எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2020

எல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லாமே ‘அவன்’ செயலா?!?!

ஒரு சாமானியனுக்கும் சகலமும் அறிந்தவர் எனப்படும் மகானுக்கும்[நடிகர் ரஜினி அல்ல] இடையேயான ஓர் உரையாடல் இது. படித்துப் பயன் பெறுவீர்!


*கடவுள் இருப்பது உண்மையா?

உண்மை...உண்மை... உண்மை. அவர் ஆதியும் அந்தமும் இல்லாதவர்.


*கடவுள் ஒருவர்தானா?

ஒருவர் மட்டுமே.


*பருப்பொருள்கள், நுண்பொருள்கள், உயிர்கள் என்று அனைத்தையும் படைத்தவர் அவர்தானாமே?

ஆமாம்.


*அழிப்பவரும் அவரேதானா?

ஆமாம்...ஆமாம்.


*தான் படைத்ததைத் தானே ஏன் அழிக்கிறார்?

ஒப்புமை கடந்த ஒப்புரவாளன் அவன். அவனன்றி அதற்கான காரணத்தை வேறே எவரும் அறியார்.


*மழுப்புகிறீர்கள்..... விதம் விதமாய்ப் பொருள்களையும், வகை வகையாய் உயிர்களையும் கோடி கோடியாய்ப் படைத்துத் தள்ளியிருகிறார் கடவுள். படைக்கப்பட்டவற்றின் எண்ணிக்கையை நிர்ணயித்தவரும் நிர்ணயிப்பவரும் அவரே அல்லவா?

அந்த அருளாளன் தான்


*இருப்பனவற்றை அழிக்கிறார். புதியனவற்றைப் படைக்கிறார். இவற்றின் எண்ணிக்கையைத் தீர்மானிப்பவரும் இந்த ஒரு கடவுள்தான், இல்லையா?

இவர் மட்டுமே.


*ஒரு பொருளைப் போல இன்னொன்று இல்லை. உயிர்களும் அவ்வாறே. இது ஓர் அதிசயம். இதை நிகழ்த்துபவரும் கடவுளே என்கிறீர்கள்?

ஆமாம்.


*உயிர்களில் சிலவற்றிற்கு மிகக் குறுகிய ஆயுள். சிலவற்றிற்கு ஆண்டுக் கணக்கில். காரணம் என்ன?

விதி.


*விதித்தவர்?

எல்லாம் வல்ல அந்த முழுமுதல் கடவுள்தான்.


*இன்பம் பெறும் உயிர்கள் துன்பத்திற்கும் உள்ளாகின்றன. ஏன்?

அவை செய்யும் பாவபுண்ணியங்களின் பலன்.


*கணக்கில் அடங்காதவையாய் உயிர்கள் உள்ளன. அவற்றிற்கான பாவ புண்ணியங்களுக்குப் பட்டியல் தயாரித்து வைப்பது எளிதான செயல் அல்லதானே?

கடவுள் எல்லாம் வல்லவர். அவரைப் பொருத்தவரை எளிதானது அரிதானது என்று எதுவும் இல்லை.


*சொர்க்கம், நரகம்?

உண்டு.


*இவற்றை நிர்வகிப்பவர்?

இதெலென்ன சந்தேகம். இதைச் செய்பவரும் அவரே.


*‘எல்லாம் அவன் செயலே’ எனின், மனிதர்களைப் படைத்து, அவர்களுக்குச் சிந்திக்கும் அறிவைக் கொடுத்ததும், தன்னைப் போற்றி வழிபடச் செய்ததும் கடவுளின் செயலே அல்லவா?

அல்ல...அல்ல. இவை, மனிதர்கள் தம் சுய விருப்பத்தின் பேரில் செய்பவை.


*எல்லாம் அவன் செயலே என்று வலியுறுத்திய உங்களின் இந்த ஒரு கேள்விக்கான பதில், இதுவரை நீங்கள் முன்வைத்த கருத்துரைக்கு முற்றிலும் முரண்பட்டதாக உள்ளது; நகைப்புக்குரியதாகவும் உள்ளதே?

அது வந்து...வந்து... ஹி...ஹி...ஹி...
=====================================================================