செவ்வாய், 15 அக்டோபர், 2024

சிதம்பரம் நடராசன் கோயிலில் ‘ரிகார்டு டான்ஸ்’!!!

கீழ்க்காண்பது கொஞ்சம் பழைய செய்தியின்[விகடன்,  09 Oct 2024 2 PM] சுருக்கம் ஆனால், ஆண்டுகள் பல கழிந்தாலும் ‘சூடு’ ஆறாதது

சிதம்பரத்தை அடுத்த வல்லம்படுகை கிராமத்தைச் சேர்ந்தவர் இளையராஜா. சிதம்பரம் நடராசன் கோயிலுக்குச் சென்றபோது, கோயில் வளாகத்தில், சாமிக்கு மணியடிக்கும் அர்ச்சகர்கள் குழு ஒன்று ‘கிரிக்கெட்’ விளையாடுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்; அதைக் காணொலியாகவும் 'பதிவு செய்தார்.

இதைக் கண்டு வெகுண்டெழுந்த 'அவாள்’ கும்பல் நடராசனைத் தாக்கிக் காயப்படுத்தியதோடு, "கோயிலுக்குள் கிரிக்கெட் விளையாடலாமா?” என்று அவர் கேட்டபோது, “இது எங்கள் கோயில். கிரிக்கெட் விளையாடுவோம். எங்கே வேண்டுமானாலும் புகார் செய்” என்று ஆணவத்துடன் விதண்டவாதம் பேசியிருக்கிறார்கள். இந்த நிகழ்வைக் காணொலியாகவும் பதிவு செய்து சமூக ஊடகங்களில் வெளியிட்டிருக்கிறார்கள்.

மணியடிப்பதைத் தவிர, கோயில் கட்டுமானத்திற்கோ பராமரிப்புக்கோ எந்தவிதப் பங்களிப்பும் செய்யாத இந்த வேதம் ஓதும் கூட்டத்திற்கு எங்கிருந்து வந்தது இந்தத் துணிச்சல்?

மக்களின் வரிப்பணத்திலும் உழைப்பிலும் சிதம்பரம் கோயிலைக் கட்டி, கடவுளால் அசரீரியாகச் சொல்லி அருளப்பட்டவை வேதமந்திரங்கள் என்று ‘அவாள்’ அடித்துவிட்ட கதைகளை நம்பி, பூஜை செய்ய அவர்களை அனுமதித்த அரசர்கள் செய்த மாபெரும் தவறுதான் காரணம்.

பக்தியின் பெயரால் அவர்களால் திணிக்கப்பட்ட ஏராள மூடநம்பிக்கைகளிலிருந்து மக்கள் விடுபடாமலிருந்ததும் முக்கியக் காரணம் ஆகும்.

மேலும், மன்னர் ஆட்சிக்காலம் முடிந்தபின்னர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஆண்டபோதும், அவர்களைக் கடவுளின் பிரதிநிதிகளாகக் கருதி, தேவையே இல்லாமல் கோயில் நிர்வாகத்தில் அவர்களுக்குப் பங்களித்தது மிகப் பெரிய தவறாகும்.

காலங்காலமாகத் தொடர்ந்த இந்தத் தவறுகள்தான், 'கோயில் எங்களுடையது' என்று சொல்லிக் கோயிலுக்குள்ளேயே ‘கிரிக்கெட்’ விளையாடுமளவுக்கு அவர்களை அட்டூழியம் புரிய வைத்தன.

ஆக,

சிதம்பரம் கோயில் சில நூறு தீட்சிதர்களுக்கும் சொந்தமானது[அவர்கள் சொல்வது] என்னும் நிலையில், இன்று கிரிக்கெட் விளையாடிய அவர்கள், வரும் நாட்களில் கரகாட்டம் நடத்திக் குதூகலிப்பார்கள்; ‘ரிகார்டு டான்ஸ்’ என்னும் பெயரில் அரைகுறை ஆடையுடன் அழகிகளை ஆடவிட்டு ரசிப்பார்கள்.

‘ஒரிஜினல்’ பக்திமானான மோடியின் அமோக ஆதரவு உள்ளவரை பகுத்தறிவுச் சிந்தனையாளர்கள், அறநிலையத்துறையினர் என்று எவராலும் இவர்களின் கால் சுண்டுவிரலைக்கூட அசைக்க முடியாது!

[தீட்சிதர்களுக்கு ஆதரவு தெரிவித்த உலக மகா உத்தமன் எச்சி ராஜா]

https://www.vikatan.com/government-and-politics/police-registered-case-against-nataraja-temple-dikshitars-for-assaulting-a-person?utm_source=newsshowcase&utm_medium=gnews&utm_campaign=CDAqEAgAKgcICjCejf8KMN389wIwjOGsAw&utm_content=rundown&gaa_at=g&gaa_n=AWsEHT7S5ogp_eqG40CGg4Unsqky9DY4RVVFnjDLrbxHyi2XkzFlE5CVomi7Sc6RXWQW912t5R6S09kBhD4n&gaa_ts=67069ddb&gaa_sig=IhEixbzgviInokUWkWGT4DEXVig3S-t14ydIf3h7fYvhfbmu0MAOw651rJFcKTaEelXZP_cOrOjsmQ4epQ9o1Q%3D%3D

திங்கள், 14 அக்டோபர், 2024

“சட்டம் இனி எங்கள் கையில்” -மோகன் பகவத்!... மோடி இவனைத் தண்டிப்பாரா, தாங்குவாரா?

//இந்து மதத்தைப் பின்பற்றும் மக்களுக்கோ, அவர்களது வழிபாட்டிற்கோ ஏதேனும் ஒரு சிறு இடையூறு வந்தாலும் அரசை அணுகாமல், சட்ட நடைமுறைகளையும் பின்பற்றாமல் தாங்களாகவே களத்தில் இறங்கி, தங்களுக்கான நியாயத்தை நிலைநாட்ட வேண்டும்//[நாக்பூர் நிகழ்வில் ‘ஆர்.எஸ்.எஸ்’ மோகன் பகவத் பேச்சு] https://tamil.oneindia.com/news/

ஒன்றிய அரசின் சட்டதிட்டங்களை ஒட்டுமொத்தமாய் நிராகரிக்கிறான் இந்த இந்து வெறியன்; அதாவது இந்தியச் சட்டம் இனி எங்கள்[இந்து வெறியர்கள்] கையில் என்கிறான்.

சட்டத்தைக் கையில் எடுப்பதன் மூலம், சிறுபான்மை மதத்தவர்களால் இடையூறு நேர்வதாகப் பொய் பரப்பி, அவர்களைத் தாக்கி இந்த நாட்டைவிட்டே விரட்டியடிப்பது இவன் நோக்கம்.

இவனின் அடுத்த குறி, மதச்சார்பின்மைக் கோட்பாட்டைப் பின்பற்றுபவர்களை[நமது நாட்டின் அடிப்படையான மதச்சார்பின்மைக் கோட்பாட்டை முன்னெடுக்கும் அரசியல் கட்சியினரைச் 'சுயநலமிகள்' என்றும் பேசியிருக்கிறான்]  அடக்கிப் பணியச் செய்வது. அடங்காமல் எதிர்த்துப் போராடினால் அவர்களையும் நாட்டைவிட்டே விரட்டுவது.

இவன் இப்படிப் பேசியது சில நாட்களுக்கு முன்பு.

வேறு யாரேனும்[ஆர்எஸ்எஸ் அல்லாத பிறர்] இப்படிப் பேசியிருந்தால் சிறையில் தள்ளிக் கம்பி எண்ண வைத்திருப்பார் மோடி. விதிவிலக்காக முழுச் சுதந்திரத்துடன் இவனை நடமாட அனுமதித்திருக்கிறாரே அவர், அதன் ரகசியம்தான் என்ன?

இவன் மாதிரியான வெறியர்களைச் சுதந்திரமாகப் பேசவிட்டு, இந்தியாவை விரைவில் ‘இந்து சாம்ராஜ்ஜியம்’ ஆக்கிட ஆசைப்படுகிறாரோ?

“ஆம்” என்றால் அது வெறும் ஆசையல்ல; பெரும் பேராசை! அது அத்தனை எளிதில் நிறைவேறாது!!

மிக முக்கியக் குறிப்பு:

இந்திய அரசியல் சட்டத்தை மதிக்காமல் நாம் எழுதிய பதிவு இது!

                                     *   *   *   *   *

https://tamil.oneindia.com/news/chennai/cpm-slams-rss-chief-mohan-bhagwats-speech-deliberately-inciting-communal-violence-646119.html