//டிச13இல் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திருப்பரங்குன்றம் மயில் மண்டபம் அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும். இவ்வாறு சங்கிகள் அளித்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி எஸ்.ஸ்ரீமதி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில், மனுதாரர் கோரும் இடத்திற்குப் பதிலாக மாற்று இடத்தில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி வழங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்க நீதிபதி மறுத்துவிட்டார்; உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளார்.//
விசாரணை முற்றுப்பெற்றுத் தீர்ப்பு வெளியாகாத நிலையில், மேற்கண்ட செய்தி[டிசம்பர் 13இல் உண்ணாவிரதம்> மனு> அனுமதி] வெளியாகியிருப்பது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.
சட்டம், ஒழுங்கு, கட்டுப்பாடு எல்லாம் பொதுமக்களுக்கு[சங்கிகள் & நீதிபதிகள் விதிவிலக்கு] மட்டும்தானா என்னும் கேள்வி எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.
அதற்கான பதில் என்னவாக இருந்தபோதிலும், சங்கித் தலைவர்களின் சூழ்ச்சி இதில் சம்பந்தப்பட்டுள்ளது என்பது தெளிவாகப் புரிகிறது.
அது.....
கார்த்திகைத் தீபத்தின் பெயரால், தொடர்ந்து பிரச்சினைகளை உருவாக்கி, தமிழ்நாட்டில் ‘திமுக.’ ஆட்சியைக் கலைத்து, மீண்டும் ஆட்சிக்குவராமல் தடுத்து, தமிழினத்தை அடிமைப்படுத்துவதுதான், இங்குள்ள அடிமைகளின் ஆதரவோடு.
அத்தனை அதிகாரங்களும் ‘அவர்கள்’ கையில் இருப்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.
* * * * *
