எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

திங்கள், 1 செப்டம்பர், 2025

“அய்யா முருக[ன]ய்யா, யாருங்க அய்யா அந்தச் ‘சான்றோர்’? சொல்லுங்க அய்யா!”

 

ஒன்றிய இணை அமைச்சர்[சங்கித் தலைவர்களுக்கு ஒத்தூதும் ஈடு இணையில்லாத அமைச்சர்] எல். முருகன் அய்யா அவர்களே,

தமிழ்நாட்டு இந்துக் கோயில்களைத் தமிழ்நாடு அறநிலையத் துறையிடமிருந்து பறித்து, சான்றோர்கள் & ஆன்மிகப் பக்தர்கள் அடங்கிய குழுவிடம் ஒப்படைத்திட வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு அறிவுரை வழங்கியிருக்கிறீர்கள்.

பக்தர்கள் என்றாலே கடவுள் பக்தர்கள் என்று எளிதாகப் புரிந்துகொள்ளலாம். ‘ஆன்மிகப் பக்தர்கள்’ என்று அடித்துவிட்டிருக்கிறீர்கள். ஆன்மிகம் என்னும் சொல்லாட்சி, ஆன்மா பற்றியும் அதனோடு தொடர்புடைய கடவுளைப் பற்றியும் பேசுவதைக் குறிக்கிறது. இந்தச் சொல்லாராய்ச்சி இங்குத் தேவையில்லை என்பதால், நீங்கள் ஆன்மிகப் பக்தர்கள் என்றது கடவுள் பக்தர்களை என்றே கருதி, உங்களுடைய அறிவுரைகள் குறித்து மட்டும் கருத்துரை வழங்குகிறோம்.

அறநிலையத் துறையைச் சான்றோர்களிடம்[+பக்திமான்கள்] ஒப்படைத்தல் வேண்டும் என்கிறீர்கள், யார் அந்தச் சான்றோர்கள்?

‘சான்றோர் என்பவர், நல்லொழுக்கம் உடையவர், அறிஞர், கல்வி & கேள்விகளில் உயர்ந்தவர், சால்புடையவர், வீரர் எனப் பல்வேறு தகுதிகளைப் பெற்றவர்’ என்கின்றன தமிழ் அகராதிகள்.

இவ்விலக்கணத்தின்படி நல்லொழுக்கம், அறிவுடைமை, உயர் பண்புகள் போன்றவை வாய்க்கப்பெறற சான்றோர்கள் இன்றும் வாழ்கிறார்களா? உங்களால் ஒரு பட்டியல் தர இயலுமா?

‘இயலாது’ என்பதை நீங்கள் அறிந்திருந்தால் மேற்கண்டவாறு தமிழ்நாடு அரசுக்கு அறிவுரை வழங்கியிருக்கமாட்டீர்கள்.

நீங்கள் குறிப்பிடுகிற பக்தர்களும் அறநிலையத் துறையை நிர்வகிப்பதற்கான அருகதை இல்லாதவர்களே.

அதை உறுதிப்படுத்துகிறது அடுத்து இடம்பெற்றுள்ள உங்களின் உரை. 

இன்று 2 லட்சத்திற்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலை ஊர்வலங்கள் நடந்துகொண்டுள்ளன” என்கிறீர்கள்.

2 லட்சம் இடங்களில் ஊர்வலம் நடத்துபவர்கள் 2 கோடிக்கும் மேற்பட்ட முட்டாள்கள் என்பதை மறந்துவிட்டீர்கள்.

நம் அப்பாவி மக்களை முட்டாள்களாக்குவதன் மூலம் தங்களை மேட்டுக்குடிகளாக்கிச் சொகுசாக வாழ்ந்திட, மீனாட்சி அம்மையின்[ஒரு கடவுள் இருப்பதே நிரூபிக்கப்படாத நிலையில்] உடல் அழுக்கிலிருந்து விநாயகர் உதித்ததாக அயோக்கியர் கூட்டம் கட்டிவிட்ட கதைகளை நம்புகிறவர்களை வேறு என்ன சொல்லி அழைப்பது?

இந்த முட்டாள்களிடம்தான் அறநிலையத் துறையை ஒப்படைத்திட வேண்டும் என்கிறீர்கள்.

முட்டாள்களின் பொறுப்பில் இத்துறை இருப்பதைவிட, கொஞ்சமேனும் சிந்திக்கத் தெரிந்தவர்களின் பொறுப்பில் இருந்தால் பெரும் தீங்குகள் விளையா[மூடப் பக்தியிலிருந்து மக்கள் விடுபடும்வரை] என்பது நம் நம்பிக்கை.

ஆக,

உங்களுக்குப் பதவிப் பிச்சை போட்டவர்கள் என்பதற்காக முட்டாள் சங்கிகளுக்கு நீங்கள் முட்டுக்கொடுப்பதுடன் நிறுத்திக்கொண்டு, இனியும் மேற்கண்ட வகையில் அறிவுரை வழங்காமலிருந்தால், அது நம் தமிழ் மக்களின் அறிவு வளர்ச்சிக்குப் பயன்படுவதாக அமையும் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

எச்சரிக்கை!... இருதயத்தைக் காக்க இதயப்பூர்வமான அக்கறை தேவை!

//சவீதா மருத்துவக் கல்லூரியின் ஆலோசகரும், இருதய அறுவைச் சிகிச்சை நிபுணருமான 39 வயதே ஆன டாக்டர் கிராட்லின் ராய்[மனைவியும் ஒரு குழந்தையும் உள்ளனர்] புதன்கிழமை மருத்துவமனையில் சரிந்து விழுந்தார்//*

ஸ்டென்டிங் மூலம் அவசர ஆஞ்சியோபிளாஸ்டி, இன்ட்ரா-அயோர்டிக் பலூன் பம்ப், ECMO(Extracorporeal Membrane Oxygenationa life-sustaining machine that acts as an artificial heart and lung for critically ill patients whose own organs cannot provide enough oxygen and blood to the body] என்றிப்படி இயன்றவரை சிகிச்சை அளித்தும் சக மருத்துவர்களால் அவரைக் காப்பாற்ற இயலவில்லை என்பது மாரடைப்பு எத்தனை அபாயகரமானது என்பதை அறியச் செய்கிறது.

இம்மாதிரியான திடீர் இதய நோய்த் தாக்குதலுக்கு மருத்துவ வல்லுநர்கள் பட்டியலிடும் காரணங்களாவன:

*மிகப் பல மணி நேரப் பணி[மருத்துவர்கள் பெரும்பாலும் ஒரு நாளைக்கு 12-18 மணிநேரம் பணி செய்கிறார்கள்; சில நேரங்களில் தொடர்ந்து[ஒரே ஷிப்டில்] 24 மணி நேரத்திற்கும் மேலாக..... > இது ஏனையத் துறைகளில் பணி செய்வோருக்கும், தொழில் முனைவோருக்கும் பொருந்தும்].

*கடுமையான மன அழுத்தம்[மருத்துவர்கள் தம் மீதான நோயாளிகளின் அதீத நம்பிக்கையைத் தக்கவைத்திடப் பெரிதும் கவலைப்படுவதாலும், வாடிக்கையாளரைத் தக்க வைத்திடப் பல்வகைத் தொழில் செய்வோர்  ஓய்வின்றிக் கடினமாக உழைப்பதாலும் ஏற்படுவது].

*ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறைகள்[மருத்துவர்களும் விதிவிலக்கல்லர்]. 

*உணவு உண்பதில் ஒழுங்கின்மை. 

*முறையான உடற்பயிற்சியின்மை.

*எதிர்கொள்ளும் தீராத பிரச்சினைகளால் உண்டாகும் உடல் சோர்வு, மனச்சோர்வு, பதற்றம் ஆகியன.

இதயம் பற்றி முழுமையாக அறிந்துகொண்டிருக்கும் மருத்துவர்களே அதன் தாக்குதலுக்குப் பலியாகிறார்கள் என்றால், அது குறித்துப் போதிய அறிவில்லாதோரின் நிலை?

இளம் வயதிலும் உயிர்களைப் பலிகொள்ளும் முக்கியக் காரணிகளில் ஒன்று இதய நோய் என்பதை எவரும் மறத்தல் கூடாது.

*https://www.tamilmurasu.com.sg/tamilnadu/39-year-old-heart-surgeon-dies-heart-attack