எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

சனி, 29 ஏப்ரல், 2017

பெரியாரின் ‘பட்டுச்சேலையும் ஜமுக்காளமும்’ -‘சுருக்’ கதை!

#ஒருத்தியிடம் இன்னொருத்தி பட்டுச்சேலை இரவல் கேட்டாள்.

அந்த ஒருத்தியும் கொடுத்தாள்.

கட்டிக்கொண்டு போகிறவள், ‘இது அடுத்தவள் சேலைதானே’ என்று அலட்சியமாய்க் கண்ட கண்ட இடத்தில் உட்கார்ந்தால் சேலை அழுக்காகும்; எண்ணைக்கறை படும் என்றெல்லாம் இரவல் கொடுத்தவள் கவலைப்பட்டாளாம். அதனால்.....

அவள் போகும் இடங்களுக்கெல்லாம் இவளும் ஒரு ஜமுக்காளத்தைத் தூக்கிக்கொண்டு அவள் பின்னால் அலைந்தாளாம்; அவள் உட்காரும்போதெல்லாம் இவள் அவள் அமரும் இடங்களில் எல்லாம் அதை விரித்தாளாம்.

மக்களாகிய நம் கதையும் இதுதான். நம்மால் பதவி பெற்ற அமைச்சர்கள் செய்யும் எல்லாக் காரியங்களிலும் கறைபடாமல் காக்கும் பொறுப்பு நம்முடையதாக இருக்கிறதே#
***********************************************************************************************************************

கதை உதவி: முனைவர் அ.ஆறுமுகம்; ‘பெரியார் சிந்தனைகளில் சூடும் சுவையும்’, பாவேந்தர் பதிப்பகம், திருமழபாடி, அரியலூர் மாவட்டம். முதல் பதிப்பு: திருவள்ளுவர் ஆண்டு 2048[2017]