சனி, 24 ஜனவரி, 2026

“நானும் தினகரனும் ஜெயலலிதா வளர்த்த பிள்ளைகள்”... எடப்பாடி! எப்படி வளர்த்தார்? இப்படி...

நாங்கள்[எடப்பாடி&தினகரன்] ஜெயலலிதா வளர்த்த பிள்ளைகள். எனக்கும் தினகரனுக்கும் கருத்து வேறுபாடு இருந்தது. எப்போது இணைந்தோமோ அப்போதே அது போய்விட்டது” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெவித்துள்ளார்[ஊடகச் செய்தி***]

இன்னும் கொஞ்சம் சொல்ல நினைத்ததையும்[கீழ்க்காண்பது] அவர் சொல்லியிருக்கலாம்.

ஜெயலலிதா வளர்த்ததால்தான், அண்ணன் தம்பிகளாக நாங்கள் காலமெல்லாம் ஒருவர் மீது ஒருவர் பாச மழை பொழிந்து வளர்ந்தோம்.

ஒன்றாகத்தான் ஊர் சுற்றுவோம்; ஒன்றாக ஒரே தட்டில்தான் சாப்பிடுவோம்; ஒரே கட்டிலில்தான் இறுகக் கட்டிப்பிடித்துப் படுத்துத் தூங்குவோம்; ஒன்றாகத்தான் கழிப்பறை(கக்கூஸ்)யில் ‘ஆயி’ போவோம்.

தெய்வத் தாயை[ஜெயலிலிதா]ப் பார்க்கும்போதெல்லாம், ஒன்றாகவே குப்புறக் கவிழ்ந்து விழுந்து, அன்னையின் பாதக் கமலம் தொழுது ஆசீர்வாதம் பெறுவோம்.

பதவி ஆசையும் பண ஆசையும் எடப்பாடியை எப்படியெல்லாமோ பேசத்தூண்டுது! ஹி... ஹி... ஹி!!!

======================

***https://www.toptamilnews.com/thamizhagam/admk-edappadi-palanisamy-press-meet/cid18153682.htm


மோடி பிரதமரா ‘நாலாந்தர’ அரசியல்வாதியா?!?!?

//தொடர்ந்து பேசிய மோடி, “தமிழ்நாட்டில் எங்கெங்கும் ஊழல் என்பது குழந்தைக்கும்[!?!?!]கூடத் தெரியும்[தெருவில் திரியும் சொறி நாய்கள், பன்றிகள், எருமைகள் போன்றவற்றிற்கும் தெரியும் என்று பேசியிருக்கலாம்> ஆறறிவுள்ள ஒரு மனிதனின் பேச்சா இது?]. திமுக ஒரு CMC கவர்ன்மென்ட். திமுக அரசை மக்கள் குற்றம், மாபியா, ஊழல் அரசு என்று கூறுகின்றனர்” என்றார்//***

[படம்> உதவி: இணையம்]
மோடி ஏதோ ஒரு மலைக் கிராமத்தில் வசிக்கும் படிப்பறிவில்லாத ஆதிவாசியல்ல; ஏக இந்தியாவை ஆளும் ஏகப்பட்ட அதிகாரம் படைத்த பிரதமர்.

தமிழ் நாடெங்கும் ஊழல் பரவிக்கிடப்பதும், குற்றங்கள் பெருகியிருப்பதும், போதை மாத்திரை விற்பனைத் தொழில் அதிகரித்திருப்பதும்[CMC] உண்மை என்றால், தமிழ்நாட்டை ஆளும் ‘தி.மு.க.’ அரசை இவர் கலைத்திருக்கலாமே?

அதைச் செய்யவிடாமல் இந்த அவதாரியை[“நான் கடவுளின் அவதாரம்” என்று புளுகிய குற்றத்தை நாட்டு மக்கள் கண்டுகொள்ளாதது உலக அதிசயங்களில் ஒன்று]த் தடுத்தது யார்? யாரெல்லாம்? எது? எதுவெல்லாம்?

கலைத்த பிறகு நடைபெறும் தேர்தலில் 0005% ஓட்டுகூடப் பெற இயலாது[தனித்து நின்றால்] என்பதை இவர் சந்தேகமறப் புரிந்துகொண்டிருப்பதுதான் காரணம்.

மனம்போனபடியேல்லாம் தி.மு.க. அரசு[ஆட்சியில் நிறைகளுடன் குறைகளும் உள்ளன> இவர் குறைகளை மட்டும் பெரிதுபடுத்தியிருக்கிறார்] மீது குற்றங்கள் சுமத்தி[இதற்கென்றே ஆளுநன் என்னும் பெயரில் அனுப்பப்பட்டிருக்கிறார் ஓர் அடாவடிப் பேர்வழி] அதற்கு மக்களிடமுள்ள கணிசமான செல்வாக்கைக் குறைத்த பிறகு தேர்தலைச் சந்திப்பது இவரின் திட்டம்.

மேலும், போதைப் பொருள் வணிகம் தமிழ்நாட்டில் மட்டும் நடைபெறுவதல்ல; நாடெங்கும் அங்கிங்கெனாதபடி பரவிக்கிடப்பது. அதைத் தடுப்பதில் மாநில அரசுகளுக்கு மட்டுமல்ல மத்திய அரசுக்கும் பங்குண்டு.

மத்திய அரசு எனப்படும் ஒன்றிய அரசின் முதலாளி மோடிதான். தன் கடமையைச் செய்யத் தவறும் இவரும் தண்டனைக்குரியவர்தான். இவர் தண்டிக்கப்படுவது எப்போது?

அது எப்போதேனும் நடக்கலாம்; நடக்காமலும் தடுக்கப்படலாம்.

ஆனாலும், பிரதமர் பதவி என்பது பெரிதும் மதிக்கப்படுதற்குரியது.

அந்த மதிப்புக்குப் பங்கம் நேராமல் காப்பது இவருக்குரிய கடமைகளில் ஒன்று.

இதை மறவாமலிருப்பது இந்த நாட்டுக்கு மட்டுமல்ல மோடிக்கும் நல்லது.

* * * * *

***https://www.puthiyathalaimurai.com/tamilnadu/pm-modi-criticizes-dmk-as-a-cmc-government