எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

வெள்ளி, 27 ஆகஸ்ட், 2021

வந்தது தெரியும்! போவதும் தெரியும்!!

ஒரு முறைகூட வாசிக்கத் தகுதியில்லாத சில நடிக நடிகையரின் முகநூல்/டிவிட்டர் பதிவுகளை மில்லியன் கணக்கில் நம் மக்கள் வாசிக்கிறார்கள். 5 ஆண்டுகளுக்கு முன்பு நான் வெளியிட்ட இந்தப் பதிவை வாசித்தோர் எண்ணிக்கை வெறும் 59 மட்டுமே[சில பதிவுகள் சில ஆயிரங்களைக் கடந்ததும் உண்டு]. 

ஆயிரக்கணக்கில் வேண்டாம். மேலும் சில நூறு பேர்களாவது வாசிப்பார்களா என்னும் ஆசையில் மீள்பதிவாக வெளியிடுகிறேன். ஆசை... அது பேராசையல்ல; அற்ப ஆசை.

எதிர்பார்க்கும் எண்ணிக்கை அற்பமானது என்பதால் இது 'அற்ப' ஆசை. ஹி...ஹி...ஹி!!!

                                  *  *  *

ந்தத் தலைப்பு, “...வந்தது தெரியும்...போவது எங்கே...” என்னும் கவிஞர் கண்ணதாசனின் பாடல் வரிகளை நினைவுபடுத்தியிருக்கும். அந்த நினைவுடன் இந்தப் பதிவையும் படியுங்கள்.

தந்தையின் உடம்பிலிருந்து,  பல்லாயிரம் கோடி அணுக்களுள் ஒன்றாக வெளிப்பட்டு, கருப்பாதையில் நீந்தி[இடையில் செத்து மடியாமல்], தாயின் கருப்பையில் சினை முட்டையுடன் இணையும்வரை ‘தன்னை அறிதல்’[‘நான்’ என்னும்  உணர்வு] அந்த ஒற்றை உயிரணு[மரபணு?]வுக்கு வாய்த்திடவில்லை.

அந்த ஒற்றை அணு, இரட்டையாகி, பலவாகி, பல்லாயிரம் கோடி அணுக்களாகப் பரிணாமம் பெற்றுக் குழந்தையாக உருவாகிக்கொண்டிருந்த காலக்கட்டத்திலும்கூட, தன்னை அறிதல் சாத்தியப்படவில்லை.

குழந்தை முழு வடிவம் பெற்று, பிறந்து, மண்ணில் தவழ்ந்து, சில ஆண்டுகள் கழிந்தபிறகே சிந்திக்க முடிகிறது; தன்னைத்தான் அறிய இயலுகிறது; ‘நான்’ என்னும் உணர்வைப் பெற முடிகிறது.

அதுவரை ஒற்றை அணுவுக்கோ, அணுத்தொகுப்புக்கோ  ‘அறிதல்’ உணர்வு முற்றிலுமாய் இல்லை என்பது அறியற்பாலது. 

ஒரு காலக்கட்டத்தில் ‘நான்’ என்னும் உணர்வைப் பெறும் மனிதன் சாகும்வரை ‘நான்’என்னும் உணர்வை இழக்காமலேயே வாழ்கிறான். சாவின்போது அந்த ‘நான்’ஐ முற்றிலுமாய் இழக்கிறான். 

எனவே, செத்த பிறகு, உடம்பும் இல்லை; ‘நான்’ என்ற உணர்வும் இல்லை. மனித வாழ்க்கைக்கு நிரந்தரமாய் ஒரு முற்றுப்புள்ளி விழுகிறது. எஞ்சியிருப்பது அல்லது மிஞ்சியிருப்பது ஏதுமில்லை என்றாகிறது.

செத்த பின்னர்  இல்லாமல் போவதை,  இப்போது மட்டுமல்ல, சிந்திக்கத் தெரிந்த காலம் முதல் எப்போதுமே மனித குலம் விரும்பியதில்லை. அதன் விளைவாக, அந்த ‘நான்’க்கு, ‘ஆன்மா/ஆத்மா’ என்று ஏதேதோ பெயரிட்டு, உடம்பு அழிந்த பிறகும் அது அழிவதில்லை; அடுத்தடுத்து பிறவிகள் எடுத்தோ, சொர்க்கம்/நரகம் சேர்ந்தோ, இறைவனுடன் இரண்டறக் கலந்தோ வாழ்ந்துகொண்டே இருக்கும் என்று ‘அனுமானம்’ செய்வதில் வல்லவர்கள் நம்பினார்கள்; அந்த நம்பிக்கையைப் பிற மனித மனங்களிலும் ஆழமாய்ப் பதியவைத்துவிட்டார்கள்.

நம்முடைய இந்த உடம்பு உருவாக முதற்காரணமாக இருந்த அந்த ஒற்றை அணு[தந்தையிடமிருந்து வெளிப்பட்டுத் தாயின் கருப்பையில் நுழைந்தது]வும் சரி, அதனின்றும் பல்கிப் பெருகி நாம் தோன்றி வாழ்ந்திடக் காரணமான கோடானுகோடி அணுக்களும் சரி அழியும் தன்மை வாய்ந்தனவே[அழியும் அணுக்கள் என்னவாகும்? பஞ்சபூதப் பேரணுக்களுடன் இரண்டறக் கலக்கும் அல்லது ‘வெளி’யில் கரைந்துபோகும் என்று கொள்ளலாமா?]

எனவே,

இறப்புக்குப் பின்னர் நாம் இல்லாமல் போகிறோம் என்பதே எதார்த்தம். 

“இல்லையில்லை. அந்த ஒற்றை அணுதான் ஆன்மா, அது அழியாத் தன்மை வாய்ந்தது” என்று நம் முன்னோர் நம்பியிருக்கவும்கூடும். ஆனால், அது ஏற்கத்தக்கதல்ல. காரணம்.....

அந்த ஒற்றை அணு, கருமுட்டையில்  நுழைவது சாத்தியம் இல்லாமல் போயிருந்தால், அதனோடு கருப்பாதையில் பயணித்த பிற கோடானுகோடி அணுக்கள் அழிந்தொழிந்தது போல அதுவும் அப்போதே அழிந்து மறைந்திருக்கும். அது, இயல்பாகவே அழியும் தன்மை கொண்டதுதான்.

ஆக, உடம்பு அழிந்த பிறகு நாம் இல்லாமல் போகிறோம் என்னும் கருத்து உறுதிப்படுகிறது. 

விதிவிலக்காக, அணு வேறு, ஆன்மா வேறு. அது ஒற்றை அணு மீது சவாரி செய்து கரு முட்டைக்குள் நுழைந்தது என்றோ, குழந்தை உருவாகிக்கொண்டிருந்த காலக்கட்டத்தில் ஏதோவொரு நுழைவாயிலில் புகுந்து உடம்புடன் ஐக்கியமாகியது என்றோ, உடல் அழியும் போது ஏராள பாவபுண்ணியங்களைச் சுமந்து வெளியேறுகிறது என்றோ நம்புவது அறிவுடைமையல்ல என்பது எம் பணிவான கருத்து.

வருகைக்கு நன்றி!

==============================================================================


பின்னூட்டப் புலிகள்!!![இது, விமர்சனம் அல்ல; வெறும் 'பகிர்வு' மட்டுமே]

இன்று காலையில், ஆப்கானிஸ்தானில், 90க்கும் அதிகமானவர்களின் உயிரிழப்புக்குக் காரணமான குண்டுவெடிப்புப் பற்றிய செய்தியை வாசித்தபோது, ஆப்கன் பெண்கள் தொடர்பான ஒரு செய்திக் கட்டுரையையும் வாசிக்க நேர்ந்தது. அதனை அதற்கான பின்னூட்டங்களுடன் பதிவு செய்து பகிர்கிறேன்[மொழிப் பிழைகள் திருத்தப்படவில்லை].

மொழிப் பிழைகளை அலட்சியம் செய்கிறார்கள் எனினும், பதிவுகளுக்குக் 'கருத்துரை'[பின்னூட்டம்] வழங்கும் வாசகர்களுக்கு, அக்கருத்துரையை மனதில் பதியும் வகையில் வழங்கத் தெரிந்திருக்கிறது.

வாசித்து இன்புறுவதோ துன்புறுவதோ அவரவர் மனநிலை சார்ந்தது.

பெண்கள், தலிபான் தடை:[Updated : ஆக 26, 2021  20:44 |  Added : ஆக 26, 2021  17:51 |  கருத்துகள் (12)]

காபூல்: தலிபான்கள் முன்னதாக ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்து கொடுங்கோல் ஆட்சி செய்து வருகின்றது. கடந்த 1996 முதல் 2001 ஆம் ஆண்டுவரை தலிபான்கள் ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்தபோது 10 வயதுக்கு மேல் பெண் குழந்தைகள் படிக்க கூடாது, பெண்கள் வேலைக்கு செல்லக்கூடாது, மற்றும் இசைக்கு தடை என்கிற இஸ்லாமிய பழமைவாத ஷரியத் சட்டம் அமலில் இருந்தது.

அதன் பின்னர் கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்காவின் ஆதரவுடன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஆப்கானிஸ்தான் நாட்டை ஆட்சி செய்து வந்தனர். 20 ஆண்டுகள் கழித்து தற்போது தலிபான் ஆட்சியைப் பிடித்துள்ளது. தற்போதைய மீண்டும் இந்த சட்டம் அமல்படுத்தப்படுமா என்ற கேள்வி உலக ஊடகங்கள் மத்தியில் எழுந்தது.

இதுகுறித்து தலிபான் செய்தித் தொடர்பாளர் சபியுல்லா முஜாஹித் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர் பெண்களின் பாதுகாப்பு கருதி ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்கள் வேலைக்குச் செல்ல தலிபான் அரசு தடை விதித்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதே சமயத்தில் பெண்களின் உரிமைகள் பறிக்கப்படாது என்று அவர் உறுதியளித்துள்ளார்.

(பணிக்குச் செல்ல விரும்பும் பெண்கள் பலர் மீட்பு விமானங்கள் மூலம் அமெரிக்காவிற்கு சென்று குடியேற விரும்புவது குறிப்பிடத்தக்கது.)

இசைக்கு தடை!

ஆப்கானிஸ்தானில் "இசைக்கு" தடை விதிக்கப்படும்" என்றும் அவர் தெரிவித்துள்ளார். இசுலாம் மதத்தில் "இசை" என்பது தடை செய்யப்பட்ட ஒன்றாகும்.

"பல நாட்கள் நீடிக்கும் பயணங்களில் பெண்கள் ஒரு ஆண் துணையுடன் பயணம் செய்வது கட்டாயமாக்கப்படுகிறது.

பெண்கள் பள்ளி மற்றும் வேலைக்குச் செல்ல அனுமதிக்கப்படும்; ஆனால் இசாப்(Hijab) அணிவது கட்டாயம்" என தாலிபான் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்து உள்ளார்.

 வாசகர் கருத்து (12)[மொழிப் பிழைகள் திருத்தப்படவில்லை]

Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

27-ஆக-202106:05:32 IST Report Abuse

Kasimani Baskaranஇதில் நல்ல தலிபான்கள், கெட்ட தலிபான்கள் என்று பல பிரிவுகள்வேறு உண்டாம்... பிறகு எப்படி வெளங்கும்?

Meenakshisundaram - Bangalore,இந்தியா

27-ஆக-202105:04:53 IST Report Abuse

meenakshisundaramமுதலில் பெண்கள் 'உடலுறவு 'கொள்ளக்கூடாது என்று ஒரு சட்டம்(?) போடலாம் ,அப்பத்தான் தலிபான்கள் கொஞ்சம் கொஞ்சமா அழிவார்கள் செய்வார்களா அல்லது அதற்கு மட்டும் வேண்டும் என்பார்களா ?

R S BALA - CHENNAI,இந்தியா

27-ஆக-202105:03:51 IST Report Abuse

R S BALAஇசைக்கு தடையா.. அட இறைவனே இசைக்கு மயங்குகிறவர்தானே.. பசியின்றி கூட வாழலாம் இசையின்றி..எவ்வாறோ?

M Ramachandran - Chennai,இந்தியா

27-ஆக-202104:24:56 IST Report Abuse

M  Ramachandranபெண்களை போக பொருளாக மட்டுமே பார்க்கும் இந்த ஐ எஸ் ஐ மற்றும் இந்த தாலிபான் போனற இயக்கத்திற்கு மட்டும் பெண்கள் ஆதரிக்க கூடடாது. அது ஏன் ஒரு மதத்தில் மட்டும் இந்த எண்ணம் உள்ளவர்களாக ஆண்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு தாய் கூட பிறந்த சகோதரிகள் இருந்தும் இந்த தீய என்னம் ஏன் ஏற்படுகிறது. புரியாத புதிர்.

ஆரூர் ரங் -  ( Posted via: Dinamalar Android App )

26-ஆக-202120:12:02 IST Report Abuse

ஆரூர் ரங்உலகெங்கும் விவசாய உழைப்பில் பெண்களின் பங்கு மிக அதிகம். 🤔 அவர்களை வெளியேற்றினால் வேளாண்மை அழியும்

கௌடில்யன் - Chennai ,இந்தியா27-ஆக-202105:34:16 IST Report Abuse

கௌடில்யன்ஆப்கனிஸ்தானில் விவசாயம் என்றாலே பெரும்பாலும் அபின் போன்ற போதை சரக்குகள் தான் .......

Ramesh Sargam - Bangalore,இந்தியா

26-ஆக-202119:57:36 IST Report Abuse

Ramesh Sargamஇந்த தலிபான் ஆண்கள், அவர்களும் ஒரு வேலைக்கு போகமாட்டார்கள். எப்பொழுதும் துப்பாக்கி வைத்துக்கொண்டு மக்களை துன்புறுத்தி காலத்தை ஓட்டுவார்கள். பெண்களையும் படிக்க வேண்டாம், வேலைக்கு போகவேண்டாம் என்று சட்டம் போடுவார்கள். ஆனால், பெண்கள் உடலுறவு கொள்ளமட்டும் வேண்டும் இந்த தாடி கார பசங்களுக்கு...

Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

26-ஆக-202119:47:22 IST Report Abuse

Janarthanan பெண்கள் வேலைக்குச் செல்ல தலிபான் அரசு தடை விதித்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதே சமயத்தில் பெண்களின் உரிமைகள் பறிக்கப்படாது என்று அவர் உறுதியளித்துள்ளார்- பிள்ளை பெத்து போடுகிற உரிமை/ தலிபான் கூப்பிட்டால் உடனே அவர்களுடன் போகும் உரிமை மட்டுமே கொடுக்க படும் .... இதை தான் பெண் சுகந்திரமாக கருதுகிறது இங்குள்ள சிசிக்குலர் லாபி கூட்டம் ?????

S. Bharani - Singapore,சிங்கப்பூர்

26-ஆக-202119:00:48 IST Report Abuse

S. Bharaniஆரம்பிச்சுட்டாங்கையா.... ஆரம்பிச்சுட்டாங்க.....

Ram - Ottawa,கனடா

26-ஆக-202118:52:09 IST Report Abuse

Ramகுல்ல காரனை ஆட்சி செய்ய விட்டா இப்படித்தான் ஆகும் , நம்ம கழகங்கள் அவர்கள் பின்னால் செல்வதை தவிர்க்கவேண்டும் ... இந்தியாவிலும் இன்னும் புர்கா போட்டு சுற்றுபவர்களை பார்க்கும்போது இன்னும் எவ்வளவு பழமை வாதிகளாக இருக்கிறார்கள் என்று தெரிகிறது

தமிழன் - Madurai,இந்தியா

26-ஆக-202118:22:37 IST Report Abuse

தமிழன்Fascinating Photos Of Afghanistan In The 1960s And 1970s என்ற வீடியோ youtube-ல் பிரபலமடைந்து வருகிறது.

====================================================================================

நன்றி: https://www.dinamalar.com/news_detail.asp?id=2831045