எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

செவ்வாய், 14 மார்ச், 2023

‘புக்கர்’ பரிசுப் பரிசீலனைப் பட்டியலில் பேராசிரியர் ‘பெருமாள் முருகன்’ நாவல்!


#சர்வதேசப் புக்கர் பரிசின் பரிசீலனைப் பட்டியலில் ‘பெருமாள் முருகன்’ எழுதிய பூக்குழி நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பான Pyre நாவல் இடம்பெற்றுள்ளது. 

தமிழில் எழுதப்பட்ட நாவல் ஒன்று இந்தப் பட்டியலில் இடம்பெறுவது இதுவே முதல் முறை.


சர்வதேசப் புக்கர் பரிசு ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு மொழியில் எழுதப்பட்டு, ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, பிரிட்டனிலும் அயர்லாந்திலும் பதிப்பிக்கப்பட்டு வெளிவரும் சிறுகதைத் தொகுப்பிற்கோ, நாவலுக்கோ வழங்கப்படுகிறது.


பரிசைப் பெறும் நாவலுக்கு விருதுத் தொகையாக 50 ஆயிரம் பவுண்டுகள் வழங்கப்படும். அதைக் கதாசிரியரும் மொழிபெயர்ப்பாளரும் சமமாகப் பகிர்ந்துகொள்வார்கள்.


சர்வதேசப் புக்கர் பரிசு அறிவிக்கப்படுவதற்கு முன்பாக, அந்தப் பரிசுக்கான பரிசீலனைப் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் நாவல்களின் பட்டியல் வெளியிடப்படும். அது Longlist என அழைக்கப்படுகிறது. அந்தப் பட்டியலில் இடம்பெறுவதே, மிகப் பெரிய கௌரவமாகக் கருதப்படுகிறது.#


இது, சற்று முன்னரான 'BBC' செய்தி.


* * * * *

தமிழில் எழுதப்பட்ட ஒரு நாவல் புக்கர் பரிசின் பரிசீலனைக்கான பட்டியலில் இடம்பெறுவது இதுவே முதல்முறை என்று குறிப்பிடுகிறார் 'BBC' செய்தியாளர்.


‘பூக்குழி’[கல்கி இதழில் தொடராக வெளியானது] பரிசுக்கான பட்டியலில் இடம்பெற்றிருப்பது தமிழுக்குப் பெருமை சேர்க்கிறது என்பதால், இது குறித்துத் தமிழர் அனைவரும் பெருமிதம் கொள்ளலாம்.


பேராசிரியர் பெருமாள் முருகன் புக்கர் பரிசை வென்றிட வேண்டும் என்பது நம் விருப்பம்.


வெல்வார் என்னும் நம்பிக்கையில் மனம் நிறைந்த பாராட்டினையும் வாழ்த்தினையும் இங்குப் பதிவு செய்கிறேன்.


மிக்க மகிழ்ச்சி மதிப்பிற்குரிய பெருமாள் முருகன்.

=====================================================================================

https://www.bbc.com/tamil/articles/c80xly7wp96o


வானதி[பாஜக]யம்மா, நல்ல குடும்பத் தலைவியாக ‘மட்டுமே’ இருங்க தாயே!

அண்மையில் உத்தரப்பிரதேசம் சென்று முதல்வர் ‘யோகியானந்த்’தைச் சந்தித்துத் திரும்பிய அனுபவத்தைத் தன் ‘ஃபேஸ்புக்’ பக்கத்தில் பதிவு செய்துள்ள வானதி சீனிவாசன்[பாஜக], யோகியிடம் கீழ்க்காணும் வேண்டுகோளை முன்வைத்திருக்கிறார்.

//தமிழகத்தில் பணியாற்றும் உத்தரப்பிரதேச மாநிலத் தொழிலாளர்களுக்கு, சம்பளப் பிரச்னை, மருத்துவச் சிகிச்சை, இறப்பு நேர்ந்தால் உடலைச் சொந்த ஊருக்குக் கொண்டுசெல்லுதல் போன்றவை தொடர்பான உதவிகளைச் செய்ய, சென்னை, கோவை, திருப்பூர் போன்ற நகரங்களில் உத்தரப்பிரதேச அரசின் சார்பில் 'உதவி மையம்' ஏற்படுத்தலாம் என்று நான் யோசனை தெரிவித்தேன். நல்ல யோசனை என்று பாராட்டுத் தெரிவித்த யோகியானந்த், இது குறித்து ஆலோசித்து நல்ல முடிவு எடுப்பதாகத் தெரிவித்தார்//


இதற்கு, இந்தப் பதிவுக்கான பின்னூட்டக்காரர்களே கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.


இப்படியொரு யோசனை, அயலவருக்குச் சேவகம் செய்வதன் மூலம் தன்னலம் பேணும் அடிமைகளின் களிமண் மண்டையில் மட்டுமே தோன்றும்[தமிழ்நாட்டிலுள்ள தொழிலாளர்கள் எந்தெந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று கணக்கெடுத்து அந்தந்த மாநில முதல்வர்களையெல்லாம் தேடிச் சென்று சந்தித்துக் கோரிக்கை வைப்பாரா அம்மையார்? உ.பி.தொழிலாளர் மீது மட்டும் இந்தக் ‘கருணாமூர்த்தினி’யான வானதிக்கு இத்தனைக் கரிசனம் ஏன்?!].


வானதி இதற்கு விதிவிலக்கானவரல்ல என்பதற்கு இவர் யோகியிடம் சமர்ப்பித்துள்ள அடிமைச் சாசனமே சான்று பகர்கிறது.

தமிழ்நாடு நம் மாநிலம். இதற்கென்று ஓர் அரசாங்கம் இருக்கிறது. இந்த அரசின் முதல்வராக மு.க. ஸ்டாலின் அவர்கள் இருக்கிறார்கள். உ.பி. மாநிலத் தொழிலாளர் உட்பட, இங்கு வாழும் அனைத்து மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்துவைப்பதும், தேவைகளை நிறைவேற்றுவதுமான கடமைகளை அவர் செய்கிறார்.


தீர்க்கப்படவேண்டிய பிரச்சினைகள் இருந்தால் அவர் கவனத்துக்குத்தான் கொண்டுசெல்லுதல் வேண்டும்.


அயல் மாநிலத்தவரான யோகியானந்திடம் வேண்டுகோள் வைத்தது மாபெரும் தவறு; அரசியல் சட்டத்திற்கு முரணானது.


தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியாவின் மற்ற மாநிலங்களில் வாழும் உ.பி.காரர்களுக்காக உதவி மையம் ஏற்படுத்தும் அதிகாரமும் யோகியானந்தனுக்கு இல்லை[மாநில அரசுகளிடம் அனுமதிபெற்றுத் தற்காலிகமாக அதைச் செய்யும் வாய்ப்பு அமைதல்கூடும்]. அவ்வாறு செய்வது.....


மற்ற மாநில அரசுகளை அவமதிப்பதான செயலாகும்.


இந்தச் சாதாரண ஒரு நடைமுறையைக்கூட அறிந்திராத வானதியம்மையாருக்கு எதற்குச் சட்டமன்ற உறுப்பினர் பதவி?


இவரைப் போலவே, இவரைத் தேர்ந்தெடுத்த அத்தனைக் கோவை வாசிகளும்கூட ‘பாஜக’வுக்குச் சேவகம் செய்து பழக்கப்பட்டவர்களோ?!



=====================================================================================

https://tamil.oneindia.com/news/chennai/north-indian-workers-bjp-mla-vanath-srinivasan-meets-up-cm-yogi-adityanath-502710.html?story=3