'பூமியில் 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கும் மேலாக உயிரினங்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றன. மனிதர்கள் தோன்றி வாழ்ந்தது/வாழ்வது சுமார் 3,00,000 ஆண்டுகளாக மட்டுமே'[https://www.bbc.com/tamil/
ஒரு மில்லியன் பத்து லட்சம்> ஒரு பில்லியன் நூறு லட்சம்> 3.5 பில்லியன்> 350,000 லட்சம்[lakhs] ஆக, முந்நூற்றைம்பது லட்சம் ஆண்டுகளுகளாக உயிரினங்களும், மூன்று லட்சம் ஆண்டுகளாக மனித இனமும் வாழ்ந்து முடித்து அழிவை[மரணம்]ச் சந்தித்துள்ளன.
அழிந்த உயிரினங்களும் மனித உயிர்களும் கணக்கில் அடங்காதவை.
மொத்தத்தில், பூமியில் தோன்றிய மில்லியனோ மில்லியன் உயிர்கள் அழிந்தொழிந்தன; அதாவது செத்தொழிந்தன.
எனவே, தோன்றிய எந்தவொரு உயிரும் அழிவை எதிர்கொள்வது இயல்பானதே[+எண்ணற்ற மேதைகள், விஞ்ஞானிகள், தத்துவ ஞானிகள், அதி தீவிர உண்மைக் கடவுள் பக்தர்கள் போன்ற அசாதாரண மனிதர்கள்]
“ஆகவே, சாவு இயல்பானதே என்பதால், அதை நினைத்துக் கவலைப்படத் தேவையே இல்லை” என்கிறது நம் பகுத்தறிவு. ஆனால்.....
விதம் விதமாய்ச் சுகபோகங்களை அனுபவித்த ஆசை நெஞ்சமோ, நமக்கான பொல்லாத சாவை எண்ணிப் புலம்போ புலம்பென்று புலம்பித் தவிக்கிறது!
நம்மைப் படைத்தவன் கடவுள்தான் என்றால், அவன் நாசமாய்ப் போகட்டும்!
