணொலிகள்.

ஆளுவோருக்கு இது குறித்தெல்லாம் கவலையில்லை; 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை கொண்டாடப்படுவதாக அவர்கள் சொல்லும்[பொய்> 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடப்பது இது] இந்த ‘மஹாகும்பமேளா’ மூலம் மூடர்களின் எண்ணிக்கையை அதிகரித்துப் பலன் பெறுவது மட்டுமே அவர்கள் நோக்கம்.

கும்பமேளா என்னும் கூத்தடிப்பு முடிவதற்கு ஒரு வாரம் இருக்கும் நிலையில் அவர்கள் தாங்கள் நினைத்ததைச் சாதித்துவிட்டார்கள் என்றே சொல்லலாம்.

இந்தக் கொண்டாட்டம் மூடநம்பிக்கையை வளர்ப்பதற்காகவும், நோய்களைப் பரப்புவதற்காக மட்டுமல்ல, சமூக விரோதிகள் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிப்பதற்கும் வழிவகுத்துள்ளது என்பதை முதலாவதாக இடம்பெற்றுள்ள காணொலிச் செய்தி உறுதிப்படுத்துகிறது.

கும்பமேளாவால்[ஆட்சியாளர்களால்?] இந்த நாட்டுக்கு விளையும் பெரும் கேடுகளை விரிவாகப் பேசுகின்றன மூன்று காணொலிகளுமே. 

காணொலிகள்[03]: