அனைத்துப் போதைகளைவிடவும் ‘அதிகாரப் போதை’ மிக மிக மிக ஆபத்தானது. நம் பிரதமர் மோடி இதிலிருந்து விடுபடாவிட்டால், ஒன்றுபட்டிருக்கும் நம் இந்தியாவைச் சிதைத்துச் சிதறடித்த ‘பெருமை’க்குரியவராக அவர் ஆவார். ‘பாரத மாதா’வின் சாபத்துக்கும் அவர் ஆளாகக்கூடும்!
தொடர்ந்து 30 நாட்கள் தங்களின் தாய்நாட்டில் தங்கிக் கடமையைச் செய்யாமல் வெளிநாடுகளில் சுற்றும்பிரதமர், முதலமைச்சர்கள், அமைச்சர்கள் ஆகியோரின் பதவிகளை ரத்து செய்ய ஒரு மசோதா கொண்டுவருவது மிக மிக மிக வவேற்கத்தக்கது!
அன்றிலிருந்து இன்றுவரை ஆண்கள் செய்த/செய்யும் அட்டூழியங்களுக்குத்தான் இன்றையப் பெண்கள் பதிலடி கொடுக்கிறார்கள்!
“ஆகா, பெண்ணினம் சீரழிந்துவிட்டது; சமூகக் கட்டுப்பாடு சிதைந்துவிட்டது” என்றெல்லாம் ஆத்திரப்படவோ, கொதித்துக் கொந்தளிக்கவோ தேவையில்லை. அவற்றால் பயன் ஏதும் இல்லை!
காரணம், இவையெல்லாமே இயற்கை நிகழ்வுகள்! இறை நம்பிக்கையாளர்களுக்கு ‘அவன்’இன் திருவிளையாடல்கள்!!