அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.
தொடர்ந்து 30 நாட்கள் தங்களின் தாய்நாட்டில் தங்கிக் கடமையைச் செய்யாமல் வெளிநாடுகளில் சுற்றும்பிரதமர், முதலமைச்சர்கள், அமைச்சர்கள் ஆகியோரின் பதவிகளை ரத்து செய்ய ஒரு மசோதா கொண்டுவருவது மிக மிக மிக வவேற்கத்தக்கது!
அன்றிலிருந்து இன்றுவரை ஆண்கள் செய்த/செய்யும் அட்டூழியங்களுக்குத்தான் இன்றையப் பெண்கள் பதிலடி கொடுக்கிறார்கள்!
“ஆகா, பெண்ணினம் சீரழிந்துவிட்டது; சமூகக் கட்டுப்பாடு சிதைந்துவிட்டது” என்றெல்லாம் ஆத்திரப்படவோ, கொதித்துக் கொந்தளிக்கவோ தேவையில்லை. அவற்றால் பயன் ஏதும் இல்லை!
காரணம், இவையெல்லாமே இயற்கை நிகழ்வுகள்! இறை நம்பிக்கையாளர்களுக்கு ‘அவன்’இன் திருவிளையாடல்கள்!!