எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

ஞாயிறு, 7 ஜூலை, 2019

பிரபஞ்சப் பொய்யர்கள்!!!

நித்தியானந்தாவின், மேலே இடம்பெற்ற பொய்யுரையைக் கண்டித்தும் கிண்டலடித்தும் சமூக வலைத்தளங்களில் பெருமளவில் பதிவுகள் இடம்பெற்றுள்ளதாக இச்செய்தியை வெளியிட்ட நாளிதழ் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

நித்தியானந்தாவின் கூற்று மிகவும் கண்டிக்கத்தக்கதுதான். ஆயினும்.....

சாதாரண மனிதனாக வாழ்ந்து மறைந்த ஒரு மடாதிபதியை, இட்டுக்கட்டிய கதைகளின் மூலம் கடவுள் ஆக்கும் முயற்சியில் சில வார இதழ்களும் நாளிதழ்களும் ஈடுபட்டுள்ளதை நோக்கும்போது நித்தியின் பொய்யுரையை நாம் பொருட்படுத்தத் தேவையில்லை என்றே தோன்றுகிறது!