எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

சனி, 12 ஏப்ரல், 2025

அண்ணாமலையை அவமானப்படுத்திய ‘உள்குத்து’ அமைச்சர் அமித்ஷா!!!

ஆகப் பெரிய மூடநம்பிக்கைக் கட்சியினரின் ஆயுட்கால அடிமையான அண்ணாமலை புத்திசாலியோ அல்லவோ, அவர் மிக மிக மிக நல்லவர்; அப்பாவி; சூதுவாது இல்லாதவர் என்பதில் சந்தேகத்திற்கு இடமே இல்லை.

[இத்தனைப் பணிவு எதற்கு அண்ணாமலை?]

அவமானங்களைப் பொருட்படுத்தாமல் ‘பாஜக’ வளர்ச்சிக்காக இவரளவுக்கு இதுவரை எந்தவொரு த.நா. பாஜக தலைவரும் பாடுபட்டதில்லை.

எவரொருவர் தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்தாலும், இந்த மண்ணில் இக்கட்சி வளரவே வளராது என்பது புரியாத அமித்ஷா, அண்ணாமலையின் தலைவர் பதவியைப் பறித்தார்; இந்திய அளவில் உயர் பதவியொன்றில் அவர் நியமிக்கப்படுவார் என்று அறிவித்த அந்த ‘உள்குத்து’ அமைச்சர், தேசியப் பொதுக் குழு உறுப்பினராக அண்ணாமலையை நியமித்துள்ளார்.

தில்லி பாஜக தலைமை அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஒரு உதவியாளருக்கு[பழைய பெயர் ‘பியூன்’] உள்ள அதிகாரம்கூட இந்த உறுப்பினருக்கு இல்லை என்பது 100% உண்மை.

அ.மலை மட்டும் உறுப்பினர் ஆக்கப்படவில்லை; எச்சில் ராஜா, தமிழிசை, பொன்னார், எல்.முருகன், வானதி என்று ஒரு பெரிய பட்டாளமே இந்த உறுப்பினர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

பாவம் அண்ணாமலை.

‘பாஜக’வின் நம்பர் 2 தலைவர் அமித்ஷாவைவிடவும் வேறு எவரும் இவரை இந்த அளவுக்கு இழிவுபடுத்த இயலாது.

அண்ணாமலைக்கு நம் ஆழ்ந்த அனுதாபங்கள்!

* * * * *

https://minnambalam.com/annamalai-get-new-post-in-bjp-when-nainar-become-bjp-president/

தமிழைப் புறக்கணித்து ஆங்கிலம் பேசும் தமிழனும் தாய்மொழி காக்கும் மராட்டியனும்!

காராஷ்டிரா, டோம்பிவ்லியில் இரண்டு பெண்கள் தாங்கள் வசித்து வந்த குடியிருப்புக்கு இருசக்கரவாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, இளைஞர் ஒருவர் அவர்களைத் தடுத்து நிறுத்தி, “இனிமேல் இங்கு மராத்தி மொழியில் மட்டும்தான் பேசவேண்டும்” என்று கூறினார்.

அந்தப் பெண்கல், மராத்தி தெரிந்தவரெனின், "சரி” என்று பதிலளித்துவிட்டுச் சென்றிருக்கலாம்.

மாறாக, “எக்ஸ்கியூஸ்மீ" என ஆங்கிலத்தில் கூறியுள்ளார் ஒரு பெண்..

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த இளைஞர், எக்ஸ்கியூஸ்மீ என மரத்தியில் சொல்ல முடியாதா எனக் கேட்டு 2 பெண்களிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஒரு கட்டத்தில் அந்த இளைஞருடன் சிலர் சேர்ந்துகொண்டு இரண்டு பெண்களையும் தசரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

அந்தப் பெண்கள் காவல்துறையினரிடம் இது குறித்துப் புகாரளித்துள்ளனர்.

அவர்கள் விசாரணை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது[ibctamilnadu.com/ ].

மராட்டிய இளைஞர்கள் பெண்களைத் தாக்கியது கண்டிக்கத்தக்கது என்றாலும், அவர்களை வழிமறித்துத் தங்கள் தாய்மொழியில்  பேசும்படிச் சொன்னதற்குக் காரணம், அந்த அளவுக்கு அங்கே அவர்களின் தாய்மொழியான ‘மராட்டி’  புறக்கணிக்கப்பட்டுள்ளது என்பது அறியத்தக்கது.

தாய்மொழியைப் பாதுகாத்து வளர்க்க இம்மாதிரியான தீவிர நடவடிக்கைகள் தேவையே.

மராட்டி இளைஞர்களிடையே ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் பெரிதும் வரவேற்கத்தக்கது; மகிழ்ச்சியூட்டுவதும் ஆகும்.

“தமிழ் வாழ்க! தமிழ் வெல்க” என்று வெறுமனே வாய் கிழியக் கூச்ச போட்டுக்கொண்டு, தப்பும் தவறுமாகவேனும் ஆங்கிலத்தைப் பயன்படுத்துவதையே வழக்கமாக்கியுள்ள தமிழர்கள்[குறிப்பாக இளைஞர்கள்] மேற்கண்ட இளைஞர்களிடமிருந்து பாடம் கற்பது மிக அவசியம்.

                                                  *   *   *   *   *

https://ibctamilnadu.com/article/omen-attacked-for-refusing-to-speak-marathi-viral-1744286539?itm_source=parsely-api