பொருள்களைக் கொண்டுசெல்லவும் மக்கள் பயணிக்கவும் லாரி, கார் முதலான ஊர்திகள் பயன்படுத்தப்படுகின்றன.
கார்களிலும் பேருந்துகளிலும், ஏனைய பயணிகள் வாகனங்களிலும் உள்ளே அமர்ந்து பயணிக்கலாமே தவிர, அவற்றின் மேற்கூரைகளின் மேல், தடுப்புகள் அமைத்து அமர்ந்துகொண்டோ, நின்றுகொண்டோ பயணிப்பது[சரக்கு வாகனங்கள் உட்பட] சட்ட ரீதியான குற்றச் செயலாகும்> ‘வாகனத்தின் மீது நின்று நகர்வலம் செல்வது என்பது கடுமையான போக்குவரத்து விதிமீறலாகும், இது சட்டப்படி தண்டனைக்குரியது’.https://www.google.com/search?.....
அப்புறம் எப்படி இவர்களை வாகனங்களின் மேல் பரப்பில் தடுப்புகள் அமைத்து நின்றுகொண்டோ, பந்தாவாக அமர்ந்துகொண்டோ[அக்கால உச்ச அதிகாரம் படைத்த அரசர்கள் யானை மீதான அம்பாரியில் அமர்ந்து நகர்வலம் வந்தாற்போல] அடிமைகள் போல் அணிவகுத்து நிற்கும் அப்பாவிப் பொதுமக்களைப் பார்த்துக் கையசைக்கவும் உரை நிகழ்த்தவும் அனுமதிக்கப்படுகிறார்கள்?
இவர்கள் என்ன அறிவுலக மேதைகளா? ஆய்வுலக அறிஞர்களா? மக்களுக்காகவே உழைக்கும் பொதுநல உணர்வாளர்களா? 99.99% கோடிகளில் சுருட்டிச் சுகபோகமாக வாழத் திட்டமிடும் சுயநலவாதிகள்.
இவர்களுக்கு எதற்கு நகர்வலம் ஊர்வலம் காடுவலம் சுடுகாடுவலம் எல்லாம்?
தேர்தல் காலங்களில் வீடு வீடாகச் சென்று வாக்குக் கேட்கலாம்; ஊடகங்கள் வாயிலாகப் பரப்புரை செய்யலாம். உச்ச அதிகாரம் படைத்தவர்களாயினும், மேற்கண்டவாறு வீதிவலம் சென்று, மக்களின் அன்றாடப் பணிகளுக்குக் குந்தகம் விளைவிப்பது பெரும் குற்றம். இதற்கு அனுமதியளிப்பதும் குற்றமே[விதிகளைக் கடுமையாக்கப் புதிய சட்டங்கள் இயற்றலாம்].
நாடு சுதந்திரம் பெற்ற பிறகு இப்படியான அனுமதியை இவர்களுக்கு வழங்கியவர்கள் வெறும் மூடரல்ல; முழு மூடர்கள்.
உரிய முறையில் அறிஞர் குழு அமைத்து, அரசியல்வாதிகளின் இந்த அடாவடித்தனத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பது உடனடித் தேவை.
அரசியல்வாதிகள் இதைச் செய்யமாட்டார்கள். மக்கள் வெகுண்டெழுந்தால் செய்யவைக்கலாம்.
அது நிகழ்வது எப்போது?
