புதன், 26 மார்ச், 2025

ஆதிக்க வெறியரிடம் மீண்டும் அடிபணிந்த 'அதிமுக' அடிவருடிகள்!!!

உலக அளவில், பல்வேறு இனங்களுக்கிடையேயான போர்களில்,  அனைத்து இனங்களுமே வெற்றியுடன் தோல்விகளையும் சந்தித்துள்ளன[இது இயல்பான ஒன்று] என்பது வரலாறு.

இதற்குத் தமிழினமும் விதிவிலக்கல்ல.

இரண்டாயிரம் ஆண்டுக்காலத் தமிழர்களின் வரலாற்றை ஆராய்ந்தால், பிற இனத்தவருடன் போரிட்டு வென்றிருக்கிறார்கள்; தோற்றதும் உண்டு.

தோல்விக்கான காரணங்கள் பல. 

அவற்றுள் குறிப்பிடத்தக்கது, தமிழினத் துரோகிகள் நம் இனத்தை மாற்றாரிடம் காட்டிக்கொடுத்தது.

துரோகத்திற்கு எட்டப்பனை எடுத்துக்காட்டாக்குவது வழக்கத்தில் உள்ளது.

எட்டப்பனைப் போலவே சிலர் நம் இனத்தில் இருந்திருக்கக்கூடும் என்பதில் சந்தேகத்திற்கு இடமே இல்லை.

எனினும், காட்டிக்கொடுக்கும் துரோகிகளின் எண்ணிக்கை சிறிதளவே என்பதால் அது நம்மைப் பெருமளவில் கவலைக்குள்ளாக்குவதில்லை.

ஆனால் இன்றோ.....

அந்த அவர்களின் எண்ணிக்கை மிக மிக மிகப் பலவாக அதிகரித்திருப்பது நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது; பெரிதும் வேதனைப்பட வைத்திருக்கிறது.

அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.....

‘அதிமுக’ என்னும் பெயரில் இயங்கும் மிகப் பெரிய கூட்டத்தார். இவர்கள் தமிழர் என்னும் பெயரில் பாஜக சங்கிகளிடம் ஏற்கனவே விலைபோனவர்கள்[தம்மிடமுள்ள கோடிகளைக் காப்பாற்றவும், அவர்களிடமிருந்து கோடிகளைப் பெறவும்]; இப்போதும் விலை பேசப்பட்டிருக்கிறார்கள்[https://www.bbc.com/tamil/articles/cwyjrdv7rjmo].

இவர்களைத் தவிர, தங்களைத் தமிழர்கள் என்று சொல்லவதற்கே வெட்கப்படுகிற ஒரு கூட்டமும் இங்கு உள்ளது. அது தமிழ்நாடு ‘பாஜக’ கட்சி. அதில் குறிப்பைடத்தக்கவர்கள்:

ஆட்டுக்கார அண்ணாமலை, எச்சி ராஜா, தமிழிசை, வானதி சீனிவாசன் போன்றவர்கள்.

தமிழக வரலாற்றிலேயே, மிக ஆபத்தானவர்களும், அளப்பரிய அதிகாரம் படைத்தவர்களும், பண பலம் பெற்றவர்களும், ஆதிக்க வெறி கொண்டவர்களுமான எதிரிகளுடன் தமிழர்கள் போராடுவது... போராடிக்கொண்டிருப்பது இப்போதுதான்.

தமிழின உணர்வாளர்கள் அதீத விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய நெருக்கடியான காலக்கட்டம் இதுவாகும்.

செவ்வாய், 25 மார்ச், 2025

உறக்கத்தில் மூச்சுத் திணறல்[OSA] ஜாக்கிரதை!!!

றக்கத்தின்போது சுவாசப் பாதையில் உருவாகும் தடை காரணமாக மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படுவதே மூச்சுத்திணறல் [OSA> Obstructive sleep apnea] எனப்படும்.

தடை ஏற்படுவதற்கான காரணம்.....

தூக்கத்தின்போது தொண்டையின் பின்புறத்தில் உள்ள மென்மையான தசைகள் தளர்ந்து, சரிவடைந்து சுவாசப் பாதையின் அளவைக் குறைப்பது அல்லது சுருக்குவது.

இதனால் உள்ளே செல்லும் காற்றின் அளவு குறையும்; தடைப்படுதலும் உண்டு; குறட்டை விடுதலும் நிகழும்.

உடல் பருமன், சிறிய தாடை, டான்சில்ஸ்[அடிநாச் சுரப்பிகள் அல்லது அடிநாச் சதை என்பது மனித உடலின் மிகப்பெரிய நிணநீர்ச் சுரப்பியாகும். ஆங்கிலத்தில் இதனை டான்சில் (Tonsil) என அழைப்பர். அடிநாச் சதை தொண்டையில் உணவுக்குழலுக்கு இருபுறமும் அமைந்துள்ளன. இவை முட்டை வடிவில் உள்ளன. பெரிய கழுத்து போன்ற குறைபாடுகள் உள்ளவர்கள் இந்தக் கோளாறால் பாதிக்கப்படலாம்.

இதனால் இரவு நேர உறக்கம் பாதிக்கப்படுவதால் காலையில் கடுமையான தலைவலி தோன்றும்; மன உளைச்சலுக்கும் இது வழிவகுக்கும்.

இரத்த அழுத்தம், இதய நோய், பக்கவாதம் போன்ற ஆபத்தான நோய்களுக்கும் இது காரணமாகிறது என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.

சிகிச்சை:

அறுவைச் சிகிச்சை மூலம் மருத்துவர்கள் தளர்ந்த தசைக் கோளாறைச் சரிசெய்கிறார்கள் என்பதோடு இதற்கான கருவிகளும்[உபகரணங்கள்] பயன்பாட்டில் உள்ளன என்பதால் பெரிதும் அஞ்சத் தேவையில்லை.

குறிப்பு:

இது தூக்கத்தின்போது ஏற்படும் மூச்சுத்திணறல் பற்றிய இடுகை. பொதுவான மூச்சுத் திணறலுக்கு ஆஸ்துமா, நிமோனியா, இதயச் செயலிழப்பு போன்ற வேறு காரணங்களும் உள்ளன என்பது அறியத்தக்கது.

                                   *   *   *   *   *

https://www.google.com/search?q=OSA