எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

புதன், 19 ஆகஸ்ட், 2020

போகிற போக்கில் ஒரு பொதுத்தொண்டு!

Who is an EU Student?லுவலகம் செல்லப் பேருந்து நிலையத்தில் காத்திருந்தேன். என்னிடம்  உதவி வேண்டி வந்த நண்பரும் உடனிருந்தார்.

“பஸ் வருது” என்றார் நண்பர்.

“புறப்படப் பத்து நிமிசம் ஆகும். கொஞ்சம் பொறு” என்று சொல்லிவிட்டு, சற்றுத் தள்ளி நின்றுகொண்டிருந்த அந்தப் பள்ளி மாணவனை நெருங்கினேன். நண்பரும் இணைந்துகொண்டார்.

“பத்திரிகையில் உன் ஃபோட்டோ பார்த்த ஞாபகம். எஸ். எஸ். எல். சியில் ஸ்டேட் பஸ்ட் வந்தாய்தானே?” என்றேன் அந்த இளைஞனிடம்.

சற்றே திடுக்கிட்ட அவன், “இல்லீங்களே” என்றான்.

“இப்போ பிளஸ் டூ படிக்கிறியா?”

“பிளஸ் ஒன்னுங்க.”

“இப்பவே ஐ.ஐ.டிக்குப் பிரிப்பேர் பண்ணலாமே. பண்றியா.”

“இல்லீங்க.”

“டாக்டரா, எஞ்சினீயரா,  கலெக்டரா உன் எதிர்காலக் கனவு என்ன?”

“அது வந்து.....வந்து.....” -வார்த்தைகளை மென்று விழுங்கினான் மாணவன்.

“பார்த்தா ரொம்பப் புத்திசாலியாத் தெரியரே. பெரிய ஆளா வருவே. நல்லாப் படி...” -சொல்லிக்கொண்டிருக்கும்போதே, “ஸ்கூலுக்கு நேரம் ஆச்சுங்க” என்று நழுவினான் அவன். நாங்களும் பேருந்தில் ஏறி அமர்ந்தோம்.

பேருந்து புறப்பட்டபோது நண்பர் கேட்டார்: “தெரிஞ்ச பையனா?”

“ஊஹூம்.”

“என்னவெல்லாமோ சொல்லி அவனை உசுப்பேத்தினியே?”

“எல்லாம் அவனுடைய நன்மைக்காகத்தான். தினமும் கையில் புத்தகக் கட்டோட  இந்த நேரத்தில் அவனைப் பார்ப்பேன். நல்லாப் படிக்க வேண்டிய இந்த வயசில் அநியாயத்துக்குப் பொண்ணுகளை சைட் அடிச்சிட்டு நிற்பான். தன்னோட எதிர்காலத்தைப் பத்திக் கொஞ்சமாவது யோசிக்க வெச்சா இந்தக் கெட்ட பழக்கத்தை விட்டுடுவான்கிறது என்  நம்பிக்கை. என்னவோ என்னால் முடிஞ்ச ஒரு நல்ல காரியம்” என்றேன்.

“நல்ல மனசுப்பா உனக்கு.” -என் முதுகைத் தட்டிக் கொடுத்தார் நண்பர்.
=====================================================================
“நான் சொர்க்கம் போறேன்...வழி விடுங்க” என்னும் பதிவில்[இன்று பிற்பகலில் 12.41 மணிக்கு வெளியிடப்பட்டது] நேர்ந்த பிழை சரிசெய்யப்பட்டது.

“நான் சொர்க்கம் போறேன்...வழி விடுங்க”[என் சொந்தக் கதை!]

'விநாயகர் சதுர்த்தியன்று தமிழகம் முழுவதும் 1.5 லட்சம் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட உள்ளோம். அனுமதி அளிக்காவிட்டால் தடையை மீறிச் சிலைகளை அமைப்போம் என்று இந்து முன்னணி அறிவிப்பு' -‘இந்து தமிழ் திசை’ https://www.hindutamil.in/news/tamilnadu/569987-ganesh-statue.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search

இச்செய்திக்கும் என் கதைக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.

   
                                     
“நான் சொர்க்கம் போறேன்...வழிவிடுங்க”...கதை.

“அப்பா, காலங்காத்தால காப்பிகூடக் குடிக்காம எங்கே கிளம்பிட்டீங்க?” என்று என் மகன் கேட்டான். அதே கேள்வியைப் புருவம் சுருக்கி, பார்வையில் வினாக்குறி தேக்கி என் மனைவியும் வினவினார்.

“தெரு முனையில் நம்ம ஆளுங்க விநாயகர் சிலையைப் ‘பிரதிஷ்டை’ பண்றாங்க. தரிசனம் பண்ணப்போறேன். அப்புறம் ஊர்வலமா அவரை எடுத்துட்டுப் போயி, கடல் நீரிலோ ஆத்துத் தண்ணியிலோ கரைச்சாகணும். ஊர்வலத்திலும் கலந்துக்கிறதா இருக்கேன்.”

“கொரோனாக் கிருமி கொடூரத் தாண்டவம் ஆடிட்டிருக்கு. ஒட்டுமொத்த உலகமும் பயந்து நடுங்கிட்டிருக்கு. இது தெரியாதா உங்களுக்கு?”

“இந்தப் பயம் தெருமுனையில் பிள்ளையாரைஇருக்க வெச்சிக் கும்பிடுறவங்களுக்கு இல்ல. எனக்கும் இல்ல.”

“இந்த ஒரு வருசம் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுலேன்னா ஒன்னும் ஆயிடாது.”

“பிள்ளையார் கோவிச்சுப்பாரு. நிறையப் பாவம் வந்துசேரும்.”

“உங்க வயசுக்குக் கொரோனா தொத்துனா செத்துப்போயிடுவீங்க.” -சினம் தணித்துக் கனிவான குரலில் எச்சரித்தான் என் மகன்.

“விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்துக்கிறதால நான் செத்துடுவேன்னா அது ரொம்ப நல்ல சாவு. நேரா சொர்க்கம் போயிடுவேன்.”

நான் உதிர்த்த வைர வார்த்தைகள் என் மகனையும் மனைவியையும் மௌனம் சுமக்க வைத்தன.

நான் தெருமுனை நோக்கி நடந்தேன்.
=====================================================================
எச்சரிக்கை!
இது என் சொந்தக் கதைதான். அதாவது, நான் எழுதிய கதை. என் வீட்டில் நிகழ்ந்த கதை[நிகழ்வு] அல்ல. இவ்வகையிலான நிகழ்வுகள் எந்தவொரு வீட்டிலும் நடந்துவிடக் கூடாது என்பதற்காகவே இதை எழுதினேன்.
=====================================================================

மன்னிப்பு வேண்டல்:
பதிவை வெளியிட்டபோது[பிற்பகல் 12.41 மணி] மேற்கண்ட இந்த ‘எச்சரிக்கை’ விடுபட்டுவிட்டது. சற்று முன்னர்[மாலை 07.30 மணி], என் பதிவுகளைத் தொடர்ந்து வாசிக்கும் அண்டை வீட்டு நண்பர், “எப்போது பிள்ளையார் பக்தராக மாறினீர்கள்?” என்று கேட்டு நக்கல் செய்தபோதுதான் செய்த தவற்றை அறிய முடிந்தது[Aexa Linking Sites இல் 04 குறைந்துவிட்டது]. பதிவின் இறுதியில் ‘எச்சரிக்கை’யை இணைத்தேன். பொறுத்தருள்க.

நன்றி.