வியாழன், 26 மார்ச், 2026

வாருங்கள், அங்கே சென்று ‘சொர்க்கச் சுகம்’ பெற்றுத் திரும்பலாம்!!!

கீழே இடம்பெற்றுள்ள ‘காணொலி’ ‘யூடியூப்’இல் வெளியானது. 

சீனாவின் அடர்த்தியானதும் பிரமாண்டமானதுமான காடுகளின் மலைச் சரிவுகளில், பாறைகளை வெட்டிச் செதுக்கி உருவாக்கப்பட்ட வளைவான நீள் பாதையில் சென்று, பாறைகளைக் குடைந்து கட்டமைக்கப்பட்ட அழகான வீடுகளைப் படம் பிடித்திருக்கிறார் இந்தக் ‘காணொலி’க்காரர்.

அவர் இதற்குக் கொடுத்துள்ள தலைப்பு: 

சீனாவின் மறக்கப்பட்ட ‘[பாறைச்]சொர்க்கம்’ 

மண்டையைப் போட்ட பிறகு நம் ஆன்மிக ஞானிகளும், மோடி, சத்துக்குரு ஜக்கியார் போன்ற அவதாரங்களும் சென்று, நிரந்தரமாய்த் தங்கியிருந்து, சுகானுபோகத்தில் திளைக்கவிருக்கும் இடமான ‘அந்த’ச் ‘சொர்க்கப் பூமி’யைப் பார்க்கும் பேறு நமக்கெல்லாம் வாய்க்காது என்பது 100% உறுதி[நமக்கு நரகம்தான்].

கீழ்க்காணும் காணொலியில் காட்சிப்படுத்தப்படும் சீனாவின் சொர்க்கத்தை[பல சொர்க்கங்கள் உள்ளன]க் காண்பதன் மூலம் உண்மையான சொர்க்கத்திற்குள் நுழைந்து திரும்பியது போன்ற அனுபவத்தைப் பெற்றிட இயலும். 
 
அடியேன் அங்குச் சென்று திரும்பியுள்ளேன்.

நான் பெற்ற பேரின்பத்தை நீங்களும் பெற்றிட, தயங்காமல் காணொலிக்குள் நுழையுங்கள்.

மூடநம்பிக்கைத் திணிப்பில் முந்துவது இந்து மதமா கிறித்தவமா?

//சவூதி அரேபியாவின் ‘ஷேக் நாசர் பின் ரட்டான் அல் ரஷீத் அல் வதா' 142ஆம் வயதில் மரணமடைந்தவர். 110 வயதில் ஒரு திருமணம்[பல பெண்டாட்டிக்காரர்] செய்தார்; ஒரு பெண் குழந்தைக்குத் தந்தையும் ஆனார்//https://www.news18.com/world/saudi-arabias-longest-living-man-who-married-at-110-dies-at-142-ws-kl-9829418.html

[இந்தப் பல்லுப்போன ஒற்றைக் கண் கிழவனைக் கட்டிக்கொண்டவள் ரொம்பவே பாவப்பட்டவள்!]

இது உலக அளவில் பேசப்படும் சாதனை என்கிறது செய்தி வெளியிட்ட ஊடகம்.

இவரைவிடவும் அதிக வயதில் சாதனை படைத்தவர்கள் பற்றி இணையத்தில் தேடுதேடென்று தேடியதில், கீழ்க்காணும் காணொலி அடியேனின் பார்வையில் தட்டுப்பட்டது.

உள்நுழைந்து தகவல்களை வாசித்தபோது.....

“தன்னுடைய 500ஆவது வயதில் கர்த்தரின் அருளால், ‘நோவா’ என்பவர் மூன்று பிள்ளைகள் பெற்ற நிகழ்வானது வேதாகமத்தில்[பைபிள்] இடம்பெற்றுள்ளது” என்று கூறப்படுவது[காணொலியில்] கடும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

 

“கற்பனைகளைக் கட்டவிழ்த்துவிட்டு, மக்களை முட்டாள்கள் ஆக்குவதில் இந்துமதத்திற்கும் கிறித்தவ மதத்திற்கும் இடையேதான் கடும் போட்டி” என்று சொல்லத் தோன்றுகிறது!