அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

திங்கள், 22 ஏப்ரல், 2024

‘உளறுவாயர்’... அண்ணாமலை மட்டுமல்ல, அண்ணல் மோடியும்தான்!!!


#காங்கிரஸ் கட்சியினர் ஆட்சிக்கு வந்தால், தேசத்தின் செல்வத்தை முஸ்லீம்களுக்குக் கொடுத்துவிடுவார்கள் என்ற ரீதியில் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தில் பேசியிருக்கிறார். 

ராஜஸ்தானில் மக்களவைத் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, “காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது,​ ​தேசத்தின் செல்வத்தில் இஸ்லாமியர்களுக்கு முதல் உரிமை உண்டு என்று சொன்னார்கள்” என்றார்#[விகடன் செய்தி].

“அவர்கள்[முஸ்லிம்கள்] இந்தச் செல்வத்தை அதிகக் குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள். நீங்கள்[மக்கள்] கஷ்டப்பட்டுச் சம்பாதித்ததை ஊடுருவியவர்களுக்குக் கொடுக்கப் போகிறீர்களா?” என்றும் பேசியிருக்கிறார் மோடி.


தேசத்தின் செல்வத்தில் முஸ்லிம்களுக்கும் பங்குண்டு என்று எவரேனும் பேசியிருக்கலாம். பேசியிருந்தால் அதில் தவறேதும் இல்லை.


மோடி சொல்வது போல் அவர்கள் பேசியிருக்க வாய்ப்பே இல்லை


எனவே,


தோல்வி பயத்தால் மன நிலை பாதிக்கப்பட்டுத்தான் மோடிஜி இப்படிப் பேசினாரோ என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது.


மன நிலை பாதிக்கப்படவில்லை என்றால்…..


நம்ம ஊர் ‘பாஜக’ தலைவர் அண்ணாமலையைப் போல் இவரும் ஓர் உளறுவாயர்தான் என்று நம்பத் தோன்றுகிறது!


ஹி… ஹி… ஹி!!!

* * * * *

https://www.vikatan.com/government-and-politics/modis-muslim-remark-hate-speech-sparks-criticism


இது புத்திமதியா, புத்தி உள்ளவர்கள் பின்பற்றும் வாழ்க்கை நெறியா?

ணவன் மனைவியருள் ஒருவரோ, இருவருமோ தங்களின் துணைக்குத் துரோகம் இழைத்தவராக இருக்கலாம்.

இருந்தாலும்.....

துரோகம் செய்தவர் மனம் வருந்தி மன்னிப்புக் கோரினாலோ, துரோகம் நிகழ்ந்ததற்கான சூழல் தவிர்க்க இயலாததாக இருந்தாலோ, இருவரும் இணை பிரியாமல் வாழ்வது சாத்தியம்தான்.


போதிய ஆதாரங்கள் இருந்தும், குற்றம் புரிந்தவர், துரோகமே செய்யவில்லை என்று சாதிக்கும்போதும், “ஆமாம், நான் துரோகிதான், உன்னால் என்னை என்ன செய்ய முடியும்?” என்று சவால் விடும்போதும் குடும்ப வாழ்க்கை உடைந்து சிதறுகிறது!

‘யூடியூப்’இல்.....