எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

திங்கள், 27 அக்டோபர், 2025

‘மோடி’யே இந்தப் பிரபஞ்சத்தின் குரு! பிரார்த்தித்துப் பயன் பெறுங்கள்!!

‘விஸ்வகுரு’ என்னும் சொல்லுக்கு.....

விஸ்வகுரு[சமஸ்கிருதம் विश्व गुरु] என்பது இரண்டு சொற்களைக் கொண்டுள்ளது: /விஸ்வ>[எல்லை கண்டறியாத அளவுக்கு விரிந்து பரந்து கிடத்தல்] 'பிரபஞ்சம்'> ); குரு> 'ஆசிரியர்'/ என்று விளக்கமளிக்கிறது விக்கிப்பீடியா[https://en.wikipedia.org/wiki/Vishvaguru].

அதாவது, பிரபஞ்சத்திலுள்ள ஒட்டுமொத்த உயிர்களுக்கு, குறிப்பாக, ஆறறிவு மனிதர்களுக்குக் குருவாக இருப்பவர்தான் ‘விஸ்வகுரு’ ஆவார்.

அந்தவொரு குருதான் நம் மோடிஜி. சொல்பவர்[“மோடியே என் விஸ்வகுரு”* ஏ.சி.சண்முகம் என்னும் பிரபலக் கல்வி நிறுவன முதலாளி.

இவர் ஆகச் சிறந்த அறிவாளியும்கூட என்பதால். இவர் சொல்வதை முழுமையாக நம்புவதோடு, பிரபஞ்சக் குருவான நரேந்திர மோடி அவர்களைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தால் அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெறுங்கள்[வாய்ப்பை நழுவவிடாதீர்].

தரிசிப்பதற்கான வாய்ப்பு அமையவில்லை எனின், அவ்வப்போது மானசீகமாக அவரை வழிபட்டுப் பயனடையுங்கள்.

‘ஏ.சி.ச.’வுக்கு நம் நன்றி.

*https://www.hindutamil.in/news/tamilnadu/1380973-ac-shanmugan-interview.html?utm_source=newsshowcase&utm_medium=gnews&utm_campaign=CDAqEAgAKgcICjCb3pQLMJCpqgMwwrHZBA&utm_content=rundown