எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

செவ்வாய், 25 செப்டம்பர், 2018

சிந்திக்கத் தெரியாதவர்களுக்கான சிறப்பு இடுகை!!!

மூடநம்பிக்கை என்னும் குட்டையில் காலமெல்லாம் ஊறிக் கிடப்பதில் அற்ப சுகம் காணும் அன்பர்களுக்கு என் அன்பான வேண்டுகோள்.....

கீழ்க்காணும் பதிவை நிதானமாகப் படியுங்கள். இந்த வாசிப்பு அனுபவம் உங்களை மிக ஆழ்ந்து சிந்திக்கத் தூண்டும். விளைவு.....

உங்களின் சிந்திக்கும் திறன் நாளும் அதிகரிக்கும். பல்வேறு மூடநம்பிக்கைகளின் பிடியிலிருந்து படிப்படியாய் விடுதலை பெறுவீர்கள்.

இது உறுதி.

நன்றி.