எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

புதன், 11 செப்டம்பர், 2024

இனியேனும் உண்மை பேசுவாரா மோடி?!

எதிர்வரும் 2047-க்குள் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். அந்த லட்சியத்தை நோக்கி முன்னேறி வருகிறோம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார் என்பது செய்தி [https://www.hindutamil.in/news/india/1185414-a-developed-india-by-2047-pm-narendra-modi-promises.html].

“லட்சியத்தை நோக்கி முன்னேறிவருகிறோம்” என்று மோடி பெருமிதப்பட்டது ஏறத்தாழ எட்டு மாதங்களுக்கு முன்பு[19 ஜனவரி 2024].

“லட்சியத்தை நோக்கிய நம் பயணத்தில் பின்தங்கியிருக்கிறோம்” என்று உண்மையை உரைக்காமல் பொய் பேசியிருக்கிறார் பிரதமர்.

இந்தியா 2024-க்கான உலகின் சிறந்த நாடுகளின் பட்டியலில் சரிவைக் கண்டிருக்கிறது என்பதே உண்மை.

ஆதாரச் செய்தி:

#யுஎஸ் நியூஸ் அண்ட் வேர்ல்ட் ரிப்போர்ட் இதழ் 2024-ஆம் ஆண்டுக்கான உலகின் ‘சிறந்த நாடுகள்’இன் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இம்முறையும் சுவிட்சர்லாந்து முதல் இடம் பிடித்துள்ளது. 2-ஆவது இடத்தில் ஜப்பான், 3-ஆவது இடத்தில் அமெரிக்கா, 4-ஆவது இடத்தில் கனடா, 5-ஆவது இடத்தில் ஆஸ்திரேலியா ஆகியவை உள்ளன.

வாழ்க்கைத் தரம், தொழில்முனைவு, சாகசம், சுறுசுறுப்பு, பாரம்பரியம், கலாச்சார நோக்கம் உட்பட 10 தன்மைகளின் அடிப்படையில் இந்தப் பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது.

89 நாடுகள் இடம்பெற்றுள்ள இந்தப் பட்டியலில் இந்தியா 33-ஆவது இடத்தில் உள்ளது. சென்ற ஆண்டு, பட்டியலில் இந்தியா 30-ஆவது இடத்தில் இருந்தது. இந்நிலையில் தற்போது 3 இடங்கள் பின்னகர்ந்துள்ளது#

* * * * *

https://www.hindutamil.in/news/world/1309305-best-countries-in-world-switzerland-tops-india-at-33rd-place-1.html




காணும் பொருளில் எல்லாம் கடவுள்! சாமி சிலைகளுக்குச் சமஸ்கிருத மந்திரம் எதுக்கு?!

ஆன்மிகச் செம்மல்களின் அனுமானங்களின்படி..... 

ஆண்டவர் அணுவில் இருக்கிறார்; தூசுதுரும்புகளிலும் இருக்கிறார்.

சிலைகள் வடிப்பதற்கான கல்லிலும், களி மண்ணிலும், வார்த்தெடுப்பதற்கான உலோகங்களிலும் இருக்கிறார்.

வழிபடு கடவுள் எதுவோ அதை மேற்கண்டவற்றில் ஒன்றிலோ அனைத்திலுமே வடிவமைத்து விரும்பும் இடங்களில் நிறுவலாம். வழிபடலாம்.

வழிபடுவது சிலைதான் என்றாலும் சிலைக்குள்ளும் கடவுள் இருக்கிறார் என்பது உண்மை[நம்பிக்கை]. ஏனென்றால்.....

தன்னால் படைக்கப்பட்ட அனைத்துப் பொருள்களிலும் உயிர்களிலும் இரண்டறக் கலந்திருக்கிறார்   அவர் என்பதால்.

அப்புறம் எதற்குப் புதிதாக நிறுவப்படும் கோயில் சிலைகளில் அவரைக் குடியமர்த்த வேதமந்திரம் ஓதுகிறார்கள் விற்பன்னர்கள்?

சக்தி வடிவமான கடவுளுக்கே, செத்தால் புழுத்து நாறி மண்ணோடு மண்ணாகும்  இந்த அற்ப மனிதர்கள் ஓதுகிற மந்திரம் புதிய சக்தியை வழங்குகிறதா? புத்துணர்வு ஊட்டுகிறதா?

எதுக்குடா மந்திரம்? கடவுள் அசரீரியாகச் சொன்னார்; முன்னோர்கள் அதை வழிவழியாகப் பின்னவர்களுக்குக் கற்பிக்கிறார்கள் என்று ஏன் மனசாட்சியே இல்லாமல் பொய் சொல்லுகிறீர்கள்?

நீண்ட நெடுங்காலமாக நிகழ்த்தப்படும் இந்த மோசடியைத் தடுத்து நிறுத்துவதற்கான அறிவு முன்னோர்களுக்கு இல்லை.

அறிவியல் யுகத்தில் வாழும் இந்நாள் மனிதர்களுக்கும் இல்லாமல்போனது அவர்களுக்கான நல்ல காலம்; இவர்களுக்கான கெட்ட காலம்!