எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

சனி, 27 ஏப்ரல், 2019

ஜென் கதைகளின் கதை!

பலராலும் மிக விரும்பிப் படிக்கப்படுபவை 'ஜென் கதைகள்'; குட்டிக் குட்டியான இக்கதைகள் உலக அளவில் மிக மிகப் பிரபலம்; பல மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன.

ஜென் கதைகள் எளிதாகப் புரிந்துகொள்ளத் தக்கவை. சுவாரசியமானவை. ஆழமான உள்ளர்த்தம் கொண்டவை. உலக அளவில் இவை பரவலாக வாசிக்கப்படுவதற்கான காரணங்கள் இவை.

இக்கதைகளை, கி.பி.6ஆம் நூற்றாண்டில் சீனாவில் அறிமுகப்படுத்தியவர் இந்தியாவிலிருந்து சீனா சென்ற போதி தர்மர் ஆவார்.

ஜென் என்னும் சொல் தியானம், உணர்தல் போன்ற பொருள்களை உள்ளடக்கியது. இப்பிறப்பை முழுமையாக உணர்ந்து வாழத் தூண்டுபவை இக்கதைகள்.

கி.பி.960 முதல் கி.பி.1141 வரை, சீன நாட்டுச் 'சங்' மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் இக்கதைகள் மக்களிடையே வெகு வேகமாகப் பரவின.

ஒரு காலக் கட்டத்தில், சீன தேசத்து ஆட்சியாளர்களின் ஆதரவு வெகுவாகக் குறைந்தபோது, ஜென் பிரிவு ஜப்பானில் தன் சிறகுகளை விரிக்கத் தொடங்கியது.

ஜென் பிரிவு இந்தியாவிலிருந்து சீனாவுக்கும் பின்னர் ஜப்பானுக்கும் சென்றாலும் இன்றளவில் ஜப்பானில் மட்டுமே நிலையானதோர் இடத்தைப் பெற்றுள்ளது.
*சென் புத்தமதம் மகாயான புத்தமதத்தின் ஒரு பிரிவு ஆகும். சீன அரசு மரபுகளில் ஒன்றான தாங் அரசமரபு காலத்தில் சான் புத்தமதம் என்ற பெயரில் தோன்றியதாகக் கூறப்படுகிறது. சீன சமயத்தின் தத்துவக்கோட்பாடான தாவோயிசத்தால் வலிமையாகப் பாதிக்கப்பட்டு சீன புத்தமதத்தின் ஒரு தனிப்பிரிவாகச் சான் புத்தமதம் வளர்ந்தது. Wikipedia*
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நன்றி: 'சீன மதங்கள்', New Horizon Media Pvt.Ltd., Chennai.